Wednesday, March 29, 2006

மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் செவ்வி.

கடந்த ஞாயிறன்று ஒஸ்ரேலிய ஏ.பி.சி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த செவ்வி.

The last thing Sri Lanka needs is an Islamic Jihad. With a death toll of over 60,000 in a decades-long civil war, allegations of an Islamic Jihad paramilitary group operating against the Liberation Tigers of Tamil Eelam, or LTTE, is causing further fractures in an already tenuous peace.
Now, next month's peace talks are in doubt. While the government denies allegations of Islamic paramilitaries, Tamil Tiger leaders say they have the proof.
Conference spokesman: The government of Sri Lanka and the LTTE are committed to taking all necessary measures to ensure that there will be no intimidation, acts of violence, abductions, or killings.
*******************************

Helen Vatsikopoulos: Dr Anton Balasingham, welcome to Focus.

Anton Balasingham, LTTE political advisor: Thank you.

Helen Vatsikopoulos: Now, you claim peace talks are in jeopardy because of this "shadow war" also being fought by Tamil paramilitaries controlled by the government. What evidence do you have of this?

Anton Balasingham: We have provided quite a lot of evidence documentary evidence, maps and other details to the Sri Lankan government with regard to their existence and functions, with regard to their leadership, their command structure, the location of their camps in the government-controlled areas. And we have submitted ample evidence to substantiate that these groups are actively functioning with the Sri Lankan troops in their offensive military campaigns against the LTTE.


Helen Vatsikopoulos: What makes you think the authorities can control them? Because they sound as if they've got a will of their own to fight you.

Anton Balasingham: Most of these armed paramilitaries are operating in the government military establishments, in the military camps. So, if Rajapakse government genuinely wants peace, the escalation in normalcy, they can put an end to this violence by disarming these paramilitaries. ...

முழுவிவரத்தை அத்தொலைக்காட்சியின் வலைத்தளத்திலிருந்து வாசித்துக்கொள்ளுங்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நமது ஈழநாட்டு என்ற பத்திரிகையில் வந்த தமிழ்வடிவத்தை இங்கே பார்க்கலாம்.


எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Thursday, March 23, 2006

தமிழகப் பாதிரியாரின் வன்னி அனுபவங்கள்.

நம் தமிழ்வலைப்பதிவுலகில் சில பின்னூட்டங்கள் மூலம் எங்களுக்குப் பரிச்சயமான பாதிரியார் "அடைக்கலராசா" அவர்கள் தனது "தமிழீழ" (இச்சொல்லை அவரேதான் பாவித்துள்ளார்) அனுபவங்களை "தடங்கள்" என்ற வலைப்பதிவிற் பதிகிறார்.

ஓராண்டுகாலம் அவர் வாழ்ந்த ஈழத்தின் பதிவுகளைப் புத்தக வடிவில் எழுதுகிறார். படிக்க ஆர்வமிருப்பவர்கள் அங்குச் சென்று படிக்கலாம்.

அவரின் வலைப்பதிவு தமிழ்மணத்திரட்டியில் அங்கத்துவமாயில்லையென்று நினைக்கிறேன். அதை இணைத்தால் இன்னும் நன்று. ஏற்கனவே அவர் எழுதி இன்னும் வெளிவராத புத்தகத்தையே இங்குப் பதிகிறார். எனவே பின்னூட்ட வசதியைப் பேண வேண்டுமா என்ற கேள்வி எனக்குண்டு. ஆனாலும் உடனடியான வாதங்களுக்கோ, தகவற்பரிமாற்றங்களுக்கோ கூட இவ்வசதி உதவக்கூடும். மறுவளத்திற் சில சிக்கல்களுமுண்டு.


எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, March 15, 2006

தமிழ்க்குழப்பம்

பேசும் மொழிக்கு ஒரே பேராயினும் அது இடத்துக்கிடம் மாறுபடும். எல்லோரும் தமிழ் தான் பேசுகிறோமாயினும் தமிழகத் தமிழுக்கும் ஈழத்தமிழுக்குமிடையில் வித்தியாசங்கள். ஈழத்துள்ளும் நிறைய வித்தியாசங்கள். ஒரே மாவட்டத்துள் கூட வித்தியாசங்கள்.
வித்தியாசமென்று நான் சொல்வது உச்சரிப்பு முறைகள், சொற் புழக்கங்கள், ஒரே சொல்லுக்கு வித்தியாசமான பொருள் என்பன.

ஒரே பெயர் இருவேறு பூக்களைக் குறிக்கப் பயன்படுகிறது.
காய், கனி, மரங்கள் என்று எடுத்துக்கொண்டாலும் இப்படிச் சிக்கல்.
உச்சரிப்பைப் பொறுத்தவரை, அது பிராந்தியங்கள் அடிப்படையிலோ மாவட்டங்கள் அடிப்படையிலோ மாறுபடுகிறது என்று பொதுவாக நினைத்திருந்தேன். பிறகு பார்த்தால் அதுகூட இல்லை. தொலைவிலுள்ள ஓர் ஊரும் எனது ஊரும் ஒத்திருக்கும்போது பக்கத்து ஊர்க்காரன் வித்தியாசமாக இருக்கிறான்.

அண்மையில் நடந்த சம்பவமொன்று.

சயந்தனுடன் ஒருநாள் தூதுவனில் அரட்டையடித்துக் கொண்டிருந்தபோது, 'கெரியாத் தாரும்' என்று எழுதினேன்.
'விளங்கேல' எண்டு திரும்ப பதில் வந்தபோது,
'கெரியாத் தாருமப்பா' என்று மீண்டும் எழுதினேன்.
அதை வைத்துக்கொண்டு அவர் என்னைக் கலாய்க்கத் தொடங்கினார். வழமையாக அவர் விடும் தட்டச்சுத் தவறுகளை வைத்து நான்தான் இதைச் செய்வேன். இம்முறை அவர்.
" உது எந்த இடத்துப் பாசை? வன்னிப் பாசையோ?" என்று நக்கலடிக்கத் தொடங்கினார்.
"ஏனப்பா? உதில என்ன பிழை?" என்று கேட்க, 'கெரியா' என்பதைச் சுட்டினார். அது 'கெதியா' என்றுதான் வருமென்று சொன்னார்.
"அதுசரியப்பா. கெதியா எண்டும் கெரியா எண்டும் சொல்லுறது" என்று சொல்லியும் சரிவரவில்லை. என் புரிதலின்படி இரண்டுமே பயன்பாட்டிலிருக்கும் சொற்கள். ஆனால் சயந்தன் 'கெரி' என்ற வடிவத்தைக் கேட்டதேயில்லை என்றார்.
************************************
விரைவாக என்பதை நாங்கள் 'கெதியாக', 'கெரியாக' என்று பேச்சு வழக்கிற் கதைப்பதுண்டு.
முன்பொருமுறை வன்னியில் முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் இதுபற்றிச் சொல்லும்போது 'கதி' என்பது 'கெதி' ஆனதென்று (பலம் -> பெலம்) விளக்கமளித்தார். அதன்வழியே கெதி, கெரி ஆயிற்று. கெதி என்று பாவிக்கும் பலரையும் பார்த்திருக்கிறேன். ஆனால் எங்கள் ஊரில் 'கெரி' தான். கெரியை விட கெதி மூலத்துக்குக் கிட்டவாக இருக்கிறது. நான் பாவிப்பது அதன் அடுத்த மருவல் வடிவம். இன்றும் கெதி என்று சொல்லிப் பார்க்கிறேன், ஒப்பீட்டளவில் கடினமாய்த்தான் இருக்கிறது.
************************************
இந்தச் சிக்கலின் பின் இன்னொரு முன்னாள் வலைப்பதிவாளர் ஒருவரைச் சந்தித்தபோது இதுபற்றிக் கேட்டேன். அவருக்கு என்ர 'கெரி' தான் வருது. தவிர அவரின்ர ஊரிலயும் 'கெரி'தான் பாவிக்கப்படுகிறது. அவரின்ர இடம் மானிப்பாய்.

வலைப்பதிவாளர் சயந்தன் கிட்டத்தட்ட எனக்குப் பக்கத்து ஊர்க்காரன். ஆனால் இதையெல்லாம் தாண்டித்தான் மானிப்பாய்க்குப் போக வேணும். தவிரவும் மானிப்பாய்க்கும் எனதூருக்கும் நேரடித்தொடர்பேதும் இருந்ததில்லை இடப்பெயர்வு வரை. ஆனால் பக்கத்து ஊர்க்காரன் கேள்வியேபடாத ஒரு சொல்லை மானிப்பாயில் வழக்காகக் கொண்டிருக்கிறார்கள்.
இதுபற்றி மேலும் விசாரித்துப்பார்த்ததில் எழுவைதீவில் 'கெரி' ஆனால் காரைநகரில் 'கெதி'.

இந்த உச்சரிப்பு மாற்றத்துக்கு எந்தக் காரணிகளையும் பொருத்த முடியவில்லையென்பதே நான் கண்டது.

இதைவிட மிகமிக நீண்டகாலம் பயன்பாட்டிலிருக்கும் சொற்கள்கூட பிறருக்குத் தெரியாமலிப்பதைக் கண்டபோது ஆச்சரியமாய்தானிருந்தது. கவளம், படலை என்ற சொற்கள் ஈழத்தில் - குறைந்தபட்சம் யாழ்ப்பாணத்திற் பரவலாக பாவிக்கப்படுவன. அதிலும் கவளம் தமிழகத்திற்கூட பழக்கமான சொல். அதைவிட இரண்மே இலக்கியங்களிலும் பரவலாக வந்த சொற்களே. ஆனால் இரண்டு சொற்களுமே தெரியாதவர்களை மானிப்பாயிற் சந்தித்துள்ளேன். (இது பற்றி ஏற்கனவே பதிவுகளும் எழுதியுள்ளேன்) அதேபோல் நானறியாத சொற்களும் அவர்கள் பாவிக்கக்கூடும்.

இவற்றை எப்படிப் புரிந்துகொள்வது?
இடப்பெயர்வுகள் எங்கள் சமூகத்தில் மொழி மட்டில் நிகழ்த்திய சில நல்ல தாக்கங்களைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.
***********************************
பொதுவாக, பேச்சுவழக்கில் 'ற்' வரிசையிலிருந்து 'த்' வரிசைக்குச் சொற்கள் மாறும்.
[பற்றை ->பத்தை, முற்றம் ->முத்தம், பற்ற வை ->பத்த வை, காற்று ->காத்து.]
ஆனால் இந்தக் 'கெதி' விசயத்தில் தகரத்திலிருந்து மறுவளமாக மாறுகிறது. (இங்கே 'ரி' என்பதை R இன் உச்சரிப்பிலல்லாமல் 'ற்' இன் வல்லின உச்சரிப்பிற் பார்க்க வேண்டும். (நாங்கள் ரிக்கெட், ரின், ரொறண்ரோ என்று எழுதுவது போல)
**********************************
இதை வாசிக்கும் ஈழத்தவர்களே,
நீங்கள் 'கெதியா?', 'கெரியா?' என்பதைக் கெரியா சொல்லுங்கோ.



எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, March 06, 2006

கூட்டணி பற்றி திருமாவின் செவ்வி.

சங்கதி வலையிதழுக்காக ஆர்வலன் கண்ட செவ்வி.

திருமாவளவன் அவசரப்பட்டுவிட்டார் என்று மருத்துவர் இராமதாசு கூறியிருக்கிறாரே?

திருமாவளவன்: கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழக அரசியலில் தேர்தல் பரபரப்பு சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் 2004ம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தலிருந்தே தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. அப்போது தி.மு.க. கூட்டணியிலிருந்த விடுதலைச் சிறுத்தைகள். தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து அக்கூட்டணியிலிருந்து வெளியேறியது என்றாலும், அ.தி.மு.க. அணி பக்கம் தாவாமல் தலித் மற்றும் இசுலாமியர்களை ஒருங்கிணைத்து 'மக்கள் கூட்டணி" என்னும் மாற்று அணியை உருவாக்கி தேர்தலைச் சந்தித்தது. அதன் பின்னர் பா.ம.க.வுடன் கைகோர்த்து. தமிழ்ப் பாதுகாப்பு இயக்கக் களத்தில் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்தது.

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பலரையும் ஒருங்கிணைத்து ஈழத்தமிழர் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் போராடியது. தமிழ்ப் பாதுகாப்பு மாநாட்டுக்கென ஊர்திப் பயணங்களை தொடங்கி வைப்பதற்கு, தி.மு.க. கூட்டணியைச் சார்ந்த தலைவர்களான கலைஞர், வைகோ, நல்லகண்ணு ஆகியோரை அழைக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளே முன்மொழிந்தது. அதன்படி அழைக்கப்பட்டு அவர்கள் அதில் பங்கேற்றனர்.



இவ்வாறு கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ், தமிழர் என்னும் தமிழ்த் தேசிய அரசியல் களத்திலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான சனநாயக உரிமைக் களங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் தனித்தன்மையோடு இயங்கிவந்தது.

குறிப்பாக. பா.ம.க.வுடன் ஏற்பட்ட நல்லுறவைப் பயன்படுத்தி பா.ம.க நிறுவனர் மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி இராமதாசு அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில். தி.மு.க. கூட்டணியை விடுதலைச் சிறுத்தைகள் நெருங்கி வந்தது. ஆனாலும் தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள். விடுதலைச் சிறுத்தைகளோடு நல்லிணக்கமான அணுகுமுறையை கையாள விரும்பியதாகத் தெரியவில்லை. தனிப்பட்ட முறையிலோ அல்லது தி.மு.கவை பற்றியோ கடுமையான விமர்சனங்கள் எதுவும் விடுதலைச் சிறுத்தைகள் செய்திடவில்லை என்றாலும், விடுதலைச் சிறுத்தைகளுடன் ஒரு தோழமையான உறவை வைத்துக்கொள்வதில் தி.மு.க. நாட்டம் கொள்ளவில்லை.

இந்நிலையில்தான். பா.ம.க நிறுவனர் தமிழ்க்குடிதாங்கி அவர்கள் கடந்த ஓராண்டு காலமாகவே தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறவேண்டும் என்று வெளிப்படையாக கூறிவந்தார். அதற்கு தி.மு.க தலைவரிடம் இருந்து இணக்கமான பதிலேதும் இல்லை. செய்தியாளர்கள் அதுபற்றி நேரடியாக கேட்டபோதெல்லாம் பா.ம.க நிறுவனரின் கருத்தை வரவேற்க கூடிய வகையில் ஒரு போதும் கலைஞர் விடையளிக்கவில்லை.
கடந்த பிப்ரவரி 4ஆம் நாளன்று அ.தி.முக. பொதுக்குழு கூடிய பிறகு தேர்தல் அரசியல் மேலும் சூடு பறக்கத் தொடங்கியது. தி.மு.க. கூட்டணியிலிருந்து ம.தி.முக. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வெளியேறி அ.தி.மு.க கூட்டணியில் சேரப்போவதாக வலுவான வதந்திகள் கிளம்பின. அப்போது எந்த அணியிலும் இடம் பெறாத விடுதலைச் சிறுத்தைகளும் அ.தி.மு.க அணிப்பக்கம் போகலாம் என்கிற வதந்தியும் பரவியது.

தி.மு.க அணியிலேயே இருக்கின்ற கட்சிகள் வெளியேறுவது என்பதில் சிக்கல்கள் இருக்கலாம். அவ்வாறான சிக்கல் ஏதும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இல்லை. ஆனாலும்;. பா.ம.கவுடனான நட்புறவு, தமிழ்ப்பாதுகாப்பு இயக்கப் பணிகள் ஆகியவற்றுக்காக பா.ம.கவுடன் இணைந்தே இருக்க வேண்டுமென்கிற தேவையை விடுதலைச் சிறுத்தைகள் உணர்ந்திருந்தது. அந்த ஒரே காரணத்திற்காக மட்டுமே அ.தி.மு.க பக்கம் செல்ல முடியும்; என்கிற வாய்ப்பையும் விடுதலைச் சிறுத்தைகள் பயன்படுத்த முனையவில்லை. தி.மு.க அணியில் இடம் கிடைக்கும் என்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் ஏங்கிக் காத்திருந்ததைப் போன்ற ஒரு தோற்றத்தை திட்டமிட்டே உருவாக்கினர்.

இந்நிலையில்தான் கலைஞர் செய்தியாளர்களிடம் பேசும் போது. 'தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்த்துக் கொள்ள ஆசை தான்; ஆனால், இடமில்லை" என்றதுடன். 'வேண்டுமானால். பா.ம.க தமக்கு ஒதுக்கப்படுகிற இடங்களில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு உள் ஒதுக்கீடு, செய்துகொள்ளட்டும்" என்று கூறினார். ஆக விடுதலைச் சிறுத்தைகளுக்கு கூட்டணியில் இடமில்லை என்பதை அவருக்கே உரிய நடையில் உறுதிப்படுத்தினார்.

அதன் மூலம், கூட்டணிக்கட்சிகளுள் ஒரு கட்சியாக இணைத்துக் கொள்வதற்கு விடுதலைச் சிறுத்தைகளுக்குத் தகுதி இல்லை என்பதையே கலைஞர் மறைமுகமாக வெளிப்படுத்தியதாக உணரமுடிகிறது. அத்துடன். பா.ம.கவும் விடுதலைச் சிறுத்தைகளும் ஒரே அணியில் இருப்பதன் மூலம் தாழ்த்தப்பட்டோரும் வன்னிய சமுதாயத்தினரும் அரசியல் ரீதியாக ஒருங்கிணைவதை கலைஞர் விரும்பவில்லை என்றே எண்ணமுடிகிறது. இவ்வாறான நிலையில்தான் விடுதலைச்சிறுத்தைகள் 'மாற்றுஅணி" என்கிற முயற்சியில் இறங்கியது.

பா.ம.கவும் விடுதலைச்சிறுத்தைகளும் தி.மு.க அணியில் ஒருங்கிணைய வாய்ப்பில்லை என்கிற நிலையில்தான். சமூக ஒற்றுமையை கருதி பா.ம.க தலைமையில் தி.மு.க. அ.தி.மு.கவுக்கு மாற்றாக தலித் மற்றும் சிறுபான்மை அமைப்பு களையெல்லாம் ஒருங்கிணைத்து மாற்று அணியை உருவாக்கிட மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி அவர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகள் வெளிப்படையான அழைப்பை விடுத்தது. உடனடியாக. மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி அவர்கள். 'மாற்று அணி என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று மறுதலித்து விட்டார்.

கடந்த சனவரி 11, பிப்ரவரி 15 ஆகிய நாட்களில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகளின் மையக்குழுவில். 'தி.மு.க கூட்டணியே வேண்டாம்" என்று முடிவெடுத்த நிலையிலும், பா.ம.கவின் உறவுக்காக, வரவுக்காக விடுதலைச் சிறுத்தைகள் காத்திருந்தது. சனவரி 15ல் இருந்து பிப்ரவரி 27 வரை 46 நாட்கள் பா.ம.க வுக்காக காத்திருந்த பின்னரே அ.தி.மு.கவின் அழைப்பை ஏற்று கடந்த 27.2.2006 அன்று விடுதலைச்சிறுத்தைகள் அ.தி.மு.கவுடன் கை கோர்த்தது.

'விடுதலைச்சிறுத்தைகள் தி.மு.கவிடம் கெஞ்சுகிறது, பா.ம.கவின் தயவுக்கு காத்திருக்கிறது" போன்ற விமர்சனங்களையல்லாம் தாங்கிக் கொண்டு, 'கூட்டணியில் இடமில்லை பா.ம.க.வின் தொகுதிகளில் உள் ஒதுக்கீடு" என்கிற கலைஞரின் கேலி, கிண்டலையும் பொறுத்துக் கொண்டு, அ.தி.மு.க கூட்டணிக்கு செல்வதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற பதைபதைப்பே இல்லாமல் பா.ம.கவின் உறவுக்காக, தமிழுக்காக இத்தனை நாள் அமைதியாக காத்திருந்தும் கூட 'திருமாவளவன் அவசரப்பட்டுவிட்டார்" என்று மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி அவர்கள் ஏன் சொல்கிறார் என்று புரியவில்லை.

கூட்டணித் தலைவருக்குப் பிடிக்காமல், கொல்லைப்புறம் வழியாக கூட்டணியில் நுழைவது என்பது, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்படும் சவாலாக அமையாதா? 'கூட்டணியில் இடமில்லை; உள்ஒதுக்கீடு தரட்டும்" என்று கூறிய கலைஞருக்குப் பதிலளிக்காமல் அமைதிகாத்த மருத்துவர், காலம் கடந்த எமது நிலைப்பாட்டை எப்படி அவசரம் என்கிறார்?

அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்ததும் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தீர்களாமே?
திருமாவளவன்:
கடந்த 28.2.2006 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாம்குரோவ் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தோம். அந்த விடுதி நட்சத்திர தகுதி உடையதல்ல என்பது நாட்டுக்கே தெரியும். மேலும் அந்த விடுதியில் இதற்கு முன் கடந்த 5 ஆண்டுகளாக பலமுறை செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறோம்.

பொடா எதிர்ப்பு முன்னணி உருவாக்குவதற்கான கலந்துரையாடல் கூட்டம், பாப்பாப் பட்டி. கீரிப்பட்டி தொடர்பான கலந்துரையாடல் கூட்டம், கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் என்று அங்கு எத்தனையோ முறை செய்தியாளர்களைச் சந்தித்து இருக்கிறோம். விடுதலைச்சிறுத்தைகளின் அலுவலகம் மிகச் சிறிய இடம். அது, முக்கியமான பிரச்சனைகளின் போது ஏராளமான செய்தியாளர்கள் பங்கேற்பதற்கு வசதியாக இருக்காது. அதனால் அலுவலகத்திற்கு பதில் அந்த விடுதியில் செய்தியாளர்களைச் சந்திப்பது வழக்கம். ஆனால், வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சி கொண்ட கும்பல், இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிரான அவதூறுகளை பரப்புவதையே குறியாக கொண்டு செயல்படுகின்றனர். இதிலிருந்தே விடுதலைச் சிறுத்தைகள் போன்ற தலித் மக்களுக்கான அமைப்புகளை தமிழகத்தைச் சார்ந்த ஊடகங்கள் எப்படி மதிப்படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

அ.தி.மு.க கூட்டணியில் இணைந்ததனால் ஈழத்தமிழர்கள், விடுதலைப் புலிகள் தொடர்பாக இனி உங்களால் பேச முடியாது என்கிறார்களே?
திருமாவளவன்:
தேர்தல் கூட்டணி உடன்பாடு என்பது அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பான ஒரு இடைக்கால உறவேயாகும். ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு கொள்கைளும் திட்டங்களும் உண்டென்றாலும் தேர்தல் களத்தில் அவரவர் வலிமைக்கேற்ப அதிகாரத்தைப் பகிர்ந்துக்கொள்வதற்காக ஒரு உடன்பாட்டுக்கு வருவதென்பது தவிர்க்க முடியாத நிலையாகும்.
தேர்தல் கூட்டணியில் ஒன்று சேர்வதனால். ஒருவர் கொள்கையில் இன்னொருவர் தலையிடவேண்டும் என்கிற தேவை எழுவதில்லை. அது ஒரு நிபந்தனையாகவும் இருக்க முடியாது. அந்த வகையில் அ.தி.மு.க கொள்கைகளில் விடுதலைச் சிறுத்தைகளோ, அல்லது விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளில் அ.தி.மு.கவோ ஒரு போதும் தலையிடுவதற்கு வாய்ப்பில்லை. கூட்டணியின் வெற்றிக்கு ஏதுவான கருத்துக்களை பேசவேண்டும் என்பது மட்டுமே கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான முதன்மையான கட்டுப்பாடாக இருக்க முடியும்.

ஈழத்தமிழர் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் எவ்வளவு உறுதிமிக்க ஈடுபாட்டைக் கொண்டுள்ளது என்பது அ.தி.மு.கவுக்கு மிக நன்றாகவே தெரியும். தேர்தல் பரபரப்பு தொடங்கிவிட்ட நிலையிலும் கடந்த பிப்ரவரி 14ம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் சென்னையில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டை மிகுந்த எழுச்சியோடு நடத்தியது. தேர்தல் நேரமாயிற்றே என்று விடுதலைச் சிறுத்தைகள் தயங்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகளின் இத்தகைய ஈடுபாட்டை அறிந்த நிலையில்தான் அ.தி.மு.க எமக்கு அழைப்புவிடுத்தது. அப்படியென்றால், ஈழத்தமிழர் விவகாரங்களில் அ.தி.மு.கவுக்கு மிகப்பெரிய அளவில் முரண்பாடு இல்லை என்றுதானே பொருளாக முடியும்?
அண்மையில் கூட ஈழத்திலிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தை வந்து சேர்ந்த போது. '1983ம் ஆண்டு சிங்களர்கள் நடத்திய இணவெறியாட்டத்தை இது நினைவுப்படுத்துகிறது" என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கருத்து தொவித்தார். அத்துடன். 'சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சே தமிழகத்திற்கு வந்தால். கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்போம்" என்று விடுதலைச் சிறுத்தைகள் விடுத்த அறிவிப்பு, மற்றும் பிற தமிழர் தேசிய அமைப்புகள் விடுத்த கண்டனம் ஆகியவற்றை மதிக்கிற வகையில், மகிந்த ராஜபக்சேவை வரவேற்கப் போவதில்லையென்று தெரிவித்து அவரது தமிழக வருகையை முதல்வர் தடுத்து நிறுத்தினார். எனவே, அ.தி.மு.க ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் எதிரான நிலையில் இல்லை என்பதை இவற்றின் மூலம் அறிய முடிகிறது.

இந்நிலையில், கூட்டணி வெற்றிக்கு ஊறு ஏற்படாத வரையில் விடுதலைச்சிறுத்தைகளின் நடவடிக்கைகளில் அ.தி.மு.க தலையிட வாய்ப்பே இல்லை. என்றாலும் விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அரசியலுக்காக தம்முடைய நிலைப்பாடுகளையும் கொள்கை கோட்பாடுகளையும் ஒரு போதும் மாற்றிக் கொள்ளாது.

இனிவரும் காலத்தில் பா.ம.கவுடனான உறவு மற்றும் தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தின் நடவடிக்கைகள் பற்றி?
பா.ம.கவும் விடுதலைச் சிறுத்தைகளும் தேர்தல் நேரத்தில் வெவ்வேறு அணிகளில் இருந்தாலும், தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் மலர்ந்த நட்புறவு பாதிக்கப்பட வாய்ப்பில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இரு கட்சிகளுக்கும் இடையே உருவான நல்லிணக்கம் அடிமட்டத்தில் உழைக்கும் மக்களிடையே சமூக ஒற்றுமை, மற்றும் சமுக அமைதிக்கு அடித்தளத்தை அமைத்துள்ளது. ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் வழங்கியுள்ள நிலையில், தேர்தல் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள இந்த அணி மாற்றங்கள் எத்தகைய பாதிப்பையும் உருவாக்காது என்று நம்புகிறோம். பா.ம.கவும் விடுதலைச்சிறுத்தைகளும் தனித்தனியே களம் கண்டாலும், இருவரும் அதிகார வலிமைப் பெற்றவர்களாய் மறுபடியும் கைகோர்க்கும் போது, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் மேலும் கூடுதலான வலிமையைப் பெறும். ஆகவே, பா.ம.கவின் உறவோ தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தின் நடவடிக்கைகளோ எந்த சூழலிலும் முடங்கிபோகாது. என்றார்.
***********************************

நன்றி: சங்கதி.
***********************************

மேற்படிச்செவ்வியில், ஜெயலலிதாவின் ஈழத்தமிழர், விடுதலைப்புலிகள் குறித்த பார்வையில் மாற்றமென்பதை என்னால் நம்பமுடியவில்லை. அது கூட்டணிக்கட்சியைப் பற்றிய திருமாவின் சமாளிப்பு என்பதே என் கருத்து.

மேலும், பா.ம.க. வுடன் உறவு முறியாது, பிரச்சினை வராது என்று சொல்வதும் நம்ப முடியாமலுள்ளது. இருதரப்பிலும் இப்போதுதான் முளைவிடத் தொடங்கியிருக்கும் நட்பும், புரிந்துணர்வும் இத்தேர்தலில் பாதிக்கப்படுமென்றே அஞ்சுகிறேன்.
குறிப்பாக எதிர்த்தரப்புப் போட்டியாளரை வைது, கேலி பேசி, திட்டி, தூற்றி (மட்டுமே) தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் - நடைபெற்றாக வேண்டிய சூழலில் உறவு பாதிக்கப்படாதென்று சொல்வது எப்படியென்று புரியவில்லை. அரசியற்றலைமைகளின் உறவு வேண்டுமானால் பாதிக்கப்படாமலிருக்கலாம். நான் கதைப்பது இரு சமூகங்களைச் சேர்ந்த மக்களைப்பற்றி.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________