<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9670725</id><updated>2011-07-09T05:03:03.227+09:30</updated><category term='ஈழத்தமிழ்'/><category term='ஈழ இலக்கியம்'/><category term='எழுத்தாளர்'/><category term='ஈழ அரசியல்'/><category term='ஒலி'/><category term='ஆதரவாளர்'/><category term='நக்கல்'/><category term='விமர்சனம்'/><category term='ஓவியம்'/><category term='வரலாறு'/><category term='படைப்பாளி'/><category term='நேர்காணல்'/><category term='தமிழ்'/><category term='பேச்சுத்தமிழ்'/><category term='வன்னி'/><category term='தொன்மை'/><category term='கவிதை'/><category term='மாவீரர்'/><category term='இலக்கியம்'/><category term='நகைச்சுவை'/><category term='விவாதம்'/><category term='படம்'/><category term='விழா'/><category term='நட்சத்திரக் கிழமை'/><category term='கலை'/><category term='அனுபவம்'/><category term='அலட்டல்'/><category term='அறிமுகம்'/><category term='மக்கள் துயர்'/><category term='நிகழ்வு'/><category term='செய்தி'/><category term='பதிவர் வட்டம்'/><category term='நினைவு'/><category term='கலந்துரையாடல்'/><category term='தமிழர் நலன்'/><category term='திரைப்படம்'/><title type='text'>வசந்தன் பக்கம்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>250</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-745290707820679363</id><published>2009-08-30T23:41:00.003+09:30</published><updated>2009-08-30T23:55:54.129+09:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர் நலன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலந்துரையாடல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>ஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்</title><content type='html'>இது இரண்டாவது பகுதியென்றால், முதலாவது? அது &lt;a href="http://vasanthanin.blogspot.com/2009/08/blog-post.html"&gt;இங்கே&lt;/a&gt; இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில ஒலியியல் தட்டச்சு முறையை விமர்சிக்கவெனப் போய் அதை முழுமையாக விமர்சிக்காமல், அம்முறைக்குச் சார்பான கருத்துக் கொண்டவர்களை விமர்சித்ததால் அது திசைமாறிப்போனது. ஆங்கில ஒலியியல் தட்டச்சால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதப்படுமென்ற அறிவிப்போடு அவ்விடுகைக்கான பின்னூட்ட வசதி மூடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சொல்லப்பட்ட கட்டுரைதான் இன்னும் எழுதப்படவில்லை.&lt;br /&gt;இந்நிலையில் இன்று கிருத்திகனின் வலைப்பதிவில் அவர் ஆங்கில ஒலியியல், பாமினி, தமிழ்நெற்-99 முறைகளில் தட்டச்சுவது பற்றிச் சொன்ன கருத்தொன்றுக்கான எதிர்வினையாற்ற இவ்விடுகை எழுதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரிலக்கத்தைப் பார்த்து அதிகம் யோசிக்காதீர்கள்.&lt;br /&gt;நாங்களெல்லாம் தொடர் எழுதினாலும் ஆண்டுக்கொரு பாகம் எழுதும் பேர்வழிகள். ‘மரங்கள்’ தொடரைப் பார்த்து விளங்கிக் கொள்க ;-)&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சும்போது தட்டச்சுபவரின் மூளையில் ஆங்கில வரிவடிவங்களூடாகவே அவர் எழுத்துக்கூட்டுவார் என்பது அம்முறைக்கெதிரான ஒரு வாதம். சிறிது கால இடைவெளியில் அது தாக்கத்தைத் தராது; ஆனால் வருடக்கணக்கில் ஒருவர் அப்படியே தொடர்ந்தும் தட்டச்சுவாராக இருந்தால் அம்முறை அவரின் தமிழ்ச்சிந்தனையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஒரு விளக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை மறுக்க வந்த இடத்தில் கிருத்திகன் இப்படிச் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kiruthikan.blogspot.com/2009/08/blog-post_29.html"&gt;//மற்றபடி Phonetic முறைப்படி ‘அம்மா' ‘ammaa' என்று பதிவது போலவே பாமினியில் 'அம்மா' ‘mk:kh' என்றும் தமிழ் 99ல் ‘அம்மா' ‘akfkq' என்றும்தான் பதியும்.//&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிருத்திகன்,&lt;br /&gt;முதலில் உமக்கு எனது பாராட்டு. ஏனென்றால் ஆங்கில ஒலியியல் முறைக்கெதிரான வாதமாக வைக்கப்படுபவற்றுள் ஒன்றான ‘ஆங்கில வரிவடிவங்கள் மூளையில் பதிதல்’ என்பதைச் சரியாக விளங்கியிருக்கிறீர். அதை ஏற்றுக்கொள்ளாதது, மறுப்பது, அது தேவையற்ற பயம் என்று சொல்வது நியாயமான நடவடிக்கையே.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நான் மேலே மேற்கோளிட்ட உம்முடைய கருத்துக்கு வருவோம்.&lt;br /&gt;உமது கருத்து முற்றிலும் தவறானது என்பது என் கருத்து. பாமினியிலோ தமிழ்நெற்99 இலோ தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடாக மனதில் எழுத்துக்கூட்டுவதில்லை, ஆனால் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடாகவே எழுத்துக்கூட்டுகிறார்கள் என்பது எனது கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடாக மனதில் எழுத்துக்கூட்டுகிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ளும் நீர் மற்ற வடிவங்களில் தட்டச்சுபவர்களும் அப்படியே என்கிறீர். உண்மையில் மற்ற வடிவங்களில் தட்டச்சுபவர்களின் நிலை அப்படியில்லை. அவர்கள் தமிழ் வரிவடிங்களூடே சிந்திக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு வருடங்களாக மிகமிகச் சரளமாகத் தமிழில் தட்டச்சிக் கொண்டிருக்கும் பாமினிக்காரன் ஆகிய எனக்கு அம்மா என்று தட்டச்சுவதற்குரிய விசைகளின் ஆங்கில வரிவடிங்களைச் சொல்ல முடியாது. நீர் தந்திருக்கும் ஆங்கில எழுத்துக்கள் சரிதானா என்பதைக்கூட நான் சோதித்துப் பார்க்கவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் ‘அ’வுக்கு எந்த விரல், ‘ம்’ எழுத எந்த விரல்கள் ‘மா’ எழுத எந்த விரல்கள் எந்த வரிசையில் தட்ட வேண்டும் என்பதே. சரளமாகத் தட்டச்சக்கூடிய தமிழ்நெற்99 முறைக்காரன் ஒருவருக்கும் அம்மா என்று தட்டச்சுவதற்கான விசைகளின் ஆங்கில வரிவடிவங்களைச் சட்டெனச் சொல்ல முடியாது. [&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-style: italic;"&gt;நான் எங்காவது வேலையாக நிற்கும்போது ‘டேய் ‘கூ’வன்னா அடிக்க வேணுமெண்டா எந்தக் கீ அடிக்க வேணும்?’ என்று தொலைபேசியில் கேட்பார்கள். விசைப்பலகை என்முன் இல்லையென்றால் உடனே என்னால் சொல்லமுடியாது. ஒருசுற்றுவழி மூலம் இதைக் கண்டுபிடித்துச் சொல்வேன். அச்சுற்றுவழி இறுதியில்…&lt;/span&gt;&lt;/span&gt;]&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் விளக்கமாக ஓர் எடுத்துக்காட்டு சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாமினியிலோ தமிழ்நெற்99 இலோ நீண்டகாலம் தட்டச்சிக்கொண்டிருக்கும் உம்முடைய நண்பரொருவரை கடற்கரையிலோ உணவுக்கடையிலோ தெருவிலோ பூங்காவிலோ எங்கேயாவது சந்திக்கிறீர் என்று வைத்துக்கொள்வோம். முக்கியமான விடயம், உங்களிடத்தில் கணனியோ விசைப்பலகையோ இருக்கக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது உம்முடைய நண்பரைப் பார்த்துக் கேளும், “&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;ஐசே, ‘அம்மா இங்கே வாவா, ஆசை முத்தம் தாதா’ எண்டு எழுதிறதுக்கு நீர் அடிக்கப்போற விசைகளின்ர ஆங்கில எழுத்துக்களை வரிசையாச் சொல்லும் பாப்பம்&lt;/span&gt;”.&lt;br /&gt;&lt;br /&gt;உமது நண்பரால் சொல்ல முடியாது. எழுதிக்காட்டவும் முடியாது. (&lt;span style="font-style: italic;font-size:85%;" &gt;சிலவேளை ஒன்றிரண்டு எழுத்துக்கள் மிகச்சிரமப்பட்டுச் சரியாகச் சொல்லக்கூடும்&lt;/span&gt;). ஏனென்றால் பாமினியிலும் தமிழ்நெற்99 இலும் தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடு சிந்திப்பதில்லை. (&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-style: italic;"&gt;அப்படித்தான் சிந்திப்பார்களென்றால் அவர்களால் உடனடியாக உமது கேள்விக்கான பதிலை கடகடவெனச் சொல்ல முடியும். அத்தோடு ஆங்கில ஒலியியல் முறைக்கெதிரான விமர்சனம் அவர்களுக்கும் பொருந்தும். தட்டச்சத் தொடங்கி நீண்டகாலமாகியும் விசைப்பலகையைப் பார்த்துப் பார்த்துத்தான் ஒவ்வொரு விசையாகக் குத்திக் கொண்டிருப்பார்களென்றால் சிலவேளை அவர்கள் இந்த வகைக்குள் வரக்கூடும்.&lt;/span&gt;&lt;/span&gt;) ஆனால் இதே கேள்வியை ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சும் ஒருவரிடம் கேட்டுப்பாருங்கள். தயக்கமே இல்லாமல் பதில் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது புரிகிறதா ‘ஆங்கில வரிவடிவங்ளூடாக’ மனதில் எழுத்துக்கூட்டுவது என்று எதைச் சொல்கிறோமென்று? பாமினியிலோ தமிழ்நெற்99 முறையிலோ தட்டச்சுபவர்கள் தமிழெழுத்துக்களாகவே சிந்திக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;==============================&lt;br /&gt;&lt;br /&gt;தமிழெழுத்துக்கான விசையின் ஆங்கில வடிவத்தைக் கண்டுபிடிக்க ஒரு சுற்றுவழியைப் பயன்படுத்தலாமென்று சொல்லியிருந்தேன். அது என்னவென்றால் விசைப்பலகையில் தட்டச்சுவது போன்று கற்பனை பண்ணி அதன்மூலம் கண்டுபிடிப்பது. எடுத்துக்காட்டாக ‘அ’ என்ற எழுத்துக்கான விசையின் ஆங்கில எழுத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று வைத்துக்கொள்வோம். விசைப்பலகையில் ‘அ’ தட்டச்சுவதைப் போன்று செய்து பார்த்துக் கொள்வது, பிறகு ஆங்கிலத்தில் அதேமுறையில் விரலைப் பயன்படுத்தும்போது வரும் எழுத்து எதுவென்று பார்ப்பது. அதுகூட சுலபமான காரியமன்று.&lt;br /&gt;&lt;br /&gt;“அம்மா இங்கோ வாவா, ஆசைமுத்தம் தாதா” என்ற வசனத்தை நான் முயன்று பார்த்தேன். அதாவது அவற்றுக்குரிய விசைகளின் ஆங்கில வரிவடிவங்களை வரிசையாகச் சொல்ல வேண்டுமென்று. அவ்வெழுத்துக்களைத் தட்டச்சுவது போன்று கற்பனை பண்ணி ஆங்கிலத்தில் அதேபோன்று தட்டச்சும்போது உருவாகும் எழுத்துக்களைக் கண்டுபிடிக்க முயன்றேன். மிகமிகக் கடினமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் பொதுவாக ஓரெழுத்தை எப்படித் தட்டச்சுவது என்றுதான் பழக்கப்பட்டிருக்கிறோம். விரல்கள் இயல்பாகவே அந்தந்த நிலைக்குச் சென்று விசைகளை அழுத்துகின்றன. ஆனால் இந்த விரலால் இப்படித் தட்டச்சினால் என்ன எழுத்து வரும்? என்று எதிர்வளமாக யோசித்தால் விடை காண்பது எளிதன்று. எமது மனம் அதற்குப் பழக்கப்பட்டிருக்கவில்லை. Shift உடன் வலதுகையின் நடுவிரலை நடுவரிசையில் அழுத்தினால் ‘மு’ வருமென்று கண்டுபிடித்துவிட்டேன். ஆனால் ஆங்கிலமுறையில் இதேமாதிரித் தட்டச்சினால் என்ன எழுத்து வரும்? ம்ஹும். தெரியவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் ‘K’ எழுதவேண்டுமென்று கேட்டால் தன்னிச்சையாகவே இடது சின்னிவிரல் shift விசையை அழுத்திப்பிடிக்க வலதுபக்க நடுவிரல் நடுவரிசையில் தனக்குரிய விசையை அழுத்துகிறது, அதாவது ‘மு’ எழுதுவதற்குப் பயன்படுத்திய அதே விசை.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தோடு இவ்விடுகை நிறைவுபெறுகிறது.&lt;br /&gt;இவ்விடுகைகூட அவசரமாகவே எழுதப்படுகிறது. நேரமிருந்தால் பிழைதிருத்தியோ இன்னும் விளக்கம் அதிகமாகவோ மேம்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;- பின்னூட்டங்களில் சந்திப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-745290707820679363?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/745290707820679363/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=745290707820679363' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/745290707820679363'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/745290707820679363'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2009/08/2.html' title='ஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-5444202415521843618</id><published>2009-08-23T23:03:00.010+09:30</published><updated>2009-09-05T15:38:17.594+09:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர் நலன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலந்துரையாடல்'/><title type='text'>இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஓர் எதிர்ப்பாட்டு</title><content type='html'>பதிவர்களின் கலந்துரையாடலிற் சொல்லப்பட்ட ஒரு கருத்து ஏற்படுத்திய எரிச்சலின் பலனாக இவ்விடுகை எழுதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று (23-08-2009) கொழும்பிலே இலங்கை வலைப்பதிவர்களின் சந்திப்பொன்று நடைபெற்றது.   இது தொடர்பான விவரணங்கள், விவரங்களை தொடர்புடையவர்களே எழுதியிருப்பார்கள். ஆகவே இது தொடர்பான ஆலாபனைகள் இங்குத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்பானது இணைய வழியிலே நேரடி அஞ்சல் செய்யப்பட்டது. அதனால் எங்களைப் போன்றவர்கள் அச்சந்திப்பில் பார்வையாளராய்ப் பங்கேற்க முடிந்தது. இந்நிலையில்,மற்றவிடங்களில் நடைபெற்றது போன்று அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று மூன்றாந்தரப்பாக நின்று கதைக்காமல் நேரடி அனுபவமாகவே எமது விமர்சனங்களை முன்வைக்கும் வழிவகை ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்பில் கதைத்தவர் தனது கருத்தை முன்வைத்தது போலவே அதில் பார்வையாளனாய்க் கலந்து கொண்ட எனக்கும் அதற்குரிய எதிர்க்கருத்தைத் தெரிவிக்கும் உரிமையுண்டெனக் கருதி இவ்விடுகை எழுதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இணையவழிப் பார்வையாளர்கள் தனியே பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாது தமது கருத்துக்களைத் தட்டச்சிப் பரிமாறும் வசதியுமிருந்தது. நான் அரட்டைப் பெட்டியில் நுழையும்போது ஏற்கனவே இருபது வரையானவர்கள் 'குதியன் குத்தி'க் கொண்டிருந்தார்கள். கிருத்திகனும் சினேகிதியும் உசாராக நின்று ஓடியாடி வேலைசெய்துகொண்டு நின்றார்கள். (எத்தினை பேர் சந்திப்புக்கு வந்திருக்கினம் என்று யாராவது கேட்டாலும் இவர்கள்தான் பதிலளித்துக்கொண்டிருந்தார்கள். 'உடல் இங்கே, உள்ளம் அங்கே' என்று அதற்கொரு காரணமும் சொல்லப்பட்டது ;-))&lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்பில் தனித்தனி ஆளாகப் பேசிமுடிய கலந்துரையாடல் நேரம் வந்தது (அல்லது அப்படியொரு புதுத் திசைக்கு நிகழ்வு சென்றது). அதிலே தமிழில் தட்டச்சுவது பற்றிய கருத்துப் பரிமாற்றம் தொடங்கியதும்தான் நான் கொஞ்சம் ஈடுபாடு காட்டத் தொடங்கினேன். அதுவரைக்கும் நடைபெற்றவற்றில் நான் ஆர்வப்படுமளவுக்கு எதுவுமிருக்கவில்லை. தட்டச்சு முறைபற்றித் தொடங்கிய கருத்து, தமிழெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட விசைப்பலகையை அறிமுகப்படுத்தல் என்பதோடு நின்றுகொண்டது. அதைத்தாண்டிச் செல்லவில்லை. அரட்டைப் பெட்டியில் நான் எழுதிக்கொண்டிருந்தேன், பாமினி, தமிழ்நெற் 99, Tamil phonetic முறைகள் பற்றிய கலந்துரையாடலைச் செய்யும்படி. அத்தோடு வந்திருக்கும் பதிவர்களிடத்தில் அவர்கள் பயன்படுத்தும் விசைப்பலகை முறை பற்றிய கணிப்பீடு ஒன்றை எடுக்கும்படியும். Tamil Phonetic முறையைப் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு இலங்கைப் பதிவர்களிடம் இருக்கிறதா, ஒருவராவது அந்த விழிப்புணர்வு பற்றி அக்கலந்துரையாடலில் கதைப்பாரா என்பது என் ஆவலாயிருந்தது. ஆனால் நடக்கவேயில்லை. கணிப்பீடு எடுக்கும்படி பலதரம் கேட்டும்கூட எந்தப்பதிலுமில்லை. அரட்டைப்பெட்டியில் 'அதி முக்கியமான' வியாக்கியானங்கள் நடந்துகொண்டிருந்தன. இயலாக்கட்டத்தில் 'டோய், ஆருக்காவது நான் சொல்லிறது கேக்குதோ?' என்று கேட்டதற்கு 'ஓம்' என்று ஒரு பதிலும், 'இல்லை,  கேக்கேல' என்று இன்னொரு பதிலும் மட்டும் வந்தது;-). இருவருமே இணையவழிப் பார்வையாளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது பதிலைச் சொன்னவர் சொன்னார், 'ஓய் வசந்தன், உம்மட பிரண்ட் கதைக்கிறார்' என்று. எனக்கு எந்த நண்பனும் அங்கில்லை என்றபோதும் ஆர்வமாகப் பார்த்தேன். உடனடியாக யாரென்று தெரியாவிட்டாலும் கதைக்கத் தொடங்கி சில வினாடிகளுள் கண்டுபிடித்துவிட்டேன். அவர் மு.மயூரன். 'உம்மட பிரண்ட்' என்று மயூரனைக் குறிப்பிட்டு ஏன் சொன்னார் என்றோ அதிலுள்ள உட்குத்து என்னவென்றோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவ்வளவு நேரமும் நான்மட்டும் அரட்டைப் பெட்டியில் குத்திக்கொண்டிருந்த விடயத்தை மயூரன் வாயிலெடுத்தார் (கையிலெடுத்தார் எண்டு சொல்லேலாது பாருங்கோ). பிறகு யோசித்தேன், இதற்கு மயூரன் பேசாமலேயே இருந்திருக்கலாம்; எழில்வேந்தனைச் சாடி ஓர் இடுகை எழுதுவதிலிருந்து நானாவது தப்பியிருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்கத்திலேயே மயூரன் சொன்னார், தனக்கு phonetic விசைமுறையைப் பயன்படுத்துவது தொடர்பில் எதிர்ப்போ ஆதரவோ இல்லை, ஏனென்றால் தான் அதைப் பயன்படுத்துவதில்லையாம். இப்படி நழுவிய மயூரனுக்கு அரட்டைப் பெட்டியில் 'இவர் தமிழ்க் கடும்போக்காளர் போல கிடக்கு' என்ற பட்டம் கிடைத்தது தனிக்கதை. ஆனால், phonetic முறையை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள் என்று மூன்றாந்தரப்பாக நின்று அவர்களின் நியாயத்தைச் சொல்லப் புறப்பட்டார் மயூரன். அப்படி அவர் சொன்ன நியாயங்கள் phonetic முறையை எதிர்ப்பவர்களின் வலுவான வாதமாக இருக்கவில்லை என்பதுதான் சோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;"phonetic முறையில் தட்டச்சிக்கொண்டு போனால் எதிர்காலத்தில் தமிழ் தனது வரிவடிவங்களை இழந்து ஆங்கில வரிவடிவங்களால் எழுதப்படும் நிலைக்குப் போய்விடும் என்பது phonetic முறையின் எதிர்ப்பாளர்களின் வாதம். மலாய் மொழிக்கு நடந்ததைப் போல தமிழுக்கும் நடந்துவிடுமென்று அவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் யுனிகோட் வந்ததால் தமிழ் தப்பித்தது"&lt;br /&gt;என்பது மயூரன் "மூன்றாந்தரப்பாக" நின்று phonetic முறை எதிர்ப்பாளர்கள் சார்பில் சொன்ன நியாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருங்குறி வந்ததால் தமிழ் அடைந்த நன்மையைக் குறிக்க இதையொரு காரணமாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் phonetic முறையை எதிர்ப்பதற்கான முதன்மைக் காரணமாக இதைச் சொன்னார் மயூரன். (ஒருங்குறியே ஓர் அரைகுறைத் தீர்வு என்பது இன்னும் வாதமாக இருக்கிறது. இராம.கி இது குறித்து முன்பு எழுதினார். இன்னொருவரும் (கவிதா கயீதா ஆன கதை - WOW?)இது குறித்து எழுதினார். ஆனால் ஒருங்குறி மீதான முரட்டுத்தனமான காதலால் அக்கருத்துக்களை விளங்கிக் கொள்ளாமல் அல்லது விளங்கியும் விளங்காதது போல் நடித்து ஒரு கூட்டம் எதிர்த்தது. பிறகு அதுபற்றிய கதைகள் வலைப்பதிவில் அடங்கிவிட்டன.)&lt;br /&gt;&lt;br /&gt;phonetic முறையில் தட்டச்சுவதை எதிர்த்து வலைப்பதிவுகளிலேயே நிறைய எழுதப்பட்டாயிற்று. இதை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்தார்கள் சிலர். "ammaa ≠ அம்மா" என்ற முழக்கத்தை அடிப்படையாக வைத்து அதை முன்னெடுத்தார்கள். வலைப்பதிவுகளில் தட்டிகள் எல்லாம் வைத்தார்கள். இப்போதும் சில வலைப்பதிவுகளில் அவை இருக்கக் கூடும். (அவற்றுக்கான இணைப்புக்களைத் தேடியெடுத்துப் போட நேரமோ ஊக்கமோ இல்லையென்பதால் நண்பர்கள் யாராவது பின்னூட்டங்களில் இடுவீர்களாக!)&lt;br /&gt;&lt;br /&gt;phonetic முறையை எதிர்ப்பவர்கள் சார்பில் கதைக்கப் புறப்பட்ட மயூரனும் அதைச் சரியான முறையில் வெளிப்படுத்தவில்லை. (அவரே சொன்னதுபோல் அதை எதிர்ப்பது, ஆதரிப்பது தொடர்பில் அவருக்குக் கருத்தில்லையாதலால் அது தொடர்பில் அவர் ஆராயவில்லையென்று விட்டுவிடலாம். ஆனால் அப்படி தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருப்பது 'தமிழ்ச்சிந்தனை'யில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் பற்றி சிந்திப்பாரானால் அவர் தனது நிலையை மாற்றக் கூடும்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதற்குப் பிறகு வந்த சிறப்பு விருந்தினர் (நானும் அவர் வலைப்பதிவராகத்தான் கலந்துரையாடலுக்கு வந்திருந்தார் என்று நினைத்திருந்தேன் வந்தியத்தேவனின் இடுகையைப்பார்க்கும்வரை) எழில்வேந்தன் phonetic முறையில் தட்டச்சுவதற்கு வக்காலத்து வாங்க வந்து சொன்ன கருத்துக்கள் எரிச்சலைக் கிழப்பியதுடன், எழுதாமலே விட்டிருந்த இவ்வலைப்பதிவில் ஓரிடுகை எழுத வேண்டிய சூழ்நிலைக்கும் காரணமாயின.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்று ஏராளமான குழந்தைகளுக்குத் தமிழ் பேசவே வரவில்லை. தமிழ் சுத்தமாக எழுதவே தெரியாது. வெளிநாட்டில் வாழும் தமிழ்க் குழந்தைகள் தமிழ்ச் சொற்களைப் பிறநாட்டு மொழிகளிலேயே எழுதி வாசிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த phonetic முறையில் தட்டச்சுவது நல்ல வரப்பிரசாதம். ammaa என்று எழுதினால் 'அம்மா' என்று வரும். அம்மா என்பதற்கான தமிழ் வரிவடிவங்கள் எப்படியிருக்குமென்று அந்தப் பிள்ளைகள் அறிவார்கள். எனவே phonetic முறையில் தட்டச்சுவதை எதிர்க்காதீர்கள்"&lt;br /&gt;என்பதாக அவரது வாதம் அமைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச்சொல்லைப் பிறமொழி வரிவடிவங்களில் எழுதி வாசிக்கும் அந்தக் குழந்தைகளின் நிலைக்குத்தான் தமிழ்வலைப்பதிவாளர்களையும் போகச் சொல்கிறார் எழில்வேந்தன். அம்முறையில் தட்டச்சிக் கொண்டிருந்தால் அதுதான் நடக்கும் என்பதைச் சூசகமாகவேனும் ஒத்துக் கொண்ட எழில்வேந்தனைப் பாராட்டத்தான் வேண்டும். கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் phonetic முறை எதிர்ப்பாளர்களும் சொல்லிக் கொண்டிருப்பது ஏனோ உறைக்கவில்லை. சிலவேளை தான் தமிழ் வலைப்பதிவர்களிடத்தில் பேசுகிறேன் என்பதை மறந்து எங்கோ புலம்பெயர்ந்திருக்கும் - தமது பிள்ளைகளுக்கு தமிழெழுத்துக்கள் எப்படியிருக்குமென்று காட்ட அவாப்படும் பெற்றோர் யாருக்காவது வகுப்பெடுக்கிறேன் என்று நினைத்தாரோ தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'என்னப்பா இந்தாள் இப்பிடிக் கதைக்குது? என்று எனது விசனத்தை அரட்டைப் பெட்டியில் வெளியிட்டபோது,&lt;br /&gt;'ஓய்! அவர் மூத்த வலைப்பதிவாளர் தெரியுமோ?' என்று ஒருவர் எதிர்க்கேள்வி கேட்டார்.&lt;br /&gt;எனக்கு அது தெரியும். ஆனால் அவ்வெதிர்க் கேள்வி கேட்டவர் என்ன கருத்தில் அதைக் கேட்டாரோ தெரியாது, எனக்கென்னவோ நையாண்டி பண்ணுவதைப் போலவே இருந்தது. அப்படியென்றாலும்கூட என்னையா எழில்வேந்தனையா என்பதையும் அவர்தான் சொல்ல வேண்டும் ;-).&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா என்று காகிதத்தில் எழுதும்போது ஆனா, இம்மன்னா, மாவன்னா என்றுதான் மனதில் எழுத்துக் கூட்டி எழுதுவோம். பாமினி முறையிலோ தமிழ்நெற் 99 முறையிலோ தட்டச்சுபவர்களும் அப்படியே எழுத்துக்கூட்டித் தட்டச்சுவார்கள். ஆனால் phonetic முறையில் தட்டச்சுபவர்கள் அம்மாவை ஆனா, இம்மன்னா, மாவன்னா என்று மனதுள் எழுத்துக்கூட்டுவதில்லை. மாறாக a m m a a என்றுதான் மனதுள் எழுத்துக்கூட்டுவார்கள். இந்தச் சின்னப் புள்ளியிலிருந்து யோசிக்கத் தொடங்குங்கள்.  phonetic முறையில் தட்டச்சுவதால் தனிமனிதனுக்கு, அதன் தொடர்ச்சியாக சமுதாயத்துக்கு ஏற்படப்போகும் தீங்கை. தீங்கென்பது இரண்டொரு வருடத்தில் வருவதைப்பற்றியன்று; அல்லது ஒருவருடைய வாழ்நாளில் வருவதைப்பற்றிய பயம் மட்டுமன்று. இவற்றின் தொடர்ச்சியாக ஒரு மொழிக்குழுமத்தில் நடைபெறப்போகும் தாக்கத்தைப் பற்றியது. கணனித் தட்டச்சைத் தவிர்த்து எவருமே பயணிக்க முடியாத நிலை எமது சமுதாயத்திலும் ஏற்படத்தான் போகிறது. இந்நிலையில் இப்படியான தட்டச்சு முறையினால் எமது மொழிக்குழுமம் அடையப்போகும் பாதிப்பு பற்றிய அறிவு, சில தலைமுறைகள் கடந்தபின் எமது குழுமத்தின் மொழிவளம் பற்றிய "&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(153, 0, 0);"&gt;பிரக்ஞை&lt;/span&gt;&lt;/span&gt;" (இந்தச் சொல்லில சிரிக்கக் கூடாது. சீரியசாச் சொல்லிக்கொண்டிருக்கிறன்) எமக்கு இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தியொருக்கா எழில்வேந்தன் அண்ணர், அகிலனுக்குக் குடுத்த செவ்வியொண்டு இந்த நேரத்தில் ஞாபகம் வந்து துலைக்குது. திரும்ப ஒருக்கா அதைக் கேக்க வேணும். நேரமிருந்தாப் பாப்பம். ஆனா ஒண்டு நல்ல ஞாபகமிருக்கு. அதில மூச்சுக்கு ஒருதரம் "&lt;b&gt;தமிழ் பற்றிய '&lt;span class="Apple-style-span" style="color: rgb(102, 0, 0);"&gt;பிரக்ஞை'&lt;/span&gt; இப்ப குறைஞ்சு கொண்டு வருது. அது எல்லாருக்கும் இருக்க வேணும்&lt;/b&gt;" எண்டு சொல்லிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;===========================&lt;br /&gt;கலந்துரையாடல் குறித்துப் பாராட்ட நிறையவே உள்ளன. சும்மா நாலுபேர் மதகில் குந்தியிருந்து பீடி குடித்துவிட்டுத் தம்பட்டம் அடிக்காமல் உண்மையிலேயே அதிக சிரத்தையெடுத்துச் செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு தனிப்பட எனது பாராட்டு. குறிப்பாக உலகெங்கும் இணையவழியில் அதை நேரடி ஒளிபரப்புச் செய்தது. அந்த வசதியால்தான் நாங்கள் நேரடியாகப் பங்குகொண்ட உணர்வோடு இந்த விமர்சனத்தை எழுத முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது உண்மையிலேயே உளமார்ந்த பாராட்டே. பின்னூட்டத்தில் யாராவது வந்து 'ஏய் இவ்வளவு நல்ல விசயம் நடந்திருக்கு நொட்டை மட்டும் பிடிச்சுக் கொணடிருக்கிறாய்' என்று கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் எழுதப்பட்டதன்று. அப்படியாக நடுநிலையாளன், நியாயவாதி என்ற பட்டங்களைப் பேணவேண்டிய நிலை எனக்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், அச்சந்திப்பிலேயே மருதமூரான் குறிப்பிட்ட கருத்தொன்று பிடித்திருந்தது. யாழ்தேவி என்ற பெயர் குறித்த விமர்சனங்கள் வைக்கப்பட்டபோது, "இவ்வளவுநாளும் ஆகா ஓகோ என்று புகழ மட்டுமே செய்தீர்கள், ஒருவராவது இப்படியான விமர்சனத்தை இவ்வளவு நாட்களில் எழுப்பவேயில்லை. தேவையில்லாத புகழ்ச்சியை விட்டுவிட்டு சரியான விமர்சனத்தைச் சரியான நேரத்தில் வைத்திருக்க வேண்டும்" என்று ஆதங்கத்தோடு சொன்னது பிடித்திருந்தது.&lt;br /&gt;அதையே நான் செய்கிறேன், புகழ்ந்துகொண்டிருப்பதைவிட சரியான விமர்சனத்தைச் சரியான நேரத்தில் வைப்போமென்று.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க, மருதமூரான், யாழ்தேவி என்ற பெயரை மாற்றுவதே நன்று என்பது எனது கருத்து. இவ்வளவு நாட்களும் ஓடிவிட்ட, பிரபலமாகிவிட்ட அப்பெயரை இப்போது மாற்றுவதென்பது சங்கடமானதே. உண்மையில் இன்று உங்கள் சந்திப்பில் விவாதிக்கப்படும்வரை எனக்கு அப்படியொரு திரட்டி இருப்பதே தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;=====================================&lt;br /&gt;ரவிசங்கர் முன்பு எழுதிய தமிழ்நெற்99 விசைப்பலகைக்கு ஆதரவான இடுகைகளுக்கான இணைப்புக்கள் இப்போது இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நெற்99 முறையைப் பரப்புவதையே முதன்மை நோக்கமாக அவை கொண்டிருந்தால் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுவதிலுள்ள அபத்தத்தை அவை பேசுகின்றன. அவ்விடுகைகள் சிலருக்காவது விளக்கத்தை அளிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;font-family:'Times New Roman';font-size:16px;"  &gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(17, 17, 17);font-family:Georgia;font-size:10px;"  &gt;&lt;h1 class="entry-title" style="margin: 0px; padding: 0px; font-weight: normal; font-size: 2.2em; line-height: 1.364em;"&gt;&lt;a href="http://blog.ravidreams.net/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D99-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/"&gt;ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும்?&lt;/a&gt;&lt;/h1&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;font-family:'Times New Roman';font-size:16px;"  &gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(17, 17, 17);font-family:Georgia;font-size:10px;"  &gt;&lt;h1 class="entry-title" style="margin: 0px; padding: 0px; font-weight: normal; font-size: 2.2em; line-height: 1.364em;"&gt;&lt;a href="http://blog.ravidreams.net/tamil99/"&gt;தமிழ்99&lt;/a&gt;&lt;/h1&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-5444202415521843618?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/5444202415521843618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=5444202415521843618' title='43 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/5444202415521843618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/5444202415521843618'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2009/08/blog-post.html' title='இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஓர் எதிர்ப்பாட்டு'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>43</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-4117051591566784884</id><published>2008-12-10T01:27:00.003+10:30</published><updated>2008-12-10T01:32:31.384+10:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அலட்டல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வன்னி'/><title type='text'>மரங்கள் - 3 - தேன்தூக்கி -</title><content type='html'>==============================&lt;br /&gt;&lt;strong&gt;நான் இவ்வலைப்பதிவில் எழுதத் தொடங்கி&lt;br /&gt;&lt;span style="color:#993300;"&gt;நான்காண்டுகள்&lt;/span&gt; நிறைவடைகின்றன.&lt;br /&gt;இதற்காக ஓரிடுகை. ;-)&lt;/strong&gt;&lt;br /&gt;==============================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vasanthanin.blogspot.com/2008/01/1.html"&gt;மரங்கள் - 1 - வெடுக்குநாறி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://vasanthanin.blogspot.com/2008/02/2.html"&gt;மரங்கள் -2- விண்ணாங்கு &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஈரிடுகைகளிலும் முறையே வெடுக்குநாறி, விண்ணாங்கு ஆகிய மரங்கள் பற்றிப் பார்த்திருந்தோம். இப்போது 'தேன் தூக்கி' என்றொரு மரம் பற்றி கொஞ்சம் அலசலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பெயர்க்காரணம் சரியாகத் தெரியவில்லை. தேனுக்கும் இம்மரத்துக்கும் ஏதும் தொடர்பிருப்பதாகவும் தெரியவில்லை. வேறேதேனும் பெயரிலிருந்து மருவி 'தேன் தூக்கி' என்று வந்திருக்கலாம். வேறிடங்களில் இம்மரம் வேறு பெயர்களில் அழைக்கப்படவும் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;உருவம், பயன்பாடு:&lt;br /&gt;வன்னிக் காடுகளில் இம்மரம் மிக அதிகளவில் வளர்கிறது. மிகப்பெரிய மரமாக வளராது; அதேநேரம் சிறியதாகவும் இல்லாமல் இடைப்பட்ட அளவில் வளரும். சுமார் முப்பது தொடக்கம் நாற்பது அடி உயரத்துக்கு வளரும். இளம் பருவத்தில் இதன் பட்டை மஞ்சள் கலந்த மண்ணிறமாக இருக்கும். மரத்தின் உட்பாகமும் மஞ்சளாகவே இருக்கும். முற்றிய மரமாயின் தண்டின் நடுவே கோறையாக இருக்கும். காய்ந்த நிலையில் சோத்தியான மரமாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சையாகவே வெட்டினால் குறிப்பிட்ட காலத்துக்கு இம்மரத்தைப் பயன்படுத்தலாம். கப்புகளுக்கு இம்மரம் பயன்படுத்தப்படுவதுண்டு.&lt;br /&gt;விறகுத் தேவைக்கு இது பயன்படுத்தப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தேன்தூக்கி மரத்தின் சிறப்பியல்பு ஒன்றுண்டு. இது தனக்குக் கீழ் எதையும் வளரவிடாது. வெயில் கிடைக்கும் இடமாயிருந்தால் புற்கள் மட்டும் பசுமையாக வளரும், மற்றும்படி வேறெந்தத் தாவர வகைகளும் இம்மரத்தின் கீழ் வளரா. இது அனுபவத்தில் கண்டது தானேயொழிய விஞ்ஞானபூர்வமான முடிபு அன்று.&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் 'வெட்டைக்காடு' என்ற சொல்லாடல் உண்டு. வெட்டையும் காடும் எதிர்மறையான பொருளுடைய இரு சொற்கள். வெட்டை என்பது மரஞ்செடிகளற்ற வெறும் வெளியைக் குறிக்கும். பிறகெப்படி இரண்டும் சேர்ந்து ஒரு சொல்லானது?&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு 'வெட்டைக் காடு' என்பது உயரிய மரங்களைக் கொண்ட அடர்ந்த காடாகவுள்ள அதேநேரத்தில் பற்றைகளையோ உயரம் குறைந்த சிறு மரஞ்செடிகளையோ -அதாவது கீழ்வளரிகளைக் கொண்டிராத காடுகளைக் குறிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய மரங்களைக் கொண்டிருந்தாலும் நிலப்பகுதியில் அடர்த்தியான பற்றைகளைக் கொண்ட காடுகளுமுண்டு. இக்காடுகளில் இருபது யார் தூரத்துக்கப்பால் எதையும் அவதானிக்க முடியாதிருக்கும். இவற்றில் மனித நகர்திறன் மிக மோசமாக இருக்கும். அவ்வாறன்றி, நிலமட்டத்தில் பற்றைகளின்றி வெளியாக இருக்கும் அடர்ந்த காடுகளுமுள்ளன. நூறு யார் தூரத்துக்கும் அப்பாற்கூட நன்றாக அவதானிக்கலாம். தெருவில் நடப்பதைப் போல கைவீசிக் கொண்டு நடந்து போகலாம். அதேவேளையில் வெயில் நிலத்தில் விழாதபடி மிக அடர்ந்த காடாகவும் அது இருக்கும். இப்படியான காடுகளையே 'வெட்டைக் காடு' என்ற சொல்லால் அழைப்பதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;தேன் தூக்கி பற்றிக் கதைக்க வந்து வெட்டைக்காடு பற்றி கதைக்கத் தேவையென்ன?&lt;br /&gt;தேன்தூக்கி மரங்கள் அதிகமுள்ள காடுகள் அனேகமாக வெட்டைக் காடுகளாக இருக்கும். ஏனென்றால் தேன்தூக்கியின் கீழ் பற்றைகளோ வேறு தாவரங்களோ வளரா.&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் முத்தையன்கட்டுப் பகுதிக் காடுகள் - குறிப்பாக முத்தையன்கட்டுக் குளத்தைச் சுற்றியுள்ள காடுகள் அடர்ந்த வெட்டைக் காடுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமக்குக் கீழுள்ளவர்களின் வளர்ச்சியைப் பாழாக்கும் அதிகாரிகளை 'தேன்தூக்கி' என்று அழைக்கலாம். ;-)&lt;br /&gt;&lt;br /&gt;தேன்தூக்கி தொடர்பில் இன்னொரு குறிப்புண்டு.&lt;br /&gt;இம்மரத்தில் ஒருவகை உண்ணி இருக்கும். (அல்லது இவ்வகை உண்ணி இம்மரத்தில்தான் அதிகமாக இருக்கும்). தனியொரு உண்ணியை வெற்றுக்கண்ணால் உடனடியாகப் பார்த்துக் கண்டுபிடிக்க முடியாதபடி மிகமிகச் சிறிய உண்ணி. கூட்டமாக ஊர்ந்தால்தான் உடனடியாகக் கண்ணுக்குத் தட்டுப்படும். தேன்தூக்கி இலைகளில் கும்பலாகக் குடியிருக்கும் இக்கூட்டம் அவ்வழியே நகரும் மனிதர் மீது ஒட்டிக்கொள்ளும். பின் உரோமங்கள் அதிகமுள்ள இடங்கள் தேடி அமர்ந்துகொள்ளும். தேவையான நேரத்தில் அவ்வப்போது கடித்துக்கொள்ளும். ஒருவர் முழுமையாக உண்ணி பொறுக்கி முடிய இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தேன்தூக்கி உண்ணியின் தாக்குதலுக்கு உள்ளாவது மிக அருந்தலாகவே நடைபெறும். ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அந்த அதிஷ்டம் கிடைக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-4117051591566784884?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/4117051591566784884/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=4117051591566784884' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/4117051591566784884'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/4117051591566784884'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2008/12/3.html' title='மரங்கள் - 3 - தேன்தூக்கி -'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-1859095792281349068</id><published>2008-09-14T22:32:00.002+09:30</published><updated>2008-09-14T22:38:28.952+09:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழ இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழ அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மக்கள் துயர்'/><title type='text'>கோவணநாட்டின் கொடைவள்ளல்கள்மீதொரு சீட்டுக்கவி</title><content type='html'>&lt;div&gt;கோவணக் கொடை வள்ளலின் முகமூடி இன்னொருமுறை  கிழிந்திருக்கும் இவ்வேளையில் பொருத்தம் கருதி இக்கவிதை மீள இடப்படுகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;வள்ளல் வாழ்த்து&lt;/span&gt;&lt;br /&gt;-------------&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க நீர் எம்மான்;&lt;br /&gt;கன்னனும்  குமணனும் போல்வீர்;&lt;br /&gt;தன்னிலை மறந்தும் அள்ளிக்கொடுத்தீர்&lt;br /&gt;பொன்னையும்  பொருளையும்&lt;br /&gt;பிற கோவணத் தும்மவர் செய்கைகட்காய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;மீதியும் மிதியும்  &lt;/span&gt;&lt;br /&gt;-------------------&lt;br /&gt;&lt;br /&gt;கோவணநாட்டின் கொடைவள்ளல்கள்&lt;br /&gt;கோடித்துணி  அள்ளிக்கொடுக்கையில்,&lt;br /&gt;தேசியக்கொடியிலும் தீராத&lt;br /&gt;முடைநாற்ற வீச்சம். &lt;br /&gt;&lt;br /&gt;மேற்குத்திசைக்கொரு வேண்டுதல் விடுக்கும்&lt;br /&gt;மாற்றுக் கோவணம் இல்லான்தெரு  வள்ளல்கள்,&lt;br /&gt;அரச ஆவணத்தின் பேரில்&lt;br /&gt;காலொடுங்கு முடுக்கு விடுத்து &lt;br /&gt;கழற்றிக்கொடுத்தார்&lt;br /&gt;தம் கவட்டிடுக்குக் கோவணம்,&lt;br /&gt;வேற்றூர்  யாசிப்போனுக்கு,&lt;br /&gt;வெறி மிகுந்து&lt;br /&gt;வீட்டிலிருப்போர்&lt;br /&gt;கழுத்திறுக்கக்  கைக்குட்டைகளாய்.&lt;br /&gt;&lt;br /&gt;திகம்பரர் தெருவினிலே&lt;br /&gt;அதை மறையா&lt;br /&gt;அம்மணங்கள்  அசிங்கமில்லை.&lt;br /&gt;கௌபீனம் தந்தோர் காந்திகள்;&lt;br /&gt;கைவிட்டுப் பெற்றோர்  கௌதமபுத்திரர்.&lt;br /&gt;&lt;br /&gt;கைப்பிடி துணி கண்டோர் பூமியிலே,&lt;br /&gt;கவட்டுமுடுக்குக்கும்  கழுத்துமுடிச்சுக்கும்&lt;br /&gt;இடையில் இருப்பதில்லை,&lt;br /&gt;ஏதும் இடைவெளி;&lt;br /&gt;உள்ளத்தே  நொடிந்தார் கழுத்தினிலே&lt;br /&gt;முடித்துக்கொண்டதெல்லாம் பிச்சைக்கௌபீனம்.&lt;br /&gt;உள்ளதில்  வலிந்தார் இடையிலே&lt;br /&gt;ஏற்றிக்கொண்டதெல்லாம் எழிற்கைக்குட்டை. &lt;br /&gt;&lt;br /&gt;அரைக்கோவணத்தார் தேசத்திலே,&lt;br /&gt;நேர்த்தியற்றதேனும், நெய்த நூற்குட்டை, &lt;br /&gt;கொடுத்தோர் கொடுங்கோலர்;&lt;br /&gt;கொண்டோர் கொலைகாரர்;&lt;br /&gt;குலைந்தோர் கொத்தடிமையர். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாய்,&lt;br /&gt;எல்லாமே வல்லமையாய் உள்ளவர் போல்,&lt;br /&gt;இல்லாதார்  நாட்டிலும் உண்டாம், பல்லாயிரம்&lt;br /&gt;கோவணக்கொடுத்தலும் வாங்கலும்;&lt;br /&gt;கூடவே கொழுவி  வரும்,&lt;br /&gt;இல்லாமையின் இருப்பின் கருநிழலும்&lt;br /&gt;கையள்ளிச் சொல்லிச் சொரியும் &lt;br /&gt;முள்ளுப்பாத்தி மூச்சு முட்டிக்குத்தும்&lt;br /&gt;இறைமையின் ஏழ்மையும் வறுமையும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;14/ஜூன்/'00&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;====================================&lt;/div&gt;&lt;div&gt;படைப்பு என்னுடையதன்று.&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;&lt;a href="http://kanam.blogspot.com/2004/12/blog-post_110323395297315462.html"&gt;மூலவிடுகைக்குச் செல்ல இங்குச் சொடுக்குக.&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-1859095792281349068?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/1859095792281349068/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=1859095792281349068' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/1859095792281349068'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/1859095792281349068'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2008/09/blog-post.html' title='கோவணநாட்டின் கொடைவள்ளல்கள்மீதொரு சீட்டுக்கவி'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-3193708642039144067</id><published>2008-08-10T12:47:00.007+09:30</published><updated>2008-08-10T19:45:13.200+09:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழ இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படைப்பாளி'/><title type='text'>தலைப்பில்லாக்கனவு. -ஒலிம்பிக்கை முன்வைத்தொரு கவிதை மீளிடுகை</title><content type='html'>2008 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில் இக்&lt;strong&gt;கவிதை&lt;/strong&gt; மீள இடப்படுகிறது.&lt;br /&gt;==============================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;* தலைப்பில்லாக்கனவு. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;எனக்கொரு கனவுண்டு;&lt;br /&gt;இனியொரு நாள்&lt;br /&gt;என் நாடும் கொடிபிடித்து&lt;br /&gt;கிழக்குத்தீமோர் போல்&lt;br /&gt;ஒலிம்பிக்கில் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு நாட்டில்&lt;br /&gt;ஒளிந்தோடிப்போன என்&lt;br /&gt;இனிவரு தலைமுறையும்&lt;br /&gt;இறந்து போயிருக்கலாம்;&lt;br /&gt;ஆனாலும் யாருக்கும் அடங்காது&lt;br /&gt;வரும் அப்பெரும் பொழுது.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~&lt;br /&gt;&lt;br /&gt;அந்நாள் அந்நாட்டில்,&lt;br /&gt;தீபத்தைத் தாங்கியோடுவாள்&lt;br /&gt;ஓரிள மங்கை,&lt;br /&gt;இந்நாள் காடுறையும் அன்னாளின்&lt;br /&gt;பின்னால் பின்னாள் வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உடைசற்படகுகளில் ஓயாமற்&lt;br /&gt;கடல்கடந்து துடித்துவலிக்கும்&lt;br /&gt;துயர்மனிதர்களின் குழந்தைகள்&lt;br /&gt;துடுப்புவலித்தலிலே வெகுதூரம்&lt;br /&gt;முன்&lt;br /&gt;கடப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாவதொரு நாள்,&lt;br /&gt;எரிந்த நிலமிருந்து எழுந்துவரும்,&lt;br /&gt;வாழ்தலுக்கும் கொல்தலுக்கும்&lt;br /&gt;வழிபட்ட துப்பாக்கி,&lt;br /&gt;வேடிக்கை&lt;br /&gt;விளையாட்டில்&lt;br /&gt;வெடித்து வெல்லப்பிடிக்கும்&lt;br /&gt;வல்லதொரு தலைமுறை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று&lt;br /&gt;இழியும் எந்தத்தோல்வியும்கூட&lt;br /&gt;அந்நாளை அடைந்தோம் நாமென்ற&lt;br /&gt;வெற்றியை&lt;br /&gt;அறைகூவித்தான் அலறும்#&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~&lt;br /&gt;&lt;br /&gt;அடங்காத தினசரிக்கனவுக்கு மட்டும்&lt;br /&gt;விழித்திரையைத் திறந்து விடுகின்றேன்.&lt;br /&gt;அது எமது நிலக்கதைகளுக்கு&lt;br /&gt;காலவேர் வைக்கும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால்,&lt;br /&gt;நினைவுகளின் நீர்ப்பட்டு&lt;br /&gt;நீர்க்காது எனக்கிருக்கும்&lt;br /&gt;இன்னும் நிறைந்து&lt;br /&gt;நீங்காத கனவுகள்&lt;br /&gt;பல&lt;br /&gt;விளைந்து.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கொரு கனவுண்டு;&lt;br /&gt;இனியொரு நாள்&lt;br /&gt;பாலைப்பலஸ்தீனம் போல்&lt;br /&gt;என் சுடுநாடும் ஒரு கொடிபிடித்து&lt;br /&gt;தலைநிமிர்த்தி&lt;br /&gt;ஒலிம்பிக்கில்&lt;br /&gt;குளிர்காஷ்மீருடன் கூட நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* இஃது&lt;br /&gt;எந்தவிதத்திலும் கவிதையோ கதையோ சிறுகட்டுரையோ அல்ல;&lt;br /&gt;இன்றைய நாளினை நினைவிலே&lt;br /&gt;வைத்துக்கொள்ளமட்டும்&lt;br /&gt;எழுதப்பட்ட கருத்துப்பரப்புகை மட்டுமே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333300;"&gt;&lt;strong&gt;#"My country did not send me to Mexico City to start the&lt;br /&gt;race. They sent me to finish the race."&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- During&lt;br /&gt;1968 Mexico Olympics, said by the badly injured Tanzanian runner John Stephen&lt;br /&gt;Akhwari, who staggered into the stadium more than an hour behind the first-place&lt;br /&gt;winner.&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;மூலவிடுகை எழுதப்பட்டது: &lt;a title="permanent link" href="http://kanam.blogspot.com/2004/12/blog-post_110326651516180283.html"&gt;12/17/2004 01:53:00 AM&lt;/a&gt;&lt;br /&gt;===============================&lt;br /&gt;&lt;br /&gt;எம்மைப் போன்றோர்க்குப் பொதுவான கனவு.&lt;br /&gt;வாசிக்கும்போதே விளங்கியிருக்கும்; இக்"&lt;strong&gt;கவிதை&lt;/strong&gt;" என்னால் எழுதப்பட்டதன்று.&lt;br /&gt;இச்சொற்கூட்டச் சொந்தக்காரனைக் கண்டுபிடிப்பது கடினமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;முன்பொருநாள் படியெடுத்துச் சேமித்து வைத்திருந்ததைப் பதிந்திருக்கிறேன். விரைவில் மூலவிணைப்பை வழங்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;===============================&lt;br /&gt;&lt;br /&gt;மீளிணைப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட கவிதையின் மூலவிணைப்பு:&lt;br /&gt;&lt;a href="http://kanam.blogspot.com/2004/12/blog-post_110326651516180283.html"&gt;http://kanam.blogspot.com/2004/12/blog-post_110326651516180283.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-3193708642039144067?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/3193708642039144067/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=3193708642039144067' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/3193708642039144067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/3193708642039144067'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2008/08/blog-post.html' title='தலைப்பில்லாக்கனவு. -ஒலிம்பிக்கை முன்வைத்தொரு கவிதை மீளிடுகை'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-2404953159251694740</id><published>2008-05-27T21:06:00.003+09:30</published><updated>2008-05-27T21:16:32.149+09:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படைப்பாளி'/><title type='text'>'கேள்விக்குறி' இயக்குநரின் பதில்</title><content type='html'>&lt;a href="http://vasanthanin.blogspot.com/2008/03/blog-post.html"&gt;"கேள்விக்குறி - கவர்ந்த தமிழ்த் திரைப்படம்" &lt;/a&gt; என்ற தலைப்பில் முன்பொரு இடுகை இட்டிருந்தேன்.&lt;br /&gt;அவ்விடுகைக்கு அத்திரைப்படத்தின் இயக்குநர் ஜெய்லானி பின்னூட்டத்தில் பதிலளித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பதிலை இங்குத் தனியிடுகையாக இடுகிறேன்.&lt;br /&gt;இது அவ்வியக்குநருக்கு நானளிக்கும் மரியாதை எனக்கொள்க.&lt;br /&gt;&lt;br /&gt;முந்திய இடுகையில் அப்படம் தொடர்பில் நான் குறிப்பிட்ட சில குறைபாடுகள் தொடர்பான விளக்கத்தை இயக்குநர் அளித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;விளக்கத்துக்கு நன்றி ஜெய்லானி.&lt;br /&gt;உங்களின் திரைத்துறைப் பயணம் மேலும் சிறக்க ஓர் இரசிகனாக எனது ஆசிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி இயக்குநர் ஜெய்லானியின் பதில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Jailani(Director) said ... (19 May, 2008 03:09) :&lt;br /&gt;&lt;blockquote style="color: rgb(0, 51, 51);"&gt;&lt;br /&gt;வசந்தன், கேள்வி சரிதான்:-)&lt;br /&gt;நான் இயக்குனர் தான். எனது இ-மெயில் : mjailani அட் gmail டாட் com. ஆர்குட்டில் இதெ இ-மெயிலை தேடினால் எனது பக்கம் கிடைக்கும், புகைப்படத்துடன். ஆனால் அதிலும் தில்லுமுல்லு செய்ய இயலும் என்பது வேறு விசயம்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும், என் படத்தை பற்றிய உங்களின் மனமார்ந்த பாரட்டுகளுக்கு நன்றி. மிகச்சில உறுத்தல்களையும் சுட்டிக்காட்ட்டியுள்ளீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;//&lt;span style="font-weight: bold;"&gt;"நாயகனிடம் அடிவாங்கியிருக்கும் காவல்துறையினரைப் பார்த்துப் பரவசப்படும் நபர்கள், 'என்ன இன்னும் போட்டுத்தள்ளலையா?' என்று நிமிடத்துக்கொருதரம் கேட்டு அந்தரித்துக்கொண்டிருக்கும் நபர் போன்ற பாத்திரங்கள் அதீதமானவையாகப் படுகின்றன."&lt;/span&gt;//&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் முழுக்க முழுக்க காவல்துறையினரால் அன்றாடம் பாதிக்கப்படும் சாமான்ய மக்களின் பார்வையில் எடுக்கப்பட்டது. அதை இன்னும் அழுத்த்தமாக்கும் நோக்கத்த்தில் தான் 'போட்டுத்தள்ளலயா' நபரின் கோபமான வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. ஆனால் உங்களைபோல இன்னும் சிலரும் அது எரிச்சலூட்டுவதாய் உணர்ந்து என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;//&lt;span style="font-weight: bold;"&gt;"ஏ.கே இரக துப்பாக்கியை ஒற்றைக் கையால் சுடுவது. 'றம்போ' இரகப் படங்களைப் பார்த்துக் கெட்டுப்போனாரா இயக்குநர்?"&lt;/span&gt;//&lt;br /&gt;&lt;br /&gt;இது தெரிந்தே செய்த பிழை.. தவிர்க்கமுடியாத நிலை. காரனம் வேடிக்கையானது. இந்த காட்சி படப்பிடிப்பின் போது, இதற்கு முந்தைய மற்றும் அடுத்த காட்சிகள் ஏற்கனவே படமாக்கபட்டுவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இக்காட்சியில் நான் இரன்டு கைத்துப்பாக்கிகளுடன் வெளியெ வருவேன், கமிஷனரையும் உதவி கமிஷனரையும் மிரட்டியபடி.. இந்த நிலையில் மூன்றாவதாய் ஏ கே ரக துப்பாக்கியை பறித்து நான் சுட வேன்டிய நிலை. கமிஷனரையும் விட்டுவிடக்கூடாது. அப்போதே ஒரு விதமான காமெடியாய் தோன்றியது எனக்கு. மற்ற காட்சிகளை திரும்ப எடுத்து சரி செய்ய பொருளாதார நிலை இல்லை.ஒரு வழியாய் சமாளித்து ஒரு கையில் கைதுப்பாக்கியுடன் கமிஷனரை மிரட்டியபடி இன்னொரு கையால் ஏ கே ரக துப்பாக்கியால் சுடுவதாக எடுத்தோம்.:-)&lt;br /&gt;&lt;br /&gt;//&lt;span style="font-weight: bold;"&gt;"சித்திரவதை செய்து விசாரணை செய்யக்கூடாது என்ற கருத்தை விவாதப்பொருளாக வைத்து நகர்த்தப்பட்ட கதையில் நாயகனின் விசாரணை முறையும் அதேபாணியில் - அதாவது காவல்துறையினரை அடித்துத் துன்புறுத்தி விசாரிக்கும் முறையிலேயே இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அது முரணாக இல்லையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;படத்தில் நேரடியாக அதற்குப் பதிலில்லை. பத்திரிகையாளரை வைத்து இப்படியொரு கேள்வியை எழுப்பி அதற்குரிய விளக்கத்தை இயக்குநர் கொடுத்திருக்கலாம்.(அல்லது இயக்குநரிடமே அற்குரிய பதிலில்லையோ என்னவோ?)&lt;/span&gt;&lt;br /&gt;"//&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;:-) என்னிடம் நீங்கள் சொன்ன அதே பதிலிருந்தது. ஆனால் அதை சொல்லவேண்டுமென அப்போது தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;//"&lt;span style="font-weight: bold;"&gt;ஒரேயொரு பாடல் படத்தின் இறுதிப் பாகத்தில் வருகிறது. அதுகூட கதைக்குத் தேவையான சந்தர்ப்பத்தில் வருவதாகவே கருதவேண்டும். கணவனுக்கும் மனைவிக்குமிடையிலான நெருக்கத்தை, அன்பை, காதலைச் சொல்ல வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தில் அப்பாடல் வருகிறது. அதைக்கூட பாடலில்லாமல் வேறு முறைகளில் காட்டியிருக்கலாமென்பது எனது கருத்து."/&lt;/span&gt;/&lt;br /&gt;&lt;br /&gt;படம் துவக்கிய நேரத்தில் பாடல் வைப்பதாய் எண்ணமே இல்லை. ஆனால் இருவரின் நெருக்கத்தை ஒரு சிறு கவிதையாய் சொல்லவேண்டுமெனெ நினைத்திருந்தேன். அதே காட்சிகளை ஒரு பாடலின் பின்னனியில் காட்டினால் படத்தின் விளம்பரத்திற்க்கும் உதவும் என்ற கருத்து வந்த போது அது தவறாகவோ, திணிப்பதாகவோ எனக்கு தெரியவில்லை.&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-2404953159251694740?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/2404953159251694740/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=2404953159251694740' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/2404953159251694740'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/2404953159251694740'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2008/05/blog-post.html' title='&apos;கேள்விக்குறி&apos; இயக்குநரின் பதில்'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-1505375055055293665</id><published>2008-05-20T18:00:00.003+09:30</published><updated>2008-05-20T22:15:46.659+09:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒலி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலந்துரையாடல்'/><title type='text'>நினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மானிப்பாய்) - ஒலிப்பதிவு</title><content type='html'>'நினைவுப்பயணம்' என்ற பெயரில் ஒலிப்பதிவுத் தொகுப்பொன்றை நான் தொடங்கியது சிலருக்கு ஞாபகமிருக்கலாம். (எனக்கே இடையிடையேதான் ஞாபகம் வரும்). கடந்தவருடம் ஜூன் முதலாம் திகதி இத்தொடரின் &lt;a style="color: rgb(0, 0, 153);" href="http://vasanthanin.blogspot.com/2007/06/1.html"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முதலாவது ஒலிப்பதிவை&lt;/span&gt;&lt;/a&gt; இட்டேன். சரியாக ஒருவருடம் முடிவதற்கு இன்னும் பத்துநாட்கள் உள்ள நிலையில் (இதன்மூலம் ஒருவருடம் இழுத்தடித்தான் என எவரும் சொல்ல முடியாதபடி செய்துவிட்டேன்.)இரண்டாவது ஒலிப்பதிவை வெளியிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சயந்தனும் என்னோடு கூட்டுச் சேர்ந்துள்ளார்.&lt;br /&gt;எனவே இனி நிறையக் கதைப்போமென்று நினைக்கிறேன். அவசர அவசரமாகச் செய்யப்பட்ட ஒலிப்பதிவிது. சிறிதளவும் திருத்தங்களின்றி அப்படியே தருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாண நினைவலைகள விரைவில் முடித்து, வன்னிபற்றி நிறையக் கதைப்பதாகத் திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி, ஒலிப்பதிவைக் கேளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;object type="application/x-shockwave-flash" data="http://www.sajeek.com/blogger/player.swf" id="audioplayer1" height="24" width="290"&gt;&lt;param name="movie" value="http://www.sajeek.com/blogger/player.swf"&gt;&lt;param name="FlashVars" value="playerID=1&amp;amp;soundFile=http://www.sajeek.com/blogger/vasantmp.mp3"&gt;&lt;param name="quality" value="high"&gt;&lt;param name="menu" value="false"&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/object&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="300" height="80"&gt;&lt;param name="movie" value="http://media.imeem.com/m/4kPXYVdToW/aus=false/"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://media.imeem.com/m/4kPXYVdToW/aus=false/" type="application/x-shockwave-flash" width="300" height="110" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒலிப்பதிவின் அடிப்படையில் காலவழுவொன்று இடம்பெறுகிறது. கண்டுபிடித்தால் சொல்லுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-1505375055055293665?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/1505375055055293665/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=1505375055055293665' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/1505375055055293665'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/1505375055055293665'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2008/05/1_20.html' title='நினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மானிப்பாய்) - ஒலிப்பதிவு'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-3392137521699852940</id><published>2008-03-24T12:56:00.002+10:30</published><updated>2008-03-24T13:03:09.099+10:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படைப்பாளி'/><title type='text'>அஞ்சாதே - கோமாளித் திரைக்கதை?</title><content type='html'>அண்மையில் 'அஞ்சாதே' என்றொரு தமிழ்த் திரைப்படம் வெளிவந்திருந்தது. அதைப்பற்றி பலரும் சிலாகித்து எழுதியிருந்தார்கள். நானும் படம் பார்த்தேன்.&lt;br /&gt;பார்த்து முடித்தபின் மனதுள் ஒரு கேள்வி வந்தது. நாயகன் விடும் தவறொன்றை மையமாக வைத்து எந்தக் கேள்வியுமின்றிக் கதையை நகர்த்தியிருக்கிறார்களே என்று. தமிழ்த்திரைப்படங்கள் என்றாலே இப்படித்தான் ஏதாவது கோமாளித்தனமாக செய்தாக வேண்டுமென்ற புரிதல் இருந்தாலும் பலரும் தலையில் தூக்கிவைத்து ஆடிய இப்படத்திலுமா என்ற கேள்வி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் நரேன் காவல்துறையினனாக ஆகிறான். தொடக்கத்தில் அத்தொழிலை விருப்பமின்றிச் செய்கிறான். இரத்தத்தைக் கண்டால் பயம்; கொலையைக் கண்டால் பயம் என்றிருக்கும் நரேன் ஒருசந்தர்ப்பத்தில் அப்பயங்களையும், அருவருப்பையும் தூக்கியெறிந்து செயற்படுகிறான். திரைப்படத்தின் மிகமுக்கிய திருப்பமாக நான் கருதுவது அதைத்தான். ஏற்கனவே தாக்கப்பட்டிருக்கும் ஒருவனைப் பாதுகாக்கச் செல்லுமிடத்தில் இத்திருப்பம் நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவனை (பார்த்தீபன்?) வைத்தியசாலையில் அனுமதிக்கிறார்கள். அவனுக்குப் பாதுகாப்பாக நரேனும் இன்னொருவரும் செல்லும்போது அங்கே அவனைக் கொல்ல நாலுபேர் வருகிறார்கள். நால்வரும் முகமூடி அணிந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;'அவன போடுறதுக்கு வந்திருக்காங்க.. வா நாம போய் ஒரு ரீ குடிச்சிட்டு வந்திடலாம்' என்று நரேனை அழைக்கிறார் மற்றவர். நரேன் போகவில்லை. துப்பாக்கியைத் தூக்கிக் காட்டி கொலை செய்யவந்தவர்களை மிரட்டுகிறார். அதற்கு நால்வரில் தலைவன் ஏதோ சொல்கிறான் (மிரட்டவில்லை). பிறகு கையிலிருந்த துப்பாக்கியைக் கீழே போடுகிறார் நரேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரேன தான் முன்பு தெருரெளடியாக இருந்தது ஞாபகம் வந்தோ என்னவோ செயற்படத்தொடங்குகிறார் நரேன். அந்தக்காலத்தில் செய்தது போலவே வாய்க்குள் எதையோ போடுகிறார், உடம்பைக் குலுக்கி ஒரு துள்ளுத் துள்ளுகிறார், 'என்னை செஞ்சிட்டு அவனச் செய்யுங்கடா' என்று சொல்லி அவர்களைச் சண்டைக்கு அழைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முகமூடியோடு வந்தவர்கள் கையில் கத்தியோடு ஒவ்வொருவராக நரேனிடம் வந்து அடிவாங்கிப் போகிறார்கள். அவர்கள் ஓடக்கூட இல்லை. இயல்பாக நடப்பதைவிடவும் மெதுவாகவே நடந்து போகிறார்கள். நால்வரும் தனித்தனியாக அடிவாங்கியபின் அவ்விடத்தை விட்டு மெதுவாக நகர்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களில் ஒருவனையாவது பிடித்து முகமூடியைக் கழற்றி முகத்தைப் பார்ப்பதோ, ஏன் பிடித்துக் காவல்நிலையம் கொண்டுவருவதோ இயலாத காரியமன்று. 'திரைப்பட நாயகனை'த் தவித்த்து நூறுவீதமான காவல்துறையினரும் செய்திருக்கக் கூடியதும் அதுவேதான். ஆனால் பார்வையாளருக்குத் 'திருப்பத்தை'க் கொடுக்க நினைத்தோ என்னவோ மிஷ்கின் அப்படிச் செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு நடப்பதுதான் நகைச்சுவையே.&lt;br /&gt;நரேனை ஆகா ஓகோ என்று பாராட்டுகிறார்கள். காவல்துறையில் அவர் புகழ் பரவுகிறது. குறிப்பிட்ட நோக்கத்துக்காகச் சிறப்பாக நியமிக்கப்பட்ட பொன்வண்ணன் நரேனைத் தனக்குத் தரும்படி கேட்டுப் பெறுகிறார். அவர்களின் உடனடி வேலைத்திட்டம் என்னவென்றால் நரேனிடம் அடிவாங்கியவர்களைப் பிடிப்பது. அதுவும் எப்படி? நரேன் அடித்த சம்பவத்தில் ஒருவன் பேசினான் அல்லவா? அவனுடைய குரலை நரேனைக் கொண்டு அடையாளப் படுத்த வேண்டும். அதற்காக பொன்வண்ணன் நரேனையும் கூட்டிக்கொண்டு அலைகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடப்பாவிகளா! அண்டைக்கே ஒருத்தனின்ட முகமூடியைக் கழட்டிப் பாத்திருந்தா, ஏன் ஒருத்தனையாவது பிடிச்சுக் கொண்டந்திருந்தா இந்த ஆர்ப்பாட்டம் ஒண்டும் தேவையில்லையே?&lt;br /&gt;சரி, அது நரேனின் தவறாகவே இருக்கட்டும். ஆனால் அத்தவறு குறித்து ஒரு கேள்விகூட நரேனிடம் கேட்கப்படவில்லை. உண்மையில் நரேன் மீது இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும்; நரேன் கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்படியொரு 'உஷார் மடையனை' ஆகா ஓகோ வெனப் புகழ்ந்து தள்ளியிருக்க எந்த நியாயமுமில்லை.&lt;br /&gt;குறைந்தபட்சம் பொன்வண்ணனாவது இது குறித்து நரேனைக் கடிந்திருக்கும் காட்சியொன்றை வைத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;'அரண்' என்ற திரைப்படத்திலும் இதுபோல் மிக அற்பத்தனமான காட்சியொன்றை வைத்திருப்பார்கள். நாட்டையே ஆபத்தில் தள்ளக்கூடிய முட்டாள்தனமொன்றை 'ஹீரோயிசம்' என்ற பேரில் நாயகன் செய்துவிட்டு தன்னோடு இருப்பவர்களைச் சாககக்கொடுத்துவிட்டு தன்பாட்டுக்குப் போய்க்கொண்டே இருப்பார். அச்செயல் குறித்த கதையாடல், குற்றவுணர்வு எவையும் படத்தில் இல்லை. "அரண்" பற்றித் தனியாக எழுதிக் கிழிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;இப்படத்தில் உறுத்திய இன்னொரு காட்சி, கரும்புத்தோட்டத்தில் நரேனும் பிரசன்னாவும் சண்டைபிடிக்கும் காட்சி. நகைச்சுவைக்கென தனியாக ஒருகாட்சியும் வைக்கவில்லையென்ற காரணத்தாலோ என்னவொ அந்தக் காட்சியை வைத்திருக்கிறார் மிஷ்கின் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;இப்படி எழுதுவதால் இது தரமற்ற படமென்று நான் சொல்வதாக எண்ண வேண்டாம். மற்றவர்கள் எழுதிய பல விடயங்களில் எனக்கு உடன்பாடுண்டு.&lt;br /&gt;இன்னும் சொல்லப்போனா, நாங்கள் மினக்கெட்டு ஓரிடுகை எழுதிறதுகூட அது ஒரு வித்தியாசமான, முக்கியமான படமெண்டபடியாத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்காக, &lt;a style="font-weight: bold;" href="http://vasanthanin.blogspot.com/2005/04/blog-post_26.html"&gt;இவ்விடுகையை &lt;/a&gt;வைத்து அது தரமான படமென்று நான் சொல்வதாக எண்ண வேண்டாம். அதுவேறு இதுவேறு. ;-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-3392137521699852940?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/3392137521699852940/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=3392137521699852940' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/3392137521699852940'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/3392137521699852940'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2008/03/blog-post_24.html' title='அஞ்சாதே - கோமாளித் திரைக்கதை?'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-9040630165178942628</id><published>2008-03-15T00:03:00.002+10:30</published><updated>2008-03-15T11:22:12.424+10:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படைப்பாளி'/><title type='text'>கேள்விக்குறி - கவர்ந்த தமிழ்த் திரைப்படம்</title><content type='html'>கேள்விக்குறி என்ற தமிழ்த் திரைப்படமொன்றை அண்மையில் பார்க்கக் கிடைத்தது. சிலவிதங்களில் என்னை அது கவர்ந்திருந்தது.&lt;br /&gt;ஆனால் இப்படம் அதிகம் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. வலைப்பதிவுகளில் இப்படம் பற்றி ஒரிடுகைகூட வந்திருக்கவில்லையென்றே கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகம் பேசப்படாமற்போன ஒருபடம். ஆனால் தமிழ்ச்சினிமாவில் அண்மையில் வந்தவற்றுள் கவனிக்கத்தக்க படம் என்றே கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் காதல் இல்லை; நகைச்சுவை நடிகர்கள் இல்லை; நகைச்சுவைக்கென தனியான காட்சிகளில்லை; வில்லன் என்று தனியாக ஒருவனில்லை. நாயகன் தனியாக பத்துப்பதினைந்து பேரை பறந்துபறந்து அடிக்கும் காட்சிகளில்லை. நடனங்கள் இல்லை; ஏன் பாடல்களே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரேயொரு பாடல் படத்தின் இறுதிப் பாகத்தில் வருகிறது. அதுகூட கதைக்குத் தேவையான சந்தர்ப்பத்தில் வருவதாகவே கருதவேண்டும். கணவனுக்கும் மனைவிக்குமிடையிலான நெருக்கத்தை, அன்பை, காதலைச் சொல்ல வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தில் அப்பாடல் வருகிறது. அதைக்கூட பாடலில்லாமல் வேறு முறைகளில் காட்டியிருக்கலாமென்பது எனது கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழிலே இப்படியொரு படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது வியப்புத்தான். (அண்மையில் பாடல்களேயில்லாமல் 'அசோகா' என்றொரு தமிழ்ப்படமும் வந்ததைக் குறிப்பிடத்தான் வேண்டும்.)&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் நாயகன் ஒரு குடும்பத்தலைவன். வில்லன் என்று சொல்ல வேண்டுமானால் காவல்துறையைச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;படமானது முக்கியமான சிக்கலொன்றை கேள்விக்குட்படுத்துகிறது. அது 'விசாரணை முறை'. படத்தின் அடிநாதமே காவல்துறையினரின் விசாரணை முறைகள் மீதான கேள்விதான். அதை மையமாக வைத்துத் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் இறுதிக்கட்டத்தில் நாயகன் சொல்வான்:&lt;br /&gt;"விசாரணை என்பது அறிவு தொடர்பானது. குற்றங்களையும் குற்றவாளிகளையும் கையாள்வதும் விசாரணை செய்வது அறிவுபூர்வமாக இருக்க வேண்டும். மிருகத்தனமாக எல்லோரையும் போட்டு அடித்து நொருக்குவதற்குப் பெயர் விசாரணை இல்லை. பலர்கூடி பலகோணங்களில் விசாரித்து, தகவல்கள் திரட்டி, அலசி ஆராய்ந்து முடிவுக்கு வருவதுதான் விசாரணை"&lt;br /&gt;&lt;br /&gt;மிகமுக்கியமான விவாதமொன்றை எழுப்பியிருக்க வேண்டிய படமானது எதுவுமின்றி படுத்துவிட்டது. திரைப்படத்திலும் இவ்விடயத்தைச் சரியான முறையில் அழுத்தமாகச் சொன்னார்களா என்பதில் எனக்கு ஐயமுண்டு. 'தமிழ்ப்படம்' பார்க்கிறோம் என்ற உணர்வைக் கழற்றிவைத்துவிடும் ஒருவசதி தேவையென்பதும் முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்திரைப்படத்தில், எதைச்சொல்ல வந்தார்களோ, அதை மட்டும் சொல்கிறார்கள். தேவையற்ற அலட்டல்களில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;காவல்துறையின் தலைமை அலுவலர் ஒருவரின் வீட்டினுள் புகும் நாயகன் அங்குள்ளவர்களைப் பணயக் கைதியாக்குவதோடு படம் தொடங்குகிறது.&lt;br /&gt;தலைமை அலுவலரைக் கட்டிவைத்துவிட்டு தேவையானவர்களை அங்கு வரவழைத்து நாயகனே விசாரணை செய்கிறான். படம் முழுவதும் விசாரணைதான். விசாரிக்கப்படும் ஒவ்வொருவரினதும் வாக்குமூலங்கள் காட்சிகளாகக் காட்டப்படுகின்றன.&lt;br /&gt;அப்படி என்னதான் விசாரிக்கிறான்?&lt;br /&gt;&lt;br /&gt;குற்றவாளி ஒருவனைப்பற்றி விசாரிப்பதற்காக கணவனும் மனைவியும் காவல் நிலையத்துக்கு அழைக்கப்படுகிறார்கள். இருவரையும் பிரித்துவைத்து விசாரிக்கிறார்கள். கணவனை மிகுந்த சித்திரவதை செய்கிறார்கள். மறுநாள் அவனை விடுவிக்கிறார்கள். ஆனால் மனைவிக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. மனைவி குற்றவாளியுடன் ஓடிவிட்டாள் என காவல்துறை&lt;br /&gt;தரப்பிற் சொல்லப்படுகிறது. என்ன நடந்ததென்று எதுவுமே தெரியாதநிலையில்தான் நாயகன் தலைமை அலுவலரின் முன் தனது விசாரணையைத் தொடங்குகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் என்ன நடந்ததென்று தெளிவாகிறது. அதற்குள் அவ்வீட்டை சிறப்புப்படை சுற்றிவளைத்துவிடுகிறது. நாயகன் காவற்றுறை அமைச்சரிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறான். அவற்றுள் முதன்மையானது எல்லாக் காவல்நிலையங்களிலும் வீடியோ கண்காணிப்பு இருக்க வேண்டுமென்பது.&lt;br /&gt;&lt;br /&gt;கோரிக்கை நிறைவேற்றப்படுகிறதா இல்லையா என்று தெரிவதற்கிடையில் சிறப்புப்படை படத்தை முடித்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;img src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/Kelvikkuri.jpg" /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;விமர்சனங்கள் இல்லாமலில்லை. விசிலடிச்சான் குஞ்சு மனப்பான்மையோடு சில காட்சிப்படுத்தல்கள் உள்ளதாகப் படுகிறது. நாயகனிடம் அடிவாங்கியிருக்கும் காவல்துறையினரைப் பார்த்துப் பரவசப்படும் நபர்கள், 'என்ன இன்னும் போட்டுத்தள்ளலையா?' என்று நிமிடத்துக்கொருதரம் கேட்டு அந்தரித்துக்கொண்டிருக்கும் நபர் போன்ற பாத்திரங்கள் அதீதமானவையாகப் படுகின்றன. இருந்தாலும் இறுதிவரை படத்தின் முடிவு பற்றிய எதிர்பார்ப்பு இருந்துகொண்டேயிருந்தது. திரைக்கதை ஓட்டத்தின்படி எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை பார்வையாளர்களை நம்ப வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிகர்களின் படமாதலால் கதையை விரும்பியபடி சொல்லியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் இப்படத்தின் இறுதிக்காட்சி வேறுமாதிரித்தான் எடுத்திருக்க வேண்டிவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்திலிருக்கும் வேறோர் அபத்தம் என்னவென்றால் ஏ.கே இரக துப்பாக்கியை ஒற்றைக் கையால் சுடுவது. 'றம்போ' இரகப் படங்களைப் பார்த்துக் கெட்டுப்போனாரா இயக்குநர்? ஆனாலும் அந்தக்காட்சி எந்தவிதத்திலும் உறுத்தாத அளவுக்கு திரைக்கதைப் போக்கு இருந்தது என்பது உண்மைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;சித்திரவதை செய்து விசாரணை செய்யக்கூடாது என்ற கருத்தை விவாதப்பொருளாக வைத்து நகர்த்தப்பட்ட கதையில் நாயகனின் விசாரணை முறையும் அதேபாணியில் - அதாவது காவல்துறையினரை அடித்துத் துன்புறுத்தி விசாரிக்கும் முறையிலேயே இருக்கிறது.&lt;br /&gt;அது முரணாக இல்லையா?&lt;br /&gt;படத்தில் நேரடியாக அதற்குப் பதிலில்லை. பத்திரிகையாளரை வைத்து இப்படியொரு கேள்வியை எழுப்பி அதற்குரிய விளக்கத்தை இயக்குநர் கொடுத்திருக்கலாம். (அல்லது இயக்குநரிடமே அற்குரிய பதிலில்லையோ என்னவோ?)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் காட்சிகளில் இருந்து நானொன்றை உணர்ந்துகொண்டேன். அதாவது நாயகனின் விசாரணையில் காவல்துறையினர் யாருமே உண்மை சொல்லவில்லை. எல்லோருமே தாம் தயார்ப்படுத்தி வைத்திருந்த அல்லது தான் தப்புவதற்காக அந்தநேரத்தில் தோன்றிய கதையைத்தான் சொல்கிறார்கள். கட்டித் தொங்கவிட்டு அடித்தும்கூட காவல்நிலையப் பொறுப்பதிகாரி தான் தயாரித்து வைத்திருந்த கதையை மட்டுமே இறுதிவரை சொல்லிக்கொண்டிருந்தான். உண்மை படிப்படியாக வெளிவருவது ஒவ்வொருவரும் தனித்தனியாகச் சொல்லும் முரண்பட்ட கதைகளிலிருந்துதான். அத்தோடு சம்பவம் நடந்தபோது காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இன்னொரு கைதியின் துணையும் சேர்ந்து முழுக்கதையும் வெளிவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, அடித்துத் துன்புறுத்தினாலும் சரியான உண்மை வெளிவருவதற்கு உத்தரவாதமில்லையென்பதை நாயகன் காவல்துறையினரைத் துன்புறுத்துவதன் ஊடாகவும் இயக்குநர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். ஆனால் இதை பத்திரிகையாளனைக் கொண்டு கேட்கவைத்து நாயகனைக் கொண்டு பதில் கொடுத்திருக்கலாம். (பார்ப்பது தமிழ்ப்படமாயிற்றே. இப்படி வசனங்களை வைத்துப் பேசினால் மட்டுமே புரிந்துகொள்ளும் நிலைமையிலிருக்கிறோம். நகைச்சுவையொன்றைச் சொல்லிவிட்டு அதைவிடவும் அதிகநேரம் அதைப்பற்றி விளங்கப்படுத்தி நடிக்கும் விவேக்கை 'ஜனங்களின் கலைஞன்' என்ற அடைமொழி கொடுத்து மிகச்சிறந்த நகைச்சுவையாளனாக தூக்கிவைத்த இரசிகக்கூட்டத்திடம் இப்படி திரைக்கதையிலேயே விடையைச் சொல்லும் உத்தி பலனளிக்குமோ தெரியவில்லை.) சிலவேளை இயக்குநருக்கே இப்படியெல்லாம் தோன்றாமல் தற்செயலாக அமைந்த காட்சிகளுக்கு நான்தான் புதுப்புது விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறேனோ என்னவோ? ;-)&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;தமிழ்ப்படங்களை விட்டு வெளியில் சென்றால் திரைப்படங்களுக்கான வகைப்படுத்தல்கள் பலவுள்ளன.&lt;br /&gt;Action, Adventure, Comedy, Documentary, Drama, Horror, Romance, SciFi, Fantasy Thriller என்று பலதரப்பட்ட வகைப்படுத்தல்களுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய காலகட்டத்தில் எந்தத் தமிழ்ப் படத்தையெடுத்தாலும் மேற்படி வகைகளுக்குள் தனித்தனியாக அடக்கமுடியாது. 'மசாலா' என்ற வகைக்குள் மட்டுமே அடக்கக்கூடியதாக உள்ளது. அதாவது அனைத்து வகைகளையும் கலந்துகட்டிய ஒரு பொட்டலாம்தான் மசாலா. (தமிழில் வந்த முழுநீள நகைச்சுவைப் படங்கள் சிலவற்றை மட்டும் விதிவிலக்காக 'நகைச்சுவை' என்ற வகைக்குள் அடக்கலாம்.)&lt;br /&gt;மசாலா என்பதற்கு வெளியில் தனியொரு வகைப்படுத்தலுக்குள் அடக்கக்கூடியதாக மிக அருந்தலாக வந்துள்ள தமிழ்ப்படங்களில் 'கேள்விக்குறி'யும் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறையின் அராஜகப் போக்கு, குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் யாராவது ஒருவரைக் குற்றவாளியாக்குவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயற்படுவது, பெண்களை நடத்தும் முறை என்பன நாளாந்தம் நாம் அனுபவித்து வரும் நிகழ்வுகளே. அந்நிகழ்வுகளையும் அவற்றால் பாதிக்கப்படும் அப்பாவிகளையும் அவர்களின் பாதிப்புக்களையும் சரியாகக் காண்பித்திருக்கிறார் இயக்குநர்.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;இப்படத்தில்தான் இசையமைப்பாளருக்கான பணி சரியாகப் பொருந்திவரும். தமிழ்த்திரைப்படங்களில் இசையமைப்பவர்களுக்கு இருக்கும் முதன்மை நோக்கம் நாலு பாடல்களை வெற்றிகரமாக இசையமைத்துவிட்டால் சரி. மக்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான். திரைப்பட விமர்சனங்கள்கூட இசையமைப்பைப் பற்றிய குறிப்பில் பாடல்களைப்பற்றிக் குறிப்பிடுவதோடு சரி.&lt;br /&gt;உண்மையில் இசையமைப்பென்பது படத்துக்கான பின்னணி இசைதான். அதில் கவனம் செலுத்த ஏதுவான சூழ்நிலையில் அதிகம் படங்கள் வருவதில்லை. யாராவது மிக நுணுக்கமாக பின்னணி இசை கோர்த்திருந்தாலும் அதுபற்றிப் பேசப்படுவதில்லை. பாடல்கள் "மட்டுமே" இசையமைப்பாளர் ஒருவரின் தகுதியை நிர்ணயிக்கும் காரணியாகவுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் ஒரேயொரு பாடலை மட்டுமே கொண்ட இப்படத்தில்தான் இசையமைப்பாளரின் தேவை சரிவர உணரப்பட வாய்ப்புண்டு. அவ்வகையில் இப்படத்தின் இசையமைப்பாளர் திருப்திகரமாகவே செய்துள்ளார் எனச் சொல்லலாம்.&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக,&lt;br /&gt;அண்மையில் வந்தவற்றுள் சிறந்த படமாக எனக்குத் தெரியும் தமிழ்ப்படமிது.&lt;br /&gt;அதிகம் கவனிப்படாமல் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுசிறு விமர்சனங்களைத் தாண்டி இப்படியொரு முயற்சி எடுத்ததற்காகவே பாராட்டப்படவேண்டிய துணிச்சல் இது.&lt;br /&gt;அந்தச் சிறுசிறு விமர்சனங்கள்கூட இப்போதிருக்கும் தமிழ்ச்சினிமா ஓட்டத்தில் பொருட்படுத்தத் தேவையற்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;&lt;br /&gt;படத்தைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் நாயகன் ஜெய்லானி தான் இப்படத்தின் இயக்குநரும் என அறிகிறேன்.&lt;br /&gt;ஜெய்லானிக்கு உளமார்ந்த வாழ்த்து.&lt;br /&gt;&lt;br /&gt;கமரா: கே.வி. மணி.&lt;br /&gt;இசை: சத்யபிரசாத்&lt;br /&gt;Photo: tamilcinema.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-9040630165178942628?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/9040630165178942628/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=9040630165178942628' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/9040630165178942628'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/9040630165178942628'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2008/03/blog-post.html' title='கேள்விக்குறி - கவர்ந்த தமிழ்த் திரைப்படம்'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-5099886026960486782</id><published>2008-02-01T13:57:00.000+10:30</published><updated>2008-02-01T15:21:22.303+10:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர் நலன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விழா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொன்மை'/><title type='text'>தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!</title><content type='html'>படியெடுக்கப்பட்ட கட்டுரையை வாசிப்பதற்கு முன்னர் எனது குறிப்புக்கள் சில:&lt;br /&gt;&lt;br /&gt;தைத்திருநாளை தமிழர் புத்தாண்டுத் தொடக்கமாகக் கொணடாடுவது தொடர்பாக இரு வருடங்களின் முன்பே வலைப்பதிவில் கதைத்துள்ளேன். அப்போது கல்வெட்டு(எ) பலூன்மாமா பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடுவது தொடர்பாக பெரியளவில் முயன்றிருந்தார். தைத்திருநாள் சயம நிகழ்வன்று என்பதைச் சொல்லி அவர் விவாதத்தைத் தொடக்கிவைத்தார். அப்போதே எனது இக்கருத்தையும் சொல்லியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது கருத்தென்பது விடுதலைப்புலிகளால் உருவானது என்பதைச் சொல்லியாக வேண்டும். இன்றல்ல; பல ஆண்டுகளின் முன்பே விடுதலைப்புலிகளின் முக்கியத்தர்களால் சித்திரைப் புதுவருடத்துக்கெதிரான கடுமையான எதிர்ப்பும், தைத்திருநாளே தமிழரின் ஆண்டுத் தொடக்கமாக இருக்க வேண்டுமென்ற பார்வையும் வெளியிடப்பட்டு வந்துள்ளன.தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி, தமிழீழக் கல்விக் கழகப்பொறுப்பாளர் இளங்குமரன் (பேபி சுப்பிரமணியம்), தற்போது வரலாற்றுத்துறைப் பொறுப்பாளராக இருக்கும் யோகரத்தினம் யோகி ஆகியோர் இவர்களுள் முதன்மையானவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரளவுக்குப் பெரியாரின் தாக்கம் இவர்கள்மேல் இருந்தபோதிலும், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் தீவிர தொண்டர்கள் எனலாம் (சொற்பிறப்புப் பற்றிய விவாதங்களில் சிலவிடங்களில் பாவாணரிடத்தில் மாறுபாடுடையவர்கள் என்றபோதும்கூட). அவ்வழியே மறைமலை அடிகள், கி.ஆ.பெ. விசுவநாதன் போன்றோரின் கருத்துக்களால் உள்வாங்கப்பட்டவர்கள். அதனாலேயே சித்திரை வருடப்பிறப்பு மீதான கடுமையான எதிர்ப்பும், தைத்திருநாளே ஆண்டுத்தொடக்கமென்ற வாதமும் இவர்களிடமிருந்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.&lt;br /&gt;(கி.ஆ.பெ. விசுவநாதன் பற்றிய சராசரி ஈழத்தவர்களின் அறிவுத்தொடக்கம், தலைவர் பிரபாகரன் பற்றி அவர் வெளியிட்ட கருத்துடன்தான் தொடங்கியது என்று நினைக்கிறேன். அதன்பின் அவர் பற்றிய தேடல் அதிகரித்ததோடு அவரின் கருத்துக்கள் பெருமளவில் மக்களிடம் சென்றன என்பதும் குறிப்பிடப்பட வேண்டிவை.)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தமது அரசாங்கத்தில் இதையொரு ஆணையாகக் கொண்டுவராமல் பரப்புரை மூலம் செய்ய இவர்கள் முயற்சித்தார்கள்; முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் வெற்றி பெறுவார்கள் என்பதிலும் ஐயமில்லை. நிலைமை சீராக வரும்போது ஒருநாள் இவர்களிடமிருந்து அறிப்பு வரும். தமிழீழத்தில் மொழி தொடர்பில் நடைபெற்ற நிறையப் புரட்சிகளுக்கு தமிழேந்தியும், இளங்குமரனும் அத்திவாரங்கள். போராளிகளுக்கான தனித்தமிழ்ப் பெயர்கள், கடைகள் - நிறுவனங்களுக்கான தனித்தமிழ்ப் பெயர்கள், பொருட்களுக்கான தனித்தமிழ்ப் பெயர்கள்  எப்போதோ நடைமுறைக்கு வந்துவிட்ட, வெற்றிபெற்ற பல நடவடிக்கைகளுக்கு இவர்களே கால்கள். இராணுவத்துறையிற்கூட தமிழ்க்கட்டளைகளைப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்விகளைப் புறந்தள்ளி அதைச் செய்துகாட்டியவர்கள். தமிழ் மீட்பை ஒரு வெறியாகவே செய்துவருபவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இராணுவம் ஈழத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட பின்னர், "யாழ்ப்பாணத்தில்" தமிழ்த் தேசியம் மீளெழுச்சியுற்ற ஒரு பொற்காலம் எனலாம். யாழ்ப்பாணத்தில் சடுதியான மாற்றங்கள் நிகழ்ந்தன. "முத்தமிழ் விழா" என்ற பெயரில் சில இடங்களில் நடத்தப்பட்ட மூன்றுநாள் பெருவிழாவை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மிகப்பெருமெடுப்பில் புலிகளால் நடத்தப்பட்ட இவ்விழா உண்மையில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. இவ்விழா குறித்து எதிர்த்தரப்புக்கள் அதிகம் கவலைப்பட்டது உண்மை. 'புலிகள் தமது படைப்பலத்தால் தோற்றாலும்கூட இவ்விழாக்கள் மூலம் மீளவும் தம்மைக் கட்டியெழுப்பி விடுவார்கள்' என்று கொழும்புப் பத்திரிகைகள் எழுதின.&lt;br /&gt;தென்மராட்சியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் தலைவர் பிரபாகரன் பகிரங்கமாகத் தொன்றி பொதுமக்களுக்கு மேடையில் வைத்துப் பரிசளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேகாலத்தில் அறிவிப்புப் பலகைகளின் பெயர்களைத் தமிழில் மாற்றுவது, நிறுவனப்பெயர்களை தமிழில் மாற்றுவது உட்பட பல வேலைத்திட்டங்கள் புலிகளால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன. தைத்திருநாளை எழுச்சியாகக் கடைப்பிடிப்பதும் அப்போதே தொடங்கியது. அதுவரை தைப்பொங்கல் இந்துக்களுக்குரிய நாள் என்றிருந்த கருத்துருவாக்கம் உடைக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டுக்குரிய தைத்திருநாளை, யாழ்ப்பாணத்துக் கத்தோலிக்கத் தலைமை கொண்டாடி, அது தமிழர் திருநாளே என அறிவித்தது. அவ்வாண்டுக்குரிய தைப்பொங்கல் கத்தோலிக்கத் தேவாலங்களில் கொண்டாடப்பட்டது. தைத்திருநாள் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கோவிலிலேயே பொங்கி மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதன்பிறகு கத்தோலிக்கர் வீடுகளிலும் பொங்கும் நிகழ்வை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;திபாவளிக்கெதிரான கருத்துக்கள் அன்றுதொடக்கம் விடுதலைப்புலிகளாற் சொல்லப்பட்ட வருகின்றன என்றபோதும் அவை நிறுத்தப்படவில்லை. ஆனால் இந்தியாவோடு ஒப்பிடும்போது ஈழத்தில் திபாவளியென்பது (புலிகள் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்கு முன்பேகூட) முக்கியமான பண்டிகையாக இருந்ததில்லையென்றே தெரிகிறது. இன்றும் தீபாவளி தமிழருக்கான பண்டிகையன்று என்ற கருத்து வலுவாகச் சொல்லப்பட்டு வருகிறது; பெருமளவானோர் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றும் கூறலாம். வன்னியில் இது சாத்தியப்படக் காரணமுள்ளது. தீபாவளியையும் சித்திரை வருடப்பிறப்பையும் கொண்டாட்டமாக்குவதில் முக்கிய காரணியாக இருக்கும் குறிப்பிட்ட நாட்களுக்குரிய சிறப்புத் திரைப்பட வெளியீடுகள் வன்னியில் இல்லையென்பதே அது.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;தைத்திருநாளையே தமிழரின் ஆண்டுத்தொடக்கமாகக் கருத வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து வலைப்பதிவுலகில் பல்வேறு விவாதங்கள் நிகழ்ந்தன. ஆதரவு / எதிர்ப்புப் பதிவுகளைப் படித்து இது தொடர்பான கருத்துக்களைப் பெற்றுக்கொள்வது சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;** இது தொடர்பான மேலதிக விவாதங்கள் நிகழ்த்தப்பட்டால் நன்று. நிறையத் தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பங்குக்கு, ஆதரவுக் கட்டுரையொன்றை இடுகிறேன். தமிழ்நாதம் இணையத்தளத்தில் வெளிவந்த கட்டுரையிது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்கம்: சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், ‘பண்டைய காலக் கணக்கு முறை’ வழியாகவும் முன் வைத்துத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி, உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்களும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக் காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“பொங்கல்” என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகின்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா’-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே, பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று ரீதியாக, ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக்கணக்கைக் கணித்து, சரியாக எந்த நாளில் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதனைச் சற்று ஆழமாகக் கவனிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான்! தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழன் அவதானித்தான். ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை, ஆகியவை மாறி மாறித் தோன்றி, தமிழனின் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக் காலச் சேர்வையைத் தமிழன் ‘ஆண்டு’ என்று அழைத்தான் - என்று அறிஞர் வெங்கட்ராமன் என்பார் கூறுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை ‘அறிவர், பணி, கணியன்’ -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர்களுடைய அவைகளில் ‘பெருங் கணியர்கள்’ இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல்நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் ‘தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத் தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (A Social history of the Tamils-Part 1)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது பண்டைக் காலத்தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு - அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. கார் - (வைகாசி � ஆனி மாதங்களுக்குரியது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5. முன்பனி � (புரட்டாசி � ஐப்பசி மாதங்களுக்குரியது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6. பின்பனி � (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை, ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை, ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழன் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்துள்ளான் என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துக்களாகும்!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை நேயர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பலகோடி வேற்று இன மக்களும் தத்தமக்குரிய இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்காக யப்பானிய மக்களின் புத்தாண்டை, தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தை 15ம் நாள் யப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களைத் தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் யப்பானியர் தமது புத்தாண்டான தை 15ம் நாளில் FONKARA - FONKARA� என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தை 16ம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்குப் படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களைத் தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பருப்புத் தவிடு பொங்க - பொங்க&lt;br /&gt;&lt;br /&gt;அரிசித் தவிடு பொங்க - பொங்க&lt;br /&gt;&lt;br /&gt;-என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் ‘பொங்க-பொங்க’ என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில் ‘uONGA-uONGA’ என்றே பாடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“சித்திரை வருடப்பிறப்பு” என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது….. …….. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான, நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? - தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் தினத்தை தமிழர்களுடைய பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும்;, பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் தர்க்கித்ததோடு, ஆரியர்கள் எம்மீது திணித்த சித்திரை வருடப் பிறப்பு குறித்தும் நாம் சில கருத்துக்களைத் தெரிவித்ததற்குக் காரணங்கள் உண்டு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“தைப்பொங்கல் தினமான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!!”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல! உண்மையில் இது, சமய சார்பற்ற, இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும்! மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஓர் அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட ‘கதை’ ஒன்று புனையப்பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்! இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்ற திருவிழாவாகும்! இத் திருநாளைப் புறம் தள்ளுவதும், இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தைக் கேவலப்படுத்தும் செயல்களாகும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தைப்பொங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரலாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1935ம் ஆண்டு திருச்சியில் அகிலத் தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில்&lt;br /&gt;கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டங்கொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி” - என்று மறைமலை அடிகளார் முழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை - நான் ஏற்றுக் கொள்கின்றேன்”- என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை ‘போகி’ (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி -போகியது). இத் தினத்தில் பழைய பொருட்களை எரித்தல், பழைய குடில்களை எரித்தல் போன்ற நடைமுறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. (முன்னாளில் யாழ்ப்பாணத்தில் பட்டி அடைக்கின்ற வயற்குடில்களை எரிக்கும் பழைய நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது இந்த நடைமுறை அருகி விட்டது.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர் அள்ளுதல், வீட்டை அழகுபடுத்தல், பொங்கலிடுதல், புத்தாடை அணிதல், கையுறை பெறுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள் புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு, தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது. அத்துடன் மாட்டுப் பொங்கலின் மறுநாள், உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் ‘காணும் பொங்கல்’ என்று அழைப்பர். , தமிழரிடையே இருந்த தவப்படையல் என்ற நடைமுறை இப்போது அருகி விட்டது. யாழ்ப்பாணத்தில், வடமராட்சிப் பகுதியில் தைப் பொங்கல் தினமன்றே தவப் படையல் செய்யப்படும் வழக்கமிருந்தது. இப்படையலில் மீன்-இறைச்சி முதலியன படைக்கப்பட்டன. இத்தினத்தில் கலை நிகழ்வுகள், அரங்கேற்ற நிகழ்வுகள், புத்தாண்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம், உழைப்பையும் தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில்; போற்றப்படுவதை நாம் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புக்குரிய வாசகர்களே! இன்றைய நடைமுறை யதார்த்தத்தை சுட்டிக் காட்டித் தர்க்கிக்கவே நாம் இவ்வாறு மேற்கோள் காட்டினோம். இல்லாவிட்டால் யார்-யார் எந்த எந்த நாளில், எந்த எந்தக் கொண்டாட்டங்களையும் கொண்டாடுவதைத் தடுப்பதற்கு நாம் யார்? எவரும் - எதையும் - எப்படியும் கொண்டாடட்டும் ஆனால் பெயரை மட்டும் சரியாகச் சொல்லட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனித்துவமான மொழியைப் பேசுகின்ற, தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள, தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள, தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள், ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச்சட்டமொன்று சொல்கிறது. இப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புக்குரிய எமது வாசகர்களே! தமிழனின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் எதிரிகள் சிதைத்தது போதாதென்று நாமும் கூட ஆரிய மாயையில் மயங்கிப்போய் எமது பண்பாட்டை இகழ்ந்தும், இழந்தும் வருகின்றோம். இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் புத்தாண்டு தினமான தைப்பொங்கல் குறித்துச் சில வரலாற்று உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைந்தோம். அனைவருக்கும் எமது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன. முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், எட்டுத்தொகை-பத்துப்பாட்டு, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு - மலேசியச் சிறப்பு மலர், தமிழர் - யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன. சில சொல்லாக்கங்ககளும் சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங் கனிந்த நன்றிகள். காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ் ஆய்வு மீள்பிரசுரமாகும்.(2008)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-5099886026960486782?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/5099886026960486782/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=5099886026960486782' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/5099886026960486782'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/5099886026960486782'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2008/02/blog-post.html' title='தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-1043336423841366812</id><published>2008-02-01T13:03:00.000+10:30</published><updated>2008-02-01T12:34:55.623+10:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வன்னி'/><title type='text'>மரங்கள் -2- விண்ணாங்கு</title><content type='html'>இத்தொடரின் முதலாவது பகுதியில் &lt;a href="http://vasanthanin.blogspot.com/2008/01/1.html"&gt;'வெடுக்குநாறி' என்ற மரத்தைப்பற்றிப் பார்த்தோம்.&lt;/a&gt;&lt;br /&gt;இவ்விடுகையில் 'விண்ணாங்கு' பற்றிப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்கத்தில் வேறொரு பெயரோடு இம்மரத்தின் பெயர் எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும். அப்பெயர் 'வெங்கணாந்தி'.&lt;br /&gt;வன்னி வந்த தொடக்கத்தில் விண்ணாங்கு மரத்தை வெங்கணாந்தி எனவும் பலதடவைகள் சொல்லியிருக்கிறேன்.&lt;br /&gt;வெங்கணாந்தி என்பது வன்னியிலுள்ள ஒருவகைப் பாம்பின் பெயர். 'மலைப்பாம்பு' என்று நாங்கள் அறிந்து வைத்திருந்த பெரிய, பருத்த பாம்புக்குத்தான் இந்தப்பெயருள்ளது. விலங்குகள் பற்றி எழுத முடிந்தால் அங்கு இப்பாம்பைப் பற்றிப் பார்ப்போம்.&lt;br /&gt;'அப்பக் கோப்பை', 'பேக்கிளாத்தி' போல 'வெங்கணாந்தி'யும் மற்றவர்களைத் திட்டப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்.&lt;br /&gt;'அவனொரு வெங்கணாந்தி'.&lt;br /&gt;&lt;br /&gt;சரி விண்ணாங்குக்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் வன்னியில் மிகப்பெருமளவில் காணப்படும் மர வகை.&lt;br /&gt;அடர்காடுகளில் இருக்கும் அதேவேளை, பற்றைக்காடுகள் மற்றும் மக்கள் குடியிருப்புக்களிலும் இம்மரங்கள் உள்ளன.&lt;br /&gt;புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியிலிருந்து மன்னாகண்டல் வழியாக முத்தையன்கட்டுக் குளத்துக்கு வரும் பாதையில், வாய்க்கால் கரையோரத்தில் விண்ணாங்கு மரங்கள் மட்டுமே மிக அடர்த்தியாக வளர்ந்திருக்கும் பகுதியொன்றைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது அடர்த்திகுறைந்த / எடைகுறைந்த மரம். மிகவும் 'சோத்தி'யான மரமென்று இதைச் சொல்லலாம். எடையில் கிட்டத்தட்ட முள்முருக்குப் போன்றிருக்கும். ஆனால் ஒப்பீட்டளவில் முருக்கை விட கொஞ்சல் வலிமையானது.&lt;br /&gt;இம்மரம் அடர்த்தியான வகையில் இலைகளைக் கொண்டிராது. இலைகள் சாம்பல் கலந்த பச்சைநிறத்திலிருக்கும். மண்ணிறப் பட்டையைக் கொண்டிருக்கும்; முற்றிய மரமென்றால் ஆங்காங்கே பட்டைகள் வெடித்து உரிந்திருக்கும்.&lt;br /&gt;கிளைபரப்பி அகன்று வளராமல் நெடுத்து வளரும். பெரிய விண்ணாங்கு மரமொன்று நின்றாலும் அதன்கீழ் திருப்தியான நிழல் கிடைக்காது. காரணம் பரந்து வளர்வதில்லை; அத்தோடு அடர்த்தியாகக் குழைகளைக் கொண்டிருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோத்தி மரமென்பதால் தளபாடங்களுக்குப் பயன்படுத்துவதில்லை. விறகாகவும் பயன்படுத்துவதில்லை. எதிர்த்தாலும்கூட அதிகளவு புகையைக் கக்கிக்கொண்டிருக்கும்.&lt;br /&gt;ஒப்பீட்டளவில் பயன்பாடற்ற மரமாகவே தோற்றமளிக்கும். ஆனாலும் சில பயன்பாடுகளுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்டு, நெடுத்து, நேராக வளர்வது இதன் சிறப்பு. மெல்லிய விண்ணாங்குத் தடிகள் வரிச்சுத்தடிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.&lt;br /&gt;உலக்கை அளவுக்குத் தடிப்பான விண்ணாங்கு உருளைக் கட்டைகள் மிக நேரான முறையில் கிடைக்கும். அவை பலவிதங்களில் பயன்படுகின்றன. மேலும் விண்ணாங்குக் கட்டைகளை நெடுக்குவெட்டாக இரண்டாகக் கிழிப்பது மிகச் சுலபம். அப்படிக் கிழித்து சிறிய சட்டப்பலகைகள் உருவாக்கலாம்.&lt;br /&gt;வன்னியில் பரண் அமைக்கும் தேவையுள்ளது. சாதாரணமாக நிலத்திலிருந்து இரண்டடி, மூன்றடி உயரத்தில் கட்டில் போல நிரந்தரமாக பரண் அமைத்துப் படுப்பது வழமை. பாம்புகளிடமிருந்து ஓரளவுக்குப் பாதுகாப்பளிக்கும். அதைவிட வயற்காவல், வேட்டை போன்ற தேவைகளுக்கு உயரமான பரண் அமைப்பதும் வழமை. பரண் அமைப்பதற்கு, கிழித்த விண்ணாங்குக் கட்டைகள் அருமையானவை.&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் நிகழ்ந்த தொடர்ச்சியான இடப்பெயர்வு வாழ்க்கையில் விண்ணாங்கு மரத்தின் பங்கு கணிசமானது. புதிதாக கொட்டிலொன்றைப் போட்டு வாழ்க்கையைத் தொடங்குவதாயின் விண்ணாங்கு பெருமளவு தளபாடத் தேவையை நிறைவேற்றும். படுப்பதற்கும் இருப்பதற்குமான பரண், பொருட்கள், பாத்திரங்கள் வைப்பதற்கான அடுக்கணி என்பன பெரும்பாலும் விண்ணாங்கின் மூலமே நிறைவு செய்யப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;கொட்டில்களில் அறைகள் பிரிப்பதற்கும் கிழித்த விண்ணாங்குச் சட்டங்கள் உதவும். யாழ்ப்பாணத்தில் பனைமட்டையால் வேலி வரிவது போன்று விண்ணாங்குச் சட்டங்களால் வரியப்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவைக்கேற்றாற்போல் கத்தியாலேயே சீவி சரிப்படுத்துமளவுக்கு மிக இலகுவான மரமென்பதால் இது பலவகைகளில் வசதியாகவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மிக அதிகளவில் இது பயன்படுத்தப்படும் இன்னொரு தேவை ஆயுதங்களுக்கான பிடிகள்.&lt;br /&gt;வன்னியில் மண்வெட்டி, பிக்கான்,  கோடரி போன்ற ஆயுதங்களின் பிடிகள் விண்ணாங்குக் கடையில்தான் அதிகமாகப் போடப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;விண்ணாங்கு பற்றிய மேலதிகத் தகவல்கள், திருத்தங்கள் இருந்தால் பின்னூட்டங்களில் தெரியப்படுத்தவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த இடுகையொன்றில் இன்னொரு மரத்தோடு உங்களைச் சந்திப்பேன்.&lt;br /&gt;நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-1043336423841366812?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/1043336423841366812/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=1043336423841366812' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/1043336423841366812'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/1043336423841366812'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2008/02/2.html' title='மரங்கள் -2- விண்ணாங்கு'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-8302171273409957790</id><published>2008-01-30T14:07:00.000+10:30</published><updated>2008-01-30T14:31:17.668+10:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழ அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒலி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மக்கள் துயர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வன்னி'/><title type='text'>மதியநேரத்து அவலம் - தாயொருத்தியின் கதறல்</title><content type='html'>&lt;a href="http://www.tamilnet.com/art.html?catid=13&amp;amp;artid=24462"&gt;நேற்று (29.01.2008) வன்னிப் பகுதியிலுள்ள மடுப் பகுதியில் பொதுமக்கள் பயணித்த பேருந்து மீது சிறிலங்காப் படையினர் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பாடசாலைச் சிறுவர்களுட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் பலர் காயமடைந்தனர்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்துயரச் சம்பவத்திற் பாதிக்கப்பட்ட தாயொருத்தியின் கதறலைக் கேளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமது சொந்தக் கிராமமான பெரிய பண்டிவிரிச்சானிலிருந்து சில நாட்களுக்கு முன்னர்தான் மேரியின் குடும்பம் இடம்பெயர்ந்திருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணை வீச்சில் இத்தாயின் குழந்தையொன்று கடுமையாகக் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. வைத்தியசாலையிலேயே தங்கிநின்று அக்குழந்தையைக் கவனித்து வந்தாள் மேரி. மிகக் கடுமையான நிலையிலிருந்த குழந்தைக்குத் திங்கட்கிழமைதான் நினைவு திரும்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;தாயையும், தமது சகோதரத்தையும் பார்ப்பதற்காக மேரியின் மற்றைய பிள்ளைகள் செவ்வாய்க்கிழமை வைத்தியசாலைக்குச் சென்றனர். திருமணம் முடித்துள்ள மேரியின் மூத்தமகள் தனது ஒன்றரை வயதுக் குழந்தையையும் தமது சகோதரர்களையும் வைத்தியாசலைக்கு அழைத்து வந்திருந்தாள். மதியநேரம் வைத்தியசாலையிலிருந்து மது தற்காலிக இருப்பிடங்களுக்குப் பேருந்திற் பயணித்தனர். அப்பேருந்தே படையினரின் தாக்குதலுக்கு இலக்கானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே தனது குழந்தையொன்றை வைத்தியசாலையிற் பராமதித்து வந்த மேரி, திரும்பிச் சென்ற மற்றப் பிள்ளைகளும் தாக்குலுக்குள்ளாகிய நிலையில் அதே வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டதைப் பார்த்தாள். பதினெட்டு மாதமான தனது பேரப்பிள்ளைக்கு என்ன நடந்ததென்றே தெரியாத நிலையில் அத்தாய் கதறுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளின் ஒலிவடிவச் செவ்வி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table bgcolor="#000000" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#000" src="http://res0.esnips.com/escentral/images/widgets/flash/esnips_player.swf" flashvars="theTheme=gold&amp;amp;autoPlay=no&amp;amp;theFile=http://www.esnips.com//nsdoc/ab04129e-f91c-41ea-b955-b8a6cf1be090&amp;amp;theName=28_01_08_mary&amp;amp;thePlayerURL=http://res0.esnips.com/escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf" height="94" width="328"&gt;&lt;/embed&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;table style="font-family: Verdana,Arial,Helvetica,sans-serif; padding-left: 2px; color: rgb(255, 255, 255); text-decoration: none; font-size: 10px; font-weight: bold;" cellpadding="2"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a style="color: rgb(255, 255, 255); text-decoration: none;" href="http://www.esnips.com/CreateWidgetAction.ns?type=0&amp;amp;objectid=ab04129e-f91c-41ea-b955-b8a6cf1be090"&gt;     Get this widget &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="font-size: 7px; font-weight: normal;"&gt;|&lt;/td&gt;&lt;td align="center"&gt;&lt;a align="center" style="color: rgb(255, 255, 255); text-decoration: none;" href="http://www.esnips.com/doc/ab04129e-f91c-41ea-b955-b8a6cf1be090/28_01_08_mary/?widget=flash_player_esnips_gold"&gt;     Track details  &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="font-size: 7px; font-weight: normal;"&gt;|&lt;/td&gt;&lt;td&gt;&lt;a align="center" style="color: rgb(255, 102, 0); text-decoration: none;" href="http://www.esnips.com//adserver/?action=visit&amp;amp;cid=player_dna&amp;amp;url=/socialdna"&gt;   eSnips Social DNA    &lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுபற்றிய தமிழ்நெற்றின் பத்தி:&lt;br /&gt;Horror in the afternoon&lt;br /&gt;&lt;br /&gt;[TamilNet, Tuesday, 29 January 2008, 22:42 GMT]&lt;br /&gt;When her bunker at the Thadcha'naamaruthamadu refugee camp came under SLA shelling last Sunday, Mary Consulator sustained minor injuries and her child was critically wounded. She faced the crisis with the courage of a mother in a war-zone: she admitted her child to the Pa'l'lamadu hospital and stayed there to nurse it to health. Her child returned to a conscious state on Monday.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.tamilnet.com/img/publish/2008/01/28_01_08_mary_02_66524_445.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;On Tuesday, her two grown-up daughters (one of them with an 18-month-old baby) and her two teenage sons came to the Pa'l'lamadu hospital by bus to look at their wounded sibling. The bus by which they left was attacked by the SLA's Deep Penetration Unit that triggered a Claymore mine. They returned to the hospital, as fatally wounded victims, or didn't return at all.&lt;br /&gt;&lt;br /&gt;Despite her endless tears, Mary untiringly repeats her tragic tale.&lt;br /&gt;&lt;br /&gt;A native of Periya Pan'ndivirichchaan, Mary was displaced and living in the Thadcha'naamaruthamadu refugee camp. When her child was severely wounded in the SLA shelling last Sunday, she admitted it to the Pa'l'lamadu hospital. She was taking care of her wounded child who regained consciousness only yesterday. Her eldest daughter, Rohana, with an 18-months old baby, Mary's two sons and another daughter, came to see them at the hospital by the 7:30 a.m. bus. The five of them left the hospital and took the 1:30 bus.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a style="color: rgb(204, 0, 0);" href="http://www.tamilnet.com/art.html?catid=79&amp;amp;artid=24471"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தொடர்ந்து வாசிக்க...&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;படம், ஒலிப்பதிவு, பத்தி: www.tamilnet.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-8302171273409957790?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/8302171273409957790/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=8302171273409957790' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/8302171273409957790'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/8302171273409957790'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2008/01/blog-post_30.html' title='மதியநேரத்து அவலம் - தாயொருத்தியின் கதறல்'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-1909946907083866904</id><published>2008-01-22T00:28:00.000+10:30</published><updated>2008-01-22T21:13:51.092+10:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படைப்பாளி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>ஒன்பது ரூபாய் நோட்டு அர்ச்சனா எப்படி அழுதிருக்க வேண்டும்?</title><content type='html'>தங்கர் பச்சானின் நெறியாள்கையில் வெளிவந்த 'ஒன்பது ரூபாய் நோட்டு' திரைப்படத்தைப் பற்றிய விமர்சனங்கள் பல வெளிவந்துவிட்டன. தொலைக்காட்சிகளில், வெகுசன ஊடகங்களில், வலைப்பதிவுகளில் என பல்வேறு விமர்சனங்கள் வந்துவிட்டன.&lt;br /&gt;அனைத்திலும் குறிப்பிடப்பட்ட முக்கிய குறைபாடு (ஒரேயொரு குறைபாடு என்றுகூடச் சொல்லலாம்) அர்ச்சனா சத்தம் போட்டுக் கத்துவதைப் பற்றியது தான். வலைப்பதிவுகளில் காசி ஆறுமுகம் தொடக்கம் &lt;del&gt;நா.கண்ணன்&lt;/del&gt; சுரேஷ் கண்ணன் வரை பெரிய தலைகளும் அதையே குறிப்பிட்டிருந்தார்கள்.&lt;br /&gt;திகைப்பை ஏற்படுத்தும் விதமாக நா.கண்ணன் மட்டும் (நான் வாசித்த, கேட்ட அளவில்) &lt;a style="font-weight: bold;" href="http://emadal.blogspot.com/2008/01/blog-post_19.html"&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அர்ச்சனாவின் அழுகையையும் நடிப்பையும் சரியென்று பாராட்டியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நா. கண்ணன் ஐயாவோடு நானும் இணைந்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் தொடர்பாக தங்கர் பச்சானிடம் வைக்கப்பட்ட முதன்மை முறைப்பாடு இந்த அழுகைதான். இக்குற்றச்சாட்டைக் கேட்டவுடனேயே (சமயங்களில் கேள்வி தொடங்கும்போதே) தங்கருக்குக் கோபம் உச்சத்துக்கு ஏறுகிறது. மதன் திரைப்பார்வையில் தங்கர் கர்ஜித்த விதம் எனக்கு மிகப் பிடித்திருந்தது, கூடவே அவருடைய விளக்கமும்.&lt;br /&gt;&lt;br /&gt;நகர்ப்புற மனிதர்களின் பார்வையில் கிராமத்துத் தாயின் கதறல் அப்படித்தான் தெரியும் என்பது தங்கரின் பதில்களிலொன்று. தாங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் நகர்ப்புறப் பெண்ணை எப்படி கிராமத்துப் பெண்ணுக்குப் பொருத்த முடியும்? சுகாசினியும் மதனும் இன்னும் பலரும் இந்த நகர்ப்புறப் பார்வையுடன்தான் பார்க்கிறார்களென்பது விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கர் சொல்லும் இன்னொரு முக்கிய விடயம், தமிழ்ச்சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் 'அம்மா' பாத்திரம். அந்தக் கட்டமைப்புக்குள் இல்லாமல் யதார்த்தமான தாயைக் காட்டியதும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்பது அவரது கருத்து.&lt;br /&gt;உண்மைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச்சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் தாய்ப் பாத்திரம் தமிழ்ச்சூழலின் பெரும்பான்மையைப் பிரதிபலிக்காத பாத்திரம்தான். விடிய வெள்ளன முழுகி, தலைதுவட்டி, சாமிபடத்துக்கு புகைகாட்டி மணியடித்தபடி வெள்ளை வெளேரென 'மங்களகரமாக' வரும் தாய்மார்கள் நிச்சயமாக எங்களைப் போன்றவர்கள் வாழ்ந்த சூழலில் தாய்மாரை நினைவுபடுத்துவதில்லை. மிகப் பெரும்பான்மையானவர்களின் தாய்மாரை அப்பாத்திரங்கள் பிரதிபலிக்கா.&lt;br /&gt;எத்தனை படத்தில்தான் இவர்களைப் பார்த்துச் சலிப்பது?&lt;br /&gt;கிட்டத்தட்ட அரைவாசிப் படங்களிலாவது தொடக்கக் காட்சியாக அமையும் கோயிற்காட்சி, தேங்காயுடைக்கும் காட்சி, அர்ச்சனை செய்யும் காட்சி, ஆரத்தியெடுக்கும் காட்சிகள் ஏற்படுத்தும் எரிச்சலை இந்த தமிழ்ச்சினிமா அம்மா மாரும் ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட, அவர்கள் அடக்கமே உருவாக இருப்பார்களாம். சத்தம் போட்டுப் பேசமாட்டார்களாம். சத்தம்போட்டு அழக்கூட மாட்டார்களாம். கணவனுக்கு முன்னால் வாய்பொத்தி இருப்பார்களாம். இவற்றைவிட, பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும் என்று சூப்பர் ஸ்டார் முதல் ஆளாளுக்கு உபதேசம் வேறு செய்துகொண்டேயிருப்பார்கள். இப்படியெல்லாம் கலந்துகட்டி தாய் என்ற (பொதுவாக பெண்) விம்பத்தை தமிழ்ச்சினிமாவில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வப்போது சில திரைப்படங்களில் வரும் தாய்மார்கள் ஒரு நெருக்கத்தை உணர வைப்பார்கள். அவ்வகையில் பாலு மகேந்திராவின் 'அதுவொரு கனாக்காலத்தில்' தனுசின் தாயாக வருபவரைச் சொல்லாம். பருத்திவீரனில் நாயகியின் தாயாக வருபவரின் பாத்திரம் என்னைக் கவர்ந்தது. அதுபோல் 'பொல்லாதவனில்' டானியல் பாலாஜியின் அண்ணியாக வரும் பாத்திரமும் கவர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு சொன்னபடி அடக்கமே உருவாகச் சித்தரிக்கப்பட்ட பாத்திரங்களிலிருந்து முற்றிலும் விலகி தங்கர் பச்சானின் வேலாயி இருப்பது பலருக்கு அதிர்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் இப்படியெல்லாம் ஓலமிடுவது யதார்த்தத்துக்குப் புறம்பானதென்று இணைய இதழொன்றில் பார்த்தேன். என்ன முட்டாள்தனமான வாதம்? பெண்களால் மட்டும்தான் அப்படிக் கதற முடியும். அவர்கள் மட்டும்தான் அப்படிப் கதறியழுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்காவது ஆண்கள் அப்படிக் கதறிப் பார்த்திருக்கிறீர்களா?&lt;br /&gt;இழவு வீடுகளில் ஒப்பாரி வைப்பது யார்? நூறு வீதமும் பெண்கள்தாம். சில புறநடைகளை விட்டால் ஆண்களுக்கு குரலெடுத்து அழத்தெரியாது, அல்லது அப்படி அழ விரும்புவதில்லை. தனது ஆண்மைக்கு இழுக்கு என்ற மனோபாவமும் ஒரு காரணம். ஆனால் பெண்கள் அதைப்பற்றி யோசிப்பதில்லை. குறிப்பாகக் கிராமத்துப் பெண்கள் அவற்றுக்கு வெட்கப்படுவதில்லை. அழுகை வருகிறதோ இல்லையோ செத்த வீடொன்றில் குரலெடுத்து அழுதே ஆக வேண்டிய தேவைகூட அவர்களுக்கு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமங்களில் பெண்களிடையே நடக்கும் வாய்ச்சண்டையைப் பார்த்தவர்களுக்குத் தெரியும், அவர்களின் சத்தத்தின் வலிமை. ஆண்களிடையே நடக்கும் சண்டை சிலவேளை அடுத்த வீட்டுக்கே கேட்காது. அதிக நேரம் நீடிக்கவும் மாட்டாது. சில நொடிகளிலேயே கைகலப்பு வரை வந்து முடிந்துவிடும். அனால் இரண்டு பெண்களிடையில் சண்டை மூண்டால் இடைவேளைகள் விட்டுக்கூட நாள் முழுவதும் சண்டை பிடிப்பார்கள். அக்கம் பக்கத்திலிருக்கும் நாலைந்து வீடுகளுக்கு அன்று பெரும் சமாதான். (அந்நேரத்தில் அவ்வீடுகளில் இருக்கும் அண்களின் நிலை பரிதாபமாக இருக்கும். குடிக்க தேத்தண்ணி கூடக் கிடைக்காது. நான் பார்த்தளவில் அவர்கள் செய்யும் வேலை, சண்டை தொடங்கி கொஞ்ச நேரத்திலேயே சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்காவது மதவடியில் போய் கடுதாசி விளையாடிவிட்டு பொழுதுபட வீட்டுக்கு வருவதுதான்)&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சொல்ல வருகிறேன் என்றால், பெருத்த சத்தத்தில் கத்துவது, கதறுவது, சண்டை பிடிப்பதெல்லாம் பெண்களுக்கு மிக யதார்த்தமான, இயல்பான விடயங்கள். ஆண்களுக்குத்தான் அவை மிகையான விடயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் ஒன்பது ரூபாய் நோட்டில் அர்ச்சனா கத்துவது, புலம்புவது, அழுவது எல்லாமே படு யதார்த்தமாகத்தான் எனக்குத் தெரிகிறது. அர்ச்சனா போன்ற ஏராளம் ஏராளம் தாய்களைப் பார்த்திருக்கிறேன், அவர்களோடு வாழ்ந்திருக்கிறேன். எடுத்ததுக்கெல்லாம் 'மாதாவே, யேசுவே, தொம்மையப்பரே, இதுகளைப் பாத்துக்கொண்டு சும்மா இருக்கிறீரோ?' என்று  ஓலமிடத் தொடங்கிவிடும் பல தாய்மார் எனது சுற்றமாக இருந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;அதுவும், என்ன விசயத்துக்கு யார் யாரிடம் எப்படிப் புலம்ப வேண்டுமென்றுகூட ஓர் ஒழுங்குமுறை வைத்திருப்பார்கள். ஆருக்காவது சாபம் விட வேணுமெண்டால் மிக்கேல் சம்மனசானவரைக் கூப்பிடுறது தொடக்கம் மிக நுணுக்கமாக அவர்களது புலம்பல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகள் எதிர்த்துக் கதைத்தவுடன் சாமி படத்தின்முன் போயிருந்து அர்ச்சனா புலம்புவாரே, அப்படி அவர் புலம்பாவிட்டால்தான் எனக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;அர்ச்சனா கதறும் இடங்களின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாம் என்பதும் ஒரு விமர்சனம். அது பார்ப்பவர்களின் பிரச்சினையே ஒழிய அழும் தாய்க்கு எண்ணிக்கை பிரச்சினையில்லை என்பது தங்கரின் வாதம். நேற்று அதிகம் அழுதுவிட்டேன், இன்று குறைத்து அழவேண்டும் என்று திட்டம்போட்டு எந்தத் தாயும் அழ மாட்டாள் என்று தொடர்ந்து சொல்கிறார் தங்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;முடிவாக, ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் அர்ச்சனாவின் அழுகை எவ்விதத்திலும் எனக்கு உறுத்தவில்லை. மிகமிகக் கச்சிதமாக அவரின் பாத்திரம் படத்தோடு பொருந்துகிறது என்பதே என் கணிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஸ் கண்ணன் சொல்லும் "டெக்னிகல்" விசயமும் எனக்கு விளங்கவில்லை. கதறியழுவதை, சத்தம் வெளியில் வராமல் காட்சியாக மட்டும் காட்டுவதைப் பற்றி ஏதேனும் சொல்கிறாரோ தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும்படி அர்ச்சனாவின் அழுகையை நிறுத்துவதென்பது பாத்திரச் சிதைப்பு என்பதோடு யதார்த்தமாகவும் இராது என்பதே என் கருத்து. அந்தந்தக் காட்சிகளில், அர்ச்சனா வாயைத் திறக்காமல் கண்ணீர் மட்டும் விடுவதுபோன்று படத்தை எடுத்திருந்தால், என் பார்வையில் நிச்சயமாக அதுவொரு பாத்திரச் சிதைவை ஏற்படுத்தியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்பது ரூபாய் நோட்டில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவையாகவும் உறுத்தலாகவும் எனக்குப்பட்டவை பாடல்கள் தாம். 'மார்கழியில் குளித்துப்பார்' என்ற, கதை நகர்வுக்கு உறுதுணையான பாடலைத் தவிர்த்து மற்றக் காதல்பாடலெல்லாம் படத்துக்குத் தேவையற்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் தொலைக்காட்சியின் அனுகாசனின் 'கோப்பி வித் அனு' நிகழ்வில், தங்கர் பச்சான் கலந்து கொண்டார். 'எதைச் செய்தால் தமிழ்ச்சினிமா முன்னேறும்?' என்ற அனுவின் கேள்விக்கு தங்கர் சடுதியாகப் பதிலளிக்கிறார், 'பாடல்களை நிறுத்திவிட்டாலே போதும்' என்று.&lt;br /&gt;&lt;br /&gt;மிக அண்மையில் புதிய இயக்குநர் ஒருவரும் (மிஷ்கின்?) படங்களில் பாடல்களைச் சேர்ப்பது தனக்குப்பிடிப்பதில்லையென்றும், வியாபார ரீதியில் வேறுபலரைத் திருப்திப்படுத்த அவற்றைச் செய்ய வேண்டியிருக்கிறதென்றும் படவிழாவில் பேசினார்.&lt;br /&gt;இயக்குநர் சேரனும் பாடல்கள் இல்லாமல் படமெடுக்க வேண்டும் என்ற விவாதத்தை முன்பு முன்வைத்திருந்தார். கமலகாசன் இருபது வருடங்களின் முன்பிருந்தே இதைத் தீவிரமாகச் பேசியிருக்கிறார். தன்னளவில் முயற்சித்தும் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் எமது சாபக்கேடு, எல்லாம் பேச்சளவோடு நின்றுவிடுகிறது. பாடல்கள் இல்லாமல் தமிழ்ப்படங்கள் (அட வருடத்துக்கு ஒன்றிரண்டாவது?) வரும் காலமொன்றையும், அதனூடு தமிழ்ச்சினிமா ஓரிருபடிகள் முன்னேறுமென்பதையும் கனவு கண்டுகொண்டேயிருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-1909946907083866904?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/1909946907083866904/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=1909946907083866904' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/1909946907083866904'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/1909946907083866904'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2008/01/blog-post.html' title='ஒன்பது ரூபாய் நோட்டு அர்ச்சனா எப்படி அழுதிருக்க வேண்டும்?'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-1949202540087139204</id><published>2008-01-21T18:42:00.000+10:30</published><updated>2008-12-12T02:29:08.238+10:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அலட்டல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வன்னி'/><title type='text'>மரங்கள் - 1 - வெடுக்குநாறி</title><content type='html'>தெரிந்த மரங்களின் பெயர்கள் சிலவற்றைத் தொகுத்து வைக்கும் நோக்கத்தோடு இது எழுதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மரங்கள் பற்றிய அறிவு, அனுபவம் என்பன வித்தியாசமானவை. பாடப் புத்தகங்களிலும், வேறு வழிகளிலும் மரங்கள் பற்றிய அறிவைப் பெறுவது ஒருமுறை. ஆனால் மரங்களை நேரிற்பார்த்து பழகி அனுபவம் பெறுவது வேறொரு முறை. நாம் அறிபவற்றில் அனுபவிக்கக் கிடைப்பவை சிலவே. அது நாம் வாழும் அமைவிடங்களைப் பொறுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிலமரங்கள், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுவதைக் கண்டிருக்கிறோம். பூக்களின் பெயர்கள் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் வேறுபடுவதை வலைப்பதிவுகளில் கண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே, மரங்களை அறிமுகப்படுத்த முடியாது. அவைபற்றிய முழுமையாக தரவுகள், படங்களுடன் இடுகையெழுத முடியாது. ஆனால் நான் பழகிய மரங்களின் பெயர்களைப் பதிந்து வைப்பது என்பதே இவ்விடுகையின் நோக்கம். இன்னும் ஈராண்டுகள் கழித்து, எனக்கே சில மரங்களின் பெயர்களை ஞாபகப்படுத்திக்கொள்வதுதான் இதன் முதன்மை நோக்கம்; மற்றவர்களுக்குப் பயன்படுமென்று நினைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிச் செய்யவேண்டி வந்ததற்கு தலைப்பிலுள்ள 'வெடுக்குநாறி' தான் காரணம்.&lt;br /&gt;இம்மரம் பற்றிய சம்பவமொன்றை அசைபோட்ட பொழுதில், அம்மரத்தின் பெயர் உடனடியாக நினைவுவர மறுத்துவிட்டது. இதென்ன கொடுமை? மிக அதிகளவில் பழகிய மரத்தின் பெயரொன்று வெறும் மூன்று வருடத்துக்குள், சடாரென்று நினைவு வராமற் போகுமளவுக்கு மங்கிவிட்டது திகைப்பாக இருந்தது. கொஞ்சம் யோசித்து பெயரை நினைவுபடுத்திக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இப்பிடியே போனா இன்னும் ரெண்டு வருசத்தில் மூளை மக்கிப்போன நேரத்தில இன்னும் பிரச்சினையாக இருக்குமே எண்டு நினைச்சு, அந்த நேரத்தில் உதவக்கூடிய மாதிரி எழுதி வைக்கிறதெண்டு முடிவெடுத்ததன் விளைவுதான் இவ்விடுகை.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்தில் இருந்தபோது அறிந்த மரங்களின் தொகை மட்டுப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்திற் காணக்கிடைக்காத மரங்களில் நான் கேள்விப்பட்டிருந்த பெயர்கள்: பாலை, முதிரை, கருங்காலி போன்றன. இவைகள் தளபாடங்கள் மூலம் அறிந்த பெயர்கள். இவற்றில் பாலையைத் தவிர ஏனையவற்றை வன்னிக்கு நிரந்தரமாக இடம்பெயரும்வரை நேரிற் கண்ட ஞாபகமில்லை. இரண்டொருமுறை யாழ்ப்பாணத்திலிருந்து மடுத் திருநாளுக்காக வந்து போனதில் பாலைமரம் நல்ல பரிச்சயம். அவற்றைவிட வீரை, சூரை என்பவற்றைக் கேள்விப்பட்டதன்றி நேரிற் பார்த்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1996 இன் தொடக்கத்தில் வன்னிக்கு வந்தபின்பு புதுப்புது மரங்கள் பலவற்றை அறியக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அவற்றிலொன்றுதான் இவ்விடுகைக்குரிய தலைப்பான 'வெடுக்கு நாறி'.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பெயர்வர என்ன காரணமென்று தெரியவில்லை. இம்மரத்தை வெட்டினால் ஒரு மணம் வரும், எல்லா மரத்துக்கும் வருவதைப் போலவே. ஆனால் அருவருக்கத்தக்கதாக அது இருக்காது. வெடுக்கு, நாறுதல் போன்ற சொற்களுக்கு தற்காலத்தில் நாம் கொண்டிருக்கும் பொருட்படி பார்த்தால் அது கொஞ்சம் அருவருக்கத்தக்க மணத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இது நெடுநெடுவென்று நேராக உயர்ந்து வளரும், கிட்டத்தட்ட தேக்குப் போல. இளம் வெடுக்குநாறிகளைப் பார்த்தால் மின்கம்பங்களாக நடக்கூடிய மாதிரித்தான் நேராக உயர்ந்து வளர்ந்திருக்கும். பின்னர் முற்றிப் பருக்கும். நாலைந்து பேர் சுற்றிநின்று கட்டிப்பிடிக்கக் கூடியளவுக்குப் பருமனான வெடுக்குநாறிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படிப் பருத்த மரங்கள் எண்ணிக்கையில் குறைவாகவே காணப்படுகின்றன. அந்த நிலைக்கு வருவதற்கு முன்பே ஏதோவொரு வகையில் இம்மரங்கள் தமது வாழ்நாளை முடித்துக்கொள்வதாகக் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் இலைகள் கரும்பச்சை நிறத்திலிருக்கும். இதன் பட்டை கறுப்பாக இருக்கும். கொஞ்சம் தூரத்திலிருந்து பார்த்தால் கருங்காலி மரத்துக்கும் வெடுக்குநாறி மரத்துக்கும் உடனடியாக வித்தியாசம் பிடிக்க முடியாதபடி இருக்கும். கருங்காலிக்கு பட்டை தனிக்கறுப்பாக இருக்கும். அத்தோடு சிறிய செதில்கள் போல பட்டைத் துண்டுகள் மேற்கிளம்பியிருக்கும்.&lt;br /&gt;ஆனால் வெடுக்குநாறிக்கு பட்டை மேற்பரப்பு மிகமிக அழுத்தமாக இருக்கும். அத்தோடு கறுப்பினிடையே (உண்மையில் வெடுக்குநாறியின் பட்டையின் நிறத்தைக் கறுப்பென்று சொல்லமுடியாது. கறுப்பும் கடும்பச்சையும் கலந்தவொரு நிறம்) வெளிர்நிறக் கோடுகள் நெடுக்காகத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட மரத்தின் கிளையமைப்பு வெடுக்குநாறிக்கு வித்தியாசம். நெட்டையாக நிற்கும் இள வெடுக்குநாறிகளின் கிளைகள் கற்தேக்குப் போல ஓரளவு குடைவடிவக் கிளையமைப்பைக் கொண்டிருக்கும். (ஆனால் நன்கு முற்றிப் பருத்த வெடுக்குநாறி மரம் முற்றிலும் மாறுபட்டு சாதாரண மரங்கள் போன்று காட்சிதரும்.)&lt;br /&gt;&lt;br /&gt;சரி, வெடுக்குநாறியின் பயனென்ன எனக் கேட்டால் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றுமில்லை. இதிலிருந்து தளபாடங்கள் எவையும் செய்ய முடியாது. வைரமான மரமன்று. விறகுக்குக்கூட இதைப் பயன்படுத்துவதில்லை. காய்ந்தபின், அடர்த்திகுறைவாகத் தெரியும்.&lt;br /&gt;ஆனால் குறுகிய கால நோக்கில் இம்மரம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. நேராக நெடுத்து வளருவதால், அவ்வாறான கம்பங்களின் தேவையை இம்மரங்கள் நிறைவேற்றுகின்றன. அண்ணளவாக ஓராண்டு காலம்வரை இம்மரத்தைக் கொண்டு குறிப்பிட்ட பயனைப் பெறலாம். காய்ந்த பின் நிறை மிகக்குறைவாக இருப்பது இன்னொரு சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அவசரமாக பதுங்கு - குழியமைக்க, கிணற்றுக்குக் குறுக்காக வளையொன்று (கப்பி கட்ட) போட, குறுகியகால வதிவிடம் அமைக்க வளையாக, தீராந்தியாக, கப்பாக என இம்மரம் பயன்படுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வின மரங்கள் வன்னிக் காடுகளில் மிகமிகச் செறிவாகக் காணப்படுகின்றன.&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;இம்மரத்தைப் பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள், அல்லது எனது தகவல்களில் முரண்படுகிறவர்கள் பின்னூட்டங்களில் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு மரத்தோட அடுத்த இடுகையிற் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;&lt;br /&gt;இடுகைக்குத் தொடர்பில்லாதது; டி.சேயின் பின்னூட்டத்தைத் தொடர்ந்து இப்படம் இங்கு இணைக்கப்படுகிறது.&lt;br /&gt;நாயுண்ணிப் பூவின் படம். (பீநாறியும் நாயுண்ணியும் வெவ்வேறு செடிகள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_2QNyK7gHiW0/R6Aytcb53JI/AAAAAAAAAEw/suQMzfFIgG4/s1600-h/naayunni.jpg"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_2QNyK7gHiW0/R6Aytcb53JI/AAAAAAAAAEw/suQMzfFIgG4/s320/naayunni.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5161180929275321490" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம்: அருச்சுனா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-1949202540087139204?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/1949202540087139204/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=1949202540087139204' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/1949202540087139204'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/1949202540087139204'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2008/01/1.html' title='மரங்கள் - 1 - வெடுக்குநாறி'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2QNyK7gHiW0/R6Aytcb53JI/AAAAAAAAAEw/suQMzfFIgG4/s72-c/naayunni.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-5926887633008212548</id><published>2007-12-31T12:17:00.000+10:30</published><updated>2007-12-31T16:10:00.357+10:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>என்னத்தைச் செய்தோம் இவ்வாண்டில்?</title><content type='html'>இவ்வாண்டில் நானெழுதிய மொத்த இடுகைகள்: &lt;span style="font-weight: bold;"&gt;33&lt;/span&gt;.&lt;br /&gt;சயந்தனால் எழுதப்பட்டது: &lt;span style="font-weight: bold;"&gt;ஒன்று.&lt;/span&gt;&lt;br /&gt;கிடைத்த மொத்தப் பின்னூட்டங்கள்: &lt;span style="font-weight: bold;"&gt;353&lt;/span&gt;.&lt;br /&gt;அதிக பின்னூட்டங்கள் கிடைத்த இடுகை (37 பின்னூட்டங்கள்):&lt;br /&gt;&lt;a href="http://vasanthanin.blogspot.com/2007/02/blog-post_4611.html"&gt;&lt;span style="font-weight: bold;"&gt; பின்னவீனத்துவம்: அறிவியல்பூர்வக் கலந்துரையாடல் - ஒலிப்பதிவு&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாண்டில் நானெழுதிய முதலாவது இடுகை:&lt;br /&gt;&lt;h3 class="post-title"&gt;&lt;a href="http://vasanthanin.blogspot.com/2007/01/blog-post.html"&gt;       கிளாலிக் கடனீரேரி - சில நினைவுகள்&lt;/a&gt;&lt;/h3&gt;இறுதியிடுகை: இவ்விடுகை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாண்டில் நானிட்ட ஒலிப்பதிவுகள் ஆறு:&lt;br /&gt;&lt;h3 class="post-title"&gt;&lt;a href="http://vasanthanin.blogspot.com/2007/01/blog-post_08.html"&gt;       உச்சரிப்பு மயக்கம் - ஒலிப்பதிவு&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title"&gt;&lt;a href="http://vasanthanin.blogspot.com/2007/01/blog-post_14.html"&gt;       கலந்துரையாடல் ஒலிப்பதிவு -தைப்பொங்கல் சிறப்புப் பதிவு&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title"&gt;&lt;a href="http://vasanthanin.blogspot.com/2007/02/1.html"&gt;       நான் பெரிய ஆள் -1 : நானெழுதிய கவிதைகள்&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title"&gt;&lt;a href="http://vasanthanin.blogspot.com/2007/02/blog-post_4611.html"&gt;       பின்னவீனத்துவம்: அறிவியல்பூர்வக் கலந்துரையாடல் - ஒலிப்பதிவு&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title"&gt;&lt;a href="http://vasanthanin.blogspot.com/2007/06/1.html"&gt;       நினைவுப்பயணம்-1 (பண்டத்தரிப்பு) - ஒலிப்பதிவு&lt;/a&gt;&lt;/h3&gt;இவற்றைவிட மற்றவர்களின் குரல்களை ஒலிப்பதிவாக்கி இட்ட இடுகைகள் மூன்று.&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;இவ்விடுகை எழுதுவதற்கான ஆராய்ச்சியிலீடுபட்டிருந்தபோது இடுகைகளுக்கிடையிலான கால இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளேன்.&lt;br /&gt;2005 இல் எழுதிய இடுகைகள்: 111.&lt;br /&gt;2006 இல் எழுதிய இடுகைகள்: 83&lt;br /&gt;2007 இல் எழுதிய இடுகைகள்: 32. [இவற்றுள் மீளிடுகை, படியிடுகை என்பவற்றைக் கழித்தால் 25 தாம் வரும்.(2005 மேயில் நட்சத்திரக் கிழமையில் எழுதிய இடுகைகள் மட்டுமே 26)].&lt;br /&gt;இருந்தாலும் நான் வலைப்பதிவு தொடங்கிய காலத்தில் எழுதத்தொடங்கியவர்கள் பலரைவிட அதிகமான இடுகைகள் எழுதியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;&lt;br /&gt;*** இதுதான் இவ்வாண்டின் கடைசியிடுகை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-5926887633008212548?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/5926887633008212548/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=5926887633008212548' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/5926887633008212548'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/5926887633008212548'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2007/12/blog-post_6195.html' title='என்னத்தைச் செய்தோம் இவ்வாண்டில்?'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-4932478064460781845</id><published>2007-12-29T11:25:00.000+10:30</published><updated>2007-12-29T11:26:10.483+10:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படைப்பாளி'/><title type='text'>ஓரம்போ !!! - திரைப்படம்</title><content type='html'>அண்மையில் இப்படத்தைப் பார்த்தேன். ஏனோ தெரியவில்லை, பிடித்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக தமிழ்ச்சினிமாவில் கடுப்பேற்றும் விடயங்கள்,&lt;br /&gt;1. பாடற்காட்சிகள்&lt;br /&gt;2. நகைச்சுவைக் காட்சிகள்&lt;br /&gt;3. சண்டைக்காட்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் இரண்டாவதும் மூன்றாவதும் இப்படத்தில் இல்லையென்பதால் எனக்குப் பிடித்திருந்தது.&lt;br /&gt;அதற்காக படத்தில் நகைச்சுவையே இல்லையென முடிவுகட்டிவிடாதீர்கள். நான் சொல்வது, தனியே நகைச்சுவைக்கென ஒருவரையோ ஒரு கும்பலையோ நடிக்கவிட்டு வரும் காட்சிகளை.&lt;br /&gt;வடிவேலுவோ விவேக்கோ இன்னபிற நகைச்சுவைக்கென இருக்கும் நடிகர்களோ அவர்களின் பரிவாரங்களோ இப்படத்தில் இல்லை. கதைக்கான தேவையைவிட்டு நகைச்சுவைக்கென தனியான ஒழுக்கெதுவும் இப்படத்திலில்லை. எனவே இப்படம் பிடித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரேயொரு சண்டைக்காட்சி வருகிறது, அதுகூட நாயகன் பத்துப்பேரைப் பந்தாடுவதாக காட்சிப்படுத்தப்படவில்லை. தனது ஆட்டோவைக் களவெடுத்துச் செல்வதைத் தடுத்துச் சண்டைபோடுகிறார் நாயகன். நாலைந்து பேருக்கு நாலைந்து அடியோடு சரி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆ.. ஊ.. வென்று வாய்கிழிய வசனம்பேசும் நாயகனில்லை.&lt;br /&gt;பார்வையாளனுக்கான உபதேசங்கள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சில 'இல்லாமை'களுக்காக இப்படம் எனக்குப் பிடித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வழமையாக படங்களில் எரிச்சலேற்படுத்தும் பாடற்காட்சிகள் கூட இப்படத்தில் எனக்கு எரிச்சலேற்படுத்தவில்லை. அந்த ஒரேயொரு காதற்பாட்டைத் தவிர்த்திருக்கலாம். மற்றவை படத்தோடும் கதையோடும் இயல்பாகப் பொருந்துவதாகத் தோன்றுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் ஆட்டோ ஓட்டப்போட்டி நடத்துகிறார்கள். படத்தின் மையக் கருவே அதுதான். படத்தில் வரும் முதலாவது போட்டியில் நாயகன் வெல்கிறார்.&lt;br /&gt;அதன்பிறகு தோற்கிறார், தோற்கிறார், தோற்றுக்கொண்டேயிருக்கிறார்.&lt;br /&gt;வழமையாக முதலில் நாயகன் தோற்பார், பிறகு வெல்வார். இங்கு தலைகீழாக நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனும் அவரது நண்பனும் அனைத்தையும் இழந்துவிட்டார்கள். கையிலிருப்பது, யாருக்கும் தெரியாமல் பொத்திவைத்திருந்த 'சீத்தா' எனுமொரு ஆட்டோ. யாரையும் தொடக்கூட விடுவதில்லை.&lt;br /&gt;அதைப் பந்தயமாக வைத்து இறுதிப் போட்டி நடக்கவிருக்கிறது. ரஜனி ஒத்தை ரூபாயை வைத்து எல்லாக் கோடிகளையும் மீட்பது போல நாயகனும் அவனது நண்பனும் இதைவைத்தே இழந்த எல்லாவற்றையும் மீட்டுவிடுவார்களோ என்று நினைத்துப் பயந்துகொண்டிருந்தேன். அதற்குரியமாதிரி பந்தயத்தில் நாயகன் வென்றால் இவர்கள் இழந்த அனைத்தையும் மீளத்தரவேண்டுமென்பதே பந்தயமாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அட! அந்த இறுதிப்போட்டியிற்கூட நாயகனும் தோழனும் தோற்றுப்போகிறார்கள். இப்பிடியொரு அதிர்ச்சியைத் தமிழ்ச்சினிமாவில் - அதுவும் முழுக்க முழுக்க வர்த்தக நோக்கத்தில் எடுக்கப்பட்ட படத்தில் - 'ஆக்ஷன் ஹீரோ' க்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆர்யா நடிக்கும் படத்தில் - எதிர்ப்பார்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதிஷ்டவசமாகக் கிடைத்த இரண்டு கறுப்பு முத்துக்கள் மூலம் நிறையப் பணம் கிடைத்து ஆர்யாவும் நண்பனும் வாழ்க்கையில் நிலைபெறுகிறார்கள் என்று காட்டி படத்தை முடிக்கிறார்கள். திருப்பவும் ஓட்டப்போட்டிக்கு வருவதாகக் காட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;படத்தில் பிடித்த பாத்திரம்: Sun Of Gun.&lt;br /&gt;மனிதர் நன்றாக நடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிடித்த காட்சி:&lt;br /&gt;பூஜாவை, தன்னுடன் படம்பார்க்க திரையரங்கு அழைத்துச் செல்வதற்காக ஆர்யா போடும் தூண்டில். பூஜாவின் பிரியாணியில் கதையைத் தொடங்கி எதிராளிக்குச் சந்தேகம் வராதமாதிரி சுவாரசியமாகப் பேசிக்கொண்டே திரையரங்குக்குப் போக சம்மதிக்கவைக்கும் அந்தக்காட்சியை மிகவும் இரசித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;** இப்படத்தில் நாயகனின் நண்பனாக வரும் 'பிகிலு' பல படங்களில் ஆக்ரோசமான வில்லனாக நடித்திருக்கிறார். இதில் முற்றிலும் மாறுபட்ட வேடம். நன்றாகச் செய்திருக்கிறார். மும்பை எக்ஸ்பிரசில் பசுபதியைப் பார்த்த ஞாபகம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;*** படத்தில் கதையென்று எதுவுமில்லையென்று சிலர் சொன்னார்கள். உண்மைபோற்றான் தெரிகிறது. கதையென்று தனியே எழுதிவிட முடியாது. நாலைந்து சிறுகதைகளை ஒன்றாக்கி அவற்றுள் ஏதோவொரு தொடர்பை ஏற்படுத்தி ஒரு படமெடுத்ததுபோல் இருக்கிறது. ஆனால் இரசிக்கும்படியான திரைக்கதையமைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அவனவன் ஒரேகதையை வைத்துப் பத்துப்படம் பண்ணும்போது, இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் இயக்குநர்களில் ஒருவர் பெண்ணென்று அறிகிறேன்.&lt;br /&gt;வாழ்த்து.&lt;br /&gt;ஜனரஞ்சகமான படங்களுள் பெண்களின் வருகை களிப்பூட்டுகிறது (கண்ணாமூச்சி ஏனடா இன்னோர் எடுத்துக்காட்டு).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-4932478064460781845?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/4932478064460781845/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=4932478064460781845' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/4932478064460781845'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/4932478064460781845'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2007/12/blog-post_29.html' title='ஓரம்போ !!! - திரைப்படம்'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-3074444012301960013</id><published>2007-12-23T12:07:00.000+10:30</published><updated>2007-12-23T12:16:14.935+10:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர் நலன்'/><title type='text'>மலேசியத் தமிழ் இளையோர் - தமிழ்நெற் சிறப்புக்கட்டுரை</title><content type='html'>அண்மையில் மலேசிய இந்தியர்கள் நடத்திய அறவழிப்போராட்டத்தை அடிப்படையாக வைத்து  மலேசியத் தமிழர்கள் தொடர்பான சிறப்புக்கட்டுரையொன்றை தமிழ்நெற் வலைத்தளம் வெளியிட்டுள்ளது. பலரும் வாசிக்க வேண்டிய கட்டுரையென்பதால் பயன்கருதி இங்கு அது மீள்பதிவாக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: தமிழ்நெற்.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;மலேசியத் தமிழ் இளையோர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியத் தமிழ் இளையோர்: பண்பாட்டு-வலுவாக்கச் சிக்கல்&lt;br /&gt;இன்றைய உலக விமானப் போக்குவரத்தின் தலைசிறந்த மையங்களுள் ஒன்று, கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையம். இதன் பயணிகள் அகலும்/இடைமாறும் கட்டிடத்தை ஒரு குறு நகரம் என்றே சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும், மலேசியாவின் பன்மைப் பண்பாட்டுடன் பழக்கமுடைய எவரும் வினவக்கூடியது என்னவென்றால், இங்குள்ள கண்கவர் இன உணவு, விநோதப்பொருள், சர்வதேசச் சரக்கு அங்காடிகளில் இந்நாட்டின் மக்கட் தொகையில் ஏறத்தாழ 9 வீதம் கொண்ட தமிழ்ச்சமூகம் ஏன் முறையாக பிரதிபலிக்கவில்லை என்பதே.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் நடத்துவது என்று ஒரு புத்தகசாலையைத் தவிர வேறு விற்பனை நிலையங்கள் எதுவும் இங்கு இருப்பதாகவும் தெரியவில்லை. உலகத்தின் மொழிகளில் நூல்கள் அடுக்கப்பட்ட இக் கடையிலும் ஒரு தமிழ் நூலைக் காணக் கிடைக்கவில்லை. இவ்வாறிருக்க, விமான நிலையத்தின் பெருந்தொகையான கழிப்பிடங்கள் அனைத்தையும் கவனித்துக்கொள்பவர்கள் மட்டும் தமிழர்களாகவே காணப்படுகிறார்கள் என்பது ஒருவருக்கு ஆச்சரியம் தரக்கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;நவீன மலேசியாவின் சமூகங்களுக்கிடையிலான அபிவிருத்தி பேதங்களை பிரதிபலிக்கும் உதாரணக் காட்சி இது; பிறர் எவரும் வெளிப்படையாகவே விளங்கிக் கொள்ளக்கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;***********&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ச்சியின் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள்,  மகாத்மா காந்தியின் படத்தையும் பிரபாகரனின் படத்தையும் தாங்கிச்சென்றார்கள் என்று  எமக்குச் சொல்லப்படுகிறது. இதைக் கேட்டு, இந்தியாவிலும் இலங்கையிலும் மலேசியாவிலும்  பயப்பிராந்தியடைந்த பிறழ்வு சக்திகள் அவசர முடிவுகளுக்குத் தாவினர். இலங்கைக்கு  அப்பாலும் தமிழ் அடையாளத்துக்கு பயங்கரவாத முலாம் கொடுக்கும் முயற்சிகள் இப்பொழுது  ஆரம்பமாகிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilnet.com/art.html?catid=99&amp;amp;artid=24059"&gt;முழுக்கட்டுரையையும் வாசிக்க...&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-3074444012301960013?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/3074444012301960013/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=3074444012301960013' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/3074444012301960013'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/3074444012301960013'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2007/12/blog-post_23.html' title='மலேசியத் தமிழ் இளையோர் - தமிழ்நெற் சிறப்புக்கட்டுரை'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-8866426388409697383</id><published>2007-12-19T21:00:00.000+10:30</published><updated>2007-12-19T21:04:15.255+10:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அலட்டல்'/><title type='text'>விருது வழங்குவது சரியா?</title><content type='html'>தமிழ் வலைப்பதிவுச்சூழலில் அவ்வப்போது ஏதாவது குளறுபடி நடந்துகொண்டேயிருக்கும். இப்போது விருது என்றொரு பிரச்சினை வந்துள்ளது. என்ன நடக்கிறது என்பது தெரியாமலே பலரைப்போல நானும் விருது பற்றியோர் இடுகை எழுதவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டேன்.&lt;br /&gt;ஒன்றைப்பற்றி எழுதியே ஆகவேண்டிய நிலைக்கு பதிவர்கள் ஆளாவது அவ்வப்போது நடப்பதுதான். சந்திரமுகி, சிவாஜி பற்றி கட்டாயம் ஓரிடுகையாவது எழுதியாக வேண்டிய நிலையிருந்தது. அதனாலேயே படம் பார்க்காமலேயே &lt;a style="font-weight: bold; color: rgb(51, 51, 255);" href="http://vasanthanin.blogspot.com/2005/04/blog-post_26.html"&gt;விமர்சனம் எழுத வேண்டிய நிலை எனக்கும் வந்தது.&lt;/a&gt; அதுபோல் விருது பற்றியும் ஏதாவது உளறி வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் வலைப்பதிவராக இருக்க முடியாது. எனவே இவ்விடுகை எழுதப்படுகிறது.&lt;br /&gt;அதைவிட, வருடம் முடிகிறது; நீண்டகாலமாக ஏதும் எழுதவில்லை; இவ்விடுகை மூலம் நானும் இருக்கிறன் என்று காட்டிக்கொள்வதும் ஒரு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது வலைப்பதிவுகளோடு அதிக நேரம் செலவிடுவதில்லையென்பதால் இந்த விருதுக்கூத்து எப்போது தொடங்கியது, அதில் என்ன சிக்கல் என்பவை தொடர்பில் முழுமையான அறிவில்லை. மோகன்தாசின் எழுத்தைப்பார்த்தால் இது தமிழ்மண நிர்வாகத்துக்குப் போட்டியாக யாரோ செய்யும் நரிவேலை என்பதாகப் புலப்படுகிறது. விருது கொடுத்து அப்படி என்னதான் கிழித்துவிட முடியுமென்றும்  தெரியவில்லை. அவர் சொல்வது உண்மையாயின் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் வலைப்பதிவுகளில் வரும் பெரும்பாலான எதிர்ப்புப் பதிவுகள் மேலெழுந்தவாரியான எதிர்ப்பையே வெளிப்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது பார்த்தளவில் அனேகம்பேர் இந்த விருது வழங்கலை எதிர்த்து எழுதிக்கொண்டிருப்பது தெரிகிறது.&lt;br /&gt;அவற்றில் பெரும்பாலானவை கும்பலில் கோவிந்தாவாக வெளிப்படும் கருத்துக்களென்பதே எனது எண்ணம். விருதை ஆதரித்து ஒரு போக்கு இருந்திருந்தால் இவற்றில் பெரும்பாலானவர்கள் அதையாதரித்து இடுகை எழுதியிருப்பார்கள். யாரோ காரசாரமாக எதர்த்தெழுதத் தொடங்கியதன் பின்னணியில் அதைத்தொடர்ந்து தாங்களும் ஏதாவது எழுதியாகவேண்டுமென எழுதுபவர்கள் பலர். (இது தமிழ்வலைப்பதிவுலகில் காலகாலமாக நிலவிவரும் ஒரு நடைமுறைதான். வேண்டுமானால் கடந்த சிலநாட்களில் விருது வழங்குவதை எதிர்த்து வெளிவந்த இடுகைகளை வாசித்துப் பாருங்கள். அடிப்படைத் தர்க்கமேதுமற்ற இடுகைகள் பல.)&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் மட்டும் (சங்கமம் குழுவை மட்டுமன்றி) விருது வழங்கும் நடைமுறையை பொதுவாகவே கேள்விக்குட்படுத்தியிருக்கிறார்கள். பலர் இதைமட்டும் குறிவைத்துத் தாக்குகிறார்கள்.&lt;br /&gt;வலைப்பதிவுகளுக்கு விருது வழங்குவது இதுதான் முதுன்முறையன்று. இதற்குமுன் வலைப்பதிவு விருதுகளை எதிர்த்து காரசாரமாக யாரும் பிரச்சினை பண்ணியதாக நினைவில்லை. அப்படி வந்தவைகூட, போட்டியில் அதிக தமிழர்கள் கலந்துகொள்ளவில்லையென்ற குறையைத்தான் (முக்கியமானவர் தருமி) சொன்னதாக ஞாபகம். மற்றும்படி அனைவரும் விருது வழங்குவதை ஏற்றுக்கொண்டனர். விருதில் வெற்றிபெற்றவர்களை வாழ்த்தி ஒரு கிழமை வாழ்த்துப் பதிவுகளெழுதிக் கொண்டாடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, அவை குறிப்பிட்ட நடுவர்களன்றி, வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை என்ற வாதத்தை வைக்கலாம். ஆனால் வாக்குப்போட்டவர்களின் எண்ணிக்கை அண்ணளவாக இருநூறு என்றுதான் ஞாபகம். (போட்டி நடைபெறப்போவது தங்களுக்குத் தெரியாது, சரியான முறையில் விளம்பரப்படுத்தப்படவில்லையென்ற குறைகள் பலரால் வைக்கப்பட்டன). அங்கே இருநூறு பேரால் தெரிவு செய்யப்பட்டது போன்று, இங்கே பதினேழு பேரால் தெரிவுசெய்யப்படப் போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விருது வழங்குவது பதிவர்களிடையே சண்டையை மூட்டிவிடுமென்ற வாதம் ஏன் வந்ததென்று தெரியவில்லை. இதே கோணத்தில் ஆழப்போனால் தமிழ்மணத்திரட்டியில் நட்சத்திரக் குத்துக்கள் வந்தது, பின்னூட்டங்கள் திரட்டப்பட்டது என 'பதிவர்களிடையே சண்டையை மூட்டும்' சமாச்சாரங்கள் பலவற்றைக் கேள்விக்குட்படுத்த வேண்டும். அப்படி பல சண்டைகள் வலைப்பதிவுலகில் நடந்துள்ளன. ஒரு கட்டத்தில் பின்னூட்டத் திரட்டிச் சேவையை நிறுத்திவிடுவதென்று தமிழ்மணம் முடிவெடுத்து, அதற்கான அறிவிப்பும் வெளியாகியது. அண்மையிற்கூட நாற்பதுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்களைப் பெறும் இடுகைகள் திரட்டப்படா என திரட்டி அறிவித்து பெரிய கலவரமே நடந்து முடிந்தது. அதற்கு முன்பு பின்னூட்ட மட்டுறுத்தலை திரட்டி கட்டாயப்படுத்தியபோது, சில பதிவர்களை திரட்டியை விட்டு நீக்கியபோது என வலைப்பதிவுலகம் கொந்தளித்த பல சம்பவங்களுள்ளன.&lt;br /&gt;ஓரிடுகைக்கு யார் அதிகபட்சப் பின்னூட்டங்கள் வாங்குவதென்ற போட்டி சுவாரசியமான முறையில் நடந்தது. [டோண்டு தனது பின்னூட்டங்களை ஒரேயிடுகையில் திரட்டி 500 வரை போய் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு முன்பு இருநூறு என்ற இலக்கை முதன்முதல் எட்டியவர் இட்லிவடையென்பதும், அந்தப் பின்னூட்டவிழாவை வெற்றிகரமாகத் தொடக்கிவைத்தவன் நானென்பதும் ஒரு துணைத்தகவல்.;-)]&lt;br /&gt;எல்லாம் கடந்துதான் தமிழ்வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு கடந்து வந்தவர்கள் கேவலம் ஒரு விருதுக்காக தங்களுக்குள் சண்டை போடுவார்களென்பதோ, அப்படிச் சண்டைபோடுவது எப்போதும் நடக்காதது என்பதோ அபத்தமென்றே படுகிறது. சண்டை போட்டால் போட்டுவிட்டுப் போகிறார்கள். அதற்காக விருது கொடுக்காமலிக்க முடியுமா? சண்டை போடுகிறார்கள், தனது பதிவு தொடர்ந்தும் திரட்டியில் தெரியவேண்டுமென்பதற்காக தமக்குத்தாமே பின்னூட்டமிடுகிறார்கள், பின்னூட்டங்களில் சாராம்சமில்லை என்ற காரணங்களால் பின்னூட்டத் திரட்டி நிறுத்தப்பட்டுவிட்டதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வலைப்பதிவுலகம் என்பது எல்லோரையும் சேர்த்தது. சில்லறை விசயத்துக்கு வருடக்கணக்கில் சண்டை பிடிப்பவர்களும் இருக்கிறார்கள். மிகப்பெரிய விசயத்தைக்கூட அன்றோடே முடித்துவிட்டுப் போய்விடும் பதிவர்களும் இருக்கிறார்கள். மொக்கை, கும்மியுட்பட ஒருவகைப்பதிவுகளும் மிகவும் காத்திரமான படைப்புக்களும் ஒரேநேரத்தில் தமிழ்மணத்தில் வருகின்றன. ஒருவரிடமிருந்தேகூட அவை வருகின்றன. இந்த விருதைப் பிரச்சினையாக்குபவர்கள் இருப்பார்கள் என்பதைப்போல அதை முழுமனதோடு ஏற்றுக்கொள்பவர்களும், ஏன் அதையொரு பொருட்டாகக்கூட கவனிக்காதவர்களும் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே விருது கொடுப்பவர்கள் கொடுக்கட்டும், பங்குபற்றுபவர்கள் பங்குபற்றட்டும், வெல்பவர்கள் வெல்லட்டும். இவற்றில் நொட்டை பிடித்துக்கொண்டிருப்பது தேவையற்றது.&lt;br /&gt;நான் கலந்துகொள்ளவில்லையென்பதைப் போலவே நிறையப்பேர் கலந்துகொள்ளப்போவதில்லை. நானும்தான். இதுவரை எந்தப்போட்டியிலும் கலந்துகொண்டதில்லை. போட்டியென்ன? ஆறு போட, எட்டுப்போட, நாலுபோட என வந்த அழைப்புக்களைக்கூட ஏற்றுக்கொண்டதில்லை. (ஒரேயொரு தடவைமட்டும் - அதுவும் வேறோர் பிரச்சினையைத் திசைதிருப்ப எழுதினேன்). அந்த அழைப்புக்கள்கூட வலைப்பதிவர்களிடையே சண்டையை, பிரச்சினையை மூட்டும் வல்லமை வாய்ந்தவை. பதிவர்களின் வாசிப்பு, அவர்கள் வைத்திருக்கும் புத்தகங்கள் பற்றிய (புத்தக மீம் என்று நினைக்கிறேன். பிரகாஷரால் தொடக்கப்பட்டது) அழைப்பு பதிவர்களிடையே தாழ்வுமன்பபான்மை ஏற்படுத்துகிறது, அது தவிர்க்கப்பட வேண்டியது என சுந்தரமூர்த்தி இடுகையெழுதினார், பலர் அக்கருத்தை ஆமோதித்தனர். பலர் புழுகிக்கொள்ள வேண்டி நேர்ந்த அந்த அவல நிலையை இந்த விருது ஒருபோதும் ஏற்படுத்திவிடாது என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விருது, பதிவர்களிடையே சண்டையை மூட்டிவிடுமென்ற குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து ஒரு கேள்வி.&lt;br /&gt;இரண்டு நடுவர்களை மட்டும்கொண்ட புகைப்படப் போட்டி எந்தவிதத்தில் சரியென்று நினைக்கிறீர்கள்?&lt;br /&gt;பதினேழு நடுவர்களைக் கொண்ட (ஒப்பீட்டளவில் சரியான முடிவு வருவதற்கு அதிக சாத்தியமுள்ள) சங்கமம் விருது எப்படி தவறென்று கருதுகிறீர்கள்?&lt;br /&gt;புகைப்படப் போட்டி முடிவால் பதிவர்களிடையே சண்டை மூண்டதா?&lt;br /&gt;&lt;br /&gt;*** கவனிக்க: புகைப்படப் போட்டி தவறென்று நான் சொல்லவில்லை. விருதை எதிர்க்கும் சிலரின் குற்றச்சாட்டுக்குரிய விளக்கத்தைக் கோரியே இது சொல்லப்பட்டது. அவர்கள் சொல்லிய கருத்துக்கள் எவ்விதத்தில் புகைப்படப் போட்டிக்குப் பொருந்தாமற்போகுமென்ற கேள்வி எனக்குள் எழுகிறது. பொருந்தினால் அப்போட்டியை எதித்து ஏன் பிரச்சினைகள் எழவில்லையென்ற கேள்வியும் வருகிறது. உண்மையிலேயே விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*** சங்கமம் விருதின் பின்னாலிருக்கும் அரசியல், இராஜதந்திரம்,  மந்திரம், சூனியம், நயவஞ்சகம் என்றெல்லாம் கருத்துச் சொல்லிப் பின்னூட்டமிட வேண்டாம். அவற்றைப் புறந்தள்ளியே எனதிடுகையுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;*** ஒரு விருது யாரால் கொடுக்கப்படுகிறதென்பதை வைத்தே அதற்குரிய மதிப்பைக் கொடுக்க நாங்களெல்லாம் பழகிவிட்டோம். சகட்டு மேனிக்கு முளைக்கும் டாக்டர்கள், கலைமாமணிகள் தொடக்கம் நிறையப் பேரைப் பார்க்கிறோம். திரைத்துறைக்கு தமிழ்நாட்டு அரசாங்கம் அளிக்கும் விருதுக்கும் தேசிய விருதுக்குமுள்ள வித்தியாசத்தை மிகத் தெளிவாக அறிந்தே அணுகுகிறோம். அதுபோற்றான் எல்லா விருதுகளும்.&lt;br /&gt;&lt;br /&gt;*** இது இவ்வருடத்தின் கடைசி இடுகையன்று.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-8866426388409697383?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/8866426388409697383/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=8866426388409697383' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/8866426388409697383'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/8866426388409697383'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2007/12/blog-post.html' title='விருது வழங்குவது சரியா?'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-4692800068477438472</id><published>2007-11-28T22:30:00.000+10:30</published><updated>2007-11-28T17:27:54.537+10:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழ அரசியல்'/><title type='text'>தமிழீழச் சிக்கலைத் தீர்ப்பதற்கான திறவுகோல் தமிழகத்திலேயே உள்ளது</title><content type='html'>தமிழீழ பிரச்சினையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை திறப்பு என்பது "தமிழக"த்தில்தான் உள்ளது என்று தமிழீழ அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் "உதயன்" நாளிதழில் கடந்த 18.11.07 அன்று மு.திருநாவுக்கரசு எழுதிய கட்டுரையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே 'ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த வை.கோ உலகத்தமிழர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்' என உதயன் ஆசிரியர் தலையங்கம் எழுதியிருந்தது. அதற்கு மாற்றுக்கருத்துக்கள் வலைப்பதிவுகளில் முன்வைக்கப்பட்டிருந்தன. இப்போது அதே உதயன் நாளிதழில் மு.திருநாவுக்கரசுவின் கட்டுரை வெளிவந்துள்ளது. ஈழநாதத்தில் வராமல் உதயனில் இக்கட்டுரை வெளியிடப்பட்டது சில சேதிகளைச் சொல்கிறது.&lt;br /&gt;அவரின் கட்டுரையில் வலைப்பதிவுகளில் வைக்கப்பட்ட முக்கிய விடயமொன்று மீளச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளினதும் கட்சி அரசியலுக்குள் தமிழீழ மக்கள் விழத்தேவையில்லை.&lt;br /&gt;அவர்கள் தங்களின் கட்சி அரசியலை தாங்களே பார்த்துக் கொள்வார்கள். தமிழக மக்கள் எந்தக் கட்சியை பதவிக்கு கொண்டு வர விரும்புகிறார்களோ அது அவர்களின் தெரிவு.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இக்கட்டுரையையும் இங்குப் பதிகிறேன்.&lt;br /&gt;இதையும் புதினம் மூலமாகவே அறிந்தேன்.&lt;br /&gt;அவ்வகையில் புதினத்துக்கு நன்றி.&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;&lt;br /&gt;"சாமானியர்களின் சகாப்தம்" என்ற கூற்றை தமிழக மக்களிடம் எடுத்துக்காட்டிய அறிஞர் அண்ணா அதன் மூலம் தமிழக மக்களை ஓர் அரசியற் சக்தியாய் 1960களில் திரட்டி எடுத்தார். மக்கள் திரள் அரசியற் சக்தியான போது எதிரிகளின் கொடி, குடை, ஆலவட்டங்கள் சரிந்து விழுந்தன. இதன் வழியே தமிழகமானது மக்கள் திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட களமாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி மக்கள் திரளாக்கப்பட்ட தமிழக அரசியலின் பலம் தான் தமிழீழ மக்களின் பலமும் கூட. இதனை உலகலாவிய அரசியல் யதார்த்தத்தில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மக்களை ஜனநாயக அலைக்குள் இழுத்து விட்டதில் அண்ணாவிற்கு மிகப்பெரும் பங்கு உண்டு. அந்நியர்களிடமும், மன்னர்களிடமும், பிரபுக்களிடமும் சிக்குண்டு இருந்த அரசியல் அதிகாரத்தை மக்களின் கைகளுக்கு மாற்றுவதற்கான பெயர் தான் தேசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னர்களிடமோ, வம்சங்களிடமோ, எதேச்சதிகாரிகளிடமோ, இனவாதிகளிடமோ அரசியல் அதிகாரம் சிறைப்பட்டிருக்காது. அதை மக்களின் கைகளுக்கு உரியதாவதைத்தான் ஜனநாயகம் என்கின்றோம். அத்தகைய ஜனநாயகத்தை வாழ வைப்பதற்கான ஒரு வடிவமே தேசியம் என்பதாகும். ஆதலால் தேசியம் என்பது ஜனநாயகம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கு ஜனநாயகம் இல்லையோ அங்கு தேசியம் இல்லை. அரசியல் அதிகாரம் சாமானியர்களுக்கு உரியது. மக்களே நாயகர்கள். இது தான் தேசியத்தின் அறைகூவல். இத்தகைய அறைகூவல் 1960களில் தமிழகத்தில் துடிப்புடன் எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிட இயக்கத்தின் எழுச்சி என்பதும் இத்தகைய தேவையின் வெளிப்பாடுதான் "சாமானியர்களின் தசாப்தம்" என்ற இந்த ஜனநாயக உள்ளடக்கத்தைத்தான் "திராவிட இயக்கம்" என்றதன் பெயரில் மக்கள் ஆதரித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத்தீவின் அரசியலும் அரசியல் தீர்மானங்களிலும்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் பேசும் மக்களுக்கு பங்கில்லை என்ற போது,&lt;br /&gt;&lt;br /&gt;தமது வாழ்நிலையை அவர்கள் தீர்மானிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட போது&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள இனவாதம் தனது இரும்புக்கரங்களை விரித்தபோது&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயகத்தின் தேவையாய் தமிழ்பேசும் மக்கள் தேசிய வழியில் போராடப் புறப்பட்டது தவிர்க்கமுடியாத ஒரு வரலாற்று நிர்ப்பந்தமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவே ஜனநாயகத்திற்கான ஒரே ஒரு மூலமும் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு இனவாத ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட போது உலகிலுள்ள அரசுகள் அரசு என்ற ரீதியில் சிங்கள இனவான அரசுடன் சமரசம் செய்யும் ஒரு நடைமுறையே உலக அரசியலின் பொதுப் போக்காய் அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பனிப்போரின் பின் பின்னான உலக யதார்த்தம் மேலும் இந்நிலையைப் பலப்படுத்தி உள்ளன. உலகலாவிய பொருளாதார நலன்களுக்காக உலகிலுள்ள அரசுகள் எல்லாம் தம்மிடையே சமரசம் செய்து இலங்கை அரசுடனும் சமரசப்போக்கை நடைமுறையிற் பின்பற்றுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் தமிழீழ மக்களுக்கான பலம் உலக அரசுகள் என்ற கட்டமைப்புக்குள் இருக்க முடியாது. அரசுகளிடம் நீதி, நியாயம் என்பது இல்லை. மாறாக பொருளாதார, இராணுவ, அரசியல் நலன்களே உள்ளன. இத்தகைய நலன்களுக்காக எத்தகைய அநீதியுடனும் அரசுகள் ஒத்துழைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அடிப்டையில் இலங்கை அரசுடன் உலகிலுள்ள அரசுகள் ஒத்துழைக்கும் நிலையில் உள்ளன. மனித உரிமை என்ற ஒரு கவசத்தை போர்த்துக்கொண்டு உலகிலுள்ள அரசுகள் ராஜபக்ச அரசாங்கத்தை குறை கூறினாலும் பொருளாதார, இராணுவப் பரிமாணங்களில் உலகில் உள்ள அரசுகள் ராஜபக்சவுக்கு செயல்பூர்வ அர்த்தத்தில் துணை நிற்பதன் அடிப்படையும் இதுவே ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் "அரசு", "அரசாங்கம்" என்ற பதங்களை அரசியல் விஞ்ஞான அர்த்தத்தில் பொருள் பிரித்து எடை போட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது உலகில் உள்ள அரசுகளுக்கு இலங்கை அரசு அவசியமானது. ஆனால் ராஜபக்ச அரசாங்கம் பற்றி சில வசதியீனங்கள் உலகில் உள்ள சில அரசுகளுக்கு இருந்தாலும் அவைக்கு இலங்கை அரசு அவசியம் என்றதன் அடிப்படையில் தான் அத்தகைய அரசுகளும் ராஜபக்ச அரசாங்கத்திற்கு உதவும் நிலையில் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய உலகலாவிய அரசுகளின் வியூகத்தை உடைப்பத்கான ஒரே ஒரு மூலோபாயம் தமிழகம் மட்டும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;முழு இந்தியாவிலுமே அதிகமாக ஜனத்திரள் அரசியலுக்கு பெரிதும் பழக்கப்பட்டிருக்கும் மக்களாய் தமிழக மக்கள் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது அரசியலில் சிறப்பானதும் முற்போக்கானதுமான அம்சமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தமிழக மக்களிடம் தமிழீழ மக்கள் பற்றிய நீதியின் பாலான இனமான உணர்வு பெரிதும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள உயர் குழாத்தின் இன ஒடுக்கு முறைக்கும் இனப் படுகொலைக்கும் எதிரான நீதியின் பாலான ஒரே ஒரு செயல்பூர்வக் குரலாய் அவர்கள் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தகைய ஜனத்திரளின் ஒருமித்த ஆதரவுதான் சர்வதேச அரங்கில் தமிழீழ மக்கள் பிரவேசிப்பதற்கான ஒரே ஒரு பாதையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை திரண்டெழும் போது புதுடில்லி சென்னைக்குப் பணியும்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுடில்லி பணியும் போது உலகம் புதுடில்லிக்கு தலைசாயும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தான் எளிமையான சூத்திரம்..&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இதனை முற்றிலும் விஞ்ஞான பூர்வமாக ஒரு கணம் விளக்குவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவ அர்த்தத்தில் இலங்கைத்தீவு ஓர் அரசாக இருப்பது இலாபம் என புதுடில்லி நினைக்கின்றது. ஆனால் அது ஒரு தவறான நினைப்பு என்பதை சிங்கள உயர் குழாத்தின் அரசியலை விளங்கிக் கொண்டோருக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு புறமாக இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுடில்லி மேற்படி தவறாக புரிந்து கொண்டு இலங்கையின் "ஒருமைப்பாட்டை" ஆதரித்து உதவுகின்ற போதிலும் புதுடில்லியின் 40 நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்ட சென்னை கிளர்ந்து எழும் போது அரசியல் நலனுக்காக புதுடில்லி சென்னைக்கு பணிய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக ஆறரைக்கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழகம் எழுச்சி பெறும் போது, அதுவும் ஜனத்திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட தமிழகம் எழும்போது புதுடில்லியால் பணிவதை தவிர வேறு வழி இருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய ஜனத்திரள் என்னும் பலத்தை தமிழகத்திற்கு திரட்டிக்கொடுத்தது தமிழகத்திற்கான அறிஞர் அண்ணாவின் பெருங்கொடையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது அம்சம் மத்தியில் 40 நாடாளுமன்ற ஆசனங்கள் இந்தியாவில் தனிக்கட்சி ஆட்சியின் காலம் ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. மாநிலக் கட்சிகளை அரவணைக்கின்ற கூட்டரசாங்கங்களே இனிமேல் பதவிக்கு வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகையில் கூட்டரசாங்கத்தை அமைக்கக்கூடிய எந்த ஒரு முக்கிய கட்சியும் தமிழகத்தை பகைக்க மாட்டாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதலால் தமிழக மக்கள் தான் தமிழீழ மக்களுக்கான இருதய சக்தி அதேவேளை தமிழக மக்களுக்கும் தமிழீழப் பிரதேசமே முதற்தர பாதுகாப்பு அரணாகும் என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் சிங்கள உயர்குழாத்து இலங்கை அரசு இந்திய அரசுக்கு எதிரான அரசுகளுடன் சோரம் போகும் இயல்பைக் கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா காலத்தில் இருந்து இற்றை வரை இதனைத்தெளிவாகக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு கிழக்கு என்ற தமிழீழப் பிரதேசம் தமிழ் மக்களின் கையில் இல்லை என்றாலும் சிங்கள உயர்குழாத்து இலகுவாகவே அந்நிய சக்திகளுக்கு அடிபணிந்து இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் தெளிவாக கூட்டுச் சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் படி தமிழீழ மக்களின் பலம் குன்றினால் தமிழக மக்களின் பாதுகாப்பு முதலில் கெடுவதுடன் அதன் வழி முழு இந்திய தேசத்தின் பாதுகாப்பும் கெட்டுவிடும் ஆதலால் தமிழீழ மக்களின் இப் பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒரு முக்கியமான கேந்திர மக்கள் என்பதை தமிழகமும் இந்திய தேசமும் கருத்தில் எடுக்க வேண்டியது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;பரந்த இந்தியாவோடு உலகிலுள்ள ஏனைய அரசுகளுக்கு பாரிய நலன்கள் உண்டு. ஆதலால் இந்திய அரசிற்குள்ளாகத்தான் அவை இலங்கைத் தீவை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தமும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது இந்தியா உட்பட உலகில் உள்ள எந்த ஒரு அரசும் தமிழீழ மக்களுற்கு ஆதரவு இல்லை என்பது வெளிப்படையானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தமிழகத்தின் ஆறரைக்கோடி மக்களைக் கொண்ட ஜனத்திரளின் முன் புதுடில்லி பணியும் போது முதலில் புதுடில்லியின் கூட்டணி அரசுடனும் தலைசாய்க்க தொடங்கும். அதனைத் தொடர்ந்து உலகில் ஏனைய அரசுகளும் தலைசாய்க்க முற்படும் இறுதியில் எஞ்சியிருக்கும் சில அரசுகளும் காலகதியில் தலைசாய்க்கும். இதுதான் யதார்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதலால் தமிழீழ மக்களின் அனைத்து நலன்களுக்குமான திறவுகோல் சென்னையில்தான் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தமிழக ஜனத்திரளின் ஆதரவே&lt;br /&gt;&lt;br /&gt;உலகளாவிய அர்த்தத்தில் தமிழீழ ஜனநாயக நலனுக்கான திறவுகோலும் கூட..&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ ஜனநாயக மீட்பிலிருந்தே சிங்கள மக்களுக்கான ஜனநாயக மீட்பும் உருவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள உயர்குழாத்தின் இனவாத அரசியலுக்கு முடிவு கட்டுவதன் மூலம்தான் பரந்துபட்ட சிங்கள மக்களின் ஜனநாயகமும் உருப்பெற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளினதும் கட்சி அரசியலுக்குள் தமிழீழ மக்கள் விழத்தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் தங்களின் கட்சி அரசியலை தாங்களே பார்த்துக் கொள்வார்கள். தமிழக மக்கள் எந்தக் கட்சியை பதவிக்கு கொண்டு வர விரும்புகிறார்களோ அது அவர்களின் தெரிவு. பதவிக்கு வருவோரை எம்மை ஆதரிக்குமாறு கோருவதும் அதற்காக அனைத்துக் கட்சிகளையும் கோரி நிற்பதையுமே தமிழீழ மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் அலை எழும் போது கட்சிகள் மக்கள் அலைக்கு செவிசாய்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதலால் தமிழீழ தேசியப் பிரச்சினையில் தமிழகக் கட்சி நிலைப்பாடுகளுக்கு அகப்படாது தமிழீழ கொள்கை நிலைப்பாட்டின் பேரில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவை கோரி நிற்பதே அவசியமான மூலோபாயமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் இப்போது ஓர் அலை எழத்தொடங்கியுள்ளது. அதனைப்பற்றிப் பிடிக்க வேண்டியது தமிழீழ மக்களின் பொறுப்பாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலமைச்சர் தொடக்கம் இடதுசாரியக் கட்சிகள் உள்ளடக்கலாக சிறிய கட்சிகள் வரை இந்த ஆதரவு அலை எழுந்திருக்கின்றது. இது முழுத்தமிழக மக்கள் தழுவியதாக கட்சி பேதங்களுக்கும் அப்பால் பற்றிப் பரவக்கூடிய தொடக்கத்தை கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைத் தக்க வகையில் பயன்படுத்தவேண்டியது தமிழீழ மக்களின் பொறுப்பாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக அரசியல் ஒரே ஒரு அரசியல் பொருளாதார ஒழுங்குதான் இருக்கின்றது. அது உலகலாவிய ஏகாதிபத்தியத்தின் மையப்பொருளாதார ஒழுங்கு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகிலுள்ள அனைத்துப் பலம் வாய்ந்த பெரிய அரசுகளும் தமக்கிடையே இந்த முழு உலகத்தையும் வர்த்தக ஆதிக்க போட்டியின் நிமிர்த்தம் சந்தைகளாக பங்கு போட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு முன்பு ஏகாதிபத்திய நாடுகளுக்கிடைய உலகம் நாடுகளாகப் பங்கு போடப்பட்டது போல தற்போது ஏகாதிபத்திய அரசுகளுக்கடையே உலகம் நாடுகளாக அன்றி சந்தைகளாக பங்கு போடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதலால் இன்று உலகளாவிய ரீதியில் வர்த்தகப் போட்டியில் ஈடுபடும் எந்த ஒரு நாடும் ஏகாதிபத்திய நாடுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகளாவிய ரீதியில் ஒரு நாடு தனது பண்டங்களை சந்தையிற் போட்டு வர்த்தக ஆதிக்கப் போட்டியில் ஈடுபடுமானால் அந்த நாடு எந்த நிறக்கொடியை கட்டியிருந்தாலும் அது செயல்பூர்வ அர்த்தத்தில் ஏகாதிபத்திய கொடி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகையில் விதிவிலக்கின்றி வர்த்தக ஆதிக்கத்தில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் ஓர் ஏகாதிபத்திய சந்தை மையக் கூட்டைக் கொண்டுள்ளன. ஆதலால் இத்தகைய அனைத்துப் பெரிய அரசுகளும் இலங்கை அரசுடன் அரசென்ற வகையில் சமரசத்தைக் கொண்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சமரசக்கூட்டில் சோசலிச நாடுகள் என்றும் முதலாளித்துவ நாடுகள் என்றும் வேறுபாடு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கொடியின் நிறம்தான் வேறு கொடித்துணிகளின் பண்பு ஒன்றுதான். ஆதலால் கற்பனாவாத அரசியலுக்கு வெளியே இரத்தமும் சதையுமாக அரசியலை யதார்த்த நிலையில் வைத்து மதிப்பிட்டு தமிழீழ மக்களின் தேவைக்குப் பொருத்தமான ஒரு யதார்த்த பூர்வ அணுகுமுறை அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்படி பெரிய அரசுகளின் உலகலாவிய கூட்டுச் சமரசங்களுக்கு வெளியே தமிழக மக்களின் ஜனத்திரள் என்ற ஜனநாயகப் பலம் தான் அரசுகளின் சமரச ஒழுங்கிற்கு வெளியே தமிழீழ மக்களின் நலன்களை உலகப்பரப்பில் ஸ்தாபிக்க உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் தமிழீழ மக்களின் போராட்டமானது தேசிய வடிவிலான ஜனநாயக மீட்புப் போராட்டமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ மக்களின் நலன்கள் சென்னை - புதுடில்லி - உலகம் என்ற ஒரே ஒரு பாதையை மட்டுமே கொண்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசு தமிழரை சர்வதேச அரசுகளால் சுற்றிவளைத்தே ஒடுக்குகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அது இராணுவ பொருளாதார உதவிகளை ஒருபுறம் அமெரிக்காவிடம் இருந்தும் மறுபுறம் சீனாவிடம் இருந்தும் பெறுகின்றது. அப்படியே ஒருபுறம் இந்தியாவிடம் இருந்தும் மறுபுறம் பாகிஸ்தானிடம் இருந்தும் பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி கொள்கை, கொடி, குடை வேறுபாடின்றி தமிழருக்கு எதிராக அனைத்து நாடுகளின் உதவிகளையும் இலங்கை அரசு பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய இனப்பிரச்சனை என்பது ஓர் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. அது எப்பொழுதும் ஒரு சர்வதேச பிரச்சனையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால் தமிழீழப் பிரச்சனையை சர்வதேசப் பரிமானத்தால் மட்டுமே தீர்க்க முடியும். தமிழீழ பிரச்சனையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை சென்னை - புதுடில்லி- உலகம் என மட்டுமே அமைய முடியும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-4692800068477438472?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/4692800068477438472/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=4692800068477438472' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/4692800068477438472'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/4692800068477438472'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2007/11/blog-post_28.html' title='தமிழீழச் சிக்கலைத் தீர்ப்பதற்கான திறவுகோல் தமிழகத்திலேயே உள்ளது'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-8709085227892170346</id><published>2007-11-21T20:08:00.000+10:30</published><updated>2007-11-21T20:11:30.582+10:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேர்காணல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படைப்பாளி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலந்துரையாடல்'/><title type='text'>பாமரன் பேட்டையும் இராஜராஜனும்</title><content type='html'>நான்கு மாதங்களின்முன்பு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்க்க நேரிட்டது. நிகழ்ச்சி தொடங்கி ஓரிரு நிமிடங்கள் தாமதமாகத்தான் பார்க்கத் தொடங்கினேன்.&lt;br /&gt;நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த முகத்தை எங்கோ பார்த்திருக்கிறேனே என்று யோசித்து, பின் கண்டுபிடித்துவிட்டேன். அவர் எழுத்தாளர் பாமரன்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சியின் பெயர் 'பாமரன் பேட்டை'.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய நிகழ்ச்சியில் பாமரனுடனான நேர்காணலுக்கு வந்திருந்தவர் 'பெயர் மாற்றல் நிபுணர்' இராஜராஜன். (அவர் சோழன் என்ற ஒட்டைச் சேர்த்துள்ளதாக நான் அறியவில்லை. பின் எப்படி சயந்தனின் இடுகையில் அவர் இராஜராஜ சோழன் ஆனார் என்பது விளங்கவில்லை. பெயர் மாற்ற நிபுணரின் பெயரையே மாற்றிய நிபுணர் சயந்தன்.)&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு 'சிகரம்' தொலைக்காட்சி இங்கு ஒளிபரப்பாகியபோது, இராஜராஜனின் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. தமிழகத் தொலைக்காட்சியொன்றில் அவர் செய்யும் பெயர்மாற்ற நிகழ்ச்சியே இங்கு மறுஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. எங்காவது இந்நிகழ்ச்சி பார்க்க நேரிட்டால் பொழுதுபோக்காக அவ்வப்போது பார்த்திருக்கிறேன். ரி. ராஜேந்தருக்கு இவர்தான் பெயர்மாற்றினார் என்ற தகவல் அறிந்தபோது மனிதரில் ஒரு சுவாரசியமான ஈர்ப்பு ஏற்பட்டது. (கவனத்துக்குரிய கலைஞர் ஒருவரையே மடக்கிப்போட்டாரே என்ற ஆச்சரியத்தால் இருக்கலாம்). அதன்பின் சிகரம் நின்றுபோனது. தரிசனம் வந்தது. நல்லவேளையாக இந்தக் கோமாளி நிகழ்ச்சிகள் தரிசனத்தில் ஒளிபரப்பாகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இனி பாமரன் பேட்டைக்கு வருவோம்.&lt;br /&gt;தொடக்கத்தில் தனது துறையைப் பற்றிச் சிறு அறிமுகத்தை அளித்தார் இராஜராஜன். பெயர்தான் உலகத்தில் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறதென்பது அவரின் அடிப்படை வாதம். பின்னர் நடந்தது சுவாரசியமான உரையாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;** இந்தியச் சிறைகளிலிருக்கும் அனைத்துக் கைதிகளையும் தன்பொறுப்பில் விடுமாறும், அவர்களை தான் பொறுப்பெடுத்து அவர்களின் பெயர்களை மாற்றி, அவர்களை நல்லவர்களாக, வல்லவர்களாக மாற்றிக் காட்டுவதாகச் சொன்னார்.&lt;br /&gt;சிறையிலிருந்து விடுதலை செய்து கையளிப்பதா அல்லது சிறையிலிருக்கும் நிலையிலேயே கையளிப்பதா என பாமரன் கேட்க, விடுதலை தேவையில்லை; சிறையில் வைத்தே பொறுப்பளிக்கும்படி இராஜராஜன் கேட்டுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;** தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் பற்றி பாமரன் கேட்க, அவர்தான் உலகப்பயங்கரவாதத்தின் தலைவர் என்பதை இராஜராஜன் தெளிவாகச் சொன்னார். அவரின் பெயரை மாற்றிவிட்டால் அவர் நல்லவராகிவிடுவார், அமெரிக்காவும் உலகமும் நிம்மதியாக இருக்கலாமென்பதையும் இராஜராஜன் சுட்டிக்காட்டினார். அவரின் தந்தைக்கும் புஷ் என்ற பெயர் இருப்பதையும், அவரும் பயங்கரவாதத் தலைவராக இருந்ததையும் சுட்டிக்காட்டி, பெயர்தான் இந்த மனப்பான்மைக்குக் காரணமென்ற தனது வாதத்தை இன்னும் வலுவாக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;*சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பற்றி பாமரன் கேட்க, அவருக்கும் அந்தப் பெயர்தான் பிரச்சினையாக இருந்ததென்றும் பெயரை மாற்றினால் அவர்கள் நல்லவர்களாக மாறி நாட்டுப்பிரச்சினை தீர்ந்துவிடுமென்றும் இராஜராஜன் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;** இடங்களுக்கு, நாடுகளுக்குப் பெயர்மாற்றுவது தொடர்பாக நேர்காணல் திரும்பியது.&lt;br /&gt;'பம்பாய்' என்பதை 'மும்பை' என்று மாற்றியது தவறு என்றார் இராஜராஜன். அப்படி மும்பாயாக மாறியபின்புதான் அங்குக் குண்டுவெடிப்புக்கள் வன்முறைகள் என்பன தலைதூக்கின; அதற்குமுன்பு அது அமைதியான நகரமாக இருந்தது என்றார்.&lt;br /&gt;இடையில் குறுக்கிட்ட பாமரன், பெயர் மாற்றத்துக்கு முன்பு நடந்த பல குண்டுவெடிப்புக்கள், அசம்பாவிதங்களைச் சொல்லிக் காட்டினார். அதற்கு, முன்பு குறைவாக இருந்தன, பெயர்மாற்றத்தின் பின்னர்தான் அவை அதிகரித்தன என்றார் இராஜராஜன். பாமரன் மேலும் சில விவரங்களைச் சொல்லப் புறப்பட்டபோது, 'நான் இதுபற்றி நீண்ட ஆராய்ச்சிகள் செய்துள்ளேன். தகவல்களைச் சேகரித்து வைத்துள்ளேன். இதுதொடர்பாக நான் உங்களுக்கு அவற்றைத் தரமுடியும்' என்று கூறினார். பாமரன் அத்தோடு மும்பாய் விடயத்தைக் கைவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;டில்லியை 'நியு டில்லி' என மாற்றியபின்பு அங்கு அமைதி நிலவுவதாகவும் அதற்குமுன் அங்கும் குண்டுவெடிப்புக்கள், வன்முறைகள் தலைவிரித்தாடின என அடுத்த விடயத்தைத் தொடங்கினார் இராஜராஜன். பாமரன் அதற்கும் சில விவரங்களைக் கொடுத்து, நியுடில்லி எனப் பெயர்மாற்றிய பின்னர்தான் அதிக வன்முறைகள் நடந்தன எனச் சொன்னார். பாராளுமன்றக் கட்டடத் தொடர் மீதான தாக்குதல் உட்பட சிலவற்றைச் சொன்னார் பாமரன். வழமைபோல 'நான் இதுபற்றி நீண்ட ஆராய்ச்சி செய்துள்ளேன்' என்ற பஞ்சாங்கத்தைப்பாடி அதிலிருந்தும் நழுவினார் இராஜராஜன்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைச் சிக்கல் பற்றியும் பேச்சு வந்தது. அது சிலோன் எனப் பெயர் இருந்தவரைக்கும் ஆசியாவின் பூந்தோட்டமாகத் திகழ்ந்ததாகவும், சிறிலங்கா எனப்பெயர் மாற்றியபின்புதான் அங்குப் பிரச்சினை தோன்றியதாகவும் இராஜராஜன் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;strong&gt;பா.:&lt;/strong&gt; எப்போ இந்தப் பெயர் மாற்றம் நிகழ்ந்தது?&lt;br /&gt;&lt;strong&gt;இரா:&lt;/strong&gt; கொஞ்ச வருசத்துக்கு முன்னாடிதான்.&lt;br /&gt;&lt;strong&gt;பா.&lt;/strong&gt; அது சிலோனாக இந்தப்பவே 56 ஆம் ஆண்டுக் கலவரம் உட்பட பல பிரச்சினைகள் நடந்தன, தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்...&lt;br /&gt;&lt;strong&gt;இரா:&lt;/strong&gt; ஆமா, ஆனா பெயர் மாத்துறதுக்கு முன்னாடி பெரிசா பிரச்சினை இல்ல. அதுக்குப்பின்னாடிதான் ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிக்கிட்டு சண்டை போட ஆரம்பிச்சாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;** இந்தியாவில் சில முக்கிய புள்ளிகளின் பெயர்களை மாற்றியது இந்த இராஜராஜன் தான். அதுபற்றியும், அப்படிப் பெயர்மாற்றப்பட்டவர்களில் இருவரின் தற்போதைய நிலைபற்றியும் பாமரன் கேள்வியெழுப்பினார்.&lt;br /&gt;ஒருவர், தற்போது விஜய ரி. ராஜேந்தர் எனப் பெயர்மாற்றிக்கொண்டிருப்பவர்.&lt;br /&gt;பெயர் மாற்றத்தின்பின்னான அவரின் தோல்வி குறித்துக் கேட்கப்பட்டபோது,&lt;br /&gt;அவர் தன்னிடம் பெயர்மாற்ற வந்தபோது அரசியல் அனாதையாகத்தான் இருந்தாரென்பதைக் குறிப்பிட்டார் இராஜராஜன். இன்னும் சிலவற்றைச் சொல்லியவர், 2011 இல் ரி.ராஜேந்தர் தமிழகத்தின் மிகமுக்கிய அரசியற்புள்ளியாக வருவார் என்பதை தான் எதிர்வுகூறியதாகவும், அது கட்டாயம் நடக்குமென்றும் உறுதியளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரால் பெயர் மாற்றப்பட்ட இன்னொருவர் பா.ஜ.க. திருநாவுக்கரசு.&lt;br /&gt;"அரசராக இருந்தவரை அரசுவாக பெயர் மாற்றினீர்களே, (நான் சொல்வது சரிதானே? அல்லது மறுவளமாகவா?) அந்தப் பெயர் மாற்றத்தின்பின்னர்தான் அவரின் அரசியலில் மிகப்பெரும் வீழ்ச்சியேற்பட்டது. மத்திய அரசில் முக்கியமான அரசியற்புள்ளியாக (அமைச்சராக?) இருந்தவர், பெயர் மாற்றத்தின்பின்னர் சொந்த மண்ணிலேயே போட்டிபோட முடியாத நிலைக்கு ஆளாகவிட்டாரே" என்று பாமரன் கேட்டார்.&lt;br /&gt;அதற்கு இராஜராஜன் அளித்த பதில்தான் சிறப்பானது.&lt;br /&gt;&lt;br /&gt;தனது பெயர்மாற்றத்தின்படி அவர் மிகவுயர்ந்த இடத்துக்கு வந்திருக்க வேண்டியவர். ஆனால் அவரின் தவறான அணுகுமுறையால்தான் இப்படியாகப் போனார். தவறான அணுகுமுறையென்ன என்பதை அவர் விளங்கப்படுத்தினார். அதாவது கட்சியைவிட்டு காங்கிரஸ் பக்கம் தாவியிருக்க வேண்டுமாம். சரியான நேரத்தில் தாவாதபடியால் அவரால் முக்கியமான புள்ளியாக வரமுடியவில்லையாம். அவர் சொந்தக் கட்சிக்கு விசுவாசமாக இருக்க நினைத்தார்; அதனால்தான் இப்படி ஆனார். திருநாவுக்கரசுவுக்கு அரசியல் சாணக்கியத்தனம் இல்லை. அதுதான் பிரச்சினையே ஒழிய தனது பெயர்மாற்றத்தில் எந்தப் பிரச்சினையுமில்லை என்றார்.&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;[இவ்விடத்தில் பாமரன் முகத்தில் தெரிந்தது நையாண்டித்தனமான சிரிப்பா அல்லது அதிர்ச்சியா என்பது தெரியவில்லை. ஆனால் மனிதர் ஆடிப்போய்விட்டார்.]&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;'அப்போ, அவர் வெல்லும் கட்சிக்குத் தாவியிருக்க வேண்டுமென்பதையா சொல்கிறீர்கள்?' என பாமரன் ஒரு தெளிவுக்காகக் கேட்டார்.&lt;br /&gt;இராஜராஜன் அதைத்தான் தெளிவாகத் திருப்பச் சொன்னார். (அதைத்தானையா எல்லா அரசியல்வாதியும் செய்யிறான், இதுக்கெதுக்குப் பெயர் மாற்றம்?)&lt;br /&gt;&lt;br /&gt;** தந்தை பெரியாரைப் பற்றியும் பேச்சு வந்தது. அவருக்குப் பெரியார் என்ற பெயர் வந்தபிறகுதான் அவர் பிலபலமானார் என்று இராஜராஜன் கூறினார். பெரியார் என்ற பெயர்பற்றி பாமரன் ஏதோ குறுக்கிட, 'மக்கள்தான் அந்தப் பெயரை அவருக்குக் கொடுத்தார்கள், அதன்பின்னர்தான் அவர் பிரபலமானார்' என்று இராஜராஜன் கூறினார்.&lt;br /&gt;&lt;strong&gt;பாமரன்:&lt;/strong&gt; அப்போ நீங்களும் பெரியார் என்ற பெயரை வைத்திருக்கலாமே? பிரபலமாவதோடு சமூகத்துக்கும் நல்லது செய்திருக்கலாம். ஏன் இராஜராஜன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தீர்கள்?&lt;br /&gt;அதற்கு இராஜராஜன் பெரிதாகச் சிரித்தபடி பாமரனுக்கு நக்கல் தொனியில் பதிலளிக்கிறார்,&lt;br /&gt;"&lt;span style="color:#006600;"&gt;அட என்னங்க நீங்க?... இந்த ஒட்டுமொத்த உலகத்தையே ஒரு புரட்டுப் புரட்டப் போகிறேன் என்கிறேன், என்னைப்போய் பெரியார் என்று பெயர் வைக்கச் சொல்கிறீர்கள்? ராஜராஜன் என்ற பெயர்தான் இதற்குச் சரி."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு பாமரன் அடுத்த விடயத்துக்குத் தாவிவிட்டார்.;-).&lt;br /&gt;&lt;br /&gt;** நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் இராஜராஜனைப் பார்த்து,&lt;br /&gt;'முன்பு கூட்டங்களில்தான் பேசிக்கொண்டிருந்தீர்கள், இப்போது தொலைக்காட்சியிலும் இடையறாது வருகிறீர்களே?' என்று கேட்டதற்கு அதைப் பெருமைபொங்க ஒப்புக்கொண்டார் இராஜராஜன். தனது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேர அட்டவணையைச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாமரன்:&lt;/strong&gt; முன்பெல்லாம் சின்னக்குழந்தைகளுக்கு உணவூட்ட உம்மாண்டி வருது என்று பயங்காட்டிச் சோறூட்டுவார்கள் தாய்மார், இப்போது இராஜராஜன் ரீவியில் வரப்போறார் என்று சொல்லித்தான் உணவூட்டுகிறார்களாம், உண்மையா?&lt;br /&gt;[பாமரனின் இந்தக் கேள்வி எனக்கு பண்பற்றதாகவே தோன்றியது. என்னதான் ஒரு கோமாளியை முன்னிருத்திவைத்து நேர்காணல் செய்தாலும் இப்படி அவமதிக்கக்கூடாது. அதுவும் நாமே நேர்காணலுக்கு அழைத்துவிட்டு இப்படிச் செய்யக்கூடாதென்பது என் கருத்து.]&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எந்தச் சலனமுமில்லாமல் சிரித்துக்கொண்டே, ஆஆ... அப்படியா? என்று கேட்டார் இராஜராஜன்.&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் பார்த்த நிகழ்ச்சி. இன்னும் சில சுவாரசியமான சம்பவங்கள் விடுபட்டிருக்கின்றன என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விடுகையெழுதத்தூண்டிய சயந்தனுக்கு நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-8709085227892170346?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/8709085227892170346/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=8709085227892170346' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/8709085227892170346'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/8709085227892170346'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2007/11/blog-post_21.html' title='பாமரன் பேட்டையும் இராஜராஜனும்'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-206030656557724973</id><published>2007-11-09T11:58:00.000+10:30</published><updated>2007-11-09T23:35:51.519+10:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழ அரசியல்'/><title type='text'>வை.கோ உலகத்தமிழர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா?</title><content type='html'>யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'உதயன்' செய்தியேடு, வை.கோ இன்னமும் ஜெயலிதாவுடனான அரசியற்கூட்டணியில் தொடர்வது பற்றி உலகத்தமிழர்களுக்கு விளக்கம் தரவேண்டுமென &lt;a style="FONT-WEIGHT: bold; COLOR: rgb(204,0,0)" href="http://thunaippathivuhal.blogspot.com/2007/11/blog-post.html"&gt;ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வை.கோ ஜெயலலிதாவுடன் அரசியற்கூட்டணி வைத்திருப்பது தவறாம்; அதன் காரணத்தால் உலகத் தமிழர்களுக்கு அவர் பதில் தரவேண்டுமாம். ஜெயலிதாவுடன் கூட்டணி வைத்தது ஏன் தவறென்றால் அவர் (ஜெயலலிதா) ஈழத்தமிழர்களுக்கு எதிரானவராம். உதயனின் ஆசிரியர் தலையங்கத்தின் இறுதிப் பந்தி இங்குத் தரப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote style="COLOR: rgb(0,102,0)"&gt;ஈழத் தமிழர்களுக்கும், அவர்தம் நியாயம் மிக்க போராட்டத்துக்கும் முழு ஆதரவாளர் என உலகுக்குத் தம்மை அடையாளப்படுத்தி, வெளிப்படுத்தி நிற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ போன்றோர், இத்தகைய ஈழத் தமிழர் விரோதப் போக்குடைய ஜெயலலிதாவுடன் அணி சேர்ந்து அவருக்கு வால் பிடிப்பதாகக் காட்டிக் கொள்வது என்ன நியாயம்? உலகத் தமிழர் சமூகத்துக்கு அவர் உரிய பதில் தருவது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாத கட்டாயமாகும்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வை.கோ மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள், நையாண்டிகள் வைக்கப்படுகின்றன. யாரும் என்னவும் செய்துவிட்டுப் போகட்டும். வை.கோ தொடர்பில் அவரவருக்குப் பல பிரச்சினைகள். ஆனால் நான் கொண்டிருக்கும் அரசியல் நிலைப்பாடுடைய, தன்னைத் தமிழ்த்தேசிய ஊடகமாகக் காட்டிக்கொள்ளுமோர் ஊடகம் இதை எழுதியபோது என்னுணர்வையும் பதிந்து வைக்கும் தேவையுள்ளதாக நினைக்கிறேன். உதயன் எழுதியதாலேயே அது ஈழத்தவர்களின் நிலைப்பாடாகக் கருதப்படக்கூடிய ஏதுநிலைகள் தென்படுவது ஒரு காரணமாகிறது.&lt;br /&gt;போதாததற்கு, அங்கிங்குப் பொறுக்கி ஒட்டுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்ட - 'டமில்' தேசிய ஊடகங்களாகத் தம்மைக் கட்டமைத்துக்கொண்டவை, உதயனின் இவ்வாசிரியர் தலையங்கத்தைத் தமது இணையத்தளங்களில் ஒட்டிக்கொண்டிருப்பதாலும், அவ்வூடகங்களில் வரும் அனைத்தையும் ஒட்டிக்கொண்டிருக்கும் வலைப்பதிவுகள் சிலவற்றிலும் அத்தலையங்கம் வெளியிடப்பட்டதாலும் தனிப்பட்ட என்னுணர்வைப் பதிவாக்குவது அவசியமாகிறது; அது எவனுக்குமே தேவைப்படாதென்றபோதும்கூட.&lt;br /&gt;&lt;br /&gt;உதயன் இப்படியொரு தலையங்கம் எழுதவேண்டிய வந்ததன் முதற்காரணம், அண்மையில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி எழுதிய "இரங்கற் பதிவொன்றுக்கு" ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம்தானெனக் கருதமுடிகிறது. அதை முதன்மைப்படுத்தி ஜெயலலிதா, சோ, சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட கும்பலுக்குத் திட்டு விழுகிறது. முதல்வருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்படுகிறது. இறுதியில் ஜெயலலிதாவோடு அரசியற்கூட்டணி வைத்துக்கொண்டு அவருக்கு 'வால்பிடித்து'க்கொண்டிருக்கம் வை.கோ.வுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு அவர் "உலகத்தமிழர்களுக்கு" விளக்கம் கொடுக்க வேண்டுமென முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;[முதலில், உதயன் உலகத்தமிழர்கள் சார்பாகக் கதைக்கிறதா ஈழத்தமிழர்கள் சார்பாகக் கதைக்கிறதா எனக் குழப்பம் வந்தது. 'உலகத் தமிழர்கள்' அனைவருமே வை.கோ பதில்சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறார்களா என்ற கேள்வியும் வந்தது. "ஈழம் என் வீடு, தெற்காசியா என் முற்றம், உலகம் என் கிராமம்" என்றெழுதிய கவிஞர் ஜெயபாலன் உதயனுக்குள் ஊடுருவிவிட்டாரா, அல்லது கனியன் பூங்குன்றன் சொன்ன 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எண்டநோக்கிலதான் உதயன் சொல்ல வருதோ - அப்பிடிச் சொன்னாலும் ஏன் தமிழரைமட்டும் சொல்லுறாங்கள் எண்டெல்லாம் நிறைய வழிகளில் இதைக் 'கட்டுடைக்க'ப் புறப்பட்டு, அதற்கெல்லாம் நேரமில்லாத காரணத்தால், தட்டச்சும்போது போகிறபோக்கில் உலகத்தமிழர்களென்று தட்டிவிட்டார்களென நினைத்துக்கொண்டேன். ஈழத்தமிழர்களை - குறிப்பாக புலிகளை அரசியற்றலைமையாக ஏற்றுக்கொண்டவர்களையே உதயன் குறிப்பிடுகிறது எனக் கருதிக்கொண்டு எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்.]&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு எனக்கொரு குழப்பம் வந்துவிட்டது.&lt;br /&gt;வை.கோ எந்தக் கட்சியோடு கூட்டணி வைக்கவேண்டும், எப்படி அரசியல் நடத்த வேண்டுமெனச் சொல்வதற்கு ஈழத்தவர்கள் யார்? உதயன் யார்? அது முழுவதும் தமிழக அரசியலோடு தொடர்புடையது. நீங்களா போய் வை.கோ. வின் கட்சிக்கு வாக்களிக்கப்போகிறீர்கள்? தமிழக அரசியலில் ஒருவரோ ஒரு கட்சியோ எடுக்கும் முடிவுக்கும் செயன்முறைக்குக்கும் கட்டளையிட நீங்கள் யார்? உங்களுக்கு என்ன அருகதையிருக்கிறது? தமது 'தமிழக அரசியல்' செயற்பாடுகளுக்கெல்லாம் ஈழத்தவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய தேவை அவர்களுக்கெங்கே இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இவ்வளவு கதைக்கும் நீங்கள் வை.கோ. வுக்கு இருந்த - இருக்கும் தெரிவுகளை யோசித்தீர்களா? கூட்டணி தொடர்பில் வை.கோ என்ன செய்திருக்க வேண்டுமேனக் கருதுகிறீர்கள்?&lt;br /&gt;தனித்துப் போட்டியிடுவதையா? அல்லது சுந்தரமூர்த்தி போன்ற பதிவர்கள் சொன்ன இன்னொரு தெரிவான கட்சியைக் கலைத்துவிட்டு வாக்கு அரசியலில் இருந்து விலகிக் கொள்வதையா? ஈழத்தவர்களுக்கு வை.கோ மூலம் கிடைக்கும் நன்மையே அவர் வாக்கரசியலில் முக்கிய புள்ளியாக இருப்பது மட்டும்தான். வாக்கரசியலை விட்டு வெளியிலே ஈழத்துக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்த ஏராளம் திராவிட, பெரியாரிய, இவற்றிலே சேராத தொண்டர்கள் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசியலில் ஒருவரின் செயற்பாட்டையும் அவரின் ஈழம் தொடர்பான நிலைப்பாட்டையும் ஒன்றாகக் குழப்பக்கூடாதென்பதே எனது கருத்து. இதை வலுப்படுத்த, நாங்களெல்லாம் தலையில் தூக்கிவைத்தாடும் ஒருவரைக் கொண்டே விபரிக்கலாம்.&lt;br /&gt;மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரை, புலிகளும் சரி, புலிகளின் ஆதரவாளர்களும் சரி, எப்படிக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்களென்பது அனைவருக்கும் தெரியும். மிக முக்கிய காலகட்டத்தில் செயற்கரிய உதவிகளைச் செய்து புலிகளை வளர்த்ததற்காகவும் அதன்மூலம் ஈழப்போராட்டத்திற்கு உதவியளித்ததற்காகவும் "மட்டுமே" - ஆம் அதற்காக மட்டுமே - நாம் எம்.ஜி.ஆரை நன்றியோடு நினைவுகூர்கிறோம்.&lt;br /&gt;யாராவது அவரின் தமிழக அரசியல் நிலைப்பாடு, செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டுள்ளோமா? அவரின் ஊழல்கள், மோசடிகள், அடாவடிகள், தனிப்பட்ட வாழ்க்கை என எதையாவது இதற்குள் கலந்தோமா? அப்படிக் கருதப்புறப்பட்டால் அவர் மீதான எமது நிலைப்பாடு மாறக்கூடுமல்லவா? அவையெல்லாவற்றையும் புறந்தள்ளி தனியே எம்மோடு தொடர்புடைய விடயத்தை மட்டும் கருத்திற்கொண்டுதான் இன்றுவரை எம்.ஜி.ஆரை அணுகிவருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எம்.ஜி.ஆர் அளவுக்குக்கூட எந்தவொரு குற்றச்சாட்டையும் சுமத்தமுடியாத, தனிப்பட்ட வாழ்விலும்சரி, அரசியல்வாழ்விலும் சரி அப்பழுக்கற்ற வை.கோ. மீது, அவரின் அரசியற்கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக விமர்சனம் வைத்து அதற்குரிய விளக்கத்தைச் சொல்ல வேண்டுமெனக் கேட்குமளவுக்கு நீங்கள் வந்துவிட்டது எவ்வாறு?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்பிரச்சினையில் வை.கோ. கேட்கும் எதிர்க்கேள்விகள் மிகமிக நியாயமானவை. பலசந்தர்ப்பங்களில் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாது; ஆனால் எதிர்க்கேள்விகள் மூலம் எதிராளிக்கான பதிலைக் கொடுக்கலாம். இப்போது வை.கோ செய்வதும் ஒருவகையில் அப்படித்தான் தெரிகிறது. வை.கோ. வால் நிச்சயமாக தகுந்த விளக்கத்தைக் கொடுக்க முடியாத சூழ்நிலைதான் இப்போதுள்ளதாகப் படுகிறது. ஆனால் அவரின் எதிர்க்கேள்விகள் பல நியாயமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;வை.கோ பாணியிலேயே நானும் உதயனைப் பார்த்துச் சில எதிர்க்கேள்விகள் கேட்க முடியும்.&lt;br /&gt;ஓர் இரங்கற்பதிவெழுதியதற்காக தற்போது திடீரென தலையில் தூக்கிவைத்தாடும் தமிழக முதல்வர் இப்போதும் காங்கிரஸ் கட்சியோடுதான் கூட்டணி வைத்துள்ளார். அது பிரச்சினையில்லை. ஆனால் தமிழ்ச்செல்வனின் படுகொலைக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடிய காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளார். (&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;கவனிக்க:&lt;/span&gt; காங்கிரஸ் தலைவர் ஒருவர் இனிப்பு வழங்கிக் கொண்டாடியது புகைப்படத்துடன் தினக்குரலில் செய்தியாக வந்துள்ளது. இச்செய்தி பிழையானதென சரியான முறையில் மறுத்தால் நான் இப்பத்தியை நீக்கிவிடுவேன்). அதைவிட, முதல்வரின் இரங்கற்பதிவுக்கு ஜெயந்தி உட்பட வேறும் சில காங்கிரஸ் பிரமுகர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இவர்களோடுதான் கருணாநிதி இன்னமும் கூட்டணி வைத்துள்ளார். முதல்வரின் இரங்கற் பதிவு பற்றி ஜெயலலிதா சொன்னதற்கும் காங்கிரஸ் பிரமுகர்கள் சொன்னதற்குமுள்ள வித்தியாசத்தை உதயன் விளக்குமா? ஜெயலலிதாவாவது இனிப்பு வழங்கிக் கொண்டாடாமல் விட்டார்.&lt;br /&gt;இப்போது என் கேள்வியென்னவென்றால், இரங்கற்பதிவைப் பழித்த காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கும் முதல்வர், உலகத்தமிழரெல்லாம் வேண்டாம், ஈழத்தமிழர்களுக்கு ( வேண்டாம் யாழ்ப்பாணத்தமிழர் - அதுவும் வேண்டாம், சங்கானை, சித்தங்கேணி, சண்டிலிப்பாய் எண்டு ஏதாவது ஓர் ஊர்த்தமிழர்களுக்கு) விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளாரென அடுத்த ஆசிரியர் தலையங்கம் எழுதுவீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;** கவனிக்க: முதல்வர் காங்கிரசோடு கூட்டணி வைத்திருப்பது தவறென்றோ, அவர் அதற்கான விளக்கத்தை ஈழத்தவர்களுக்கு அளிக்க வேண்டுமென்றோ நான் கேட்கவில்லை. உதயன் நாளிதழுக்கான ஓர் எதிர்க்கேள்வியே அது. இது தொடர்பில் எனது நிலைப்பாட்டை இறுதியில் ஓரிரு வரியில் எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்ததற்கோ வால்பிடிப்பதற்கோ ஈழத்தவர்கள் கவலை கொள்ளவும் உணர்ச்சிவசப்படவும் எதுவுமில்லையென்பதே என்கருத்து. அது அந்த மாநில அரசியல் சார்ந்தது. அந்தக் கூட்டணிக்குப் போனதாலேயே வை.கோ. ஈழத்தமிழரின் போராட்டம் தொடர்பாக ஏதாவது சமரசம் செய்துகொண்டாரா, மாறுபாடான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளாரா என்பதே நாம் கனிக்க வேண்டியது. வை.கோ மாறவேயில்லை. முன்பு போலவே அதே தீவிரத்துடன்தான் இயங்குகிறார். இந்நிலையில் அவரின் அரசியற்கூட்டணி தொடர்பாக நாம் கவலைகொள்ளவோ கரிசனை கொள்ளவோ தேவையில்லை. அதையும்விட அதற்கான உரிமை எமக்கில்லை.&lt;br /&gt;இதை இன்னும் உறைக்கும்படி வேறொரு முறையில் சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வை.கோ. வோ அல்லது தமிழகத்தைச் சேர்ந்த தீவிர ஈழவிடுதலை ஆதரவாளர்களோ புலிகளைப் பார்த்து,&lt;br /&gt;'நீங்கள் ஏன் சமாதானப் பேச்சுக்குப் போனீர்கள்? நீங்கள் ஏன் சண்டையைத் தொடக்கினீர்கள்? நீங்கள் ஏன் யுத்தநிறுத்தம் அறிவித்தீர்கள்? நீங்கள் ஏன் ரணிலை வெல்லவைப்பதை விட்டுவிட்டு ராஜபக்ஷவை வெல்ல வைத்தீர்கள்? நீங்கள் ஏன் நோர்வேயோடு பேசுகிறீர்கள்?'&lt;br /&gt;இதற்குரிய விளக்கத்தை எமக்குச் சொல்லக் கடமைப்பட்டுள்ளீர்கள்"&lt;br /&gt;என உளறிக்கொண்டிருந்தால் நாம் என்ன நிலையிலிருப்போம்?&lt;br /&gt;அப்படித்தான் இருக்கிறது, தமிழகத்தில் எடுக்கும் அரசியற்கூட்டணி நிலைப்பாட்டுக்காக எமக்கு விளக்கம் சொல்லவேண்டுமென வை.கோ.வைப் பார்த்துக் கேட்பது.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;முதல்வரின் இரங்கற்பதிவு தொடர்பானது:&lt;br /&gt;அவரின் இரங்கற்பதிவு பெரியளவில் என்னைப் பாதிக்கவில்லை. அவர் எழுதியதால் மகிழ்ந்து துள்ளவில்லை; அவர் எழுதியிராவிட்டால் அதைக்குறித்துக் கவலைப்பட்டிருக்கப் போவதுமில்லை. பிறகு நடப்பவைகளைப் பார்த்தால் அவர் அதை எழுதியிருக்காமலே விட்டிருக்கலாம் எனப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் சீமான் சொன்னதைப்போல, ஈழஆதரவென்பது தமிழக வாக்கரசியலைப் பாதிக்கும் நிலைவரும்வரை இவை வெறும் சலசலப்புக்களாகவே இருக்குமென்பது எனது தனிப்பட்ட கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கரபாண்டி சொல்வதைப்போல தமிழகத்தில் ஒரு நியாயமான கருத்துக்கணிப்பை நடத்தினால் நல்லதென்று படுகிறது. பூவா தலையா போல ஒரு முடிபு வெளிப்படையாகத் தெரிந்துவிடும். நாங்களும் மேற்கொண்டு செல்லலாம். இது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமலிருக்கும் நிலைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;&lt;br /&gt;வை.கோ, ஈழம் தொடர்பாக வலைப்பதிவுச்சூழலில் பொதுவாகச் சில விடயங்களைப் பார்க்கலாம். வை.கோ என்றதுமே ஏதோவொரு விதத்தில் ஈழப்போராட்டத்தையும், புலிகளையும் முடிச்சுப்போட்டுத்தான் அணுகப்படுகிறது. இந்திய அரசியலில் இருக்கும் வேறெவருக்கும் இந்நிலையில்லை. அந்தளவுக்கு ஈழம் பற்றியும் புலிகள் பற்றியும் வை.கோ பேசியவை, பாடுபட்டவை ஏராளம் என்பதே உண்மை. மிக வெளிப்படையாகவும், ஆணித்தரமாகவும் என்றைக்கும் ஒன்றையே சொல்லிக்கொண்டிருப்பவர் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;வை.கோ, தி.மு.க தலைமையிலான கூட்டணியை விட்டு ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தபோது வலைப்பதிவுலகில் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்நேரத்தில் வை.கோ.வுக்கு ஆதரவாக வந்தவை மிகமிகச் சில குரல்கள் மட்டுமே (டோண்டுவுடையதைச் சேர்த்தும்கூட;-)) அதுபோல் நடுநிலையாக விமர்சித்து வந்தவையும் மிகச்சில (சுந்தரமூர்த்தி போன்றவர்களது, அது பிரிவுக்கு முன்பே எழுதியிருந்தாலும்கூட)&lt;br /&gt;ஆனால் வை.கோ.வைத் திட்டி வந்த குரல்களே அதிகம். அவற்றின் பின்னணி நோக்கங்கள் வேறுபட்ட தளங்களைக் கொண்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிர கருணாநிதி ஆதரவாளர்களாக இருந்தவர்களிடமிருந்து (சிலருக்கு வை.கோ மீது பழைய கறளொன்று இருந்தது எனக்கருதுமளவுக்கு மிகத்தீவிரமாக இருந்தது;-)) வை.கோ. மீது வைக்கப்பட்ட கடுமையான தாக்குதல்கள் ஒருவகை.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதிக்கு எதிரான அரசியற்பார்வை கொண்டவர்களாகக் கருதப்பட்டவர்கள், - ஏன் வை.கோ வுக்கும் எதிரான அரசியற்பார்வை கொண்டவர்கள்கூட இவ்விடத்தில் வை.கோ.வின் வெளியேற்றத்தை நையாண்டி பண்ணிக்கொண்டிருந்தார்கள் (முகமூடி, பி.கே.சிவகுமார் போன்றோரின் எழுத்துக்கள்). இது இன்னொரு வகை. இவர்களைப் பொறுத்தவரை, வை.கோ மீது தமது தாக்குதலை நடத்த இதையொரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டார்களேயன்றி மற்றும்படி நியாயமான எந்த அரசியற்பார்வைகளும் இருந்ததாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தனிப்பட்டளவில் வை.கோவின் ஜெயலலிதாவுடனான இணைவானது எனக்கு வருத்தத்தையளித்தாலும், இது தவிர்க்க முடியாததே என்பதோடு வை.கோ எடுத்தது சரியான முடிபே என்ற நிலையிலேயே நானிருந்தேன். (பேசியளவில் வேறும்சில ஈழத்துப்பதிவர்கள் இதேநிலைப்பாடோடு இருந்ததை அறிந்தேன்). ஆனால் நாங்கள் எல்லோரும் இந்தப்பிரச்சினையில் ஒதுங்கியிருந்தோம். கொழுவி மாத்திரம் கற்பகம் அம்மையாரோடு சண்டைபிடித்ததாக ஞாபகம்;-)&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு வருத்தமளித்த நிகழ்வு என்னவென்றால், இவர்கள் வை.கோ.வை வசைபாட ஈழத்தமிழர்களைப் பயன்படுத்திக்கொண்டமைதான். நான் மேற்குறிப்பிட்ட இருதரப்புமே வை.கோ. மீது தமது வசைமாரியைப் பொழிய பயன்படுத்திய முதல் ஆயுதம் ஈழத்தமிழர்கள்தான்.&lt;br /&gt;அட! பி.கே. சிவகுமார், முகமூடி போன்றோர்கூட, ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் கரிசனை கொண்டவர்கள்போல, வை.கோ. ஈழத்தமிழர்களுக்குத் துரோகமிழைத்துவிட்டார் எனப் புலம்பினார்கள். வை.கோ ஈழத்தவர்களின் தலையில் மிளகாய் அரைத்தவிட்டாரென ஒப்பாரி வைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சம்பந்தப்பட்ட ஈழத்தவர்களோ வை.கோ செய்தது தவறென்று எங்குமே ஒப்பாரி வைக்கவில்லை. மாறாக அம்முடிவை ஏற்றுக்கொண்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். வை.கோ.வை உயிராய் நினைத்த அவரின் சீடர்கள் மாறியபோதுகூட ஈழத்தவர் மனங்களில் வை.கோ.வின் இடம் தளம்பலடையவில்லை. உதயனின் பாணியிற்சொன்னால், ஜெயலலிதாவுக்கு வால்பிடித்துக்கொண்டிருக்கும் இந்நேரத்திற்கூட அது தளம்பலடையவில்லை. அந்நேரத்தில் வை.கோ.வைச் சரியாகப் புரிந்தவர்கள் ஈழத்தவர்கள் தானோ? ;-)&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி மற்றவர்கள் ஈழத்தவரை வைத்து வை.கோ மீது விளையாடிக்கொண்டிருந்தது ஒருபுறமென்றால் இப்போது ஈழத்துச் செய்தியேடு ஒன்று விளையாட்டில் குதித்திருப்பது வருத்தமளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி முடித்தபோது மிகமிக நீண்டிருந்தது இடுகை. இடையிடையே வெட்டிக்கொத்திச் சுருக்கி (ஆம். இதுவே சுருக்கம்தான். வலைப்பதிவுச்சூழல் தொடர்பான நிறைய விடயங்கள் அலட்டல்களாக விளங்கியதால் வெட்டியாயிற்று.) இது வெளியிடப்படுகிறது.&lt;br /&gt;மேலும் ஏதாவது சொல்ல வேண்டி வந்தால் பின்னூட்டங்களில் சொல்லலாமென நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;** இது உதயன் செய்தியேட்டுக்கு அனுப்பப்படவில்லை. அது எனது நோக்கமுமன்று.&lt;br /&gt;&lt;br /&gt;** இதுவெனது தனிப்பட்ட கருத்து. இதற்குரிய எதிர்ப்புக்கள் ஈழத்தவர்களிடமிருந்தால் தெரிவிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;** இன்னொரு குறிப்பு:&lt;br /&gt;இவ்விடுகையின் நோக்கம் உதயன் செய்தியேட்டின் நற்பெயரையோ அதன் சேவையையோ களங்கப்படுத்துவதன்று. எச்சந்தர்ப்பத்திலும் நாம் உதயனை புலம்பெயர் ஊடகங்களோடு வைத்துக் கருதுவதில்லை. அப்படி ஒப்பிடவும் முடியாது. தனக்குரிய வரலாற்றுப் பணியை உதயன் மிகுந்த தியாகங்களினூடு தொடர்ந்து செய்து வருகிறது. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இயங்கும் இச்செய்தியேடு, இராணுவத்தினதும் ஒட்டுக்குழுக்களினதும் தொடர் அச்சுறுத்தலுக்கு மத்தியில்தான் இயங்கிவருகிறது. தனது பணியாளர்களை ஆக்கிரமிப்பாளரின் துப்பாக்கிக் குண்டுக்குக் காவு கொடுத்துள்ளது.  அதன்பின்னும் அது வீச்சோடு இயங்கிவருகிறது. விடுதலைப்போராட்டப் பயணத்தில் உதயன் செய்தியேட்டுக்கான பங்களிப்பை நாம் அறிவோம்.&lt;br /&gt;ஆனால் இக்குறிப்பிட்ட சிக்கல் தொடர்பில் நாம் கடுமையான முறையில் உதயனோடு முரண்படுகிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-206030656557724973?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/206030656557724973/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=206030656557724973' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/206030656557724973'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/206030656557724973'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2007/11/blog-post.html' title='வை.கோ உலகத்தமிழர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா?'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-2047141427323330020</id><published>2007-10-23T00:08:00.000+09:30</published><updated>2007-10-23T00:10:26.805+09:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><title type='text'>வன்னி வைன்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;Wanni produces wine for the Eucharist&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;By Channaka de Silva&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The fame of Sri Lanka’s tea is universal, but Anglican Church seems to have unearthed Sri Lanka’s talent to produce a ‘stronger’ drink from the unlikely areas of the rebel-held Wanni.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Bishop of the Anglican Church’s Colombo Diocese, Rt. Rev. Dulip de Chickera made a startling revelation to the worshippers at yesterday’s morning service at the Church’s cathedral in Colombo. He said the wine used for the Eucharist had come from LTTE stronghold of Kilinochchi.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;He also said the wine was fermented in Kilinochchi from the grapes that were grown in Wanni. “This is the result of challenge thrown to our Archdeacon there a year ago.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;We hope to distribute the wine from Kilinochchi to our churches throughout the country to be used for the Eucharist, and that is a challenge,” said the Bishop adding that Kilinochchi wine had been used for the first time for three consecutive morning services at the cathedral in the past three days as representatives around the country gathered in Colombo for the annual sessions of the Diocese.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dailymirror.lk/2007/10/22/front/06.asp"&gt;http://www.dailymirror.lk/2007/10/22/front/06.asp&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-2047141427323330020?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/2047141427323330020/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=2047141427323330020' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/2047141427323330020'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/2047141427323330020'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2007/10/blog-post.html' title='வன்னி வைன்'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-3774443493899319782</id><published>2007-09-27T06:27:00.000+09:30</published><updated>2007-09-27T06:34:49.532+09:30</updated><title type='text'>நேற்றும் ஒருவன் போனான் - சயந்தன்</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;நீண்ட நாட்களாக தீண்டப்படாமல் இருந்ததாலேயோ என்னவோ எனது சாரல் வலைப்பதிவை spamblog எனக்கருதி பூட்டி வைத்துள்ளார்களாம். கதவு திறக்கவேண்டுமெனில் அவர்களுக்கு அறிவித்து இரு நாட்கள் காத்திருக்க வேண்டுமாம். பதிவொன்றினை எழுதிக்கொண்டு உட்சென்ற பிறகு தான் இந்த விடயமே எனக்குத் தெரிந்தது. ஆகவே அவசரத்திற்கு வசந்தனின் பக்கத்தினைப் பயன்படுத்தி இப்பதிவை இடுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;    நிசாந்தன் என்னிலும் இருவயது இளையவன். ஆகவே பாடசாலை வகுப்புக்களிலோ அல்லது ரியூசன் வகுப்புக்களிலோ நான் அவனோடு சந்தித்துப் பழகியிருக்க வாய்ப்பில்லை. ஆயினும் ஊரின் கலைநிகழ்வுகள் கோயில் நிகழ்வுகள் அல்லது விளையாட்டுத் திடலாய் நிரந்தரமாய் நாம் மாற்றியிருந்த சீக்காய் வயல் என்பவற்றில் நாம் அறிமுகமாகி நெருங்கியிருக்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நிசாந்தன் சிறுவயது முதலே சங்கீதம் கற்றிருந்தான். என்னோடு மிருதங்கம் கூட கற்க வந்தவன் எனக்கு முன்பே அதை கைவிட்டது ஏனென்று தெரியவில்லை. நடிப்பு ஆற்றலும் கூடவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தொன்னூறின் இறுதி , மாவீரர் தினமென்று நினைக்கின்றேன். இசை நிகழ்ச்சி நாடகம் வில்லுப்பாட்டு என பல நிகழ்ச்சிகளில் நானும் அவனும் பங்குபற்றியிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதைகள் வளையாது - இந்தப்&lt;br /&gt;பயணங்கள் முடியாது&lt;br /&gt;போகுமிடத்தைச் சேரும் வரைக்கும்&lt;br /&gt;பாதைகள் வளையாது - இந்தப்&lt;br /&gt;பயணங்கள் முடியாது&lt;br /&gt;&lt;br /&gt;என அவன் பாடினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்வந்த ஒரு சில ஆண்டுகளில் ஒரு நவராத்திரி நிகழ்வு. எல்லாளன் நாடகத்தில் துட்டகைமுனுவின் தம்பி பாத்திரத்தை விருப்பமின்றி ஏற்று நடித்தான். எதுவாக இருப்பினும் எல்லாளன் பக்கத்துப் பாத்திரமொன்றைத் தாருங்கள் என்றவனை ஏதோவெல்லாம் சொல்லிச் சமாளித்தார்கள். இறுதியில் கைமுனுவின் தம்பியாக நடிக்கச் சம்மதித்தான். நான் கைமுனுவாக நடித்திருந்தேன். ஒரு காட்சியில் அவன் சுழற்றிய வாள் பார்வையாளர் மத்தியில் விழுந்து பரபரப்பை உண்டுபண்ணியது.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட நாட்களுக்குப் பிறகு 2002 இல் மீசை முளைத்த வாலிபனாகக் கண்டேன். கணக்கியல் துறையில் கல்வி கற்றுக்கொண்டிருந்தான். கணணி தொடர்பிலும் நிறைய ஆர்வமுற்றிருந்தான். கொழும்பு சென்று கல்வியைத் தொடர விரும்புவதாகச் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஊரின் பொறுப்பான இளைஞனாகிவிட்டிருந்தான். வாசிகசாலை சனசமூக நிலையம் என பல அமைப்புக்களில் பொறுப்புக்கள் அவனிடமிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;2005 இல் அவனைச் சந்தித்த போது GCE – O/L பரீட்சையில் சித்தியடைந்த அவ்வூரினைச் சேர்ந்த மாணவர்களை பாராட்டிப் பரிசில் வழங்கும் நிகழ்வொன்றிற்காக மும்மரமாய் நின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வின் இறுதியில் இசை நிகழ்வு - அன்றும் அவன் பாடினான் - முதன் முறையாக அவ்வாறான நிகழ்வொன்றிற்காக நான் அறிவிப்புச் செய்தேன். சொல்லத்தான் நினைக்கிறான் பாடலைப் பாடப்போவதாய்ச் சொன்னவனை மேடைக்கு அழைத்து உண்மையாகவே காதல் சுகமானது தானா எனக் கேட்ட போது வெட்கப்பட்டுச் சிரித்தான். நான் விளங்கிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மேல் நேற்றைய புதினம் இணையச் செய்தியினைப் படியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;யாழில் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;யாழ். மானிப்பாய் காரைநகர் சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலையில் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய இத்துப்பாக்கிச் சூட்டில், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;சங்கானை சிவப்பிரகாச வித்தியாசாலை இசை ஆசிரியையான சாரதா பரஞ்சோதி ,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;உடுவில் உதவி அரசாங்க அதிபர் செயலக தொழில்நுட்பப் பணியாளர் &lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;காந்தன் நிசாந்தன்  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னே விரித்துக் கிடக்கும் ஆல்பத்தில் கசூர்ணா கடற்கரையோரத்தில் நானும் அவனும். தன் விரல்களால் என் தலையின் பின்னால் கொம்புகள் வைத்தபடி சிரித்த முகத்துடன் நிசாந்தன் !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-3774443493899319782?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/3774443493899319782/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=3774443493899319782' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/3774443493899319782'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/3774443493899319782'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2007/09/blog-post_27.html' title='நேற்றும் ஒருவன் போனான் - சயந்தன்'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-6294760274012761292</id><published>2007-09-21T23:02:00.000+09:30</published><updated>2007-09-22T00:43:31.050+09:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அலட்டல்'/><title type='text'>ஒரு குடிகாரன் உருவான கதை</title><content type='html'>பெரிய குடிகாரனாக என்னைப் புரிந்துகொள்ளும் உங்களிற் பலருக்கு நான் குடிகாரனான கதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனாலென்ன? கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியளவுக்கு இதுவொன்றும் முக்கியமானதன்று. என் அலட்டல்களை விழுந்துவிழுந்து வாசிக்க நானொன்றும் புரட்சிக்காரனோ கலகக்காரனோ அல்லன். விரல்கள் குறுகுறுத்த விசர்ப் பொழுதொன்றில் எழுதப்பட்ட/தட்டப்பட்ட என் குடிப்புராணத்தைப் படிக்க விரும்புவோர் மேற்கொண்டு படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில ஒண்டைச் சொல்ல வேணும். தொடக்கத்தில, குடி மீது எனக்கு மோகம் இருக்கேல; மாறா குடிகாரர் மேலதான் மோகமிருந்தது, நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது சதவீதமான குடிகாரரைப்போல.&lt;br /&gt;&lt;br /&gt;குடிக்கத் திட்டமிட்ட நாளும் வந்தது. திட்டமிட்டது நானும் என்ர நண்பனொருவனும். எங்களுக்கெல்லாம் கள்ளைவிட்டால் கதியேது?&lt;br /&gt;அரைப்போத்தல் கள்ளைவாங்கி வீட்டில குடிச்சா ஆட்டத்தில் சேர்த்தியில்லை. தவறணையில குடிச்சால் மட்டுமே குடிகாரராக் கணக்கெடுபடும்.&lt;br /&gt;அதால தவறணையில குடிக்கிறதெண்டு முடிவெடுத்தாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்த்தவறணையில குடிக்க வெட்கமா இருந்திச்சு. இது ஒருவிதத்தில் களவாகச் செய்யிற விளையாட்டுத்தான். ஒருநாள் பொழுதுபட அயலூர்த் தவறணைக்குப் போய்க் குடிச்சம். நண்பன் நேர தன்ர வீட்டுக்குப் போயிட்டான். 'சோம்பேறி மடம்' எண்டு செல்லமா அழைக்கப்படுற, இராத்திரியில நண்பர்கள் கூடியிருந்து கடுதாசியோ தாயமோ விளையாடுற இடத்துக்கு நான் போனன். வீட்ட போய் பிரச்சினை கிளப்பிறதைத் தவிர்க்கிறது ஒரு நோக்கமெண்டால், நான் குடிச்சிருக்கிறதை நண்பர்களுக்குக் காட்டிறதும் ஒரு நோக்கம்தான். சைக்கிளோட்டத்தில ஒரு சிக்கலுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கபோனா, என்ர செட் ஆக்களைக் காணேல. ஒருத்தன் மட்டும் நிண்டான். எங்களைவிட மூத்த செட் ஒண்டு நிண்டுது. திரும்புவம் எண்டு வெளிக்கிட்டா மாட்டுப்பட்டுப் போனன்.முன்னூற்றி நாலுக்கு ஒருகை குறைஞ்சதால வலுக்கட்டாயப்படுத்தி என்னையும் இருத்திப்போட்டாங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கள்ளடிச்ச வாசம் என்னிலயிருந்த வரப்போகுது... நக்கலடிக்கப்போறாங்கள்... எண்டு யோசிச்சு நெளிஞ்சுகொண்டு நிண்டன். ஆனா அவையளும் ஆளாளுக்கு ஏத்திப்போட்டுத்தான் நிண்டதால என்ர பிரச்சினை கணக்கெடுபடேல.&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டில ரெண்டு சுத்துப்போக தலை கிறுகிறுக்கிற மாதிரி ஓருணர்வு. எண்டாலும் விளையாடினன். வந்துசேந்த கலாவரை ஏரை வீறு எண்டு நினைச்சு அடுத்த கன்னையான் கேட்ட இருநூற்றம்பதை மேவிக் கேட்டதும், வலக்கையானின்ர முதலிறக்கமே துரும்பு வீறாய் விழுந்ததைக் கண்டு அதிர்ந்ததும், தோல்வியைச் சமாளிக்க &lt;em&gt;'அதண்ணை... அடுக்குப் பிழைச்சுப்போட்டுது&lt;/em&gt;' எண்டு கதை விட்டதும் கள்ளின் மகத்துவத்தால் நடந்தவை.&lt;br /&gt;இனி உதில இருந்தா சரிவராது எண்டது விளங்கீட்டுது.&lt;br /&gt;&lt;em&gt;'அண்ணை, விடிய ஒரு முக்கிய வேலகிடக்கு, அவசரமாப் போகோணும்'&lt;/em&gt; எண்டு சொல்லி நழுவியாச்சு. வீட்ட போறவழியில சைக்கிள் தள்ளாடிச்சு. இடையில ஓரிடத்தில சத்திவேற எடுக்கவேண்டி வந்திட்டுது. தட்டுத்தடுமாறி போய்ச் சேந்து சத்தம்போடாமல் பாயிலபோய் விழுந்திட்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தநாள் மத்தியானம், முந்தினநாள் சோம்பேறிமடத்தில நிண்ட எங்கட செட்காரன் வந்துகேட்டான்.&lt;br /&gt;"&lt;em&gt;&lt;span style="color:#663300;"&gt;என்ன... நேற்று லைட்டா கள்ளடிச்சமாதிரிக் கிடந்துது?&lt;/span&gt;&lt;/em&gt;"&lt;br /&gt;"&lt;em&gt;&lt;span style="color:#006600;"&gt;ஓ... சும்மா லைட்டா ரெஸ்ட் பண்ணிப் பாத்தது&lt;/span&gt;&lt;/em&gt;"&lt;br /&gt;"&lt;em&gt;&lt;span style="color:#663300;"&gt;ஆனா வெறிச்சமாதிரித் தெரியேலயே?"&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;"&lt;em&gt;&lt;span style="color:#006600;"&gt;வெறிச்சது... அதாலதான் விளையாட்ட இடையிலவிட்டிட்டு ஓடியந்திட்டன். வாறவழியில றோட்டில சத்தியும் எடுத்தனான்."&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;"&lt;em&gt;&lt;span style="color:#663300;"&gt;உதை ஆர் வெறியெண்டு சொன்னது?"&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;"&lt;em&gt;&lt;span style="color:#006600;"&gt;அப்ப எதை வெறியெண்டுறது?"&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;"&lt;em&gt;&lt;span style="color:#663300;"&gt;வெறியெண்டா குளறிக் கதைக்க வேணும்... ஒருமாதிரி இழுத்திழுத்துக் கதைக்க வேணும்... தள்ளாடி நடக்க வேணும்... நாலுபேரைத் தூசணத்தால பேசவேணும்... நீ வெறிகாரர் ஒருத்தரையும் பாக்கேலயோ?.."&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;"&lt;em&gt;&lt;span style="color:#006600;"&gt;பாத்திருக்கிறன்... ஆனா உப்பிடி ஒரு குணமும் எனக்கு வரேலயே?"&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;"&lt;em&gt;&lt;span style="color:#663300;"&gt;அது வராது... நாங்கள்தான் வரவைக்க வேணும். போகப்போகச் சரியாயிடும்&lt;/span&gt;&lt;/em&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;இதென்ன கோதாரி? அடிச்சது காணாதுபோல... அடுத்தமுறை இன்னொரு போத்தல் அதிகமா அடிக்க வேணும் எண்டு அப்பாவியா நினைச்சுக்கொண்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டுநாளைக்குப் பிறகு தவறணையால நேரா நண்பர்கள் நிண்ட மைதானத்துக்கு வந்திட்டன். வாயிலயிருந்து நல்லா வாசம் வந்துகொண்டிருந்திச்சு. ஆனால் ஒருத்தன்கூட என்னை ஒரு பொருட்டா மதிக்கேல. குடிச்சனியோடா எண்டு ஒருவார்த்தைகூட கேக்கேல. அவனவன் தன்ர பாட்டுக்குக் கதைச்சுக்கொண்டு நிண்டாங்கள். எனக்குச் சரியான அவமானமாப்போட்டுது. நான் குடிச்சதின்ர நோக்கமே அடிபட்டுப் போச்சு. நான் குடிகாரனாயிட்டன் எண்டதை ஒருநாய்கூடக் கவனிக்கேல.&lt;br /&gt;நண்பன் சொன்னதுகள் ஞாபகத்துக்கு வந்திச்சு. ஒண்டு விளங்கீச்சு.&lt;br /&gt;குடிக்கிறதால ஒருவன் குடிகாரனாகவோ வெறிகாரனாகவோ ஆகமுடியாது.. குடிகாரனாகவும் வெறிகாரனாகவும் காட்டிக்கொள்ள வேணும்.&lt;br /&gt;அதால இனி நானும் அப்பிடிக் காட்டிக்கொள்ளிறதெண்டு முடிவெடுத்தன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தநாளே குடிச்சுப்போட்டு அதே மைதானத்துக்குப் போனன்; வெறியில தள்ளாடுறமாதிரி சைக்கிளை ஓட்டினன்; சைக்கிளைக் கொண்டுபோய் ஒருத்தனுக்கு இடிச்சன்; எல்லாரையும் ஒருமாதிரிப் பாத்தன்; இடிவாங்கினவனை தூசணத்தால பேசினன்; எல்லாரும் என்னைப்பாத்துத் திகைச்சது வடிவாத் தெரிஞ்சுது. சரி, நாடகம் சரிவந்திட்டுது எண்டது விளங்கீட்டுது. அங்கால நிண்டுகொண்டிருந்த ஒருத்தனோட கொழுவி கண்டபாட்டுக்குத் தூசணத்தால பேசப்பேசினன். சரியோ பிழையோ பிறத்தியான் ஒருத்தன் தங்கட தோழரில கைவைக்க எங்கட செட்காரங்கள் பாத்துக்கொண்டிருக்க மாட்டாங்கள். அந்தத் துணிவிலதான் இந்தளவு விளையாட்டும் விளையாடினன். நினைச்சமாதிரியே அவன் அடிக்கவந்தான், மற்றவங்கள் வந்து பிடிச்சாங்கள்.&lt;br /&gt;"&lt;em&gt;டேய் அவனக்கு வெறி... ஆளை முதல் அங்கால கொண்டுபோ&lt;/em&gt;" எண்டு சொல்லி என்னை ரெண்டுபேர் பிடிக்க, அவங்களையும் பேசிக்கொண்டு வெறிகாரன் மாதிரியே இழுபட்டுக்கொண்டு போனன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் நினைச்சபடி நடந்திட்டுது. அதையே தொடர்ந்தும் செய்யத் தொடங்கினன். நண்பர்களிடத்தில நான் குடிகாரன் எண்ட 'மரியாதை' வந்திட்டுது. இதைச் சாட்டா வைச்சே தனிப்பட்ட கோபம் இருந்தவனையெல்லாம் ஆசைதீர தூசணத்தால திட்டித் தீர்த்தன். ஆனா நான் உண்மையில நிலைமறந்து வெறியிலதான் இப்பிடி நடக்கிறன் எண்டு எல்லாரும் நம்பிக்கொண்டிருந்தாங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவுகாலத்துக்கு இதை நம்புவாங்கள்? அவங்கள் குடிக்கத் தொடங்கும்வரைக்கும்தான். அதுக்குப்பிறகு, பாம்பின் கால் பாம்பறியும் எண்டமாதிரி உந்த வெறி பற்றின மாயைகள் கலைஞ்சு போகும். நான் குடிக்க வெளிக்கிட்டபிறகுதான் வெறிக்குட்டிகளின்ர பல திருகுதாளங்களை விளங்கிக்கொண்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;குடிச்சு வெறிவந்தவன் என்ன செய்வான்? பேசாமல் மூலையிலபோய் படுத்திடுவான். அல்லது சத்தியெடுத்துக் களைச்சுப்போவான். கண்டபடி தூசணத்தால பேசிக்கொண்டிருக்கிறவையள் வெறியில தன்னிலைமறந்து சொல்லிறதாத்தான் சனம் நினைச்சுக்கொண்டிருக்கு. ஆனா எந்தவொரு குடிகாரனும் உதை நம்பமாட்டான். ஏனெண்டா அவனுக்குத் தெரியும் உண்மை என்னவெண்டு. அதேபோல எந்தவொரு குடிகாரனும் உது வெறும் நடிப்பெண்டு சொல்லவும் மாட்டான். ஏனெண்டா அவனும் தொடர்ந்து நடிக்க வேணும். ஒருத்தனையொருத்தன் காட்டிக்குடுக்காமல் ஓர் எழுதப்படாத ஒப்பந்தப்படி தோழமையாக இருக்கினம் குடிகாரர்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் குடிகாரரின்ர உந்த விளையாட்டெல்லாம் நிறையச் செய்தன். என்னோட இருந்த குடிக்கத் தெரியாதவங்கள் அப்பாவியா நம்பிக்கொண்டிருந்தாங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, அதை விடுவம். நான் ஏன் குடிக்கத் தொடங்கினன் எண்டு உங்களுக்குச் சொல்லேலயெல்லோ?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருக்கும் குடிக்கத் தொடங்கிறதுக்கு காரணங்கள் இருக்கு. நண்பர்களிடத்திலயும் சமூகத்திலயும் ஓர் அதிர்வை ஏற்படுத்திறது, பயத்தை உருவாக்கிறது எண்டு சிலது இருக்கு. குடிச்சா பெரியாளாகக் காட்டிக்கொள்ளலாம் எண்டதும் இருக்கு. புகைபிடிக்கிறதுக்கு உது முக்கியமான ஒரு காரணம். சிகரெட் பத்தினால் தாங்கள் பெரிய கொம்பனுகள் எண்டு சிலருக்கு நினைப்பிருக்கு. பெட்டையள் விரும்புவாளவை எண்டுகூட பிடிக்கத் தொடங்கினவை சிலர் இருக்கினம்.&lt;br /&gt;&lt;br /&gt;உதெல்லாத்தையும்விட நான் குடிக்கத் தொடங்கினதுக்கு ஒரு காரணம் இருக்கு. புரட்சிக்காரனாகவும் கலகக்காரனாகவும் உருவாவது அல்லது காட்டிக்கொள்வதுதான் அது.&lt;br /&gt;&lt;br /&gt;இளம்வயசில திடீரெண்டு உந்த ஆசை வந்திட்டுது. புரட்சிக்காரனாக, கலகக்காரனாக, தீவிர சிந்தனையாளனாகக் காட்டிக்கொள்ளிற ஆசை வந்திட்டுது. வட்டத் தொப்பியொண்டை சரிச்சுப் போட்டுக்கொண்டு விசரன் மாதிரி றோட்டுவழிய திரிஞ்சிருக்கிறன். சேட்டின்ர மேல் ரெண்டு பட்டினையும் திறந்துவிட்டிட்டு, நெஞ்சில முளைக்காத மயிரைச் சபிச்சுக்கொண்டும் திரிஞ்சிருக்கிறன். எந்தநேரமும் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில இருக்கிற மாதிரி நடிச்சுக்கொண்டு திரிஞ்சிருக்கிறன். உந்த விசயத்துக்கு பெட்டையளிட்ட நல்ல வரவேற்புக் கிடைச்சது. ஒருத்தரும் வாசிக்காத, இலகுவில விளங்கமுடியாதபடி எழுதப்பட்டிருக்கும் ஏதாவது புத்தகத்தை (குறிப்பா ரஸ்யனிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த சில புத்தகங்கள்) எந்தநேரமும் கொண்டு திரியிறது, இடைக்கிடை அதை வாசிக்கிறமாதிரி நடிக்கிறது எண்டெல்லாம் உந்த விளையாட்டுக்கள் தொடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உதையேன் கேக்கிறியள்?&lt;br /&gt;ஒருக்கா உப்பிடித்தான், ரியூசன் முடிஞ்சபிறகு மேசைப்பலகையில இருந்து றோட்டுக்கு எதிர்ப்பக்கம் பாத்தபடி யோசிச்சுக்கொண்டிருந்தன். ரியூட்டறியில படிப்பிக்கிற வாத்தியொண்டுக்குக் கலியாண வாழ்த்து அச்சடிக்கிறதுக்கு டிசைன் பற்றி என்னட்ட ஆலோசனை கேக்கவெண்டு (உதெல்லாம் உந்த கலகக்கார, புரட்சிக்கார, போராளி இன்னபிற கோதாரி நடிப்பின்ர உபயம்தான்) வந்த ரெண்டு பெட்டையள் கொஞ்சம் எட்டநிண்டு குசுகுசுத்தினம்.&lt;br /&gt;"என்னடி ஆள் ஏதோ தீவிரமா யோசிச்சுக்கொண்டிருக்கு?"&lt;br /&gt;"இந்த நேரத்தில குழப்பக்கூடாது... வா போயிட்டு நாளைக்குக் காலம கேப்பம்"&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, எதிர்வளவுக்க இருக்கிற பிலாக்காய எப்பிடிக் கடத்திறதெண்டுதான் நான் யோசிச்சுக்கொண்டிருந்தன் எண்டது அதுகளுக்கு எங்க விளங்கப்போகுது?&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடியாக நான் நடத்திய சில கூத்துக்களுக்குப்பிறகு, முழுமையான கலகக்காரனாக, புரட்சிக்காரனாக உருவாகிறதுக்கு மிஞ்சியிருந்த ரெண்டு விசயங்களில ஒண்டான குடிக்கிறதைத் தொடங்கினன். இதுதான் நான் குடிகாரனானதுக்கான காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சிக்காரன், கலகக்காரன் எண்டா நல்லாக் குடிக்க வேணும். அரவயசில செத்துப்போக வேணும். சாகிறதும் ஏதோ கொண்ட கொள்கை, லட்சியத்துக்காக சாகிறதெண்டுமில்லை. குடிச்சுக் குடிச்சே தானும் மெல்ல மெல்லச் செத்து சுத்தியிருக்கிறவையையும் சாகடிச்சுச் சாகவேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் புரட்சியாளனாவதற்கு குடிகாரனாகவேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;strong&gt;ஒரு புரடசியாளன் உருவான கதை&lt;/strong&gt;" எண்டு இன்னோர் இடுகை எழுதக்கூடும்.&lt;br /&gt;உண்மையில "&lt;strong&gt;புரட்சியாளனொருவன் உருவான கதை&lt;/strong&gt;" எண்டுதான் தலைப்பு வரவேணும்.&lt;br /&gt;இவ்விடுகைக்குக்கூட "&lt;strong&gt;குடிகாரனொருவன் உருவான கதை&lt;/strong&gt;" எண்டுதான் தலைப்பு வச்சிருக்க வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் என்ன? பிழையாக எழுதுவதுகூட புரட்சி என்றாகிவிட்ட இன்றைய நிலையில் புரட்சியாளனாகிய நான் பிழையாகத்தானே எழுதவேணும்?&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;லேபிள்ஸ்: கொழுவி குடிகாரன்&lt;br /&gt;கலகக்காரன் புரட்சிக்காரன்&lt;br /&gt;கள்ளு தூசணம் நடிப்பு கோதாரி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-6294760274012761292?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/6294760274012761292/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=6294760274012761292' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/6294760274012761292'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/6294760274012761292'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2007/09/blog-post.html' title='ஒரு குடிகாரன் உருவான கதை'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-3903753996529881932</id><published>2007-08-27T10:55:00.000+09:30</published><updated>2007-08-27T11:04:09.406+09:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேர்காணல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழ அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலந்துரையாடல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வன்னி'/><title type='text'>தமிழீழம் தொடர்பான அவுஸ்திரேலிய மருத்துவரின் செவ்வி</title><content type='html'>அவுஸ்திரேலியாவில் ஒலிபரப்பாகும் ABC வானொலியில் நடைபெறும் Conversation hour எனும் நிகழ்ச்சியில் மருத்துவர் Dr John Whitehall அவர்களுடனான நேர்காணல் இடம்பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்நிகழ்வில் மருத்துவரின் வன்னி அனுபவங்கள் உட்பட ஈழச்சிக்கல் தொடர்பான அரசியல் பார்வை இடம்பெற்றது.&lt;br /&gt;இந்நிகழ்ச்சியில் ஈழம்தொடர்பாக நடைபெற்ற உரையாடலை தமிழ்நெற் வலைத்தளம் வெளியிட்டுள்ளது. அதை இங்கு மீள்பதிவாக்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ABC வானொலியின் வலைத்தளத்தில் அவ்வுரையாடல் கோப்பாக இணைக்கப்பட்டுள்ளது. கீழுள்ள இணைப்பில் அக்கோப்பின் இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருமணித்தியால உரையாடலில் இறுதி அரைமணித்தியாலம் ஈழத்தைப்பற்றியதாக அமைந்துள்ளது. இது .rm கோப்பாக இருப்பதால் realplayer தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;தொடுப்பு: &lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://www.abc.net.au/reslib/200708/r170464_639515.ram"&gt;60 min ABC interview&lt;br /&gt;(Sri Lanka last 30 min)&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;b&gt;ABC: &lt;/b&gt;Dr. John Whitehall, you spent some time were in Sri Lanka. Sri lanka  is still considered a pathetic paradise; a paradise in crisis. What was your  introduction to that country?&lt;br /&gt;&lt;b&gt;Dr. Whitehall: &lt;/b&gt;We were looking to go  for holidays for six months and looking for a place to take post graduate  students to some place where there is malaria. I teach a course called Tropical  Pediatrics at James Cook university and I thought it will be a good experience  for Australians to watch a malaria infected child and learn from the experience. &lt;/p&gt;&lt;p&gt;We were looking for such a place  and we decided to go to Sri Lanka because a young lady doctor trained here had  asked us to visit the country. So we decided to go there and shortly after our  visit, Tsunami struck the island. So I told her in order to do some thing to  face the situation, we should form an ad hoc committee and then we decided to  meet at the University of Colombo and ask about the needs of the affected  people. &lt;/p&gt;&lt;p&gt;We went public to raise funds and with the extraordinary phenomenon of  generosity of Australian people just flowed out. It was really moving .We got so  much money that by Jan.01 2005; we had bought a truck load of high quality  antibiotics. We then formed a number of teams of medical students to work in  various parts of the island and I accompanied these teams. So much money came  from North Queensland alone that we were able to buy five really good quality  ventilators for children, an oxygen enricher and a number of surgical  instruments and other things. &lt;/p&gt;&lt;p&gt;Then we decided to visit certain selected  hospitals to install these equipments. As part of our trip we did not go to  North East, the traditional historic lands of Tamils but we were able to travel  up to Kilinochchi, the administrative centre of North East Tamil land and then  to Jaffna. We installed these equipments in the hospitals in those two places. I  was quite appalled by the state of this big hospital in Jaffna. There were  mosquitoes breeding every where. &lt;/p&gt;&lt;p&gt;Then I went to see around the area and was initially struck by the similarity  with Vietnam when we moved from the Sri Lankan side into Tamil side. I was able  to see a number of isolated forts made out of coconut forts surrounded by barbed  wires. When we came to the border it was a long military field with mines  fields. When we crossed the border and when we really hit north, I could not see  any Tigers but that of course was a military illusion. Though Sri Lanka in  general was a poor country, yet I found that the towns in Tamil are were  strikingly worse off than the Sinhala areas. &lt;/p&gt;&lt;p&gt;Meanwhile, I was about to work in the Eastern part of the island with a  British charity group, when they received a request from another organization if  a pediatrician could come to Kilinochchi to teach pediatrics to a group of  medical students who had missed a semester about the diseases of children. I did  not really care where I worked and I was quite happy to go there. &lt;/p&gt;&lt;p&gt;When I arrived there I met a group of  students in their mid thirties and there were 32 of them, I walked into a room  with corrugated roof and with the monsoon rain falling on the roof and some  times we had to shout to each others to be heard. I tried to work out something  to teach them what they did not know.  &lt;/p&gt;&lt;p&gt;After a week went by I wanted to see how they examine patients. So I asked a  man to volunteer to remove his shirt and asked a lady how to show me the  technique to examine the patient’s chest. It was at this time I saw from the  corner of my eye a great hole in the back of the man’s chest. And while the lady  was stretching her arm to use the stethoscope, I saw a stitches on her arm and I  asked her what happened. So they all started to laugh. They responded saying  that they were all shot. I asked them who among them had not been shot. Except  less than a third of them, all others raised their hands saying that they all  had received battle injury. In fact they asked me if I didn't notice that three  of them had lost their legs, and they wiggled their fake feet at me. &lt;/p&gt;&lt;p&gt;After a week or so, I began to realize there was something different about  this group. I gradually found out they were the medical wing of the Tamil  Tigers. &lt;/p&gt;&lt;p&gt;&lt;b&gt;ABC: &lt;/b&gt;You are referring to the Tamil tigers, the organization waging  war of independence against the central government of Sri Lanka?&lt;br /&gt;&lt;b&gt;Dr.  Whitehall: &lt;/b&gt;Yes. This was one of the groups formed in response to what they  say of the systematic political and practical racism by the government in  Colombo after gaining independence in 1948 and has been demonstrated by a number  of nasty riots and killings. &lt;/p&gt;&lt;p&gt;This group was formed in the eighties when there were numerous National  Liberation groups in various countries around the world. Several groups were  formed in Sri Lanka and one of them is Liberation Tigers of Tamil Eelam (LTTE),  which we know as Tigers.  &lt;/p&gt;&lt;p&gt;These students had been selected in this extraordinary medical experiment  because until 1992, the casualties were taken across to India in fishing boats  or they were taken to the hospital in Jaffna. They then saw that they may lose  these facilities since the war was continuing. They then decided to form their  own Medical wing and started teaching a parallel course similar to that of the  proper curriculum of Medical college of University of Jaffna. In the mean time,  when the war broke out they were all seconded to field hospitals or to address  public health issues like cholera epidemic or to handle natural disaster such as  Tsunami. &lt;/p&gt;&lt;p&gt;Because of the cease fire in 2002, these students were trying to catch up  what they missed in theoretical study. It was my fortune that I just happened to  be there when they were looking around for a pediatrician to teach them  pediatrics. So I stayed there for three months and not the originally planned  two week period. &lt;/p&gt;&lt;p&gt;&lt;b&gt;ABC:  &lt;/b&gt;The Central government of Sri Lanka has been staging gruesome and brutal  attacks on the Tamil people of the North. At the same time, the Tamil Tigers  organization is known as a terrorist group in nearly thirty countries, involved  in suicide bombings and also engaged in recruitment of child soldiers. Did you  know about these at that time?&lt;br /&gt;&lt;b&gt;Dr. Whitehall: &lt;/b&gt;Yes, I know they are  being described as a terrorist organization. I know more about them. I know the  accusation about child soldiers. However, I did not see any evidence of child  soldiers. But I saw a list of those dead and found that many of them were less  than 16 years old .I imagined them to be like Viet Cong, to come out from the  bush and take control. &lt;/p&gt;&lt;p&gt;That was a mistake because they run a de facto state. They run Law courts,  Health department, Transport, Taxation. They run a very visible de facto state,  with head quarters at Kilinochchi. They don’t run away .They say they have as  much right for this territory as much Sinhalese have rights for their part of  the island, because past records say so. &lt;/p&gt;&lt;p&gt;&lt;b&gt;ABC: &lt;/b&gt;So you were in Kilinochchi. So it was slowly apparent to you that  you were in the capitol of Tamil area felt you were in the capitol of the de  facto state.&lt;br /&gt;&lt;b&gt;Dr. Whitehall: &lt;/b&gt;I went out and saw myself how they were  running their Health department, social welfare and orphanages. I saw how they  run a school for Blind and Deaf. I was very happy about this. so they do run a  de facto state. You may argue that they are running it undemocratically, and it  may probably be true and needs some improvement. &lt;/p&gt;&lt;p&gt;I don’t think it is right to say that they are they are imposing their will  on the people, as is said by Colombo. There have been more than 17,000 deaths of  soldiers in their military wing. I have been to many of these cemeteries. That  is tremendous commitment from a population of only three million people. You  can't get 17000 people to take up arms and fight to death unless their hearts  are in their cause.  &lt;/p&gt;&lt;p&gt;They have a Heroes day and the grief was almost unbearable. The afternoon sun  setting like a great ball of burning gold was disappearing under the palm fronds  now silhouetted. There were two or three thousand graves and the dead were of  the ages of my children. Their families were packed around the graves. They say  they have not died but their spirit lives on for Tamil Eelam - the home land for  Tamil people. They bring flowers and food and put them on the grave. Then as the  sun goes down, they light candles that flicker around in the dark. &lt;/p&gt;&lt;p&gt;There was silence except for hushed crying. There is no catharsis. We have  Salvation Army bands or hymns to bring our ceremonies to an end. They stayed  till dark and then quietly walked away realizing that it was not over and there  were more sacrifices to be made. I don’t think I understood the commitment of  the Tamil people for this sense of freedom until that evening. &lt;/p&gt;&lt;p&gt;It was hard to bear. &lt;/p&gt;&lt;p&gt;&lt;b&gt;ABC: &lt;/b&gt;In any civil war both sides engage in despicable acts. Don’t you  think you felt caught into the politics of this conflict in some degree?&lt;br /&gt;&lt;b&gt;Dr. Whitehall: &lt;/b&gt;I have already mentioned in several articles that  Tigers have well exceeded the bounds of conventional warfare and the Geneva  Convention... They have blown things up inflicted terror. What I have come to be  aware [is] you can't understand the situation in Colombo if you only focus on  the terror which is coming from one side, and you don't mention the state  terror, the terror inflicted by Colombo state. &lt;/p&gt;&lt;p&gt;It doesn't come out in the media here- bombing of a school where 61 girls  died. Killing of people, forced refugee status etc. Human rights groups have  said that at least 5,000 Tamils have disappeared in the last six months and many  of them have later turned up dead with torture marks. &lt;/p&gt;&lt;p&gt;The Chilean dictator Pinochet, whom we all revile, might have only 300  victims to his credit in those years. Using the same kinds of torture, the same  kind of white vans to pick people terror is being inflicted upon Tamils. While  we revile Pinochet, we don t even seem talk about the terror inflicted by  Colombo &lt;/p&gt;&lt;p&gt;&lt;b&gt;ABC: &lt;/b&gt;Would it not be wise if they(Tigers) change tactics ditch the  terror tactic and gather much international support?&lt;br /&gt;&lt;b&gt;Dr. Whitehall:  &lt;/b&gt;If you look at who has been inflicting terror on whom, it has been Colombo  that has been bombing Tamil areas using fancy Jets. It is true Tigers have taken  the war to Sinhala territory on two occasions. If they are pushed for survival  they may take down the island with them . We should get involved it is our duty  to prevent Sri Lanka from sinking. In order for that to happen, we should argue  for some kind of federal sharing of power. &lt;/p&gt;&lt;p&gt;&lt;b&gt;ABC: &lt;/b&gt;What about the heading in an Israeli and newspaper about you  which said Doctor supports Separatists implying that you were supporting the  Tigers&lt;br /&gt;&lt;b&gt;Dr. Whitehall: &lt;/b&gt;I do not support separatism but I support  Federalism, Federal state within a unified state .I have responded to the  article by means of an electronic letter. I pinpointed that complex political  issues will be reduced to misleading slogans. I said that I do not support the  Tigers because they have exceeded the limits of Geneva Convention of orthodox  warfare but you should not see them only people doing that. &lt;/p&gt;&lt;p&gt;That article also stated my actions will put me on the side of the  anti-terrorism law. &lt;/p&gt;&lt;p&gt;Meanwhile, after I returned to Australia. One day two gentlemen were at my  door step .They took out their badges, identified themselves as member of the  counter terrorism group. They talked with me, read me my rights. I was a bit  nervous because 'recklessly supporting a terrorist group' has not been defined.  I thought, this could turn out to be one of those defining moments in my career.   &lt;/p&gt;&lt;p&gt;They left saying, 'You may or may not hear from the Director of Public  Prosecution (DPP) and I still haven't heard from them. &lt;/p&gt;&lt;p&gt;&lt;b&gt;ABC: &lt;/b&gt;Is there any chance that any money collected for Tsunami relief  reached the Tigers ?&lt;br /&gt;&lt;b&gt;Dr. Whitehall: &lt;/b&gt;None of the Tsunami relief money  went to the Tigers, not even one dollar and I can attest to it. &lt;/p&gt;&lt;p&gt;John's experiences abroad do help him appreciate home. "With increasing  intensity when I return to Australia these days I think. we just don't know how  fortunate we are. It's chaos out there - ruthless, merciless in most parts of  the world. We're really, really fortunate to live in this country." &lt;/p&gt;&lt;p&gt;There are other forces of terror at work, state terror, persecution and human  rights abuses against the Tamils that has been going on for decades and which we  never hear about, and which governments, like that in Australia, seem to  ignore." &lt;/p&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.tamilnet.com/art.html?catid=79&amp;amp;artid=23101"&gt;தமிழ்நெற்&lt;/a&gt;, ஏபிசி வானொலி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-3903753996529881932?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/3903753996529881932/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=3903753996529881932' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/3903753996529881932'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/3903753996529881932'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2007/08/blog-post_27.html' title='தமிழீழம் தொடர்பான அவுஸ்திரேலிய மருத்துவரின் செவ்வி'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-8074272942939144050</id><published>2007-08-14T08:10:00.000+09:30</published><updated>2007-08-14T13:02:50.651+09:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாவீரர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழ அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வன்னி'/><title type='text'>வரலாறு தொடர்கின்றது....</title><content type='html'>ஓகஸ்ட் 11. ஈழத்தவர்களால் - குறிப்பாக வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் வாழ்பவர்களால் மறக்க முடியாத நாள். கடந்த வருடம் இதேநாளில் முகமாலை முன்னரங்கில் மூண்ட சண்டையைத் தொடர்ந்து ஏற்பட்ட அவலம் யாவரும் அறிந்ததே. இன்னும்கூட வன்னியோ யாழ்ப்பாணமோ அதிலிருந்து மீளவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச்சமர் புலிகள் தரப்புக்கு எதிர்பாராத கடுமையான இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. அச்சமரில் விடுதலைப்புலிகளின் மகளிர் அணியினருக்கு நடந்த சில சம்பவங்களை மாவீரர்கள் சிலர் பற்றிய குறிப்புக்கள் ஊடாக ஆவணப்படுத்துகிறது இப்பகுதி.&lt;br /&gt;&lt;br /&gt;இது 'விடுதலைப்புலிகள்' ஏட்டிலிருந்து பெறப்பட்டது.&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;தனது 50 கலிபர் சுடுகலன் அணியில் தான் உட்பட எல்லோருமே காயமடைந்து, சிலர் வீரச்சாவடைந்துவிட, அந்தக் கணத்தில் - 50 கலிபர் சுடுகலனைப் பாதுகாக்க வழியற்றுத் தவித்துப்போனார் கப்டன் இசைநிலா. நகரவே முடியாத காயம். எனினும் குற்ற உணர்வு உறுத்திக்கொண்டிருந்தது. அந்தச் சுடுகலனை நகர்த்துமாறு இசைநிலா கத்திக்கொண்டிருந்தார். 2006.08.11 அன்று யாழ் மாவட்டத்தின் முகமாலை, கிளாலிப் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சியை முறியடித்து விடுதலைப்புலிகளின் அணிகள் முன்னேறிவிட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கிளாலிக் கரையோரப் பகுதியால் உள்நுழைந்த லெப்.கேணல் கலைவிழியோடு கப்டன் இசைநிலாவின் 50 கலிபர் சுடுகலன் அணியும் புகுந்துவிட்டிருந்தது. பல அணிகள் பல வழிகளால் நுழைந்திருந்தாலும், சமகாலத்தில் எல்லோராலும் சம தூரத்துக்கு நகரமுடியாததால், உட்புகுந்த புலி அணிகள் ஒன்றை ஒன்று சந்திக்க முடியாமல் தனித்தனியாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. ஒவ்வொரு அணியிலுமிருந்த ஒவ்வொரு போராளியும் சிறிலங்காப் படையினரின் பலபக்கத் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கரையோரமாகப் போன லெப்.கேணல் கலைவிழியின் அணி மிகவேகமாக, சிறிலங்காப் படையினரின் இரண்டாம் நிரைக் காப்பரண்களை அண்மித்துவிட்டிருந்தது. எனினும் கடுமையான அந்தச்சண்டையில் பலர் காயமடைய நேரிட்டது. காயமடைந்தவர்கள் தாமாக நகர்ந்து வெளியேறுவதற்கிடையில் மறுபடி மறுபடி எதிர்த் தாக்குதல்களைச் சந்தித்தனர். இயலாத காயத்துடன் தனது சுடுகலனையே நினைத்தபடி "எடுத்துக்கொண்டு வா, எடுத்துக்கொண்டு வா" என்று போர்க்களத்தைவிட்டு வெளியேறிய பின்பும் இசைநிலா கத்திக்கொண்டிருந்தார். எடுத்துவரக்கூடிய நிலையில் களத்தில் எவருமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இதே முன்னரங்கில் இதற்கு முன்னரும் சிறிலங்காப் படையினரின் கடுமையான முன்னகர்வை இசைநிலா திறமையுடன் எதிர்கொண்டிருந்தார். அப்போது அவர் பிகே.எல்.எம்.ஜி சுடுகலனின் சுடுநராக இருந்தார். தீச்சுவாலை - 01 என்று பெயரிட்டு சிங்களப் படையினர் செய்த மூன்று நாள் முற்றுகைச் சமரில் முன்னரங்கக் காப்ரண்கள் இரு தரப்பிடமும் மாறி மாறி கைமாறிக்கொண்டிருந்தன. எஞ்சி நின்று போராடிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு பின்னரங்கிலிருந்து உதவிகள் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கவில்லை. முகமாலைப் பகுதியில் துண்டாடப்பட்ட நிலையில் களமாடிக்கொண்டிந்த இரு அணிகளில் ஒன்றில் இசைநிலா நின்றார். பிகே.எல்.எம்.ஜியின் பொறுப்பாளரும் உதவியாளருமில்லாமல் தனித்து நின்ற இசைநிலாவிடம் மூன்று நாட்களும் ரவைகளுக்குப் பஞ்சமிருக்கவில்லை. வீழ்ந்து கிடந்த சிங்களப் படையினரிடமிருந்து தேவையான ரவைகளை எடுத்துக்கொண்டிருந்தார். மேலதிகமான சுடுகுழல் ஒன்றைக்கூட சிங்களப் படையினரின் சுடுகலனிலிருந்து கழற்றிவைத்திருந்தார். மூன்று நாட்கள் தொடர்ந்த தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் மேலதிக ரவைக்கூட்டு அணியையும் கழற்றாமல் களைப்பை வென்று களமாடிய இசைநிலாவுக்கு இப்போது அதனிலும் பெரிய சுடுகலன் ஒன்றைவிட்டு வந்தது. நெஞ்சைச் சுட்டுக்கொண்டிருந்தது. காயத்தோடும் மனதோடும் போராடிய இசைநிலா 2006.08.16 அன்று மருத்துவமனையில் விழிமூடிப்போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;******************************&lt;br /&gt;&lt;br /&gt;லெப்.கேணல் கலைவிழி போன கரையோரப் பாதைவழியே லெப்.தமிழ்ச்சுடர் தனது உந்துகணை செலுத்தியுடன் போயிருந்தார். தேவையான இடங்களில் எதிரிக் காப்பரண்களைத் தாக்கி விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது இடையில் அதைக் கண்டார். அது கப்டன் இசைநிலா அணியினரின் 50 கலிபர் சுடுகலன். அந்த அணியினர் இழப்பைச் சந்தித்துவிட்டனர் என்பதை தமிழ்சுடர் புரிந்துகொண்டார். தன்னால் தனித்து அதைத் தூக்கிச் செல்லவும் முடியாது&lt;br /&gt;என்பதால் தகர்த்துவிட்டார். எமக்கு இல்லாதது எதிரிக்கும் இல்லாது போகட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;******************************&lt;br /&gt;&lt;br /&gt;கடற்கரைப் பாதைவழியே முன்னிலை நோக்குனராககப்டன் இசைநிலா போனார். அவர் திரும்பிய திசையெல்லாம் சிறிலங்காப் படையினரே தென்பட்டனர். காப்பரண்கள், குறுக்கு அகழிகள், அங்கே, இங்கே என்று சிறிலங்காப் படையினரைத் தான் கண்ட இடங்களின் ஆள்கூறுகளைக் கணிப்பிட்டு, எறிகணைசெலுத்தும் அணிக்கு அறிவித்துக்கொண்டிருந்தார். சிங்களப் படையினரின் தலைகளில் இடியாக எறிகணைகள் விழுந்து வெடித்துக்கொண்டிருந்தன. எனினும் மழைக்குச் சற்றுமுன்னர் புற்றிலிருந்து புறுப்பட்டுவரும் ஈசல்கள் போல படையினர் வந்துகொண்டிருந்தனர். அங்கே, இங்கே என்று எறிகணைகளை விழுத்திக்கொண்டிருந்தவரைச் சூழ இப்போது படையினர்தான் நின்றனர். தான் நிற்குமிடத்தைக் குறிப்பிட்ட இசைநிலா நிலைமையை விளக்கி, தன்னைப் பார்க்காமல் தான் நிற்குமிடத்துக்கு எறிகணைகளை வீசுமாறு கேட்டார். &lt;br /&gt;ஓயாத அலைகள் - 02 நடவடிக்கையின் போது கிளிநொச்சிக் களமுனையிலே லெப்.கேணல் செல்வி எடுத்த அதே முடிவு. இப்போது எவரும் சொல்லாமலே இசைநிலா எடு;த்தார். பரம்பரை தொடர்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;******************************&lt;br /&gt;சண்டை மிகக் கடுமையாக நடந்துகொண்டிருந்தது. கரையோரமாகச் சிறிலங்காப் படையினரின் இரண்டாம் நிரைக் காப்பரண்கள் அருகே கலைவிழி நின்றார். காயமடைந்த போராளிகளை&lt;br /&gt;உடனுக்குடனேயே பின்னரங்கிற்குப் போகுமாறு அனுப்பிக்கொண்டிருந்தார். நெருக்கடியான அந்தக் களத்தில் காவும் குழுவினர் வந்து காயக்காரரை அகற்ற வாய்பில்லை. இயலுமான காயக்காரர்கள், வீழ்ந்திருந்த தோழியரின் வித்துடல்களைச் சுமந்துபோனார்கள். கலைவிழியோடு கூடவே நகர்ந்த கப்டன் எழில்நிதிக்கு காயம் ஏற்பட்டது. மறுபடி மறுபடி காயம் ஏற்பட்டதால் அவரால் நடக்கமுடியவில்லை. நடந்துவரக்கூடிய எல்லோரையுமே கலைவிழி அனுப்பிவிட்டிருந்தார். களத்தைவிட்டுக் கலைவிழியையும் வெளியே வருமாறு கட்டளைமையம் பணித்தது. காயத்துடன் கிடந்த எழில்நிதியைத் தூக்கிக்கொண்டு தான் வருவதாகக் கூறிய கலைவிழி தன்னோடு நின்றவர்களையும் அனுப்பிவிட்டிருந்தார். சிங்களப் படையினரின் கடும் தாக்குதல் மத்தியில் எழில்நிதியை மீட்டுவர முயன்ற கலைவிழி வரவேயில்லை. &lt;br /&gt;ஓயாத அலைகள் - 03 நடவடிக்கையில் பரந்தன் களமுனையில் சூனியப் பகுதிக்குள் வீழ்ந்துகிடந்த மேஜர் மாதுரியின் வித்துடலை எடுக்காமல் வரமாட்டேன் என்று போய், வித்துடலாக வந்த லெப்.கேணல் மைதிலியைப் போலவே லெப்.கேணல் கலைவிழியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viduthalaipulikal.com/file/docs/2007/07/136-10.pdf"&gt;http://www.viduthalaipulikal.com/file/docs/2007/07/136-10.pdf&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-8074272942939144050?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/8074272942939144050/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=8074272942939144050' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/8074272942939144050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/8074272942939144050'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2007/08/blog-post.html' title='வரலாறு தொடர்கின்றது....'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-307106671526707977</id><published>2007-07-05T18:57:00.000+09:30</published><updated>2007-07-05T19:14:06.248+09:30</updated><title type='text'>கரும்புலிகள் நாள்</title><content type='html'>&lt;img style="width: 445px; height: 440px;" src="http://www.selvakumaran.de/heroes/karumpuli.jpg" height="472" width="468" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;யூலை-5. கரும்புலிகள் நாள்.&lt;/p&gt;&lt;p&gt;விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் தற்கொடைப் போராளி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நாள்தான் கரும்புலிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;“விடுதலை நடவடிக்கை” (Operation Liberation) என்ற பெயரில் சிங்கள இராணுவம்  யாழ்ப்பாணத்தின் ஒருபகுதியான வடமராட்சியைக் கைப்பற்ற 1987 இன் நடுப்பகுதியில் நடவடிக்கையொன்றை மேற்கொண்டு சில இடங்களையும் கைப்பற்றியிருந்தது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் என்ற பாடசாலையில் முகாமிட்டிருந்த இராணுவத்தினரை அழிக்கும் நோக்கில் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தோடு சென்று தாக்குதல் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குத் தன்னைத் தயார் செய்தவன்தான் &lt;a href="http://www.aruchuna.net/details.php?image_id=2780"&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;கப்டன் மில்லர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திட்டமிட்டதைவிட இன்னும் உள்ளே சென்று இரு கட்டடங்களுக்கிடையில் வாகனத்தை நிறுத்தி வெடிக்க வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிகாரபூர்வ செய்தியின்படி 39 இராணுவத்தினர் அத்தாக்குதலிற் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்தொகை மேலும் அதிகமென்றே கருதப்பட்டது. இரு கட்டடங்களும் இடிந்து தரைமட்டமாகியிருந்தன. 1995 யாழ் இடப்பெயர்வு வரை அவை துப்பரவாக்கப்படாமல் அப்படியே இருந்தன. இத்தாக்குதல் பற்றிய முழுவிவரத்துக்கும் மில்லரின் தாயாரின் கருத்துக்களை அறியவும் &lt;strong&gt;&lt;a href="http://thunaippathivuhal.blogspot.com/2006/07/blog-post.html"&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;இங்கே&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt; செல்லவும். சில எழுத்துப் பிழைகளைப் பொறுத்தருள்க.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தாக்குதல் மிகப்பெரும் அதிர்ச்சியைச் சிங்களத்தரப்பில் ஏற்படுத்தியிருந்தது. அதுவரை அப்பெருந்தொகையில் இராணுவம் கொல்லப்பட்டதில்லை. மேலும் இனிமேலும் இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படும் என்ற சூழ்நிலையில் இராணுவம் மிக அதிகமாகவே வெருண்டிருந்தது. ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் நிறுத்தப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களிலேயே இந்திய ராணுவம் வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;அதன் பின் இரண்டாம் கட்ட ஈழப்போர் (1990 ஆனி) தொடங்கிய கையோடு சில இராணுவ முகாம்கள் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டன. முதலில் கொக்காவில், பின் மாங்குளம். இரண்டுமே கண்டிவீதியை மறித்து நின்ற முகாம்கள். (கண்டிவீதியின் இருப்பானது போராட்டத்தில் எவ்வளவு முக்கியம் என்பது அன்றுமுதலே நிறுவப்பட்டு வந்திருக்கிறது) இதில் மாங்குளம் மீதான தாக்குதலின்போது மில்லர் பாணியிலேயே வாகனக் கரும்புலித்தாக்குதல் ஒன்று நிகழ்த்த திட்டமிடப்பட்டது. ஆள் தேர்வுக்கு முன்னமேயே அந்நேரத்தில் வன்னியின் துணைத் தளபதியாயிருந்த &lt;span style="font-weight: bold;"&gt;போர்க்&lt;/span&gt; அப்பணியை ஏற்பதாகச் சொன்னார். அது மறுக்கப்பட்டபோதும் அடம்பிடித்து அச்சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டார். 3 நாள் கடும் சமரின்பின் கரும்புலி &lt;a href="http://maaveerarkal.blogspot.com/2003/11/blog-post_19.html"&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;strong&gt;லெப்.கேணல். போர்க்கின்&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/a&gt;வெடிமருந்து நிரப்பிய வாகனத் தாக்குதலோடு முகாம் கைப்பற்றப்பட்டது. (இன்று கண்டி வீதியாற் செல்பவர்கள் போர்க் வெடித்த அவ்விடத்தைப் பார்க்கலாம்.)&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் கடலிலும் இத்தாக்குதல் வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேஜர் காந்தரூபன், மேஜர் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வெடிமருந்து நிரப்பிய படகொன்றினால் கட்டளைக் கப்பலொன்றின்மீது மோதி முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலைச் செய்தனர். அது தாக்கிச் சேதமாக்கப்பட்டது. பின் கடலில் நிறையத் தற்கொடைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுவிட்டன. ஏராளமான டோரா ரக வேகப்படகுகள் தாக்கியழிக்கபட்டுவிட்டன. கடற்புலிகளின் பெரும்பலம் இந்தக் கரும்புலிப்படகுகள் தான் என்பது குறிப்பிடத் தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;வெடிமருந்து வாகனத்தோடு சென்று வெடிக்கும் வடிவம் சிலாவத்துறை முகாம் மீதான மேஜர் டாம்போவின் தாக்குதலோடு மாற்றமடைந்தது. தரையில் அவ்வடிவம் மாற்றம் பெற்று தாக்குதலணியாகச் சென்று தாக்கியழிக்கும் வடிவுக்கு மாற்றமடைந்தது. 1993 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் நடத்தப்பட்ட பலாலி விமானத்தளத்தின் மீதான தாக்குதல் தொடக்கம் இன்றுவரை பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டன. ஆண்கள், பெண்கள் என முன்னூறுக்குமதிகமான வீரர் வீராங்கனைகள் தற்கொடைத்தாக்குதல் மூலம் வீரச்சாவடைந்துள்ளார்கள். இவற்றைவிட வெளிவிடப்படாத தாக்குதல்கள் நிறையவுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களின் பங்களிப்பு இத்தாக்குதல்களில் சரிசமமாயுள்ளது. (&lt;span style="font-style: italic;font-size:85%;" &gt;பெண்களைக் குறித்துத் தனியே, சிறப்பாகச் சொல்ல வேண்டுமா என்ற கேள்வி எனக்குள்ளுண்டு. ஆனால் போராட்டத்தில் பெண்களின் பங்கு பற்றி அப்படிச் சொல்லப்படவேண்டிய தேவை வன்னியில் இல்லையென்றாலும் பிற இடங்களில் உண்டென்றே கருதுகிறேன்.&lt;/span&gt;) முதற் பெண் கடற்கரும்புலி &lt;strong&gt;&lt;a href="http://maaveerarkal.blogspot.com/2005/04/blog-post.html"&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;கப்டன் அங்கயற்கண்ணி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;.&lt;/span&gt; முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி.&lt;br /&gt;&lt;br /&gt;பல வல்லரசுகளின் துணையோடு போரிடும் ஒரு நாட்டுப் படைக்கு எதிராக தன் மக்களை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு விடுதலை இயக்கம் போராடும்போது அது சில அதீதமான செயல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. மனஉறுதியும் தியாகமுமே அவ்விரு படைகளுக்குமிடையிலான வித்தியாசமாகும். தற்கொடைத்தாக்குதல் வடிவம் ஓரளவுக்கு இராணுவச் சமநிலையைப் பேணியது என்றுதான் சொல்ல வேண்டும். தலைவர் பிரபாகரன் சொல்கிறார்:&lt;br /&gt;“&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்&lt;/span&gt;”&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டம் இக்கட்டுக்குள்ளான பல நேரங்களில் இவ்வாறான தாக்குதல்கள்தாம் போர்க்களத்திலும் அரசியலிலும் வெற்றியைத் தேடித்தந்தன. இன்றுவரை சிங்களக் கடற்படையின் போக்குவரத்துக்களைக் குலைத்து அவர்களின் மேல் பெரும் அழுத்தத்தைப் பிரயோகித்து வருகிறது கடற்புலிகள் அணி. இதைவிட முக்கியமாக போராட்டத்துக்கான முழு வினியோகமும் கடல்வழி மூலந்தான் நடைபெறுகிறது. அதைச் சரியாகச் செய்துவந்ததும் கடற்புலிகள் அணியேதான். சிறிலங்கா அரசின் பல கடற்கலங்களை மூழ்கடித்து பெரும் பொருளாதார இழப்பைக் கொடுத்ததும் இந்தக் கடற்புலிகள் அணிதான். மீனவரின் கடற்றொழிலுக்குப் பாதுகாப்பளித்ததும், மக்களின் போக்குவரத்துக்குப் பாதுகாப்பளித்ததும் கடற்புலிகள் அணிதான். இவையெல்லாவற்றிலும் கடற்கரும்புலிகளின் பங்கு நீக்கமற நிறைந்திருக்கிறது. கடற்புலிகள் பலம் பெற்ற பின், முல்லைத்தீவைத் தாண்டிச் செல்லும் எந்தக் கப்பல் தொடரணியும் (ஆம் தனியே எந்தக் கலமும் செல்வதில்லை. பெரும் அணியாகத்தான் செல்வார்கள். அப்படியிருக்க பல தடவை இந்த அணிகள் தாக்கியழிக்கட்டிருக்கின்றன.) 90 கடல் மைல்களுக்குள் -கிட்டத்தட்ட 160 கிலோ மீற்றருக்குமதிகம்- சென்றது கிடையாது. அவ்வளவு பயம். ஆனால் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின்பின் ஒரு கடல்மைல் வரை வந்து மீனவரை வெருட்டி படகுகளை இடித்து சேட்டை செய்தது சிங்களக் கடற்படை. )&lt;br /&gt;&lt;br /&gt;சின்னப் பெடியன்களால் என்ன செய்ய முடியுமென்ற புத்தஜீவிகளின் கேள்விக்கு விடை கூறப்பட்டது முதலாவது தற்கொடைத்தாக்குதல் மூலம். இன்று சிங்களத்தின் பொருளாதாரம் முதல் அனைத்தும் தீர்மானிக்கப்படுவது இத்தற்கொடைத்தாக்குதல் மூலம்தான். முக்கியமான பல தருணங்களில் அவ்வப்போது நடத்தப்பட்ட சில உரிமை கோராத தாக்குதல்கள் தாம் சிங்களத்தின் அத்திவாரத்தை அசைத்தன. பொருளாதாரமென்றாலும் சரி, சில முக்கிய தலைகளை உருட்டுவதென்றாலும் சரி இத்தாக்குதல்கள் தாம் போராட்டப்பாதையை செப்பனிட்டன. “&lt;span style="color: rgb(102, 102, 0);"&gt;&lt;strong&gt;தடை நீக்கிகள்&lt;/strong&gt;&lt;/span&gt;” என்று இவர்களைச் சொல்வது சாலப்பொருத்தம். கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீதான தாக்குதல் தான் சிங்களம் ஓரளவாவது இறங்கிவரக் காரணமாயமைந்தது என்பதை யாரும் மறக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------------------&lt;br /&gt;எதிரியின் குகைக்குள்ளேயே திரிந்து, கொள்கையிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் வழுவத் தூண்டும் அத்தனை ஆடம்பர, ஆபாசப் புறச்சூழலுக்குள்ளும் வருடக்கணக்கில் இருந்து திட்டத்தைச் சரிவரச் செய்து உயிர்நீத்துப்போன அந்த மனிதர்கள் வித்தியாசமானவர்கள். யாருக்கும் புகழ் மீது ஒரு மயக்கமிருக்கும். களத்தில் போராடிச் சாகும் ஒருவருக்குக்கூட கல்லறையும் மாவீரர் பட்டியலில் அவர் பெயரும் இருக்கும். நினைவு தினங்கள் அனுட்டிக்கப்டும். இறந்தபின்னும் புகழ் இருக்கும். ஆனால் முகமே தெரியாமல், இறந்த செய்திகூட யாருக்கும் தெரியாமல், கல்லறையுமில்லாமல், போராளியாயிருந்தான் என்ற அடையாளங்கூட இல்லாமல் சுயமே அழிந்து போகும் இவர்கள் வித்தியாசமானவர்கள்தாம். எதிரியாற்கூட இவர்களை இன்னார் என்று அடையாளப்படுத்த முடியாதபடிதான் தம்மையும் தம் சுயத்தையும் அழித்துக் கொள்கிறார்கள். மிகமிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இவர்கள் அடையாளங் காணப்பட்டனர். அப்படியே தம் சுயத்தை அழித்துச் சென்ற அந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கும் எம் இதய அஞ்சலிகள்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;"நாற்றங்கள் நடுவே வாழ்ந்திட்ட முல்லைகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;சேற்றுக்குட் சிக்காத தாமரை மொட்டுக்கள்."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;----------------------------------------------------&lt;br /&gt;பல சந்தர்ப்பங்களில் கரும்புலி அணியைக் கலைத்துவிடும்படி உலக நாடுகளும் சிங்கள அரசும் வற்புறுத்துவதிலேயே தெரிகிறது இப்போர்முறை வடிவத்தின் வெற்றி. இன்றும் தமிழர் தரப்பின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது இந்த உயிராயுதம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளால் வெளியிடப்பட்ட கரும்புலிகளின் எண்ணிக்கை 322.&lt;br /&gt;அவர்களின் விவரங்களையும் படங்களையும் பார்க்க &lt;a href="http://www.aruchuna.net/categories.php?cat_id=18"&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;அருச்சுனாவுக்குச்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt; செல்லுங்கள்.&lt;br /&gt;கரும்புலிகள் நாளான இன்று அனைவரையும் நினைவு கூர்வோம்.&lt;br /&gt;____________________________&lt;br /&gt;&lt;br /&gt;மாவீரர் பற்றிய குறிப்புகளைச் சேமித்து வைத்த சந்திரவதனாவுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;*** கடந்த மாவீரர் நாளுக்கு எழுதப்பட்ட இவ்விடுகை இங்கு மீளப் பதிவாக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;_____________________________________________&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" rel="tag"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-307106671526707977?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/307106671526707977/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=307106671526707977' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/307106671526707977'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/307106671526707977'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2007/07/blog-post_05.html' title='கரும்புலிகள் நாள்'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-4853768777618858088</id><published>2007-07-05T10:24:00.000+09:30</published><updated>2008-12-12T02:29:08.772+10:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாவீரர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழ அரசியல்'/><title type='text'>இறுமாப்பின் இமயம் - மீள்பதிவு</title><content type='html'>யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஆச்சரியங்களும் உண்டு. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் அவர்கள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருக்கும். இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;1997 ஆனி மாதம் மட்டக்களப்பிலிருந்து வன்னி நோக்கி இருபடகுகளில்  போராளிகள் சிலர் வருகிறார்கள். இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய ஆயத்தங்களேதுமற்ற சாதாரண பயணம்.  திருகோணமலையை நெருங்கியபோது எப்படியோ எதிரியின் விசைப்படகின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். படகு சேதமடைகிறது. கடலிற்குதித்து நீந்தத் தொடங்குகின்றனர். எல்லோரும் பிரிந்துவிட்டனர். அதில் ஒருவன் தான் பாலன். கடற்கரும்புலி அணியைச் சேர்ந்தவன் தான் பாலன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவிரவாக நீண்டதூரம் நீந்தி "இறக்க கண்டி" எனுமிடத்திற் கரைசேர்கிறான் பாலன். விடிந்துவிட்டது. கரையில் சோர்வினால் மயங்கிப்போன நிலையில் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இராணுவத்தாற் கைதாகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவ முகாமில் கண்விழித்த பாலனுக்கு அப்போதுதான் தாம் கைதுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கழுத்தில் குப்பியில்லை.&lt;br /&gt;இனி சித்திரவதை செய்யப்படப்போவது உறுதி. அதில் இரகசியங்கள் காப்பாற்றப்பட வேண்டுமே. அதுவும் பாலன் கடற்கரும்புலி அணியாதலால் நிறைய விசயங்கள் தெரிந்திருந்தான். தன்னை மாய்த்துக்கொள்ள ஏதும் கிடைக்குமா என்று முயன்றான். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் குப்புறக் கிடத்தப்பட்டிருந்தான். இன்னும் சிறிது நேரத்தில் ‘விசாரணை’ தொடங்கப் போகிறது. எதுவும் செய்ய முடியாத நிலை. அந்த நேரத்தில் தான் அசாதாரணமான முடிவையெடுத்தான். தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான். நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே துண்டித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற் கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன் அடுத்த கட்டத்தை யோசித்தான். எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான். ஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும் விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு அறிந்திருந்தான். முயற்சித்து முயற்சித்து இறுதியில் அந்த முடிவையெடுத்தான். நினைத்தும் பார்க்க முடியாதது அது. தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி மோதி மண்டையுடைந்து இறந்துபோனான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மோதலுக்குப்பின்னும் சாகும்வரை தொடர்ந்து தன் தலையைக் கட்டிலின்மேல் மோதுமளவுக்கு அவனுக்குத் துணிவும் வைராக்கியமும் இருந்தது, ஒரு துளி நீர் கூட வாயில் வைக்காமல் 12 நாட்கள் இருந்து அணுவணுவாகச் தன்னைத்தானே சாகடித்த திலீபனைப் போல. (பாலனது இயற்பெயர்கூட திலீபன் தான்.)&lt;br /&gt;&lt;br /&gt;கரும்புலிகள் நாளான இன்று நூற்றுக்கணக்கான சரித்தரங்களில் ஒன்றான கரும்புலி கப்டன் பாலனையும் அவனது இந்நெஞ்சையுருக்கும் சம்பவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். அதேநேரம் இதுவரை வீரச்சாவடைந்த 332 கரும்புலிகளுக்கும், வெளிவராமல் உறங்கும் ஏனையவர்க்கும் இதய அஞ்சலிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;_________________________________&lt;br /&gt;சரியாக இருவருடங்களின் முன் எழுதப்பட்ட இடுகை. இங்கு மீள்பதிவாக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_2QNyK7gHiW0/RoxCwXDnYPI/AAAAAAAAAB0/qQIAhhpletQ/s1600-h/313-Sea-Black-Cap_Balan.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_2QNyK7gHiW0/RoxCwXDnYPI/AAAAAAAAAB0/qQIAhhpletQ/s400/313-Sea-Black-Cap_Balan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5083511477984780530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம்: தமிழ்மறவன் தளம்.&lt;br /&gt;மாவீரர் எண்ணிக்கை: புதினம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9670725-4853768777618858088?l=vasanthanin.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthanin.blogspot.com/feeds/4853768777618858088/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9670725&amp;postID=4853768777618858088' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/4853768777618858088'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9670725/posts/default/4853768777618858088'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthanin.blogspot.com/2007/07/blog-post.html' title='இறுமாப்பின் இமயம் - மீள்பதிவு'/><author><name>வசந்தன்(Vasanthan)</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_2QNyK7gHiW0/RoxCwXDnYPI/AAAAAAAAAB0/qQIAhhpletQ/s72-c/313-Sea-Black-Cap_Balan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9670725.post-6126887199954282970</id><published>2007-06-01T23:09:00.000+09:30</published><updated>2007-06-01T23:17:31.829+09:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேச்சுத்தமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒலி'/><title type='text'>நினைவுப்பயணம்-1 (பண்டத்தரிப்பு) - ஒலிப்பதிவு</title><content type='html'>இதுவொரு வித்தியாசமான ஒலிப்பதிவு முயற்சி. ஓடியாடித் திரிந்த இடங்களைப் பற்றிய நினைவுமீட்டலாக இருக்கும். முதற்கட்டமாக வீதியொன்றினூடான பயணமாக இது இருக்கும். பலவருடங்களின் முன் அவ்வீதியால் பயணம் செய்த நினைவை மீட்டுப் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதற்கட்டமாக பண்டத்தரிப்புச் சந்தியிலிருந்து யாழ்ப்பாண நகர்ப்பகுதி நோக்கிய பயணம் தொடங்குகிறது. யாராவது ஒருவருக்கு இது சுவாரசியமாக இருக்கக்கூடும். பலருக்கு இது சலிப்பான ஒலிப்பதிவாக இருக்கும். ஏராளமானோருக்கு கதைக்கப்படும் இடங்களே தெரியாமலிருக்கும் சூழ்நிலையில் எப்படி சுவாரசியமிருக்கும்?&lt;br /&gt;அப்படிப்பட்டவர்கள் என்வலைப்பதிவில் 'நினைவுப்பயணம்' என்ற தலைப்புடன் வரும் இடுகைகளைத் தவிர்த்துவிட்டால் போயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;இனி ஒலிப்பதிவைக் கேளுங்கள். நகர்ப்பகுதிக்குள் போவதற்குள் யாராவது துணையாக வந்து சேராமலா போய்விடுவார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="300" height="80"&gt;&lt;param name="movie" value="http://media.imeem.com/m/yp4m8bYdlD/aus=false/"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://media.imeem.com/m/yp4m8bYdlD/aus=false/" type="application/x-shockwave-flash" width="300" height="80" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;_____________________________&lt;br /&gt;அனைவருக்கும் இலகுவாக ஒலிக்கோப்பின் கொள்ளளவு நன்றாகக் குறைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒலிப்பதிவு: சிஞ்சாமனுசிக் கலையக பரீட்சார்த்தக்கிளை (அவுஸ்திரேலியா)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='
