Monday, October 09, 2006

தெகெல்காவில் ஒரு போராளியின் கதை.

இந்தியப் பத்திரிகையான தெகெல்காவில் விடுதலைப்புலிப் பெண் போராளியொருவரைப் பற்றிய தொகுப்பு வந்துள்ளது.
விடுதலைப்புலிகளின் புகைப்படப் பிரிவைச் சேர்ந்த கஜானி என்ற பெண் போராளியின் சுயசரிதையே THE TIGERS’ FIGHTER JOURNALIST என்ற தலைப்போடு வெளிவந்துள்ளது. தற்செயலாக வாசிக்கச் சிக்கிய அப்பக்கத்தை இங்குப் பகிரலாம் என நினைக்கிறேன்.

அதில்
கஜானியின் பிறப்பிடமான கிளிநொச்சியின் தொடக்க நிலைமை,
சிறுவயதில் ஏற்பட்ட அனுபவங்கள்,
பயிற்சி முகாமில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள்,
முதற்களம் - அதைத்தொடர்ந்த ஆனையிறவுக் களம்,
பின் புகைப்படப் பிரிவுக்குத் தெரிவாகியமை, அங்குப் பெற்ற பயிற்சிகள்,
சமர்முனையில் புகைப்படமெடுத்த மயிர்கூச்செறியும் அனுபவங்கள்
உட்பட பல சுவாரசியமான சம்பவங்களின் கோர்வையாக அப்பகுதி உள்ளது.

களமுனையை ஆவணப்படுத்துவதில் புலிகளுக்கிருக்கும் வேட்கை யாவரும் அறிந்ததே. இதற்கெனவே கணிசமான போராளிகள் ஒவ்வொரு சமரிலும் ஈடுபடுத்தப்படுவர். பலர் இப்பணியில் வீரச்சாவடைந்துள்ளனர்.

புகைப்படப் பிரிவுப் போராளிகளின் இணையத்தளமான அருச்சுனாவில் ஒரு தொகுதிப் புகைப்படங்களைப் பார்க்கலாம்.

கஜானி அவர்கள் முன்பு ஒரு வலைப்பதிவையும் தொடக்கியிருந்தார். அதன்பிறகு எதையும் காணவில்லை.

____________________________________

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"தெகெல்காவில் ஒரு போராளியின் கதை." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (09 October, 2006 04:26) : 

தீவிரவாத்தை பரப்பதே.....

நீ கொடுத்த சுட்டி ஒரு தீவிரவாத சுட்டி....


"Reason:
The category "Militancy and Extremist" is filtered."

 

said ... (09 October, 2006 08:54) : 

வசந்தன்,
தகவல்களுக்கும் சுட்டிகளுக்கும் மிக்க நன்றி.

 

said ... (10 October, 2006 09:06) : 

அனானி,
தீவிர 'வாத்தை'ப் பரப்ப வேண்டாமெண்டுறியளோ?
அல்லது தீவிரவாதத்தைச் சொன்னியளோ?
;-)

சரியண்ணை, இனி இப்பிடிச் செய்ய மாட்டன்.

வெற்றி,
வருகைக்கு நன்றி.

 

post a comment

© 2006  Thur Broeders

________________