Tuesday, May 27, 2008

'கேள்விக்குறி' இயக்குநரின் பதில்

"கேள்விக்குறி - கவர்ந்த தமிழ்த் திரைப்படம்" என்ற தலைப்பில் முன்பொரு இடுகை இட்டிருந்தேன்.
அவ்விடுகைக்கு அத்திரைப்படத்தின் இயக்குநர் ஜெய்லானி பின்னூட்டத்தில் பதிலளித்திருந்தார்.

அப்பதிலை இங்குத் தனியிடுகையாக இடுகிறேன்.
இது அவ்வியக்குநருக்கு நானளிக்கும் மரியாதை எனக்கொள்க.

முந்திய இடுகையில் அப்படம் தொடர்பில் நான் குறிப்பிட்ட சில குறைபாடுகள் தொடர்பான விளக்கத்தை இயக்குநர் அளித்திருந்தார்.

விளக்கத்துக்கு நன்றி ஜெய்லானி.
உங்களின் திரைத்துறைப் பயணம் மேலும் சிறக்க ஓர் இரசிகனாக எனது ஆசிகள்.

இனி இயக்குநர் ஜெய்லானியின் பதில்.


Jailani(Director) said ... (19 May, 2008 03:09) :

வசந்தன், கேள்வி சரிதான்:-)
நான் இயக்குனர் தான். எனது இ-மெயில் : mjailani அட் gmail டாட் com. ஆர்குட்டில் இதெ இ-மெயிலை தேடினால் எனது பக்கம் கிடைக்கும், புகைப்படத்துடன். ஆனால் அதிலும் தில்லுமுல்லு செய்ய இயலும் என்பது வேறு விசயம்.

மீண்டும், என் படத்தை பற்றிய உங்களின் மனமார்ந்த பாரட்டுகளுக்கு நன்றி. மிகச்சில உறுத்தல்களையும் சுட்டிக்காட்ட்டியுள்ளீர்கள்.

//"நாயகனிடம் அடிவாங்கியிருக்கும் காவல்துறையினரைப் பார்த்துப் பரவசப்படும் நபர்கள், 'என்ன இன்னும் போட்டுத்தள்ளலையா?' என்று நிமிடத்துக்கொருதரம் கேட்டு அந்தரித்துக்கொண்டிருக்கும் நபர் போன்ற பாத்திரங்கள் அதீதமானவையாகப் படுகின்றன."//

இந்த படம் முழுக்க முழுக்க காவல்துறையினரால் அன்றாடம் பாதிக்கப்படும் சாமான்ய மக்களின் பார்வையில் எடுக்கப்பட்டது. அதை இன்னும் அழுத்த்தமாக்கும் நோக்கத்த்தில் தான் 'போட்டுத்தள்ளலயா' நபரின் கோபமான வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. ஆனால் உங்களைபோல இன்னும் சிலரும் அது எரிச்சலூட்டுவதாய் உணர்ந்து என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

//"ஏ.கே இரக துப்பாக்கியை ஒற்றைக் கையால் சுடுவது. 'றம்போ' இரகப் படங்களைப் பார்த்துக் கெட்டுப்போனாரா இயக்குநர்?"//

இது தெரிந்தே செய்த பிழை.. தவிர்க்கமுடியாத நிலை. காரனம் வேடிக்கையானது. இந்த காட்சி படப்பிடிப்பின் போது, இதற்கு முந்தைய மற்றும் அடுத்த காட்சிகள் ஏற்கனவே படமாக்கபட்டுவிட்டன.

இக்காட்சியில் நான் இரன்டு கைத்துப்பாக்கிகளுடன் வெளியெ வருவேன், கமிஷனரையும் உதவி கமிஷனரையும் மிரட்டியபடி.. இந்த நிலையில் மூன்றாவதாய் ஏ கே ரக துப்பாக்கியை பறித்து நான் சுட வேன்டிய நிலை. கமிஷனரையும் விட்டுவிடக்கூடாது. அப்போதே ஒரு விதமான காமெடியாய் தோன்றியது எனக்கு. மற்ற காட்சிகளை திரும்ப எடுத்து சரி செய்ய பொருளாதார நிலை இல்லை.ஒரு வழியாய் சமாளித்து ஒரு கையில் கைதுப்பாக்கியுடன் கமிஷனரை மிரட்டியபடி இன்னொரு கையால் ஏ கே ரக துப்பாக்கியால் சுடுவதாக எடுத்தோம்.:-)

//"சித்திரவதை செய்து விசாரணை செய்யக்கூடாது என்ற கருத்தை விவாதப்பொருளாக வைத்து நகர்த்தப்பட்ட கதையில் நாயகனின் விசாரணை முறையும் அதேபாணியில் - அதாவது காவல்துறையினரை அடித்துத் துன்புறுத்தி விசாரிக்கும் முறையிலேயே இருக்கிறது.
அது முரணாக இல்லையா?
படத்தில் நேரடியாக அதற்குப் பதிலில்லை. பத்திரிகையாளரை வைத்து இப்படியொரு கேள்வியை எழுப்பி அதற்குரிய விளக்கத்தை இயக்குநர் கொடுத்திருக்கலாம்.(அல்லது இயக்குநரிடமே அற்குரிய பதிலில்லையோ என்னவோ?)
"//


:-) என்னிடம் நீங்கள் சொன்ன அதே பதிலிருந்தது. ஆனால் அதை சொல்லவேண்டுமென அப்போது தோன்றவில்லை.

//"ஒரேயொரு பாடல் படத்தின் இறுதிப் பாகத்தில் வருகிறது. அதுகூட கதைக்குத் தேவையான சந்தர்ப்பத்தில் வருவதாகவே கருதவேண்டும். கணவனுக்கும் மனைவிக்குமிடையிலான நெருக்கத்தை, அன்பை, காதலைச் சொல்ல வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தில் அப்பாடல் வருகிறது. அதைக்கூட பாடலில்லாமல் வேறு முறைகளில் காட்டியிருக்கலாமென்பது எனது கருத்து."//

படம் துவக்கிய நேரத்தில் பாடல் வைப்பதாய் எண்ணமே இல்லை. ஆனால் இருவரின் நெருக்கத்தை ஒரு சிறு கவிதையாய் சொல்லவேண்டுமெனெ நினைத்திருந்தேன். அதே காட்சிகளை ஒரு பாடலின் பின்னனியில் காட்டினால் படத்தின் விளம்பரத்திற்க்கும் உதவும் என்ற கருத்து வந்த போது அது தவறாகவோ, திணிப்பதாகவோ எனக்கு தெரியவில்லை.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"'கேள்விக்குறி' இயக்குநரின் பதில்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (27 May, 2008 22:03) : 

நியாயமான கேள்விகளும் தகுந்த, பொறுப்பானா பதில்களும். இந்தப் படம் வெளிநாடுகளில் தகுந்த விற்பனையில் வந்திருந்தால் அந்த ரசிகர்களால் பரவலாக ரசிக்கப்பட்டிருக்கும்.

 

said ... (30 May, 2008 00:15) : 

இந்த படத்தை கலைஞர் தொலைக்காட்சில் ஒளிபரப்பிவிட்டார்கள் என்று ஞாபகம். படத்தின் முக்கால்வாசி நானும் பார்த்தேன் என்ற வகையில் சில கருத்துக்கள்.

நிச்சயமாக பொருளாதார உதவியுடன் பிரபலமான நட்சத்திரங்களுடன் படம் வெளிவந்திருந்தால் பரவலான பாராட்டைப்பெற்றிருக்க கூடிய படம்தான் அதில் சந்தேகமேயில்லை.

நாயகன் சிலரை வீட்டில் அடைத்து வைத்து தன் காதலியின் மரணத்துக்கு யார் காரணம் என்று கேட்கும் காட்சியிலிருந்துதான் நான் பார்க்க ஆரம்பித்தேன். மிகச்சாதாரணமான/பொருளாதாரத்தை மனதில் கொண்டு அறிமுக நடிகர்களை தேர்ந்தெடுத்ததாக இருந்தாலும் கதாநாயகியின் நடிப்பை எப்படி நடிப்பென்று ஒத்துக்கொள்ள முடியும். அவருக்கு சுத்தமாக நடிக்க வரவில்லை. அவருடைய வாயசைவுக்கும் வசனத்துக்கும் சம்பந்தமேயில்லை. விஜய் படமாக இருந்தால்கூட காட்சி பிடிக்கவில்லையென்றால் சடக்கென்று மனம் மாறுகிறது என்னத்த படம் எடுத்திருக்கான்னு அதேமாதிரி லோபட்ஜெட் படத்துக்கும் பொருந்தும். ஒருசில காட்சிகளில் நாயகனின் நடிப்பு இருந்தது அது தொடர்ந்திருக்க வேண்டும். குறிப்பாக கதவு பக்கத்திலிருந்து போலிஸ் அதிகாரியுடன் பேசும் காட்சிகள். பாராட்டவேண்டிய முயற்சிதான். சாதாரண ஆட்களிடமே கூட அசாதாரண நடிப்பு வெளிப்படுவதை பல படங்களில் நாம் காண்கிறோம். ஆனால் கதையின் மையமே கதாநாயகிமேல் விழும் வன்முறையைச் சுற்றிதான் படர்கிறது அந்த கதாநாயகி பேசும் காட்சிகளோ சவுகார்பேட்டை சேட்டுப்பெண்கள் பேசுவதுபோல் அமைந்துவிட்டது பெரும்கொடுமை.

படத்தில் காதல் இருந்தும், நகைச்சுவை இருந்து, வில்லன் இருந்தும், நாயகன் 2 கோடிபேரை தனியாளா வீழ்த்தும், நடனங்கள் இருந்தும், அட்டகாசமான பாடல்கள் இருந்தும் படங்க படு மட்டமாக ஊத்திக்கொள்கின்றன என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். உதாரணம் குருவி, அ.த.ம.... இன்னும் பல.

பிரபலமில்லாதவர்கள் நடித்து கதைக்கரு நன்றாக பொருந்தியிருந்தபோதும் படம் ஓடவில்லை என்றால் படத்தில் உள்ள குறைகளே அன்றி வேறு யாருமில்லை.

இயக்குனர் அடுத்த படத்தில் இக்குறைகளை களைவார் என்று நம்புவோம்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________