Thursday, October 27, 2005

அம்மாச்சி - ஓர் ஆலமரம்.

(பூட்டனின் நினைவுகள்)

உங்களில் யாருக்காவது உங்கள் பூட்டனுடனோ பூட்டியுடனோ வாழும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதா? பெரும்பாலானோருக்கு அவர்களைக் காணும் சந்தர்ப்பமே கிடைத்திருக்காது. அனால் எனக்கு அந்த அனுபவமுண்டு. என் பதினாறு வயதுவரை என் பூட்டியோடு வாழ்ந்திருக்கிறேன். பூட்டியென்றால் என் அம்மாவின் அம்மாவின் அம்மா. இவவை அம்மாச்சி என்றே நாங்கள் அழைப்போம். (தங்கமணி தன் பேத்தியை, அதாவது தாயாரின் தாயாரை அம்மாச்சி என்று அழைத்திருந்தார்.) என் தாய்வழிச் சந்ததியில் 3 தலைமுறையோடு (அம்மா, அம்மம்மா, அம்மாச்சி) ஒரே வீட்டில் வாழ்ந்திருக்கிறேன். என் வாழ்நாளின் முதல் பதினைந்தாண்டுகளும் இப்படி வாழ்ந்தேன் என்பது முக்கியமானது. முழுவதும் பெண்சந்ததியென்றபடியால் (ஒப்பீட்டளவில் இளவயதில் திருமணம் முடிப்பதால்) இது சாத்தியமாயிற்று.

அம்மாச்சிக்குப் பன்னிரண்டு பிள்ளைகள் பிறந்தாலும் எட்டுப்பேர் மட்டுமே மிஞ்சியவர்கள். இவர்களில் மூன்றாவதும் கடைசியும் ஆண்பிள்ளைகள். என் அம்மம்மா தான் மூத்தபிள்ளை. அம்மம்மாவுக்கு மூன்றும் பெண்பிள்ளைகள் என்றாலும் மிஞ்சியது கடைசி இருவரும்தான். அதில் என் தாய் கடைக்குட்டி. பெரியம்மாவுக்கு என்னைவிட 3 வயது மூத்த ஆண்பிள்ளையொருவர். அவர்தான் அம்மாச்சியின் மூத்த பூட்டன். நான் இரண்டாவது பூட்டன். விவரங்கள் விளங்கினதா? (எம் அம்மம்மாவின் சகோதரிகளை எப்படிக் கூப்பிடுவதென்று முன்பொரு பதிவு போட்டேன். சின்னம்மம்மா, ஆசையம்மம்மா, சூட்டியம்மம்மா, சீனியம்ம்மா, குட்டியம்மம்மா...)

எங்கட அம்மாச்சியின்ர எட்டுப்பிள்ளைகளும் கலியாணம் செய்தது எங்கட ஊரிலதான். வல்வெட்டித்துறையை அடியாகக் கொண்டாலும் எங்கள் ஊரிலேயே நிலைபெற்றுவிட்டது அந்தக்குடும்பம். கலியாணம் கட்டவந்த மாப்பிள்ளைகளிடம் என் பூட்டன் போட்ட ஒரே நிபந்தனை "ஊரோட இருக்கோணும்" எண்டதுதானாம் எண்டு சிலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். உண்மையுமிருக்கலாம். அத்தனை சகோதரங்களுக்கும் சீதனமாக பெரிய வளவைப் பிரித்துக் கொடுத்து வீடுகளும் கட்டியதால் அடுத்தடுத்த வீடுகளில்தான் அந்த 8 சகோதரங்களும் (எம் அம்மம்மாவின் பரம்பரை) இருந்தார்கள். பின் அவர்களின் பிள்ளைகளும் (என் தாய்ப்பரம்பரை) கலியாணம் முடித்து, எங்கட சந்ததி பிறந்து அதுக்குள்ளயே இருந்தோம். யோசித்துப்பாருங்கள் எப்படியிருந்திருக்குமென்று? வதவதவெண்டு பிள்ளைகள். ஒரேவகுப்பில் நாங்கள் நாலு பேர் படிப்போம்.

அம்மாச்சியின் கணவர் (இவரை எப்படி அழைப்பதென்று எனக்குத் தெரியவில்லை) நீண்டகாலத்துக்கு முன்பேயே இறந்துவிட்டதால் அவரைப்பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஊரில் முன்புநடந்த சில சண்டித்தனங்களில் அவர் பெயர் அடிபட்டது. அதேபோல் அப்புவும் (அம்மாவின் அப்பா) அம்மாவின் சிறுவயதிலேயே (அம்மாவுக்கு 10 வயதோ என்னவோ) இறந்துவிட்டார். எங்கட பரம்பரையில வெளியில இருந்து கணவரா வாற ஆண்களுக்கு ஆயுள் குறைவுதான்;-( அம்மாச்சியின் மருமகன்களுள் இறுதி மருமகன் மட்டுமே இப்போது இருக்கிறார்.

ஊரில எங்கட அம்மாவோடதான் அம்மம்மா இருந்தா, அம்மம்மாவோடதான் அம்மாச்சி இருந்தா. எங்கட அப்பு(அம்மாவின் அப்பா) ஆசிரியரா இருந்ததால அம்மம்மா ஊரின்ர நடுப்பகுதிக்குள்ள வீடு கட்டியிருந்தா. மற்றவையெல்லாரின்ர வீடுகளும் கடற்கரையை அண்டிய பகுதியில்தான். அம்மம்மாவின்ர வீடுதான் எங்கட அம்மாவுக்குச் சீதனமா வந்ததால அங்கதான் நாங்களுமிருந்தம். தொம்மையப்பர் கோயிலுக்கு எதிர்வீடு. எங்கட ஊரின்ர பெரிய கத்தோலிக்கத் தேவாலயம் அதுதான். நாளாந்தப் பூசைகள் நடப்பதும் அங்குத்தான். ஞாயிற்றுக்கிழமைப் பூசைக்குப் போகாட்டா "சாவான பாவ"மெண்டதால எல்லாரும் பயத்தில கட்டாயம் ஞாயிற்றுக்கிழமைப் பூசைக்கு வருவினம். வந்தா எல்லாருக்கும் அண்டைக்கு எங்கட வீட்டைதான் காலமச் சாப்பாடு. பூசைக்கு வந்திட்டு அம்மாச்சியப் பாக்காமல் ஒருத்தரும் ஓடேலாது. கோயிலுக்கு வாற சனம் எங்கட வீட்டடியாலதான் போகவேணும். ஞாயிற்றுக்கிழமையெண்டா பெரிய கொண்டாட்டமாத்தான் எங்கட வீடு இருக்கும். பின்ன? அம்மாச்சிக்குப்பிறந்த எட்டுக்குடும்பமும் அங்கதானே நிக்கும். முத்தம் முழுக்க சைக்கிள்தான் நிக்கும். ஆரேன் பூசைக்கு வராட்டி அம்மாச்சிக்குக் கணக்குச் சொல்ல வேணும். அம்மாச்சி தூக்கிக்கொஞ்சுறதுக்கு இரண்டுவயதுக்குட்பட்ட ஒரு குழந்தையாவது (பேரப்பிள்ளையோ பூட்டப்பிள்ளையோ) எந்தநேரமும் எங்கள் சொந்தத்தில் இருந்துகொண்டிருக்கும்;-)

கடசியா ஊரைவிட்டு ஒட முதல் எங்கட சொந்தத்துக்குள்ள ஒரு கலியாணம் நடந்திச்சு. அம்மாச்சியின்ர குடும்ப அட்டவணைப்படி (அவவின் பிள்ளைகள், பின் அவர்களின் பிள்ளைகள்.. பின் அவர்களின் பிள்ளைகள்...)மொத்தம் 72 பேரில் வெளிநாட்டிலிருந்த நான்கு பேர் நீங்கலாக எல்லோரும் கூட்டாகக் கலந்துகொண்ட இறுதிக் கொண்டாட்டம் அதுதான். நாங்கள் பூட்டப்பிள்ளைகள் மாத்திரமே 16 பேர். சொன்னா நம்புவியளோ தெரியாது, அம்மாச்சியின்ர பேரன்களும் பூட்டன்களுமாச் சேந்து 9 பேர் கொண்ட உதைபந்தாட்ட அணியொன்றை உருவாக்கி மற்ற அணியோடு விளையாடியிருக்கிறோம். அத்தனைபேரும் 7 வருட வித்தியாசத்துக்குள்தான் இருந்தோம்.

ஒரே இடத்தில் அருகருகாக எல்லோரும் இருந்ததால உறவுநிலையில ஒப்பீட்டளவில வித்தியாசம் இருந்திச்சு. நீங்கள் ஒருவரைச் சுட்டி, 'இவர் அம்மம்மாவின்ர தங்கச்சியின்ர மகன்' எண்டு ஒருவருக்குச் சொன்னியளெண்டா, அவரின் பார்வையில் அது தூரத்துச் சொந்தம். நெருங்கின சொந்தம் என்ற வகைக்குள்ள இவ்வகைச் சொந்தங்கள் வராது. ஆனால் கூடப்பிறந்த சகோதரம் போலத்தான் இந்த அம்மம்மாவின் தங்கச்சி மகன் உறவு எங்களுக்கு.

அப்பவெல்லாம் அம்மாச்சி துடியாட்டமாகத்தான் இருந்தா. சகல வேலைகளும் செய்வா. சமையல்கூட தனித்தே செய்வா. வீட்டுக்காரரும் எதுவும் சொல்வதில்லை. ஏதாவது செய்துகொண்டிருக்க வேணுமெண்டு விட்டுவிடுவினம். தானே மீன் கழுவி வெட்டி, இறால் நோண்டி கறிவைப்பா. ஒரு பூட்டனுக்குக் மைபோட்டுக் கணவாய்க்கறி வேணும். இன்னொரு பூட்ட்னுக்கு மையில்லாமல் கணவாய்க்கறி வேணும். ஆனா அம்மாச்சி தனித்தனியக் கறிவைப்பா. அதுவும் மைகரையாமல் கணவாய் உரித்து வெட்டுவா. நான் இந்தக் கலையைப் பயின்றது அம்மாச்சியிட்ட இருந்துதான்.

அம்மாச்சிக்குத் தேத்தண்ணி போட்டுக்குடுக்கிறது சரியான கஸ்டம். பிள்ளைகளின்ர வீட்ட போனா 'இந்தா நீயே போட்டுக் குடியண' எண்டு அடுப்படியில அவவை விட்டுவிடுவினம். சாதாரணமா நாங்கள் குடிக்கிற சூடு காணாது. தேத்தண்ணி கொதிக்கக் கொதிக்க இருக்க வேணும். குசினிக்குள்ள இருந்து எடுத்துக்கொண்டாறதுக்குள்ள ஆறிப்போச்சு எண்டு சொல்லுற ரகம். அதோட சீனியும் அள்ளிப்போடுற ரகம். அதால அவவுக்குத் தனியத்தான் கலக்க வேணும். இப்ப 40 வயசு தாண்டின உடனயே சீனியை ஒதுக்கிற ஆக்களைத்தான் பாக்கிறன். ஆனா அம்மாச்சி பாணியாக்கித்தான் தேத்தண்ணி குடிக்கிறதை நினைச்சு ஆச்சரியப்படுறன். சீனியை வைத்து அம்மாச்சிக்கு எந்த வருத்தமும் வந்ததில்லை.

3 கிலோமீற்றர்கள்கூட நடந்து கடற்கரைக் கோயிலுக்குப் போய் வருவா. தன்பிள்ளைகளின் வீடுகளுக்கும் போய்வருவா. நாளாந்தப் பூசைகளுக்குப் போவது மட்டுமன்றி அலுப்பாயிருந்தால் ஒரு நடைநடந்து கோயிலுக்குப் போய் வாறதும் வழக்கம். அப்படிப்போகும்போது சொல்லும் வார்த்தை "ஆண்டவரிட்டப் போயிட்டு வாறன்"

எனக்கு அவவிட்ட பிடிக்காத, எரிச்சல் வாற விசயம் ஒண்டே ஒண்டுதான். இரவு 7 மணியெண்டா எல்லாரும் வந்து குந்தோணும். வேற என்னத்துக்கு? செபமாலை சொல்லத்தான். அதுவும் 5 காரணிக்கமும் சொல்லி முடிக்கோணும். அதில வாய்தவறிப் பிசகிப்போச்செண்டா நிப்பாட்டி முதலிலயிருந்து சொல்லவைப்பா அம்மாச்சி. எல்லாரின்ர முழு ஆத்திரமும் பிழைவிட்டவரின்ர மேலதான் திரும்பும்.
எல்லாரையும் விடிய எழுப்பிறது அம்மாச்சிதான். விடியத் திருந்தாதி அடிக்கேக்கையே அம்மாச்சி எழுப்பத்துவங்கிடுவா. பூசை தொடங்கமுதல் சில நிமிட இடைவெளிகளில் 3 தரம் மணியடிபடும். முதலாம் மணிக்கே கோயிலில நிக்கவேணுமெண்டு அம்மாச்சி சொல்லுவா. ரெண்டாம் மணிக்கு நிண்டாச்சரி எண்ட அம்மம்மா சொல்லுவா. மூண்டாம் மணிக்கு நிண்டாக்காணுமெண்டு அம்மா சொல்லுவா. தலைமுறையின்ர வளர்ச்சி தெரிஞ்சுது. நாங்கள் என்னத்தைச் சொல்லிறது?

சொந்த ஊரைவிட்டு இடம்பெயர்ந்தபின்பும் மானிப்பாயில்தான் இருந்தா. அப்போது அம்மம்மாவும் அம்மாச்சியும் எங்களுக்கு அருகிலேயே இன்னொரு வீட்டில் இருந்தார்கள். ஆனால் எனக்கு இரவுப்படுக்கையைத்தவிர மிச்சமெல்லாம் அம்மம்மாவீட்டில்தான். தன் வாழ்நாளிலேயே தன் இரண்டாவது மருமகன் 89 இல் பிடித்துக்கொண்டுபோய் சுடப்பட்டதையும், 94 இல் மூன்றாவது மருமகன் நோய்வந்து இறந்துபோனதையும் பார்த்துக்கொண்டு இருந்தா. இரு பேரப்பிள்ளைகள் போராட்டக்களத்தில் வீரச்சாவடைந்ததையும் ஒரு பூட்டப்பிள்ளையும் ஒரு பேரப்பிள்ளையும் நோய் வந்து இறந்ததையும் பார்த்துக்கொண்டிருந்தா. சொந்த ஊரில அவவோடயே இருந்த பிள்ளைகளின் குடும்பங்கள் இப்போது திக்கொன்றாகப் போய்விட்டன. ஆனாலும் யாழ்ப்பாணத்துக்குள் தானென்பதால் அடிக்கடி பார்க்கக்கூடியதாயிருந்தது.

பிறகு வன்னி இடப்பெயர்வோடுதான் எல்லாம் மாறிப்போனது. அந்த இடப்பெயர்வுவரை அம்மாச்சி மிகமிகத் துடியாட்டமாகத்தான் இருந்தா. உடம்பில் எந்தக்குறையுமிருக்கவில்லை. சடுதியாக நொடித்துப்போகுமளவு உடம்பு இருக்கவில்லை. (சாகும்போதுகூட உடலில் பிரச்சினைகள் இருக்கவில்லை)ஆனால் வன்னிக்கு வந்தபோது 3 பிள்ளைகளின் குடும்பங்கள் மட்டுமே அவவுக்கு அருகில் இருக்க முடிந்தது. மிகுதிப்பேர் இந்தியாவோ கொழும்போ சென்றிருந்தனர். இருந்த குடும்பங்களிலும் பிள்ளைகள் கொழும்புக்கோ இந்தியாவுக்கோ வேறெங்கோயோ போய்விட்டார்கள். முல்லைத்தீவு - இரணைப்பாலையில் எங்கள் பெரியம்மாவோடுதான் அம்மாச்சி இருந்தா. எங்கட குடும்பம் மாங்குளம், மடு என்று இடம்பெயர்ந்துகொண்டிருந்தது. அம்மாச்சியின் கடைசிக்காலங்களில் நான் அவவோடு இல்லை. மிகவும் நொடித்துப்போய்விட்டதாகவே சொன்னார்கள். முழுக்க முழுக்க மனக்கவலைதான். உண்மையில் கடைசிக்காலத்தில் கொஞ்சிக்குலவ எந்தக் குஞ்சு குருமனும் அம்மாச்சிக்கருகில் இல்லை. மிகுந்த ஏக்கத்தோடேயே இறுதிக்காலத்தைக் கழித்திருந்தா. வாழ்வின் மீதான சலிப்பை அம்மாச்சி முதன்முதலாக வெளிப்படுத்தியதும் அப்போதுதான். (முன்பெல்லாம் தான் வயதுபோனவ எண்டதைக் காட்டிக்கொள்ளிதில்லை. மற்றவர்கள் சொல்லவும் விடுவதில்லை) மாறாட்டங்கள், மறதிகள் என்று சடுதியான மாற்றங்களோடு, இறுதிநேரத்திலாவது கொஞ்சப்பேரைப் பார்க்கவேணுமென்ற ஏக்கம் கைகூடாமலேயே 1997 முற்பகுதியில் உயிரைவிட்டா. அவ சாகும்போது மூத்த பூட்டனுக்கு 21 வயது. எனக்கு 17 வயது. மொத்தம் 24 பூட்டப்பிள்ளைகள்.

யாழ்ப்பாண இடப்பெயர்வுரை மிகமிக நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அம்மாச்சியின் வாழ்கை இறுதிக்காலத்தில் என்னைப்பொறுத்தவரை அவலமான வாழ்வுதான். வயது சாவதற்குரியதுதான். ஆனால் அச்சாவு யாழ்ப்பாணத்தில் எல்லோரும் ஒன்றாயிருந்தபோதே வந்திருக்க வேண்டும். குழந்தைகள் மீதும், பேரப்பிள்ளைகள் மீதும், பூட்டப்பிள்ளைகள் மீதும் அம்மாச்சி வைத்திருந்த பாசமும் ஏக்கமும் அவவோடையே வாழ்ந்த எனக்கு நன்கு தெரியும். இறுதிக்காலத்தில் உளரீதியாக என்ன மாதிரித் துன்பப்பட்டிருப்பா எண்டும் வடிவாத் தெரியும். தன்ர பதினாறாவது வயசிலயே கலியாணம் முடிச்சு வெளிக்கிட்ட அம்மாச்சி அதிகம் பிற இடங்களுக்குப்போனதுகூட இல்லையாம். எல்லாம் அந்த ஊரோடும் தன் விசாலமான பரம்பரையோடுமே போய்விட்டது.


இப்படி அம்மாச்சியின் கீழ் ஒன்றாகக் கூடிவாழ்ந்த நினைவுகள் சுகமானவை. இனிமேல் அது எக்காலத்திலும் சாத்தியமாகப்போவதில்லை. ஆதே ஊரில் அதே வீடுகளுக்கோ வளவுகளுக்கோகூடச் செல்லமுடியாத நிலைதான் இன்று. வெறும் நினைவுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அடிக்கடி நினைத்துக் கொள்வது நல்லதுதானே?

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, October 25, 2005

கண்ணைக் கவரும் கங்காருநாடு - 1.

ஒஸ்ரேலியா பற்றிய தொடர் - முதற்பாகம்.
-வழங்குவது வசந்தன்.

மெல்பேர்ண் மலர் போல் மெல்லிய மகளா?



§À¡í¸¼¡ Óð¼¡Ù¸Ç¡, ±ý¨É ±ýÉ Å¢ºÃý ±ñÎ ¿¢¨É§ǡ §Å¨Ä Á¢É즸ðÎ ´Š§ÃĢ¡Åô ÀüÈ¢¦Âؾ?±ÉìÌ ¬Â¢Ãò¦¾ðÎ §ÅÄ ¸¢¼ìÌ. ¬§Ã¡ §Å¨Ä¢øÄ¡Áø À̾¢À̾¢Â¡ ±Ø¾¢É¦Áñ¼¡ ¿¡Ûõ ±Ø¾ §ÅϧÁ¡? (¯ý¨É ¬÷ ±Ø¾î ¦º¡ýÉÐ ±ñÎ §¸ì¸¡¨¾Ôí§¸¡. À¾¢×§À¡¼ ´Õ Å¢ºÂÓÁ¢ø¨Ä. «Ð¾¡ý À¢Ã¨É.)
(þ¨¾ Å¡º¢ì¸ì ÜÊ ¬ì¸û ¦Á¡Æ¢¦ÀÂ÷ì¸ §Åñ¼¡õ.)

§À¡í¸¼¡ Óð¼¡Ù¸Ç¡, ±ý¨É ±ýÉ Å¢ºÃý ±ñÎ ¿¢¨É§ǡ §Å¨Ä Á¢É즸ðÎ ´Š§ÃĢ¡Åô ÀüÈ¢¦Âؾ?±ÉìÌ ¬Â¢Ãò¦¾ðÎ §ÅÄ ¸¢¼ìÌ. ¬§Ã¡ §Å¨Ä¢øÄ¡Áø À̾¢À̾¢Â¡ ±Ø¾¢É¦Áñ¼¡ ¿¡Ûõ ±Ø¾ §ÅϧÁ¡? (¯ý¨É ¬÷ ±Ø¾î ¦º¡ýÉÐ ±ñÎ §¸ì¸¡¨¾Ôí§¸¡. À¾¢×§À¡¼ ´Õ Å¢ºÂÓÁ¢ø¨Ä. «Ð¾¡ý À¢Ã¨É.)



(þ¨¾ Å¡º¢ì¸ì ÜÊ ¬ì¸û ¦Á¡Æ¢¦ÀÂ÷ì¸ §Åñ¼¡õ.)
§À¡í¸¼¡ Óð¼¡Ù¸Ç¡, ±ý¨É ±ýÉ Å¢ºÃý ±ñÎ ¿¢¨É§ǡ §Å¨Ä Á¢É즸ðÎ ´Š§ÃĢ¡Åô ÀüÈ¢¦Âؾ?±ÉìÌ ¬Â¢Ãò¦¾ðÎ §ÅÄ ¸¢¼ìÌ. ¬§Ã¡ §Å¨Ä¢øÄ¡Áø À̾¢À̾¢Â¡ ±Ø¾¢É¦Áñ¼¡ ¿¡Ûõ ±Ø¾ §ÅϧÁ¡? (¯ý¨É ¬÷ ±Ø¾î ¦º¡ýÉÐ ±ñÎ §¸ì¸¡¨¾Ôí§¸¡. À¾¢×§À¡¼ ´Õ Å¢ºÂÓÁ¢ø¨Ä. «Ð¾¡ý À¢Ã¨É.)
(þ¨¾ Å¡º¢ì¸ì ÜÊ ¬ì¸û ¦Á¡Æ¢¦ÀÂ÷ì¸ §Åñ¼¡õ.)


§À¡í¸¼¡ Óð¼¡Ù¸Ç¡, ±ý¨É ±ýÉ Å¢ºÃý ±ñÎ ¿¢¨É§ǡ §Å¨Ä Á¢É즸ðÎ ´Š§ÃĢ¡Åô ÀüÈ¢¦Âؾ?±ÉìÌ ¬Â¢Ãò¦¾ðÎ §ÅÄ ¸¢¼ìÌ. ¬§Ã¡ §Å¨Ä¢øÄ¡Áø À̾¢À̾¢Â¡ ±Ø¾¢É¦Áñ¼¡ ¿¡Ûõ ±Ø¾ §ÅϧÁ¡? (¯ý¨É ¬÷ ±Ø¾î ¦º¡ýÉÐ ±ñÎ §¸ì¸¡¨¾Ôí§¸¡. À¾¢×§À¡¼ ´Õ Å¢ºÂÓÁ¢ø¨Ä. «Ð¾¡ý À¢Ã¨É.)
(þ¨¾ Å¡º¢ì¸ì ÜÊ ¬ì¸û ¦Á¡Æ¢¦ÀÂ÷ì¸ §Åñ¼¡õ.)
§À¡í¸¼¡ Óð¼¡Ù¸Ç¡, ±ý¨É ±ýÉ Å¢ºÃý ±ñÎ ¿¢¨É§ǡ §Å¨Ä Á¢É즸ðÎ ´Š§ÃĢ¡Åô ÀüÈ¢¦Âؾ?±ÉìÌ ¬Â¢Ãò¦¾ðÎ §ÅÄ ¸¢¼ìÌ. ¬§Ã¡ §Å¨Ä¢øÄ¡Áø À̾¢À̾¢Â¡ ±Ø¾¢É¦Áñ¼¡ ¿¡Ûõ ±Ø¾ §ÅϧÁ¡? (¯ý¨É ¬÷ ±Ø¾î ¦º¡ýÉÐ ±ñÎ §¸ì¸¡¨¾Ôí§¸¡. À¾¢×§À¡¼ ´Õ Å¢ºÂÓÁ¢ø¨Ä. «Ð¾¡ý À¢Ã¨É.)
(þ¨¾ Å¡º¢ì¸ì ÜÊ ¬ì¸û ¦Á¡Æ¢¦ÀÂ÷ì¸ §Åñ¼¡õ.)

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Thursday, October 20, 2005

மிதிவெடி செய்வது எப்படி?

உங்களுக்கு மிதிவெடியைத் தெரியுமா?
அதைப் பார்த்திருக்கிறீர்களா?
மதிவெடிகளுடனான எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

எனக்கு மிதிவெடி முதன்முதல் அறிமுகமானது யாழ்ப்பாணத்தில் 1993 இன் இறுதிப்பகுதியில். மானிப்பாயிலிருந்து யாழ்நகர் நோக்கி வரும்போது, ஆனைக்கோட்டை முடிவில், உயரப்புலச் சந்தியில் ஒரு சாப்பாட்டுக்கடை இருந்தது ஞாபகமிருக்கிறதா? அதன் பெயரை யாரும் மறந்துவிட முடியாது. 'சும்மா ரீ ரூம்' (SUMMA TEA ROOM) என்பதுதான் அவ்வுணவகத்தின் பெயர். அதன் பெயரே ஒரு கவர்ச்சியான விசயம்தான். நானறிந்ததிலிருந்து என் அப்பா அம்மா காலத்திலேயே அது பிரபலமான பெயர்தான். மிகச்சிறிய கடைதான். வீதிக்கரையிலிருந்ததால் அதன்வழியால் போய்வரும் எவரையும் வாயூற வைத்துவிடும். யாழ்பபாணத்திலுள்ள மற்ற எந்த உணவகங்களையும்விட அது வித்தியாசமானது. அதிகமான கடலுணவுகள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். இறால், கணவாய், சிங்கிறால், நண்டு என்று விதம்விதமான கடலுணவுப் பொரியல்களும் கறிகளும் கண்ணாடிப் பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நாவாந்துறையும் காக்கைதீவும் அருகிலிருந்தது அதற்கு வசதியாக இருந்தது. பின்னேரத்தில அந்தக்கடை வலுகலாதியா இருக்கும். கடையோட சேத்தே ஒரு 'பார்' இருந்ததும், கொஞ்சம் தள்ளி பிரபலாமான 2 தவறணைகள் இருந்ததும் அதுக்குக்காரணம்.

சரி. கதைக்கு வருவோம். எனக்கு மிதிவெடி அறிமுகமானதும் இந்த 'சும்மா ரீ ரூமில்' தான். என்ன குழப்புகிறேனா? மதிவெடி எண்டா ஒருவகைச் சாப்பாடு. அதைத்தான் சொல்ல வந்தேன். நாங்கள் வழமையாகச் சாப்பிடும் 'றோல்' வகையைச் சேர்ந்தது. சற்றுப்பெரியது. உள்ளே கூடுதலான கலவைகள் இருக்கும். கட்டாயம் அவித்த முட்டையின் கால்வாசியோ, அதைவிடச் சற்றுப் பெரிய துண்டோ இருக்கும். இரண்டு வாங்கிச் சாப்பிட்டுவிட்டாலே ஒரு நேரச் சாப்பாடு நிறைந்துவிடும். இதுதான் மிதிவெடி.

ஒருநாள் உதைபந்தாட்டப் போட்டியொன்றைப் பார்த்துவிட்டு வரும்போது நண்பனொருவன் (இவன் உயரப்புலத்தில் அந்த சும்மா ரீ ரூமுக்கு அருகில்தான் வசிப்பவன்) சொன்னான் இந்த மதிவெடியைப் பற்றி. அப்போது நாங்களறிந்த மிதிவெடியென்பது கால்நடைகளின் (மனிதர்களும் இதற்குள் அடக்கம்) கால்களைப் கழற்றும் சிறுகண்ணிவெடிகள்தான். அப்போது மிதிவெடி என்ற சிற்றுண்டியைப் பற்றிக் கதைத்தபோது எல்லோரும் சிரித்தோம். இப்படி நாலைந்துமுறை அவன் சொல்லிவிட்டான். ஒருநாள் நக்கல் தாங்காமல் அவனே தான் மதிவெடி வாங்கித்தருவதாகச் சொல்லிக் கூட்டிச்சென்றான். காசைத்தந்து 3 மிதிவெடி வாங்கச்சொல்லி எங்களக் கேட்டான். மிதிவெடி எண்டு கடையில கேட்டு அடிவாங்க வைக்கத்தான் இவன் பிளான் போடுறான் எண்டு நினைச்சு அவனையே வாங்க வைச்சோம். உவன் மிதிவெடி எண்டுதான் கேக்கிறானோ எண்டத உறுதிப்படுத்த நான்தான் கூடப்போனன். என்ன ஆச்சரியம்! மிதிவெடி எண்டுதான் கேட்டான். அவங்களும் தந்தாங்கள். அண்டைக்கே அதின்ர சுவைக்கு அடிமையாயிட்டம். பொருளாதார அடிப்படையிலயும் மலிவாகத்தான் இருந்திச்சு. அப்ப ஒரு மதிவெடி 10 ரூபா. ஏறத்தாள 12 வருசத்துக்குப்பிறகு 5 அல்லது 7 ரூபாதான் அதிகரிச்சிருக்கு. இந்த மிதிவெடிக் கதையை நாங்கள் ஏலுமான அளவுக்குப் பரப்பினம். அப்பிடியும் கனபேர் நம்பேல.
----------------------------------------------------
ஒரு முக்கியமான 'எதிரி'ப்பாடசாலையுடனான உதைபந்தாட்டப்போட்டி அன்று நடந்தது. அதில் வென்றால் 500 ரூபா தருவதாக எங்கள் பாடசாலையின் பரமவிசிறியொருவர் சொல்லியிருந்ததால் ஒருமாதிரிக் கஸ்டப்பட்டு வெண்டாச்சு. 500 ரூபாயும் கிடைச்சிட்டுது. வழமையா இப்பிடிக் காசு கிடைச்சா யாழ்நகருக்குள்ளயே ஏதோ ஒரு கூல்பாருக்க பூந்து காசைக்கரைக்கிறதுதான் வழமை. அண்டைக்கு ஒருத்தன் சொன்னான் உந்த மதிவெடிப்பிரச்சினையை இண்டைக்குத் தீர்ப்பமெண்டு. சரியெண்டு வாயையும் வயித்தையும் கட்டிக்கொண்டு சும்மா ரீ ரூம் வந்தாச்சு. 25 மதிவெடி தரச்சொல்லிச் சொன்னம். ஆனா அங்க இருந்தது வெறும் 10 தான். சரியெண்டு அவ்வளவத்தையும் வாங்கி பங்குபோட்டுச் சாப்பிட்டம். விசாரிச்சதில வழமையா 20 அல்லது 25 மதிவெடிதான் ஒருநாளைக்குப் போடுறது எண்டார் கடைக்காரர். அதாவது அந்தநேரத்தில் மதிவெடிக்கான வாடிக்கையாளர் அவ்வளவுதான். அது பிரபலமாகாத காலம்.

நானறிய யாழ் நகருக்குள்ள இந்த மிதிவெடிக்கலாச்சாரம் வரவே நீண்டகாலம் எடுத்திச்சு. பிறகு இடப்பெயர்வோட வன்னிக்கும் வந்திட்டுது. வன்னி தாண்டியும் அது போயிருக்கும் எண்டதில ஐயமில்லை. ஆனா கடைக்குக் கடை அதின்ர தரம், சுவை, விலை எல்லாம் மாறத்தொடங்கீட்டுது. அதின்ர பெயர்தான் மாறேலயே ஒழிய அடிப்படைக் கட்டமைப்பு ஆளாளுக்கு மாறிப்போச்சு.
------------------------------------------------------
சரி. ஏன் இந்தப் பேர் வந்தது? எனக்குச் சரியாத் தெரியேல. இது சம்பந்தமா பெடியளுக்குள் அடிக்கடி கதைச்ச ஞாபகம் வருது. அப்பவே 'சும்மா ரீ ரூம்' முதலாளி அன்ரனிட்டயே கேட்டிருக்கலாம். அவர்எங்கயிருந்து இதை அறிஞ்சார் எண்ட விவரங்கள் சேகரிச்சிருக்கலாம். எல்லாம் தவற விட்டாச்சு. ஒரு கவர்ச்சிக்காகத்தான் அந்தப்பேர் வந்திருக்கலாம். சனங்களுக்குப் போர் சம்பந்தமான சொற்களை தங்கட வாழ்க்கையில பாவிக்கிறது வழமையாயிருந்திச்சு. தங்கட சைக்கிளுக்கோ, மோட்டச்சைக்கிளுக்கோ குண்டுவீச்சு விமானங்களின்ர பேரை வைக்கிறது, ஆக்களுக்குப் பட்டப்பேர் வைக்கேக்ககூட ஆயுதங்களின்ர கடற்கல, வான்கலப் பெயர்களை வைக்கிறது எண்டு வழமை இருந்திச்சு. அதின்ர ஒரு தொடர்ச்சியா இந்த மதிவெடியும் வந்திருக்கலாம். சந்திரிக்கா சாறி, ரம்பா ரொட்டி, நதியா சாறி போல, குமரப்பா குண்டு, கடாபி ரொபி எண்டும் எங்கட சனத்திட்ட பெயர்கள் உலாவினது.

இன்னொண்டும் ஞாபகம் வருது. வெளியிற் கழிக்கப்பட் மலத்தையும் மிதிவெடி எண்டு சொல்லிற வழக்கம் இப்பவும் இருக்கு. ஆனா அதுக்கு வலுவான காரணமிருக்கு. ஆனா இந்தச் சிற்றுண்டிக்கு???
ஆருக்காவது தெரிஞ்சாச் சொல்லுங்கோ.



எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, October 10, 2005

ஷ்ரேயாவின் புகைப்படங்கள்.

கடுமையான முயற்சிக்குப் பின் ஷ்ரேயாவின் புகைப்படங்கள் கிடைக்கப்பெற்று, அவவின் அனுமதியின்றி இங்கே அப்படங்கள் வெளியிடப்படுகின்றன.

தமிழ் வலைப்பதிவாளர்களுக்கும் வாசகர்களுக்கும் "மழை-ஷ்ரேயா"வைத் தெரியாமலிருக்க நியாயமில்லை. அவவின்ர படங்கள் மூன்று என்னிடம் கிடைத்துள்ளன. மிகுந்த பிரயத்தனத்தின் மத்தியில் இவை பெறப்பட்டன.
நான் மட்டும் அந்தப் படங்களைப் பார்த்தால் போதுமா? உங்களுக்கும் அவவை அறிமுகப்படுத்தும் நோக்கோடு இங்கே அப்படங்களைப் பதிகிறேன்.
இவை மழை-ஷ்ரேயாவின் அனுமதியின்றி வெளியிடப்படுகின்றன. (அவவிட்டக் கேட்டு அனுமதி பெறுவதெல்லாம் நடக்கிற காரியமா?)

இவவுக்கு மழையெண்டா நல்லாப் பிடிக்குமாம். (அதால தானே மழையெண்டே பெயர் வந்தது) இவ மழையில நனைஞ்சு கொண்டிருக்கிற படமும் கிடக்கு. ஆனா அதை வெளியிடுறேல எண்டு இருக்கிறன்.







சொல்லி வைச்ச மாதிரி மனுசி "எந்த நேரமும் சிரிச்சுக்கொண்டே" தான் நிக்குது.


எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________