Sunday, September 14, 2008

கோவணநாட்டின் கொடைவள்ளல்கள்மீதொரு சீட்டுக்கவி

கோவணக் கொடை வள்ளலின் முகமூடி இன்னொருமுறை  கிழிந்திருக்கும் இவ்வேளையில் பொருத்தம் கருதி இக்கவிதை மீள இடப்படுகிறது.

வள்ளல் வாழ்த்து
-------------

வாழ்க நீர் எம்மான்;
கன்னனும் குமணனும் போல்வீர்;
தன்னிலை மறந்தும் அள்ளிக்கொடுத்தீர்
பொன்னையும் பொருளையும்
பிற கோவணத் தும்மவர் செய்கைகட்காய்.

மீதியும் மிதியும்
-------------------

கோவணநாட்டின் கொடைவள்ளல்கள்
கோடித்துணி அள்ளிக்கொடுக்கையில்,
தேசியக்கொடியிலும் தீராத
முடைநாற்ற வீச்சம்.

மேற்குத்திசைக்கொரு வேண்டுதல் விடுக்கும்
மாற்றுக் கோவணம் இல்லான்தெரு வள்ளல்கள்,
அரச ஆவணத்தின் பேரில்
காலொடுங்கு முடுக்கு விடுத்து
கழற்றிக்கொடுத்தார்
தம் கவட்டிடுக்குக் கோவணம்,
வேற்றூர் யாசிப்போனுக்கு,
வெறி மிகுந்து
வீட்டிலிருப்போர்
கழுத்திறுக்கக் கைக்குட்டைகளாய்.

திகம்பரர் தெருவினிலே
அதை மறையா
அம்மணங்கள் அசிங்கமில்லை.
கௌபீனம் தந்தோர் காந்திகள்;
கைவிட்டுப் பெற்றோர் கௌதமபுத்திரர்.

கைப்பிடி துணி கண்டோர் பூமியிலே,
கவட்டுமுடுக்குக்கும் கழுத்துமுடிச்சுக்கும்
இடையில் இருப்பதில்லை,
ஏதும் இடைவெளி;
உள்ளத்தே நொடிந்தார் கழுத்தினிலே
முடித்துக்கொண்டதெல்லாம் பிச்சைக்கௌபீனம்.
உள்ளதில் வலிந்தார் இடையிலே
ஏற்றிக்கொண்டதெல்லாம் எழிற்கைக்குட்டை.

அரைக்கோவணத்தார் தேசத்திலே,
நேர்த்தியற்றதேனும், நெய்த நூற்குட்டை,
கொடுத்தோர் கொடுங்கோலர்;
கொண்டோர் கொலைகாரர்;
குலைந்தோர் கொத்தடிமையர்.

இப்படியாய்,
எல்லாமே வல்லமையாய் உள்ளவர் போல்,
இல்லாதார் நாட்டிலும் உண்டாம், பல்லாயிரம்
கோவணக்கொடுத்தலும் வாங்கலும்;
கூடவே கொழுவி வரும்,
இல்லாமையின் இருப்பின் கருநிழலும்
கையள்ளிச் சொல்லிச் சொரியும்
முள்ளுப்பாத்தி மூச்சு முட்டிக்குத்தும்
இறைமையின் ஏழ்மையும் வறுமையும்.


14/ஜூன்/'00

====================================
படைப்பு என்னுடையதன்று.

Labels: , , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, January 30, 2008

மதியநேரத்து அவலம் - தாயொருத்தியின் கதறல்

நேற்று (29.01.2008) வன்னிப் பகுதியிலுள்ள மடுப் பகுதியில் பொதுமக்கள் பயணித்த பேருந்து மீது சிறிலங்காப் படையினர் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பாடசாலைச் சிறுவர்களுட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் பலர் காயமடைந்தனர்.

இத்துயரச் சம்பவத்திற் பாதிக்கப்பட்ட தாயொருத்தியின் கதறலைக் கேளுங்கள்.

தமது சொந்தக் கிராமமான பெரிய பண்டிவிரிச்சானிலிருந்து சில நாட்களுக்கு முன்னர்தான் மேரியின் குடும்பம் இடம்பெயர்ந்திருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணை வீச்சில் இத்தாயின் குழந்தையொன்று கடுமையாகக் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. வைத்தியசாலையிலேயே தங்கிநின்று அக்குழந்தையைக் கவனித்து வந்தாள் மேரி. மிகக் கடுமையான நிலையிலிருந்த குழந்தைக்குத் திங்கட்கிழமைதான் நினைவு திரும்பியது.

தாயையும், தமது சகோதரத்தையும் பார்ப்பதற்காக மேரியின் மற்றைய பிள்ளைகள் செவ்வாய்க்கிழமை வைத்தியசாலைக்குச் சென்றனர். திருமணம் முடித்துள்ள மேரியின் மூத்தமகள் தனது ஒன்றரை வயதுக் குழந்தையையும் தமது சகோதரர்களையும் வைத்தியாசலைக்கு அழைத்து வந்திருந்தாள். மதியநேரம் வைத்தியசாலையிலிருந்து மது தற்காலிக இருப்பிடங்களுக்குப் பேருந்திற் பயணித்தனர். அப்பேருந்தே படையினரின் தாக்குதலுக்கு இலக்கானது.

ஏற்கனவே தனது குழந்தையொன்றை வைத்தியசாலையிற் பராமதித்து வந்த மேரி, திரும்பிச் சென்ற மற்றப் பிள்ளைகளும் தாக்குலுக்குள்ளாகிய நிலையில் அதே வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டதைப் பார்த்தாள். பதினெட்டு மாதமான தனது பேரப்பிள்ளைக்கு என்ன நடந்ததென்றே தெரியாத நிலையில் அத்தாய் கதறுகிறாள்.

அவளின் ஒலிவடிவச் செவ்வி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

Get this widget | Track details | eSnips Social DNA



இதுபற்றிய தமிழ்நெற்றின் பத்தி:
Horror in the afternoon

[TamilNet, Tuesday, 29 January 2008, 22:42 GMT]
When her bunker at the Thadcha'naamaruthamadu refugee camp came under SLA shelling last Sunday, Mary Consulator sustained minor injuries and her child was critically wounded. She faced the crisis with the courage of a mother in a war-zone: she admitted her child to the Pa'l'lamadu hospital and stayed there to nurse it to health. Her child returned to a conscious state on Monday.



On Tuesday, her two grown-up daughters (one of them with an 18-month-old baby) and her two teenage sons came to the Pa'l'lamadu hospital by bus to look at their wounded sibling. The bus by which they left was attacked by the SLA's Deep Penetration Unit that triggered a Claymore mine. They returned to the hospital, as fatally wounded victims, or didn't return at all.

Despite her endless tears, Mary untiringly repeats her tragic tale.

A native of Periya Pan'ndivirichchaan, Mary was displaced and living in the Thadcha'naamaruthamadu refugee camp. When her child was severely wounded in the SLA shelling last Sunday, she admitted it to the Pa'l'lamadu hospital. She was taking care of her wounded child who regained consciousness only yesterday. Her eldest daughter, Rohana, with an 18-months old baby, Mary's two sons and another daughter, came to see them at the hospital by the 7:30 a.m. bus. The five of them left the hospital and took the 1:30 bus.

தொடர்ந்து வாசிக்க...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படம், ஒலிப்பதிவு, பத்தி: www.tamilnet.com

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, April 18, 2007

ஈழத்துப்படைப்பாளி சந்திரபோஸ் படுகொலை

ஈழத்துப்படைப்பாளியான சந்திரபோஸ் சுதாகர் திங்கட்கிழமை (16.04.2007) இரவு வவுனியாவில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

படுகொலை செய்யப்பட்ட சுதாகர் சிறந்த படைப்பாளி ஆவார். அதிகமாக கவிதைகளை எழுதிவந்த இவர் 'நிலம்' கவிதைகளுக்கான இதழை வவுனிவாயில் இருந்து வெளியிட்டு வந்தார்.

தொடக்க காலத்தில் 'வெளிச்சம்', 'ஈழநாடு', 'ஈழநாதம்' ஆகிய நாளேடுகளில் பணியாற்றிய இவர், லண்டனில் இருந்து வெளியிடப்பட்ட 'தமிழ் உலகம்' என்ற இதழை கொழும்பில் இருந்து அதன் ஆசிரியராக இருந்து தயாரித்து வெளியிட்டு வந்தார். வீரகேசரி நாளேட்டிலும் அவர் சிலகாலம் பணியாற்றி வந்தார்.

செய்தி: புதினம்.
______________________________
சந்திரபோஸ் முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இயங்கிவந்தவர். காத்திரமான படைப்பாளி. மிகுந்த தேடலுள்ளவர். வவுனியாவுக்குச் சென்றபின் 'நிலம்' என்ற கவிதையிதழை காலாண்டு இதழாக நடத்திவந்தார்.

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, January 02, 2007

கிளாலிக் கடனீரேரி - சில நினைவுகள்

************
படகுகள் ஒவ்வொன்றாக நகர்கின்றன. ஒவ்வொன்றிலும் பதினெட்டுப் பேர் என்றளவில் நிரப்பப்பட்டு பயணம் தொடங்குகிறது. எல்லாமே தனித்தனிப் படகுகளாகப் பயணிக்கின்றன. பெரும்பாலானோர் கரையிலிருந்தே தமது விருப்பத்துக்குரிய தெய்வங்களை மன்றாடத் தொடங்கிவிட்டார்கள். அனேகமாக அக்கரை சென்று சேரும்வரை இப்படித்தான் மன்றாடிக்கொண்டிருப்பார்கள். மன்றாட்டை முணுமுணுக்கும் அளவுக்குக்கூட மெதுவாக வாய்விட்டுச் சொல்லவில்லை. மற்றவர்களைக் குழப்புமென்ற நோக்கமில்லை, மாறாக குரலெழுப்ப முடியாப் பயம். இரண்டுநாட்களின் முன்புதான் இதேபோல் பயணம் செய்தவர்களில் ஐம்பது வரையானவர்கள் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டிருந்தார்கள். அவர்களும் இப்படி செபித்துக்கொண்டுதான் பயணித்திருப்பார்கள். யாருக்கும் செத்தவர்களின் சரியான கணக்குக்கூடத் தெரியாது. எங்கும் கடல் பரந்திருக்கிறது, கடுமையான இருட்டு, படகியந்திரத்தின் சத்தத்தையும் படகு அலையுடன் மோதும் சத்தத்தையும் தவிர வேறு ஒலிகளில்லை. அப்படியேதாவது ஒலி வருகிறதா என்று காதைக் கூர்மையாக்கிக் கொண்டே பயணம் தொடர்கிறது. நீண்டதாகவும் நெடியதாகவும் தோன்றிய மரணவேதனையான பதினெட்டுக் கடல்மைல் பயணத்தில் தூரத்தில் சில வெளிச்சங்கள் தெரிகின்றன. அவை ஆலங்கேணி, நல்லூர் கரைகள். பயணிகள் சேரவேண்டிய கரை. கரையில் எரியும் அரிக்கன் லாம்புகளின் வெளிச்சத்தில் போன உயிர் எல்லோருக்கும் திரும்பி வந்தது. ஆழம்குறைந்த கடற்கரையில் வாய்க்கால்போல் வெட்டி ஆழமாக்கப்பட்ட பகுதியூடாக படகுகள் நகர்ந்து கரையை அடைகின்றன.

ஓளியை, வாழ்க்கையின் வெற்றியாகவும் நம்பிக்கையாகவும் பிரச்சினையொன்றின் விடிவாகவும் சித்தரிக்கும் சொற்றொடர்களின் வெளிப்பாட்டை, சிக்கலான காலப்பகுதியில் கிளாலிக் கடனீரேரியில் பயணித்தவர்கள் அனுபவித்திருப்பார்கள். கரையில் எரியும் நாலைந்து அரிக்கன் லாம்பு வெளிச்சம், ஆயிரம் பேருக்கு தாம் இன்னும் சிலகாலம் உயிரோடிருப்போமென்ற நம்பிக்கையைத் தந்தது.
***********

ஈழத்தைச் சேர்ந்த எவருக்கும் இப்பெயர் தெரிந்திருக்கும். இவ்விடத்தை அறியாதோரும் பெயரைக் கேள்விப்படாமலிருந்திருக்க முடியாது. தொன்னூறுகளில் யாழ்ப்பாணத்தவருக்கு இரத்தமும் சதையுமாக வாழ்க்கையோடு ஒன்றித்திருந்தது இந்நீரேரி. வாழ வைத்ததும் இவ்வேரிதான்; வாழ்க்கையைக் குடித்ததும் இவ்வேரிதான்.


முதலில் ஆனையிறவுக்கு கிழக்குப் பக்கமாக கொம்படி-ஊரியான் பாதையை மக்கள் பயன்படுத்தினர். இடுப்பளவு உயரத்தில் தேங்கிநிற்கும் நீருக்குள்ளால் சிறுபடகுகளில் கிட்டத்தட்ட ஐந்து மைல் தூரம் பயணித்து வன்னி சென்றடையவேண்டும். பின் தாண்டிக்குளம் வழியாக வவுனியா செல்ல வேண்டும். இந்தப்பாதை பறறித் தனியே சொல்லலாம். இரண்டுமுறை பயணித்திருந்தாலும் 'உயிர்போகும்' அனுபவமேதும் இல்லாமல் சுவாரசியமாகவே அவ்விரு சந்தர்ப்பங்களும் அமைந்திருந்தன.

இராணுவத்தினர் ஆனையிறவிலிருந்து மேற்கொண்ட ஒரு முன்னேற்ற முயற்சியுடன் கொம்படி-ஊரியான் போக்குவரத்துப் பாதையும் மூடப்பட்டது. மாற்றுப்பாதையாக கிடைத்ததுதான் கிளாலிக் கடனீரேரிப் பாதை.
நான் நினைக்கிறேன், இப்பயணம் தொடங்கப்பட்ட பின்தான் அக்கடனீரேரி 'கிளாலிக் கடனீரேரி' என அழைக்கப்பட்டது; அதற்கு முன் வெறும் 'யாழ்ப்பாணக் கடனீரேரி'. சரிதானா?

கிளாலிப் பாதையும் அதனோடு சம்பந்தப்பட்டவை பற்றியும் பூராயத்தில் படத்துடன் எழுதப்பட்ட பதிவு சிலவேளை பலனளிக்கலாம்.

தொடக்கத்தில் அடிக்கடி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இரவு புறப்படும் படகுகள் விடியும்போது மறுகரையை அடையுமா அடையாதாவென்று யாருக்கும் தெரியாது. இடையில் கொல்லப்படுவதற்கும் தப்பிப் பிழைப்பதுக்குமான சாத்தியக்கூறு ஒரேயளவுதான். விடியும்போது வெட்டிக்கொல்லப்பட்ட அல்லது சுட்டுக்கொல்லப்பட்ட உடல்களோடு படகுகள் வந்துசேரும். அல்லது மூழ்கடிக்கப்பட்ட படகிலிருந்தவர்களின் சடலங்கள் மிதந்து வரும். ஆனாலும் யாழ்ப்பாணத்தாரின் பயணங்கள் தொடர்ந்துகொண்டிருதானிருந்தன. பதின்மூன்றாண்டுகள் கழித்து இன்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது, கடலில் படுகொலையொன்று நடந்த இரண்டாம் நாளே எதுவும் நடவாததுபோல் சாதாரணமாக அதேவழியிற் பயணிப்பர் மக்கள்.
__________________________________

அப்போது யாழ்ப்பாணத்திற்கும் வெளியிலும் தகவற்றொடர்பென்பது மிகமிக மோசமாக இருந்தது. தொலைபேசிச் சேவை அறவே இல்லை. கடிதப் போக்குவரத்து மாதக்கணக்கில் செல்லும். யாழ்ப்பாணத்துக்கு உணவுப்பொருட்கள் கொண்டுவரும் கப்பலில்தான் தபாலும் வரும், போகும். கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையில் ஒரு கடிதம் பயணிக்க இரண்டோ மூன்றோ மாதங்கள் வரை செல்லும். அந்நேரத்தில் அரச தபாற்சேவையை விடவும் கடினமாக உழைத்தது போக்குவரத்துச் செய்பவர்கள்தாம்.
ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு - ஏன் வவுனியாவுக்குப் புறப்பட்டாலே அவரிடம் நிறையக் கடிதங்கள் சேரும். அவர் அவற்றைக் காவிச்சென்று வவுனியாவில் தபாற்பெட்டியில் போட்டுவிட வேண்டும். கொழும்பிலிருந்து வருபவர்களிடமும் அப்படித்தான். அவர்கள் யாழ்ப்பாணத்துக்கான கடிதங்களைக் காவிவருவார்கள். இச்சேவை யாராவது தெரிந்தவர்களுக்குத்தான் செய்யவேண்டுமென்பதில்லை. கடிதத்தைத் தூக்கிக்கொண்டு பயணிகள் குவிந்திருக்கும் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று அங்கிருப்பவர்களில் முகவெட்டைப் பார்த்து யாராவது நம்பகத்தன்மையுள்ளவராக இனங்கண்டு அவரிடம் 'அண்ணை/அக்கா/அம்மா/ஐயா, இதையொருக்கா வவுனியாவில போஸ்ட் பண்ணிவிடுங்கோ" என்று சொல்லிக் கொடுத்துவிடலாம்.

ஒருவர் கொழும்பிலிருந்து புறப்படுகிறாரென்றால் அதற்குமுன் யாரிடமாவது கடிதம் கொடுத்துவிடப்படும், 'இன்ன திகதியில் வெளிக்கிடுறன்' என்று. அதன்பின் இங்குள்ளவர்கள் கணக்குப்பார்த்து இன்ன திகதியில் யாழ்ப்பாணம் வந்து சேருவார் என்று தீர்மானித்துக்கொள்வர். குறிப்பிட்டவர் பயணத்தைப் பின்போட்டால் இங்கு யாருக்கும் தெரியாது. அது அடுத்த கடிதத்தில்தான் வரவேண்டும்.
எனது அம்மம்மா ஒருமுறை கொழும்புசென்று வந்தபோது ஏற்கனவே கிடைத்த கடிதத்தின்படி இப்படித்தான் நாங்கள் ஒருநாளை எதிர்பார்த்திருந்தோம். அம்மம்மா கிளாலிக் கடல் கடப்பதாக நாங்கள் கணக்குப்பார்த்த நாளில் அதில் பயணம் செய்த படகுகள் சிங்களக் கடற்படையால் தாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டார்கள். எத்தனை படகுகள் தாக்குதலுக்குள்ளாயின என்று யாருக்கும் சரியாகத் தெரியாது. பல படகுகள் எதிர்க்கரைக்கே திரும்பிவிட்டன, சில படகுகள் இக்கரைக்கு வந்துவிட்டன. அதிகாலை செய்தியறிந்து பதைத்துப்போனோம். அம்மம்மா இந்தநாளில் பயணித்தாவா இல்லையா என்றே தெரியாது. எங்கள் நாட்கணிப்பின்படி இந்தப்பயணத்தில் வந்திருக்கவேண்டும். நூறுவீதமும் இதைத்தான் நாங்கள் நம்பவேண்டும். கிளாலிக் கரையில் வந்துசேர்ந்த படகுகளில் அம்மம்மா வரவில்லை. எங்களைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் உறவினர் தப்பினார்களா செத்தார்களா என்று தேடியலைந்துகொண்டிருந்தனர்.

சடலங்களும் தாக்கப்பட்ட படகொன்றும் கரைக்கு அடைந்தது. சில சடலங்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டன. அதற்குள் அம்மம்மா இல்லை. காலை பத்துமணிக்குள், இரண்டு படகுகள் மட்டும் தாக்கப்பட்டன, மற்றவை பத்திரமாக இருகரையில் ஏதோவொன்றுக்குத் திரும்பிவிட்டன என்ற உறுதிப்படுத்தினார்கள். கிளாலிக் கரைக்கு அம்மம்மா வரவில்லை. அம்மம்மா வந்தது தாக்கப்பட்ட மற்றொரு படகா, இல்லை எதிர்க்கரைக்கே திரும்பிவிட்ட படகொன்றிலா என்று தெரியவில்லை. மற்றவர்களைப்போலவே நாங்களும் 'உண்மை'யுணர அலைந்துகொண்டிருந்தோம். அன்றுமுழுவதும் எந்த முடிபும் தெரியவில்லை. பணங்கள் நிறுத்தப்பட்டாலும் அன்றிரவு அக்கரையிலிருந்து பெயர் விவரங்களோடு ஓர் ஓட்டி கிளாலிக்கு வந்துசேர்ந்ததோடு பலரின் பிரச்சினை ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. பிரச்சினையென்பது யார் செத்தார்கள், யார் தப்பினார்கள் என்ற விவரம் தான். கொல்லப்பட்டதாக இனங்காணப்பட்டவர்களின் உறவினர்கள் ஒப்பாரி வைக்க, தப்பியதாக விவரம் கிடைத்தோரின் உறவினர் ஒருவித ஆசுவாசத்தோடு திரும்பினர்.
நாங்கள் சிலர் இரண்டு குழுவிலுமில்லை. எங்களுக்கு வேறொரு சிக்கல். இரண்டிலும் அம்மம்மா பெயரில்லை. எஙகளோடு இன்னும் சிலருக்கு இதேபிரச்சினை. தேடிவந்தவர்கள் கொல்லப்பட்டவர்களிலுமில்லை, தப்பியோரிலுமில்லை.

விவரங்களில் பிழையிருக்குமோவென்று சந்தேகப்பட்டால், ஓட்டி அது சரியானதென்று சாதித்தார். தொன்னூற்றொன்பது வீதம் விவரம் பிழைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பயணம் செய்வோர் அனைவரும் பதிவுசெய்யப்பட்டுத்தான் பயணிக்கின்றனர். படகுகளில் மாறிச்சாறி ஏறியிருந்தாலும் ஆட்தொகை பிழைக்க வாய்ப்பில்லை. கொல்லப்பட்டோர், தப்பியோர் தொகை சரியாகப் பொருந்துகிறது.

இப்போது ஒரே குழப்பம். ஒரேசாத்தியம், நாங்கள் தேடுவோர் ஆலங்கேணிக்கு இன்னும் வந்துசேரவில்லையென்பதுதான். இரண்டுநாட்கள் மிகக் கொடுமையாகவே கழிந்தன. இறுதியில் அம்மம்மா வந்து சேர்ந்தா. எங்களுக்குச் சொல்லப்பட்டதிலிருந்து இரண்டுநாட்கள் பிந்தித்தான் கொழும்பிலிருந்து புறப்பட்டிருந்தா.

கிளாலிப் பயணம், கடலிற் பயணிப்பவர்களுக்கு மட்டுமன்றி அவர்கள் வருகைக்காகவும் வழியனுப்பிவிட்டும் காத்திருக்கும் உறவுகளுக்கும் மிகக்கொடிய அனுபவங்களைத் தந்தது. கிளாலியைத் தவிர வேறெந்தத் தெரிவுமின்றி அதன்வழியால்தான் சகலதும் நடந்துவந்தன.
அடிக்கடி சிங்களக் கடற்படையினரின் வெறியாட்டம் நடந்தது. சிலநாட்களின் விடியல்கள் கிளாலிக் கரையில் சடலங்களோடு விடிந்தன.
_____________________________
*********************
1996 மாசிமாதத்தில் ஒருநாள். யாழ்ப்பாணத்திலிருந்து நான் முற்றாக வெளியேறியநாள். அதுவும் இதே கிளாலியால்தான். இம்முறை தனித்தனிப் படகுகளில்லை, இயந்திரம் பூட்டப்பட்ட ஒருபடகில் பத்துப் படகுகள் தொடராக இணைக்கப்பட்டிருந்தது. முதற்படகுமட்டும் இயந்திரத்தில் பயணிக்க ஏனையவை பின்தொடந்தன. பயமற்ற, மகிழ்ச்சியான -கிட்டத்தட்ட ஓர் உல்லாசப் படகுப்பயணம். முன்பு பயத்தில் உடல் விறைத்தது, இப்போது மாசிப்பனியில் விறைத்தது. (யாழ்ப்பாணத்தை விட்டு நீங்குவது எப்படி மகிழ்ச்சியென்று கேட்காதீர்கள். எனக்கும் தெரியவில்லை. முடிந்தால், ஞாபகமிருந்தால் மாசியில் அதையொரு பதிவாக்குகிறேன்)
*********************

கிளாலிக் கடலில் நடந்த பல படுகொலைகளின்பின் அக்கடலில் கடற்படையினரின் வெறியாட்டத்துக்கு கடற்புலிகளால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கடற்புலிகளின் பாதுகாப்பில் தொந்தரவின்றி பயணங்கள் தொடர்ந்தன. யாழ்ப்பாணக் குடாநாடு முற்றாகப் படையினரின் வசம் வந்தபின் அப்பாதைக்கு வேலையில்லாமற்போயிற்று.
_____________________________

காலங்கள் ஓடி 2000 ஆம் ஆண்டு வந்தது. ஆனையிறவுப் படைத்தள மீட்புக்கான இறுதிச்சண்டை கடுமையாக நடக்கிறது. சுற்றிவளைக்கப்பட்டு, குடிநீர்கூட இல்லாத நிலைக்கு ஆனையிறவுப்படைத்தளம் முடக்க்பபடுகிறது. இனிமேல் தப்பியோடுவதைத்தவிர வேறுவழியில்லையென்ற நிலையில் படையினர் ஓடத்தொடங்குகின்றனர். இப்போது அவர்களுக்கிருந்த ஒரேபாதை கிளாலிக்கடற்கரைதான். எல்லாவற்றையும் போட்டுவிட்டு கடற்கரை வழியாக ஓடுகிறார்கள். விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட சில வீடியோக்களில் பார்த்தவர்ளுக்குத் தெரிந்திருக்கும். கும்பல் கும்பலாக கடற்கரைவழியாக இராணுவத்தினர் ஓடுகிறார்கள். கும்பல் கும்பலாகவே செத்துக்கொண்டிருந்தார்கள். மிகக்கிட்டத்தில் அவை படம்பிடிக்கப்பட்டன. பல கோப்புக்கள் வெளியிடப்படவில்லை. தாக்குதலைச் சமாளிக்க முடியாது பலர் கடலுள் இறங்கி நீருக்குள்ளால் தப்ப முயற்சிக்கின்றனர்.

ஆனையிறவு முற்றாக வீழ்ந்த மறுகணமே வன்னிமக்கள் அனைவரும் அங்குச் சென்று கூத்தாடினர். கிளாலிக் கடற்கரையையும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முந்தி பார்த்ததைவிடவும் மோசமாக இருந்தது. முந்தி கரையில் அடைந்ததை விடவும் அதிகளவு பிணங்கள். முன்பு எம்மக்கள் கொல்லப்பட்டபோது, 'கடல்நீர் இரத்தத்தால் சிவந்தது' என்று சிலர் எழுதியது கவிதைக்குச் சரியென்றாலும் நடைமுறையில் அப்படித் தோன்றியதில்லை. ஆனால் இம்முறை உண்மையில் கரையிலிருந்த நீர் சிவப்பாகவே தெரிந்தது.
ஆனால் பிணங்களும் இரத்தமும் நிச்சயமாக தமிழனுடையதாக இருக்கவில்லை.

__________________________________
__________________________________
இன்று கிளாலிப்படுகொலைகளுள் பெரியதான ஒரு படுகொலையின் பதினான்காம் ஆண்டு நினைவுநாள். 1993 ஜனவரி இரண்டாம் திகதி ஐம்பது வரையான பொதுமக்கள் கிளாலியில் பயணிதத்துக்கொண்டிருந்தபோது சிறிலங்காக் கடற்படையால் கோரமாகக் கொல்லப்பட்டார்கள்.

அந்த நினைவில் இப்பதிவை எழுதிப் பதிவேற்றும்போது இன்னொரு படுகொலை வன்னியில் நடந்துள்ளது.
சிறிலங்கா அரசின் வான்படை ஒரு கிராமத்தை முற்றாக அழித்துள்ளது. பதினைந்து பேராவது கொல்லப்பட்டுள்ளார்கள், பலர் காயமடைந்துள்ளார்கள். வழமைபோல அது புலிகளின் கடற்படைத்தளம்தான் என்று அரசாங்கம் சொல்லியுள்ளது. மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் நேரிற்சென்று பார்வையிட்டு படுகொலையை உறுதி செய்துள்ளார்.




_____________________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, December 04, 2006

புரிந்துணர்வு ஒப்பந்தம் புதைக்கப்பட்டாயிற்றா?

அரைகுறையாகச் சேடமிழுத்துக்கொண்டிருந்த அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான "புரிந்துணர்வு ஒப்பந்தம்" முற்றாகக் குழிதோண்டிப் புதைக்கப்படப் போவதாகத் தெரிகிறது.

CFA, buried - Tamilnet

Head of Sri Lanka's Peace Secretariat, Palitha Kohona, has told the visiting Norwegian Peace Envoy Jon Hanssen-Bauer, that the Sri Lankan government was reviewing a proposal of proscribing the Liberation Tigers of Tamil Eelam (LTTE), and had asked the Peace Envoy not to undertake his scheduled mission to Kilinochchi until a Government decision on Wednesday, according to media reports in Colombo. Analysts view the move as a step to effectively nullify the already defunct Ceasefire Agreement (CFA) that specifically prohibits all military offensives including aerial bombardment, offensive naval operations, assassinations, suicide missions and the activities by deep penetration units.

Full story >>

Sri Lanka asks Norway to suspend contacts with Tigers - Hindu

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Thursday, November 30, 2006

Lankan govt clamps down on Jaffna University - NDTV

By Rajesh Ramachandran

Sunday, November 26, 2006 (Colombo):


The humanitarian crisis in Sri Lanka is getting from bad to worse with every passing day.

NDTV travelled to the Jaffna University, which the Sri Lankan government claims is a breeding ground for training the LTTE.

The Sinhalese perception of Jaffna University is that it's a nursery for Tiger cubs. The university, which was unable to feed its students, was forced to close in August.

Also closed to students was their road to learning - the A9 highway - which brought many of them to the temple of Tamil studies from LTTE controlled Kilinochchi and Mulativu districts.

Read more...

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, November 24, 2006

An Open Letter to the Co-Chairs of the Tokyo Donors Conference

By: Eelaththamilzan
Courtesy: TamilCanadian - November 22, 2006



You have miserably failed the Tamil People in the island of Sri Lanka, in their
will and desire to progress diligently and peacefully on the commitments and
agreements reached between the GOSL and the Liberation Tigers of Thamil Eelam.



The Statement
Done it Again! The Co-Chairs have given their proven record of partisan diplomacy an added significance by completely ignoring the continuing Human Rights abuses and Humanitarian violations, now being inflicted upon the Tamil people particularly in the Northern homeland of Jaffna, in the Eastern homeland of Vaharai and also in the Capital Colombo.
The Co-Chairs have extended their privy and shown more interest in addressing and welcoming the nefarious promises and trivial exercises of the Government of Sri Lanka in its efforts to hoodwink the entire international community, on their present vengeful and diabolical approach to the Tamil National Issue.


Background to the Co-Chairs
After certain early stages of the entry of Norway as the Peace Facilitator, it was considered to be important to have some major wealthy countries to give strong backing for their Peace initiative, and to give strength to their efforts in seeing the implementation of any agreements between the two Parties to the Conflict.

As time progressed towards the requirement of very important and tough periods of diplomacy and incentives, the Tokyo Donors Conference took shape in the form of three countries, namely the United States, Japan and Norway together with the European Union, assuming the mantle of Co-Chairs of the Tokyo Donor Conference.

Now, we all know how during the build-up to formulating the functions and agenda of this elite grouping, the Liberation Tigers of Thamil Eelam was sidelined and isolated by non other than the Host country of the latest meeting, in difference to the encouragement total involvement of the Government of Sri Lanka.

Now and again, at regular intervals this Host country has actively indulged in wooing the Government of Sri Lanka through offering various methods of facilitating training and support to its armed forces and providing Aid through its less obvious channels set up for such purposes. It has consistently turned a blind eye to the reality of the sufferings of the Tamil people at the hands of these armed forces, the perpetrators of violence.

It is glaringly obvious where this host country stands, when the person who presided over this latest meeting of the Co-Chairs, Mr Nicholas Burns himself had proclaimed, 21 October 2006, that the United States was signalling their strong support for the Government of Sri Lanka. He further reiterated, as if that was not enough endorsement, that they do not recognise or support the Liberation Tigers of Thamil Eelam. It was ironical that this was expressed on the eve of the Geneva talks.

Where then, is the integrity and diplomatic credibility of a nation that calls itself the defender of Freedom, Justice and Liberty of people around the world, who are suppressed and marginalized under repressive regimes ?

Is it not also then very clear, that there is little difference between this country?s stand and that of the paramilitary groups, the extremist JVP, the Buddhist Hela Urumaya and the marauding Sri Lanka Military ?

The United States and the European Union stand guilty of practising double standards on the Tamil National Issue, and do not possess the true credentials to participate in a fair and just manner as Co-Chairs when addressing the Parties to the Conflict.
This is an eye-opener for the Tamil people, in that here we see the drama of a very partisan exercise being enacted by the very same countries that is purported to bring the Parties to the Conflict to the negotiating table in an equal and equitable manner.


You Have Failed
The joint statement released by yourselves following your deliberations over two days as Co-Chairs on 21 November 2006 in Washington, would deem to have been read with Contempt by the entire Tamil population of Thamil Eelam.
You have miserably failed, to neither address nor comment on the prevailing volatile military activities along the borders of the Tamil homeland, on the continuing aerial bombardment of the Tamil homeland, on the near starvation and open-prison conditions of the Tamil people in the northern Jaffna peninsula.

Read more...

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, November 17, 2006

மாமனிதன் ரவிராஜின் இறுதிச் சொற்கள்



அண்மையில் கொழும்பில் வைத்துச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டத்துக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்களின் இறுதிச் செவ்வி கீழே தரப்படுகிறது.


கொலை செய்யப்பட்ட அன்று காலை ஊடகமொன்றின் அரசியற் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு தன் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அந்நிகழ்வு முடிந்து திரும்பியபோதே அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.

அவ்வரசியில் நிகழ்வில் ஏ-9 பாதையைத் திறப்பது தொடர்பாகவே முதன்மைப்படுத்தப்பட்டது.
இதோ அம்மாமனிதனின் இறுதிக் கருத்துக்கள்.

*************************************************

Slain MP’s final words an hour before being gunned down

Following is the complete text of the last live programme Mr. N. Raviraj attended on Derana TV yesterday (November - 09). Mr. Raviraj was invited for the Derana Aruna programme last morning from 7.30 am to 8.00 am to discuss the A-9 closure and recent attacks on civilians. He was in the Derana studio in Nugegoda for about 45 minutes before being attacked by an unidentified gunman in Narahenpita within two hours after the interview.

Q: Hon Member, Your party launched a massive protest in parliament against the de- merger of the North and the East following the recent Supreme Court judgment. What was the reason for these protests?

A: We in the TNA started agitations demanding the reopening of the A9 Road… Meanwhile on Oct.16th, the Supreme Court passed the judgment on de-merger of the two provinces. However, we do not have a problem with the judgment… we have a political problem. The people in the north-east aspire to live together. They aspire for the merger of the two provinces, it is a basic human right of those people.

In the ancient times, there were Sinhala and Tamil kingdoms in Sri Lanka. It is not new to our people. That is mainly an area of Tamils from ancient times. It does not mean that we want to divide the country. We believe that North and east be considered as a one unit. That should be the base if to find a solution to the ethnic crisis.


In fact, the Sinhala or the Tamil people do not want to see a military struggle and bloodshed in the country. They are prepared to live in peace. When the tsunami hit Mullaithivu area, it was the Sinhala people who helped the Tamils. They do not want war. I am for a negotiated settlement. This was not only what I say. The first such example was set by the Emperor Ashoka after Kalinga war. First of all the people who are starved should be given food and build confidence. The TNA is committed to support any such endeavour.



Q: Why do you insist on the de merger of the two provinces, and what special privilege will the Tamil community have by that or in what manner does the merger benefit them?

A: Why do you people say that this country should not be divided? Because, then only people feel more strong and powerful. Likewise, Tamils will feel more powerful when they are together. The merger will enhance their strength and provide them the opportunity to look into their affairs well. It is their aspiration. The two provinces are prominently Tamil areas.

Q: If you are accepting that living in unity will make people more powerful, why don’t you support the unitary state concept ?

A: Unitary state concept is no longer acceptable now. It is an old system and has no validity today. When we achieved independence in 1948, not a single Tamil leader talked about a separate state or a federal state. Who forced us to the present situation?

Q: You say that Tamil leaders did not demand a separate state. But, Wasn’t Mr.Ponnambalam’s 50-50 demand the origin of this crisis?

A: In 1947 when India achieved independence, Mohamed Ali Jinnah demanded Pakistan to be separated. We asked for 50-50 and then a Federal system and now the LTTE is fighting for separate state. However, as politicians we still believe in a united country. Who is responsible for this state? Since independence, we were being discriminated. First, they abolished the clauses in Soulbury Commission, which provided safeguards for the minorities, and then they brought Sinhala Only Act. Thus, who pushed us to this state? India that gained independence in 1947 has 22 states now. Yet, it is a united country today, because they implemented the right administrative system. Some fear federal system would divide the country. But the best example we can get is from India. In 1965, Tamil Nadu demanded separate powers. But today if you ask a Tamil in Tamilnadu, they will say we are all Indians..! Jaffna people are starving due to the closure of the A9.

We are one family. In a family, mothers generally tend to love or treat a disabled child or the youngest more than others. What we do is taking all the facilities including food from that child. That is what they did exactly by closing the A-9. In 1995, government launched operation Jaya Sikuru to open the A-9. Vice –versa, this government says it cannot open it, giving the impression that those people do not belong to our country. Thus, we will provide them goods in ships. What is this all about?

Q: The issue of the A9 road is an outcome of terrorist activities… everybody is aware that LTTE take ransoms and tax people on the A9 road?

A: They say LTTE taking ransom. What a lie…. A9 was opened only in 2002. how did the LTTE survive so far? Didn’t they earn before? Didn’t they have enough food and other facilities? This was a downright lie of the government. I returned from Jaffna only yesterday. I accept that LTTE tax people.

Q: But didn’t the LTTE attack the military checkpoint?

A: Ok let me finish on the tax affair. Goods were sent in ships even when I was the Jaffna Mayor since 1995. A petrol litre was sold at Rs 1000. To whom those taxes went? I want to emphasize one thing. The LTTE never ever imposed tax on essential items sent by the government to be distributed freely among poor people in the area through Divisional Secretariats and on items related to education. Also who are paying taxes for the LTTE. Not the people here, not Mr. Mahinda Rajapaksa, not Keheliya Rambukwella, not even Raviraj… it’s the people of those areas. When A9 was opened, the difference of a Petrol litre in Jaffna was only Rs 10 including LTTE taxes.

Q: Why are you opposing an alternative route?

A: Is not the Pooneryn route also going through Kilinochchi. Will there be no taxing then. Moreover, it is a more distant and difficult road and only two kilometres away from the sea. Besides, what happened to the people who went to observe the road yesterday? SLMM chief managed a narrow escape from an attack and had to hide in a bunker.

Let me tell one thing to Mr. Rajapaksa. Let’s close the main road to Hambantota and send all goods in ships from Colombo.

Q: But there is no terrorist issue in Hambantota?

A: Why are you always talking about a terrorist issue? If there is terrorism it should be suppressed using similar methods. In 1.1 clause, it’s clearly mentioned in the CFA that the A9 should be opened. If the government is not willing to do so, what they should do is to say that they do not accept the CFA, CFA is over and that they have started war. It has nothing to do with the innocent people of the area. .Now the A9 road is closed causing innumerable hardships to the innocent people. Even the animals in the area are starved to death. We have to obtain visas from the Army camp in the area to come to Colombo. Do you know that?

Q: Wasn’t it the LTTE who closed the A9 in their areas?

A: What nonsense! I even went to Kilinochchi and Pallai recently. I barely escaped a shell attack.

Q: From which side?

A: Obviously…. You do not look up to see from which side you have been attacked during a war. When I was in Jaffna, there were 50-60 shells from this side to retaliate one or two shells from the LTTE side. Situation is such that people of the area could not sleep in peace when there are no shell attacks. The LTTE is willing to reopen the road in their area with the intervention of international observers.

Q: These are happening because the LTTE attacked a ship carrying civilians. What are your comments on such terrorist activities?

A: Why does the government ferry civilians by sea? Let me explain. In one ship, have more than 1000 travellers aboard. Who are they? Only 300 of them are civilians and others are security personnel. I do not say that the security personnel should not come to see their kith and kin. But the government is only providing a civilian cover to ferry soldiers. You will understand that if the A9 road is open, these problems will not crop up. In 1995 the government launched Jaya Sikuru operation to open A9 road. Thousands of our youths were killed. Now the government has closed the same road.

Q: What solution do you proposed to overcome this problem?

A: There are many personal problems. My good friend J.VP Leader Somawansa Amarasinghe has problems. The JHU has problems and even general Fonseka has problems… The Buddha preached the benefits of alms giving. Buddhists say that we must help others. However, the monks who follow Buddha are opposed to the opening of A9 road to supply food to the people in Jaffna. Wimal Weerawansa said that if the UNO intervenes in the problems it will be a violation of the country’s sovereignty. What right does he have to talk about sovereignty? It was them who took up arms against the democratically elected government in 1971. In 1988/89 period, they did not allow us to light even a kerosene lamp. So how can they talk about sovereignty today.

Q: Several solutions have been proposed to the national problem. Indian Panchayath system is one such. What is your opinion in this regard?

A: Indian Panchayath system is a system in a village administrative system. After devolution of powers at higher level, some measure of autonomy is given to the village level. However, I have not yet heard that this system is to be implemented in Sri Lanka.

Q: Hon. Member, what measures do you proposed do you propose to resolve this problem

A: In fact, the Sinhala or the Tamil people do not want to see a military struggle and bloodshed in the country. They are prepared to live in peace. When the tsunami hit Mullaithivu area, it was the Sinhala people who helped the Tamils. They do not want war. I am for a negotiated settlement.

This was not only what I say. The first such example was set by the Emperor Ashoka after Kalinga war. First of all the people who are starved should be given food and build confidence. The TNA is committed to support any such endeavour.

[Courtesy:dailymirror.lk]
_____________________________

படமும் பத்தியும்: TamilWeek.com

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, October 18, 2006

மீண்டும் மிலேச்சத்தனமான தாக்குதல்

சிறிலங்கா வான்படை மீண்டும் மிலேச்சத்தனமான வான்தாக்குதலொன்றுக்கு முனைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை வன்னியின் புதுக்குடியிருப்புப் பகுதி மீது நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 'காந்தரூபன் அறிவுச்சோலை'யும் சிக்கியுள்ளது.
ஆதரவற்ற குழந்தைகள் சிறுவர்களுக்காக விடுதலைப்புலிகளால் இரண்டு பராமரிப்பு நிலையங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
இதில் பெண்களுக்காக நடத்தப்படுவது 'செஞ்சோலை'
ஆண்களுக்காக நடத்தப்படுவது காந்தரூபன் அறிவுச்சோலை.

ஏற்கனவே செஞ்சோலை வளாகம் மீது வான்தாக்குதல் நடத்தி அங்கிருந்த மாணவிகள் பலரைக் கொன்றுகுவித்தது அரசவான்படை. செஞ்சோலைச் சிறுமிகள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர்கள் தாக்குதலில் இருந்து தப்பித்தபோதும் அப்பாவி பாடசாலை மாணவிகள் அத்தாக்குதலில் மாண்டனர்.
உலகம் முழுவதும் சிங்களப்படைக்கு எதிராகக் குரல்கள் எழுந்தன.

இப்போது மீண்டும் அப்படியொரு அவலத்தை விதைக்க வான்படை துணிந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை (16.10.2006) மாலை புதுக்குடியிருப்பு வான்பரப்பிற் புகுந்த நான்கு தாக்குதல் விமானங்கள் கைவேலி எனும் கிராமத்தின்மீது தாக்குதலை நடத்தின. அப்போது அங்கிருந்த காந்தரூபன் அறிவுச்சோலை பாராமரிப்பு நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அப்பராமரிப்பு நிலையத்தில் இருந்த 216 சிறுவர்களில் இருவர் காயமடைந்தனர். ஏனையோர் அதிஸ்டவசமாக உயிர்தப்பினர்.
இப்பராமரிப்பு நிலையத்துக்கு அண்மையில் இருந்த மக்கள் குடியிருப்பும் தாக்குதலுக்குள்ளானதில் ஒருவயதுக்குழந்தையுட்பட இரு சிறுமிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் பதினைந்துபேர் காயமடைந்தனர்.


அறிவுச்சோலையில் யாரும் சாகாத காரணத்தாலோ என்னவோ இது பெரிதாகப் பேசப்படவில்லை.
ஆனால் சிறிலங்கா வான்படை மீண்டுமொருமுறை மிலேச்சத்தனமான வான்தாக்குதலொன்றைத் திட்டமிட்டு நடத்தியுள்ளது. உண்மையில் அதிஸ்டவசமாக மிகப்பெரும் அவலம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதற்காக இதைப்பேசாமல் விடவும் முடியாது.
தாக்குதல் நடந்தபின் காந்தரூபன் அறிவுச்சோலையைச் சென்று பார்வையிட்ட கண்காணிப்புக்குழுகூட இதுவரை அதைக்கண்டித்து ஏதும் சொல்லவில்லை.
அரச பயங்கரவாதம் இத்தோடு நிற்கப்போவதில்லை. களத்திலும் களத்திற்கு அப்பாலும் அரசுக்கு ஏற்பட்டுவரும் தொடர் இராணுவ இழப்புக்கள் அதை இன்னுமின்னும் வெறிகொள்ளச் செய்துள்ளது. இன்னும் தொடர்ந்து இப்படியான பயங்கரவாதச் செயல்களைச் செய்யத்தான் போகிறது.
_______________________________________

இதனிடையே இன்று காலித் துறைமுகத்தில் கடற்படையினர் மீதான தாக்குதலைத் தொடர்ந்து காலிப்பகுதி தமிழர்கள் மீது சிங்களக் காடையரின் தாக்குதல் தொடங்கியுள்ளது.
மீண்டுமொரு இனப்படுகொலையைச் செய்யத் துணிகிறார்களா?

_______________________________________

படம்: தமிழ்நெற்

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, August 11, 2006

திருமலையில் நூறு தமிழர்கள் கொலை.

நேற்றும் இன்றும் திருகோணமலையில் கடும் தாக்குதல்கள் நடைபெறுகின்றன.
புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த மக்கள்மீது நேற்றும் இன்றும் சிறிலங்கா அரசபடையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல்களில் குறைந்தது நூற்றுப்பத்துப் பேர்வரை கொல்லப்பட்டுள்ளனர். 300 பேருக்குமதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இடம்பெயர்நது சென்ற மக்களைக்கூட துரத்தித்துரத்திக் கொன்றுள்ளது அரசபடை.
இத்தோடு மாவிலாற்றை நோக்கி பெருமெடுப்பில் முன்னேற்ற முயற்சியைச் செய்துகொண்டிருக்கிறது. அதை எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருக்கின்றனர் புலிகள்.

சிலநாட்கள் முன்பு புலிகள் இராணுவத்தினர் மீது தொடுத்த போரில் மூதூர்ப்பகுதி மக்கள் இடம்பெயர வேண்டி ஏற்பட்டது. அதுவும் தாக்குதல் நடத்தப்பட முன்பே அம்மக்களுக்குத் தெரிவித்து, பாதுகாப்பாக விலகியிருக்கும்படி சொல்லிய பின் நடத்தப்பட்ட தாக்குதல் அது.
ஆனால் ஏதோ முஸ்லீம்கள் மட்டும்தான் அதில் பாதிக்கப்பட்டது போல எல்லா செய்தி ஊடகங்களும் நடந்துகொண்டன. கிடைத்த சந்தர்ப்பத்தை சில முஸ்லீம்களும் பயன்படுத்தி புலிகள் மீதும் தமிழர்கள் மீதும் சேறடிக்கத் தவறவில்லை. இதுவொரு திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கை என்பது போலவும் சிலர் எழுதினர்.

உண்மையில் யதார்த்தம் என்ன?
இடம்பெயர்ந்த முஸ்லீம்களுக்கும் சிங்களவருக்கும் இடப்பெயர்வு நிவாரணம் முதல் அனைத்தும் உடனடியாகக் கிடைக்கிறது. ஊடகங்கள் சுத்திச்சுத்தி அவர்களையே பேசவைக்கிறார்கள். ஆனால் அதே மூதூர் நிகழ்வில் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு என்ன நடந்தது? பலருக்கு அப்படி தமிழர் இடம்பெயர்ந்ததே தெரியாது. இன்றுவரை அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு உதவச்சென்ற செஞ்சிலுவைச்சங்கம் உட்பட்ட பன்னாட்டுத் தொண்டர் நிறுவனங்களைக்கூட இன்னும் அரசபடைகள் அனுமதிக்கவில்லை. அவர்களுக்கென்று எடுத்துச்சென்ற பொருட்கள் பாரஊர்திகளோடு தடுத்து வைக்க்பபட்டுள்ளன. மூதூர் முஸ்லீம்களுக்கு இது முதலாவது இடப்பெயர்வு. ஆனால் தமிழர்களுக்கு???

இப்போது நடந்த சம்பவத்தை விடுவோம். கடந்த ஏப்ரல் மாதம் முதல் திருகோணமலைக்குள் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் இடம்பெயர்ந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் மட்டும் முப்பதாயிரம் பேர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இடம்பெயர்ந்தனர்.
மாவிலாற்று நீர்தடுப்புக்குக் காரணங்கள் என்ன? விடுதலைப்புலிகளின் பகுதி மக்களுக்கு அத்தியாவசரிய உணவுப்பொருட்கள் கூட தடைசெய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான பால்மா முதல் பல பொருட்கள் அங்கே தட்டுப்பாடானவை.
சம்பூர் மக்களுக்கு நீண்டகாலமாகவே பல்வேறு பொருளாதாரத் தடைகள். புலிகள் அரசோடு வெளிநாட்டில் பேசித்திரிந்த காலத்திலேயே சம்பூருக்கு பொருளாதாரத் தடை இருந்தது. இடையிடையே மக்கள் போராட்டம் நடத்துவதும் விடுவதுமாகவே காலம் கழித்தனர். இன்றுவரை கட்டடப் பொருட்களுக்கான தடை தொடர்ந்து வருகிறது.
பன்னாட்டு நிறுவனமொன்று கட்டித்தரப் புறப்பட்ட நீர்த்தாங்கியொன்றைக் கட்டவிடாமல் அரசாங்கம் தடை செய்ததால் ஆத்திரமுற்ற மக்கள், ஏற்கனவே அவர்கள் எதிர்கொண்ட பல பிரச்சினைகளோடு சேர்த்து எல்லாவற்றுக்குமாக ஆற்றைத் தடைசெய்ய வேண்டி வந்தது. அதன் பின் புலிகள் இருக்கிறார்களோ இல்லையோ, மிகமிக நியாயமான போராட்டம் அது.

அந்த விசயத்தில் சிங்களஅரசு எப்படி நடந்துகொண்டதென்பது எல்லோருக்கும் தெரியும். மக்களின் கோரிக்கையைக் கேட்கக்கூட விரும்பாத அரசு அதற்கு இராணுவப்பரிமாணம் கொடுத்து இன்றுவரையான போருக்குத் தூபமிட்டது. ஆற்றுநீருக்குத்தான் சண்டையென்றால் புலிகள் நல்லெண்ண அடிப்படையாக ஆற்றைத்திறந்தபின் ஏன் மூர்க்கமான தாக்குதலை நடத்த வேண்டும். ஆற்றுநீரைத் திறந்துவிட்டபின் நூற்றுக்குமதிகமான பொதுமக்களைப் படுகொலை செய்துள்ளது இலங்கை அரசு.

இன்று அகதிகளாக பாதுகாப்புத் தேடி ஓடிய மக்களைக் கலைத்துக் கலைத்துக் கொல்கிறது. யாரும் ஏனென்று கேட்கப்போவதில்லை. கண்காணிப்புக்குழுவோ தாங்கள் அந்தப்பகுதிக்கு வர பாதுகாப்பு உத்தரவாதமில்லை என்று ஒரு சொல்லில் பிரச்சினையை முடித்துவிடும். மிகமிக அதிகபட்சமாக அரசை நோகாமல் கண்டித்து ஒரு அறிக்கைவிடும். அதை மிஞ்சி எதுவுமில்லை. எங்கள் பாதுகாப்புக்கு யாரையும் நம்பிக்கொண்டிருக்க முடியாது.
பாலஸ்தீன மக்களையும் ஈழத்தவரையும் ஒப்பிட்டு நாம் கொஞ்சம் நிம்மதி அடையலாம். எப்போதும் பரிதாபத்துக்குரியவர்களாயிருப்பது ஒருபோதும் வி்டுதலையைத் தராது. பாலஸ்தீனியருக்குக் கிடைத்த உலக அனுதாபம், ஆதரவுடன் ஒப்பிடும்போது ஈழத்தவருக்குக் கிடைத்தது ஒன்றுமேயில்லை. இவ்வளவு காலத்தின் பின்னும் இன்றும் கேட்பாரற்றுச் செத்துக்கொண்டிருக்கும் லெபனான் மக்களைப் பார்த்தால் அவர்கள் மேல் தான் கோபம் வரும்.
ஈழத்தவரும் பரிதாபத்துக்குரியவர்களாக இருந்தகாலத்தில் எல்லோரும் உச்சுக்கொட்டிக் கொண்டிருந்தார்கள் இன்று லெபனானுக்குக் கொட்டுவது போல. ஆனால் உலகம் விழுந்தடித்து வந்தது எப்போதென்றால் எதிர்த்தரப்பைப் பரிதாபத்துக்குரியவர்களாக ஆக்கியபோதுதான்.

இன்று நூறு பொதுமக்களை திருகோணமலையில் அரசு கொலை செய்துள்ளது. இதற்கு சர்வதேசத்திடமிருந்து எந்தத் தீர்வும் இல்லை. முதலில் அந்தத் தொகையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை உறுதிசெய்து அவர்களை நம்பவைக்கவே நிறைய உழைக்கவேண்டியிருக்கும். இனியும் போர்நிறுத்த உடன்படிக்கை, உலக ஒழுங்கு, பன்னாட்டு அழுத்தம், பன்னாடை என்று யோசித்துக் கொண்டிருந்தால் கதை கந்தல்தான்.
அண்மையில் புலிகளின் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையில் அவர்கள் கைப்பற்றிய இடங்களைக்கூட விட்டுவிட்டு திரும்பினர். காரணம் ஒப்பந்தமாம். சிங்களவன் ரெண்டு கிழமையாக நிலங்களைப் பிடிக்க படாதபாடு படுறான். ஒருவேளை அரசபடைகள் புலிகளின் நிலையைப் பிடித்தால் அவர்களைத் திரும்பிப்போ என்று யாரும் சொல்லப்போவதில்லை.
முன்னேறிவரும் எதிரிகள்மேல் நீண்டகாலத்துக்கு மறிப்புத்தாக்குதல் மட்டும் நடத்திக்கொண்டிருப்பது களத்தில் பாதகமான நிலை. மக்களும் அன்றாடம் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

புலிகள் உடனடியாகச் செய்யவேண்டியது புதிய களமுனைகளைத் திறந்து தமது வலுவைக்காட்ட வேண்டும். புலிகள் நிலமீட்பைத் தொடங்கினால் சில கோமாளிகள் "ஐயோ ஆக்கிரமிப்பு, இனஅழிப்பு, போர்நிறுத்த மீறல், பாசிசம்" என்று ஒப்பாரி வைக்கத்தான் போகிறார்கள். இவர்களைக் கருத்திற்கொண்டால் அம்போதான்.
முன்னைய மூதூர் நடவடிக்கையிலும் புலிகளுக்கு வேறு தெரிவுகள் இல்லாதபட்சத்தில்தான் அவர்கள் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.

இன்றைய நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் பயங்கரவாதத்தை, பேச்சுமூலம் தீர்வுகாணுவதில் அதற்கிருக்கும் விருப்பின்மையை, போர்மூலம் தீர்வு காண்பதில் அதற்கிருக்கும் வேட்கையை, மக்களைக் கொன்றுகுவிக்கும் அதன் காட்டுமிராண்டித்தனத்தை இதற்கு மேலும் உலகுக்கு வெளிப்படுத்தத் தேவையில்லை. இவ்வளவு நிகழ்விலும் அதைப்புரிந்துகொள்ளாதவர்கள் இனிமேல் எதையும் புரிந்துகொள்ளப்போவதில்லை. தமிழர் பிரச்சினையை அது எப்படி அணுக முற்படுகிறது? இவர்களிடமிருந்து தமிழர்களுக்கு எப்படியான தீர்வை எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றி மிகத்தெளிவான முடிவுக்கு வரமுடியும்.

யுத்தம் மட்டுமே தீர்வு என்று சிங்களத்தரப்பு மிகத்தெளிவாக அறிவித்துவிட்டது. இந்நிலையில் அதைக்கண்டிக்காத, கண்டுகொள்ளா சக்திகளின் நற்சான்றிதழுக்கு தமிழர் தரப்புக்காத்திருப்பது சுத்த முட்டாள்தனம். சிங்களத்தரப்பின் அறிவிப்பை, சவாலை எதிர்கொள்வது மட்டுமே தமிழர்முன்னுள்ள தெரிவு. அதைமட்டுமே எமது தெரிவாகவும் கொள்ளவேண்டும்.
விரைவில் களநிலைகள் மாறுமென்று நம்புகிறேன்.


_____________________________________________

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, August 04, 2006

கவிஞர் பொன்.கணேசமூர்த்தி சுட்டுக்கொலை

ஈழத்தைச் சேர்ந்த முக்கிய படைப்பாளியான கவிஞர் பொன்.கணேசமூர்த்தி அவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஈழத்தின் வடபுலத்தில் கவிஞர் மிகப்பிரபலமானவர்.
புலிகளின்குரல் வானொலியில் 90 இல் ஒலிபரப்பான இவரது படைப்பான 'இலங்கை வேந்தன்' 'இலங்கைமண்'என்ற இராவணனைக் கதாநாயகனாகக் கொண்ட நாடகம் இன்றும் என் மனத்தில் நிற்கிறது. அதை பின் நாட்டுக்கூத்து வடிவமாக்கினார்.
இதைவிடவும் பலமேடை நாடகங்களை இயக்கியவர். பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் என்று பல கலைவடிவங்களில் மிளிர்ந்தவர்.
பல படைப்புக்களை வெளியிட்டவர்.

இனந்தெரியாத நோயில் அவதிப்பட்டு வன்னியில் இறந்துபோன தன்னுடைய இரண்டாவது மகனான மதனரதனின் சம்பவத்தைக் கொண்டு (அவன் என்னுடைய வகுப்புத் தோழன்) அவர் எழுதிய இறுதிநாவல் (எடுக்கவோ தொடுக்கவோ???) உருக்கமானது.

இதைவிட விடுதலைப்போராட்டத்துக்கென அருமையான சில பாடல்களை எழுதியளித்துள்ளார்.

இவருடைய மூன்றாவது மகன் (மதன மெளனி) விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாயிருந்து 1996 இல் யாழ்ப்பாணத்தில் வீரச்சாவடைந்தவர்.
விடுதலைக்காக நிறைவான பணியாற்றிய இக்கலைஞன் இன்று யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேரிலறிந்த, மிக நெருக்கமான குடும்பம் அவருடையது.

கவிஞரின் குடும்பத்துக்கு என் மனமார்ந்த வருத்தங்கள்.


_____________________________________________

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, July 28, 2006

இலங்கையில் இப்போது நடப்பவை

கடந்த நாலைந்து நாட்களுள் இனச்சிக்கலின் நிலை தீவிரமடைந்துள்ளது.


கண்காணிப்புப் பணியிலிருந்து தனது நாட்டு அங்கத்தவரை விலக்கிக் கொள்வதாக பின்லாந்து அறிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமென புலிகள் கேட்டிருந்தனர். அவர்கள் செயற்படுவதற்கான கால எல்லையையும் வரையறுத்திருந்தனர்.
அதன்படி இன்னும் ஒரு மாதமேயுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட 3 நாடுகளில் பின்லாந்து தன் விலகல் முடிவை அறிவித்துவிட்டது.

அம்மூன்று நாடுகளும் கண்காணிப்புப் பணியிலிருந்து விலகவேண்டுமென்ற கோரிக்கை தொடர்பில் விமர்சனத்துக்கு இடமேயில்லை. மிகமிக நியாயமான கோரிக்கையே. தங்கள் சொந்த அரசியலுக்காக சகட்டுமேனிக்குப் பட்டியல் வெளியிடுவதும் இன்னொருவர் மீது தமது விருப்பத் தீர்வைத் திணிப்பதும் தாங்கள் நினைத்த எதையும் மற்றவர் மீது செய்துவிடலாம் என்ற மமதையுமாக இவர்கள் ஆடும் கூத்துக்கு ஓர் ஆப்பு வைக்கப்பட வேண்டும். முடிவைப் பரிசீலிக்கச் சொல்லி புலிகளுக்கு இவர்கள் விடும் கோரிக்கையிலும் எச்சரிக்கையிலும் எந்தவித தார்மீக நியாயமுமில்லை.
என்வரையில் சம்பந்தப்பட்ட நாடுகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடக்கூடா என்பதில் இன்னுமின்னும் தமிழர் தலைமை இறுக்கமாக இருக்கவேண்டுமென்பதே அவா.

ஏற்கனவே சும்மா பெயரளவில் மட்டுமே இருந்துகொண்டிருக்கும் குழுவுக்கு இவ்வெளியேற்றத்தால் ஏதும் வித்தியாசம் தெரியுமென்று தோன்றவில்லை. அறிக்கை விடுவதை மட்டும்கூட பக்கச்சார்பற்றும் ஒழுங்காகவும் செய்யமுடியாத நிலையிலிருக்கும் கண்காணிப்புக்குழு, அப்படி வெளியிடும் அறிக்கைகளுக்கும் துளியும் மதிப்பற்ற நிலையில் அறிக்கை வெளியிடும் கண்காணிப்புக்குழு எண்ணிக்கை குறைவதாலோ அதிகரிப்பதாலோ ஏதும் வெட்டிப் பிடுங்கப் போவதில்லை.
பெருமெடுப்பில் ஒரு இராணுவ நடவடிக்கையே நடைபெற்ற 'வாகனேரி'ச் சம்பவத்தில் இக்கண்காணிப்புக்குழு என்ன செய்தது என்பது எனக்குத் தெரியவில்லை.
கருணா குழுவை இயக்குவது / ஆதரவளிப்பது அரசபடைதான் என்று இவர்கள் வெளயிட்ட அறிக்கைக்கு ஏதும் பலனிருந்ததாகவும் தெரியவில்லை.
*************************************************
நோர்வேயின் சிறப்புத் தூதுவர் இலங்கை வருகிறார்.
ஜப்பானிய தூதுவர் அகாசியின் இலங்கை வரவு தொடர்பான செய்திகளும் கருத்துக்களும் பரவலாக அடிபடுகின்றன.
முன்பும் பிரபாகரனைச் சந்திப்பது என்று வந்து நிறைவேறாமலேயே அவரது பயணம் முடிந்தது.
இந்தமுறையும் பிரபாகரனைச் சந்திப்பது என்பது தான் அவரது முழு நோக்கமாம்.

அவரது கதையைப் பார்த்தால் அவர் பிரச்சினை தொடர்பாக ஏதும் ஆக்கபூர்வமாகச் செய்வதாகத் தெரியவில்லை. இலங்கை வருவதாக திட்டம் அறிவிக்கும்போதே புலியை வெருட்டும் விளையாட்டைத் தொடங்குகிறார். சில வெருட்டல்களோடு, தன் பிரபாகரனைச் சந்திக்கவேண்டுமென்று சொல்லி, அப்படி அவர் சந்திக்க மறுத்தால் ஏற்படும் பின்விழைவுகள் என்று தொடர்ந்து சில வெருட்டல்கள்.
இந்த நேரத்தில் புலிகள் டோக்கியோ மாநாட்டைப் புறக்கணித்தது ஞாபகம் வருகிறது.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு 'சொறிக்கதை' கதைத்துக்கொண்டிருப்பார்கள்.
இப்போதைய நிலையில் அபிவிருத்தி, இடைக்கால நிர்வாகம், சுனாமிக் கூட்டமைப்பு என்பவை சாத்தியமற்ற நிலை தெளிவாகத் தெரிகிறது. இன்னொரு சுழற்சி நடக்க வேண்டும்போல உள்ளது. இந்நிலையில் ஜப்பான் ஏதாவது செல்வாக்கைக் கொண்டிருப்பதாக வெளிப்பார்வைக்குத் தெரியவில்லை.
தனிப்பட்டவனாக என்னுடைய கருத்து என்னவென்றால், அகாசியுடனான சந்திப்புக் கோரி்க்கையை புலிகள் மறுத்துவிடவேண்டுமென்பதே.
ஆனால் இன்று பிரிட்டன் தூதுவருடன் வன்னியில் சந்திப்பை நடத்தியதைப் பார்த்தால் அகாசி வன்னி வருவார் போலத்தான் கிடக்கு.
*************************************************

கொஞ்சக்காலமாக அடங்கிக் கிடந்த வான் தாக்குதல்கள் மீளத் தொடங்கியுள்ளன.
சரத் பொன்சேகா மீதான தாக்குதல் முயற்சிக்குப் பதிலடியாகத் தொடங்கப்பட்டது இம்முறை. திருகோணமலை சம்பூரில் நடந்த முதல்தாக்குதலில் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதன்பின் வன்னியில் பலதடவைகள் வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை புலிகளின் ஓடுபாதை எனச்சொல்ப்படும் இடம்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள். அதைவிட திருகோணமலையில் சரமாரியான எறிகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. ஏறக்குறைய முப்பதாயிரம் பேர் இத்தாக்குதல்களால் இடம்பெயர்ந்தனர்.
இவையனைத்தும் தம்மீதான தாக்குதலுக்கான "மட்டுப்படுத்தப்பட்ட எதிர்வினை" என்று அரசு சொல்லிற்று.

பின் கொழும்பில் மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க மீதான தற்கொலைத்தாக்குதல் நடத்தப்பட்டு அதில் அவர் கொல்லப்பட்டபோது ஆச்சரியப்படும்படி அரசதரப்பு எந்த எதிர்த்தாக்குதலையும் செய்யவில்லை. அதற்கு முன் இறுதியாக நடத்ப்பட்ட வான்தாக்குதலைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் விடுத்த கடுமையான எச்சரிக்கையும், அதன் நீட்சியாக கொழும்புத் துறைமுகம் மீதான பெரிய தாக்குதலுக்கான திட்டமொன்று சிக்கலுக்குள்ளான நிலையில் அதோடு சம்பந்தப்பட்ட இருவர் படையினரால் கைதுசெய்யப்பட்டதும், அதையும் தொடர்ந்து வெடிபொருட்கள், படகுகள், முகவர்கள் என புலிகளின் கணிசமான விசயங்கள் கொழும்பில் தெரியவந்ததும்தாம் அரசபடையினரின் அமைதிக்குக் காரணமென ஊகிக்கப்பட்டது.

குறிப்பிட்ட இடைவெளியின்பின் மீண்டும் அரசவான்படை தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இம்முறை படையினர் மீதான தாக்குதலுக்கான பதிலடியாக இன்றி வேறொரு பிரச்சினைக்கு நடந்துள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளால் வரும் மாவலியாற்று நீர் படையினரின் பகுதிக்கு வராமல் தடுக்கப்பட்டதால் இத்தாக்குதல் என அறிவிக்கப்பட்டது.
மூன்றுநாட்களாக திருகோணமலையில் சம்பந்தப்பட்ட பகுதிகள் மீது வான்படைத் தாக்குதலும் எறிகணைத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளன. இதில் நேற்று நடந்த குண்டுவீச்சில் ஐந்து புலிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆதேவேளை வன்னியிலும் வான்படைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. வன்னியில் முல்லைத்தீவுப் பகுதியிலும் அதையண்டிய "கேப்பாப்புலவு" எனுமிடத்திலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. திருகோணமலையின் நீர்ப்பிரச்சினைக்கு வன்னியில் தாக்குதல் நடத்தியாக எடுக்க முடியாது. அண்மைக்காலமாக புலிகள் முல்லைத்தீவை அண்டிய பகுதியில் பெரிய விமான ஓடுபாதை அமைப்பதாக அரசதரப்பு செய்தி வெளியிட்டு வந்தது. அதன் பின்னணியில் அப்பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கேப்பாப்புலவு என்பது, புதுக்குடியிருப்பிலிருந்து முள்ளியவளை செல்லும் வீதியில் வரும் இடம். சிறு காட்டுத் துண்டுகளையும் கணிசமான விவசாய நிலங்களையும் அதேபோல் குறிப்பிடத்தக்களவு சிறுபற்றை மற்றும் கட்டாந்தரைகளையும் கொண்ட பகுதி. வீதியின் ஒருபக்கம் சில வயற்காணிகளைத் தாண்டி நந்திக்கடல் நீர் நிற்கும். மறுபக்கம் வயற்காணிகளைத் தாண்டி காட்டுப்பகுதி இருக்கும். மக்கள் செறிவாக வாழாத வயல், சிறுபற்றை, மந்துக்காடுகளைக் கொண்ட நிலப்பகுதிதான் கேப்பாப்புலவு.

ஓயாத அலைகள்-3 இன்பின் புலிகள் கைப்பற்றி வைத்திருக்கும் பெரிய நிலப்பரப்பில் இன்னும் சில இடங்கள் இவ்வாறு "விமான ஓடுபாதை அமைக்கும்" இடமாக அரசதரப்பால் சொல்லப்படும். மிகப்பெரும் நிலப்பரப்பு சும்மா இருப்பதால் புலிகள் அரசைப் பேயக்காட்டவோ அல்லது உண்மையாகவோ விமானத்தள வேலைகளைச் செய்வர் என எதிர்பார்க்கலாம். (திருகோணமலையின் சம்பூரும் புலிகளின் விமானத்தளப் பெயரைப் பெற்றுத்தான் கொஞ்சக்காலம் பிரபலமாக இருந்தது)

திருகோணமலை நீர்த்தகராறு விசயம் கடுமையாக மாறியுள்ளது. இன்று தரைவழியாக அப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் படையெடுப்பொன்று நடைபெற்றதாகவும் அதை தான் முறியடித்ததாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
நீர் நிறுத்தப்பட்டதற்கான சரியான காரணம் தெரியவரவில்லை. அப்பகுதி மக்கள் கண்காணிப்புக் குழுவோடு நடத்திய சந்திப்பில் முன்வைத்தவற்றுள் மூதூருக்கு சொந்த நீர்த்தாங்கி, குறிப்பிட்ட பாதையொன்றில் சுதந்திரமான போக்குவரத்து அனுமதி மற்றும் தம்மீதான பொருளாதாரத்தடை நீக்கம் என்பன இருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அப்பகுதி மக்கள் மீதான பொருளாதாரத் தடையென்பது ரணில் காலத்திலேயே நடைமுறைக்கு வந்துவிட்ட ஒன்று. பல சந்தர்ப்பங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் தொடர் போராட்டங்களைச் செய்திருக்கிறார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தப்படி பொருளாதாரத் தடை ஒரு மீறல்.
மூலப்பிரச்சினை இனிமேல்தான் வெளிவரும். ஆனால் சம்பந்தப்பட்ட அணைப்பகுதியைக் கைப்பற்ற இராணுவம் முயல்வதன் மூலம் பிரச்சினை வலிந்த சண்டையொன்றை ஏற்படுத்தும்.

முன்பு "வான் தாக்குதல் நடத்த்பபட்டால் பதிலடி நிச்சயமுண்டு" என்று புலிகள் அறிவித்தபடி ஏதாவது செய்வார்களா என்று தெரியவில்லை. இத்தாக்குதலுக்கு புலிகள் கடுமையாக ஏதும் சொல்லாமலிருப்பதை எப்படி எடுத்துக் கொள்வதென்று தெரியவில்லை.
************************************************************
பிந்திய செய்தியின்படி கிழக்கு மாகாணத்தில் வவுணதீவு புலிகளின் சோதனைச் சாவடியொன்றின் மீது 'தற்கொலைத் தாக்குதல்' நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. முச்சக்கர வாகனமொன்று வெடித்ததை புலிகள் தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதில் தற்கொலைத் தாக்குதல் என்பதற்கு இருக்கும் சாத்தியம் என்வரையில் மிகமிகக் குறைவே. தாக்குதலுக்குக் கொண்டுவந்த வெடிபொருட்கள் தவறுதலாக வெடித்திருக்கலாம் (குறிப்பாக நேரக்கணிப்புக் குண்டு). அதிலும் குண்டுவெடிப்பு நடந்த இடம் அரசகட்டுப்பாட்டுப் பகுதியென்றும் சொல்லப்படுகிறது. அதாவது புலிகளின் நிலைக்குச் செல்ல முன்பேயே வெடித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உண்மையில் தற்கொலைத் தாக்குதல் முயற்சியாக இருந்தாற்கூட திகிலடைய ஒன்றுமில்லையென்றே நினைக்கிறேன். அதிரச்சியாக ஏதாவது பின்னர் வெளிவரலாம்.
**********************************************************


_____________________________________________

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, July 09, 2006

நவாலியில் நரபலி

இன்று ஓர் இனஅழிப்பு நடவடிக்கையின் பதினோராம் அண்டு நினைவு.
நூற்றைம்பது வரையான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டும் மேலும் ஏராளமானோர் காயப்பட்டும் போகுமாறு நடத்தப்பட்ட ஒரு தாக்குதலின் நினைவுநாள். இது பதினொரு வருடங்களுக்கு முந்திய நாளின் நினைவு மீட்டல்.

சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவென பெரிய ஆயத்தங்களைச் செய்தது. 3 மாதங்களுக்கு முன் தொடங்கியிருந்த மூன்றாம் கட்ட ஈழப்போரில் புலிகளின் கை ஓங்கியிருந்தது. கடலில் கடற்கலங்களை அழித்திருந்தனர் புலிகள். இரு விமானங்களை அடுத்தடுத்த நாட்களில் சுட்டு வீழ்த்தியிருந்தனர். மண்டைதீவு இராணுவத்தளம் மீது தாக்குதல் நடத்தி பெரிய இழப்பை இராணுவத்துக்கு ஏற்படுத்தியிருந்தனர். (அதையடுத்து மணலாற்றில் மிகப்பெரும் தாக்குதலொன்றைச் செய்ய திட்டமிட்டிருந்தனர். அரசும் அதை அறிந்திருந்தது.)
இந்நிலையில் யாழ்ப்பாணத்தை முற்றாகக் கைப்பற்ற அரசு திட்டம் போட்டிருந்தது. அதன் முதற்கட்டமாக வலிகாமத்தின் முக்கிய பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டம் தான் 'முன்னேறிப் பாய்தல்' என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை.

பெருமளவு எறிகணை வீச்சுடன் இந்நடவடிக்கை தொடங்கப்பட்டபோது ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்தனர். யாழ்ப்பாணத்தின் முக்கிய பட்டினமான மானிப்பாயிலும் அதற்கடுத்த கிராமமான நவாலியிலும் பெருமளவு மக்கள் வந்து சேர்ந்தனர். பொதுவாகவே பாடசாலைகளிலும் தேவாலயங்களிலும்தான் மக்கள் தஞ்சமடைவர். அதேபோல் நவாலியிலுள்ள கத்தோலிக்கத் தேவாலயமான புனித பேதுருவானவர் கோயிலில் பெருமளவு மக்கள் தஞ்சமடைந்தனர். இராணுவம் சில இடங்களைக் கைப்பற்றியிருந்தது. இராணுவம் முன்னேறிய பகுதியிலிருந்து நீண்டதூரத்தில்தான் நவாலியுள்ளது.

09.07.1995 அன்றுதான் அந்தக் கரியநாள்.
பகல் வேளையில் நவாலி புனித பேதுருவானர் தேவாலயம் மீது சிறிலங்கா விமானப்படையின் 'புக்காரா' விமானம் குண்டுகளை வீசியது. இலக்குத் தப்பவில்லை. சரியாகவே குண்டுகளை வீசியது. ஒரு கணத்தில் எல்லாமே முடிந்துவிட்டன.

தேவாலயமும் அதனுள் தஞ்சமடைந்திருந்த மக்களும் சிதறடிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களை யாழ்ப்பாண நகருக்குக் கொண்டு செல்ல வேண்டும். போதுமான வாகனங்கள்கூட இல்லை.
அன்றிரவு எடுக்கப்பட்ட கொல்லப்பட்டோர் கணக்கெடுப்பு 100 ஐத்தாண்டிவிட்டது. போகப்போக அவை அதிகரித்துச் சென்றன.
இதில் இறப்பு விவரங்கள் சரியாகத் தொகுக்கப்படாமைக்கு முக்கிய காரணம், தாக்குதலுக்குள்ளானோர் இடம்பெயர்ந்தவர்கள் என்பதே.

பெருமளவான உடல்கள் முழுமையாக எடுக்கப்படவில்லை. சதைத்துண்டுகள்தாம் பொறுக்கப்பட்டன. அத்தேவாலயத்தில் தங்கியிருந்த முழுப்பேரின் விவரமும் தொகுத்து முடிக்கப்பட்டிருக்கவில்லை. விவரத்தொகுப்பில் ஈடுபட்டிருந்த நான்கு கிராமசேவையாளர்களும் அத்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர்.

இரண்டு கிழமைகள் வரை பொறுத்து, காணாமல் போனவர்களின் விவரங்கள் இந்தப் படுகொலை விவரத்தில் சேர்க்கப்பட்டன. இறுதிக்கணக்காக 140 பேர் மரணம் என்று வந்தாக நினைக்கிறேன்.

யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள், தாதியர்கள் அனைவரும் அயராது பாடுபட்டனர். குறைந்த வசதிகள், மருந்துகளோடு அவர்கள் அயராது போராடினர். இரத்தச் சேமிப்பென்பது அப்போது முழுமையாக இல்லை. நிரந்தர மின்சார வசதியில்லை. மக்கள் இரத்தம் கொடுத்தனர்.
யாழ்குடாநாடு பெரும் அவலத்தைச் சுமந்து நின்றது. ஒருபக்கம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இடப்பெயர்வும் அவர்களின் பராமரிப்பும். இன்னொரு பக்கம் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட, காயமடைந்த கொடுமை.
அதைவிட முன்னேறிய இராணுவத்தை எதிர்கொள்ளவும் குடாநாடு தன்னைத் தயார்ப்படுத்த வேண்டியிருந்தது.



பதினொரு வருடங்களின்முன் இந்நாளிற் கொல்லப்பட்டவர்களுக்கு எமது அஞ்சலி.
____________________________________________________________
இன்று பத்துபேர் கொல்லப்பட்டாலும் குறைந்தபட்சம் பன்னாட்டுச் செய்திகளில் வருமளவுக்காவது எமது பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அன்று நிலைமை அப்படியில்லை.
நவாலிப் படுகொலையோடு பலர் நம்பிக்கை கொண்டிருந்தனர். "சர்வதேசம் தலையிட்டு இதற்கொரு முடிவு கிடைக்கும், வத்திக்கான் இதைச் சும்மா விடாது" என்று பலர் பேசி்க்கொண்டனர்.
தேவாலயப் படுகொலைகள் என்று எடுத்துக்கொண்டால், நாவலிதான் முதலாவது அன்று.
நவாலிதான் இறுதியானதும் அன்று. அதற்கு முன்னும் பின்னும் தேவாலயப்படுகொலைகள் சிங்கள அரசால் நடத்தப்பட்டன. (இந்த வரிசையில் இந்துக்கோயில் மீதான தாக்குதல்களும் அதிகம்.) ஆனாலும் வத்திக்கானால் ஏதும் செய்ய முடிந்ததில்லை (முனைந்ததில்லை என்றுகூடச் சொல்லலாம்).

பொதுப்பார்வைக்கு கத்தோலிக்க பீடத்தின் கீழ்மட்டம் வடக்கு கிழக்கில் புலிச்சார்பு நிலையாகவே வெளித்தெரிகிறது. அதில் உண்மையில்லாமல் இல்லை. கட்டாய இராணுவப் பயிற்சியை முதன்முதலில் (தொன்னூறுகளின் இறுதியில்) வலியுறுத்தியது தொடக்கம் நிறையவுண்டு. இராணுவத்தினர் கோயிலைச் சுற்றிக் காவல் நிற்க, இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு திருப்பலியின் மன்றாட்டு நேரத்தில் 'எங்கள் பகைவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும். எங்கள் விடுதலைக்குப் போராடும் போராளிகள் வெற்றியடைய வேண்டும். நாங்கள் விடுவிக்கப்பட வேண்டும்.' என்று திருப்பலி ஒப்புக்கொடுத்த குருவானவர் பகிரங்கமாக மன்றாடும் அளவுக்கு நிலைமை இருந்தது. (பூசை முடியமுன்னமே அரைவாசிச் சனம் வீடு வந்தது தனிக்கதை)
ஒரு குருவானர் தனது பங்குத்தளத்தில் தலைவர் பிரபாகரனின் படத்தை முன்னறையில் மாட்டி வைத்திருந்ததை எதிர்த்தும் அதை உடனடியாக நீக்கவும் மேலிடம் உத்தரவு போட்டதை உறுதியாக எதிர்த்து, இறுதியில் அவர்கள் பேசாமலேயே விடுமளவுக்கு நிலைமை இருந்தது.

இவற்றுக்கான மூல காரணிகளில் நாவலிப்படுகொலை போன்றவையும் அடக்கம். நான் அறிந்தவரையில் சிலரின் நிலைப்பாடு மாற்றத்துக்குக் காரணம் நவாலிப் படுகொலையும் அதைத்தொடர்ந்து நடந்தவையும். எமது பிரச்சினைக்கு மற்றவர்களிடம் தீர்வுக்குப் போவது மட்டில் தம்மளவிலேயே நம்பிக்கையற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமது தலைமைப் பீடங்கள் மட்டிற்கூட வெளிப்படையான நம்பிக்கை வைக்குமளவில் அவர்கள் இல்லை. இன்று இலங்கையிலுள்ள கத்தோலிக்க ஆயர்களை எடுத்துக்கொண்டாற்கூட தனித்தீவுகளாகச் செயற்படும் நிலையைக் காணலாம்.

மிக அண்மையில் நடந்த பேசாலைத் தேவாலயம் மீதான தாக்குதல் வரை வரலாறு தொடர்கிறது.


_____________________________________________

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, January 09, 2005

மருத்துவக்குழு வெளியேற்றம்

வணக்கம்!
திருகோணமலையில் தமிழ்மக்கள் தங்கியிருந்த அகதிமுகாமொன்றில் இந்திய மருத்துவக்குழுவொன்று தங்கியிருந்து பணிசெய்து வந்தது. நேற்று அம்முகாமிலிருந்த ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரை வெளியேறுமாறு மக்கள் போராட்டம் நடத்தி அவர்களை வெளியேற்றினார்கள். ஆனால் உடனடியாகவே இந்திய மருத்துவக்குழுவும் தமது பணியை விட்டுவிட்டு வெளியேறிச் சென்று விட்டதாக அறிகிறேன். எழிலனும் இச்செய்தியை உறுதி செய்திருந்தார். இதுபற்றி மேலதிக செய்திகள் அறிந்தவர்கள் அதுபற்றி அறியத்தரவும்.
அதுசரி, மக்களுக்குச் சேவை செய்யத்தானே அம்மருத்துவக்குழு சென்றது?

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, January 04, 2005

பச்சோந்திகள்

வணக்கம்.
சுனாமி அலையிற் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. புலம் பெயர் நாடுகளில் ஈழத்தவர்களுக்காக மக்களிடம் நிதி சேகரிக்கப்படுகிறது. பிரதானமாக தமிழர் புனர்வாழ்வுக் கழகமே இவற்றை ஒழுங்குபடுத்துவதாக அறிகிறேன். தமிழர்கள் சேகரிக்கும் பணத்திற் பெரும்பகுதி T.R.O ஊடாகவே அனுப்பப் படுகிறது என்றும் அறிகிறேன்.

T.R.O என்பது இன்று மட்டுமன்று, யுத்த காலத்திலிருந்தே மக்களுக்குச் சேவை செய்து வரும் ஓர் அமைப்பு. இன்னும் சொல்லப்போனால் ஏனைய பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களைவிட மக்களோடு மக்களாக நின்று முழுநேரப் பணி புரிந்த அமைப்பு. தனக்கென சீரான மனிதவள மற்றும் நிர்வாகக் கட்டமைப்புடன் (சில சர்வ தேச நாடுகள் உட்பட) இயங்கி வரும் அமைப்பு. தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்றது.

நிற்க, T.R.O ஐ மட்டந்தட்டி முடக்கும் நடவடிக்கையிற் சிலர் ஈடுபட்டுள்ளார்கள். இது தொடர்ந்துவருவது தானென்றாலும் தற்போது சிலர் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர். சுனாமிக்கு முந்தின வெள்ள அனர்த்த நிவாரணப்பணியில், கிழக்குப் பகுதியில் T.R.O இன் பங்கு எத்தகையது என்பது அங்குள்ள மக்களுக்குத் தெரியும். வெள்ள நிவாரணப் பணிக்கென அங்கு நின்ற T.R.O உறுப்பினர்கள் ஏழு பேரளவில் சுனாமியின் தாக்குதலிற் பலியானதாக அறிகிறேன்.வெள்ளப் பாதிப்பிற்குட்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணியிலும் சுனாமியின் தாக்குதலுக்கான நிவாரணப்பணியிலும், வடக்குக் கிழக்கில் (குறிப்பாக இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதியில்) T.R.O இல்லையென்றால் முதல் மூன்று நாட்களுக்கான நிலைமையை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இன்னும் எத்தனை அவலங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும்? T.R.O ஐ அழிக்க நினைப்பவர்கள் எதை விரும்புகிறார்கள்? அவர்களின் குரூர புத்தி எதைக் கணக்கிடுகிறது? வெறும் புலியெதிப்பு வாதம் எனும் போர்வைக்குள்ளால் அவர்கள் செய்ய நினைப்பது எதை?

ஏன் T.R.O ஊடாக பணம் கொடுப்பது சிறந்தது என்பதற்குப் பல நியாயங்கள் கூறப்பட்டு விட்டன.ஒப்பீட்டளவில் எந்தவொரு பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கும் தமிழர் தாயகப்பகுதியிற் பரவலான செயற்றிறனுள்ள ஆளணிவளமோ நிர்வாகக் கட்டமைப்போ இல்லை. இதைவிட அத்தொண்டு நிறுவனங்களின் நிர்வாகச் செலவென்பது மிக உயர்ந்தது. உதவித்தொகையிற் குறிப்பட்ட பகுதிப்பணம் நிர்வாகச்செலவுக்கே போய்விடும். இத்தொகை ஒப்பீட்டளவிற் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிக உயர்வாக உள்ளது.(I.C.R.C இற்கு வழங்கப்படும் பணத்தில் 15 வீதம் அந்நிறுவனத்தின் நிர்வாகச் செலவுக்காக எடுக்கப்படுமென அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.)இதைவிட பிரதேச அறிவு, தொடர்பாடல் (மொழிச் சிக்கல்) யாவும் T.R.O இற்கே சாதகமாக உள்ளது.

சரி அதை விடுவோம். சிங்கள அரசு நியாயமாக நடந்து கொள்ளும் என எத்தனை வீதத் தமிழர்கள் (ஈழத்தமிழர்) நம்புகிறார்கள்? தாம் வழங்கும் நிவாரணம் சரியாய்ப் போய்ச் சேர்கிறதா என்பதை பன்னாட்டு நிறுவனங்களால் எவ்வளவு தூரம் கண்காணிக்க முடியும்? (இதற்குப் பிரதேச மற்றும் மொழியறிவு என்பன மிகமிக அவசியம்.)

T.R.O ஐ கேள்வி கேட்க உரிமையுண்டு, குறிப்பாக பணம்வழங்கும் மக்களுக்கு. அதை விமர்சனம் செய்யவும் தகுதியுண்டு. ஆனால் சரியான தகவல்களையும் காரணங்களையும் வெளியிட்டு நடுநிலைமையுடன் செய்ய வேண்டும். இவ்வளவு பெரிய அழிவு நடந்துள்ள வேளையில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சொல்வதிற் பயனில்லை. "எங்கள் முதற்பணி T.R.O ஐ முடக்குவதே" எனும் கோசத்தோடு இதை முன்னெடுப்பவர்கள் மிகக் கீழ்த்தரமான வேலைகளைச் செய்கிறார்கள்.வெள்ள நிவாரணத்தின் போது T.R.O மக்களுக்கு உதவி செய்யாமல் அரசாங்கத்தின் மீது கோபம் ஏற்படுத்துவதற்காகப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தார்களாம். இப்படிப் போகிறது இவர்கள் கதை. இதை எழுதுபவர்கள் உண்மையில் தமிழர் தாயகத்தைப்பற்றி பூகோள அறிவு இல்லாமலும் எழுதுகிறார்கள். இதற்கிடையில் 2000இற்கும் மேற்பட்ட புலிகள் பலியாகி விட்டதாகவும் ஏராளமான ஆயுதத் தளபாடங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் திருப்பித் திருப்பிச் சொல்லி கனவிலேயே இன்பம் காணுகிறார்கள். இதைவிட முசுப்பாத்தி என்னெண்டா, புலிகள் எல்லாம் இழந்து நொடித்துப் போயுள்ள இந்த வேளையைப் பயன்படுத்தி தமிழர்களுக்கான தீர்வைப் பெற்று விட வேண்டுமாம். இதைவிட்டால் சந்தர்ப்பமில்லை என்கிற ரீதியிற் செல்கிறது இவர்களின் அரசியல் ஞானம். உண்மையில் இவர்கள் யாராவது முன்னாள் போராளியாயிருந்து அடித்துத் துரத்தப்பட்டிருந்தால் இந்த ஒரு காரணத்துக்காகவேனும் நான் “சகோதரப் படுகொலை” எனச் சொல்லப்படுபவற்றை நியாயமென்று ஏற்றுக்கொள்ளத் தயார்.

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, January 02, 2005

ஆதி மனிதர்களாய்...

வணக்கம்.
புதுவருடத்திற் காலடியெடுத்து வைத்துள்ளோம். வழமைபோல் வாழ்த்துச் சொல்ல முடியவில்லை. இருண்ட ஓர் ஆண்டாகவே நமக்குத் தொடங்கியுள்ளது.
புறக்கணிக்கப்பட்ட பிரதேசங்கள் பற்றிய தகவல்கள் படிப்படியாக ஊடகங்களில் இடம்பெறத் தொடங்கியுள்ளன. சுனாமியின் அலைகள் கரையைத் தாக்கும் காட்சிகளைப் பார்க்கும்போது “The day after tomorrow” எனும் படத்தின் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. அப்படத்தில் அலைகள் ஆர்ப்பரித்து ஊருக்குட் புகும்போது மக்கள் பதறியடித்து ஓடுவது கண்ணுக்குள் நிற்கிறது. அக்காட்சியைப் போலவே நிஜமாக நடந்துள்ளது. படப்பிடிப்பின்போது அப்படத்தின் இயக்குநர் சொன்னதாக அறிந்தேன், “இவையெல்லாம் நிஜமாக நடப்பதற்குள் படத்தை முடித்து விடவேண்டும்.”

நிற்க, இவ்வனர்த்தம் மக்களை எங்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது? இலங்கையின் வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரை அவர்கள் யுத்த அனர்த்தங்களின் போதுகூட இப்படி இடிந்து போய்விடவில்லை. சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து ஓடியபோதுகூட வாழ்க்கை அவர்களுக்குச் சூனியமாய்த் தெரியவில்லை. குண்டுவீச்சு விமானங்கள் பேரிரைச்சலோடு வானில் வட்டமடிக்கும் போதுகூட அதை வேடிக்கை பார்த்திருக்கும் சிறுவர்களையும் குழந்தைகளையும் பார்த்திருக்கிறேன். “இப்பிடிச் சுத்தினால் எப்பிடி அடிப்பான், இப்பிடிக் குத்தினால் எங்க போடுவான்” என்றெல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருந்தன. ஆனால் சுனாமியின் தாக்கம்?...

இன்று நீரைக்கண்டாலே அலறியடித்தோடும் தன்மை; இயற்கையின் முன் மிரண்டு பயந்து ஒடுங்கிப் போகும் மனோநிலை; கிட்டத்தட்ட ஆதிமனித இனம் போல் ஆகிவிட்டோம். எனக்கென்னவோ சரிபோலவும் தோன்றுகிறது. பேசாமல் எல்லா சாமிகளையும் ஒருபுறம் வைத்துவிட்டு, வான் நெருப்பு கடல் காற்று என நாம் பயப்படுவற்றையே கடவுளாக்கி வழிபடவேண்டியது தான், அந்த ஆதிமனிதர்கள் போல.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Thursday, December 30, 2004

ஆத்திரமும் அஞ்சலியும்

அனைவருக்கும் வணக்கம்!
கடற் பெருக்கின் அழிவு தொடங்கிய பின் எதுவும் எழுதவில்லை. உண்மையில் எழுத முடியவில்லை. எதையும் எழுதும் மனநிலையில்லை. தனியே வாசிப்பதுடன் மட்டும் நின்று விட்டேன். (ஜாபர் அலி போல கிறுக்குவதை விட இது எவ்வளவோ மேல். உண்மையில் கடவுள் (அவரது பாசையில் அல்லா) ஒரு காட்டுமிராண்டி என்று சொல்வதற்கு ஜாபர் அலிக்கு இருக்கும் துணிவு எவருக்கும் வராது.) இலங்கை வன்னியின் கரையோரங்களின் மக்களையும் அங்குள்ள நிலைமைகளையும் நன்கறிந்தவன் எனும் வகையில் (குறிப்பாக முல்லைத்தீவு) மிகவும் கலவரத்துடனேயே காலம் கழிந்தது. அரசினதும் உலக ஊடகங்களினதும் பாராமுகம் அதிர்ச்சியளிக்கவில்லை. வழமை போல ஆத்திரம் தான் வந்தது. எல்லா இடமும் அழிவுதானென்றாலும் உலகின் கண்களிலிருந்து மறைக்கப்படும் புலிகளின் பகுதிகளுக்குச் சென்று காட்சிகளைப் பதிவுசெய்து ஒளிபரப்ப, முன்னனி நிறுவனங்களுக்கு முடியாமற் போனது வேதனைக்குரியது. பிரான்சிஸ் ஹரிசன் மற்றும் மற்றவர்கள் எங்கு போனார்களோ தெரியவில்லை. (கருணாவிடம் என்றால் உயிரையும் பொருட்படுத்தாமல் போய்வரத் துணிவுண்டு, இந்து உட்பட)

பி.பி.சி. தமிழோசையில், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் புலிகளின் பகுதிக்கு வரத் தயங்குகிறார்கள், அவர்களுக்கான அனுமதி கிடைக்கவில்லை போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி “தமிழ்ச் செல்வனிடம்” கேட்டபோது ஆத்திரம் தான் வந்தது. புலிகள் பகிரங்கமாகவே சர்வதேசத்திடம் ஆதரவு கோரி அவசர அழைப்பு விடுத்த பின்பும் (இது கூட பெரும்பாலும் ஊடகங்களில் வந்தது தான்) இது என்ன பம்மாத்து? பிரதமர் வேறு, இந்நிறுவனங்கள் அவர்களின் பகுதிக்குச் செல்வதில் சில சிக்கல்கள் இருக்கலாம் எனக்கூறுகிறார். எதைச் சமாளிப்பதற்கு இந்தப் பசப்பு வார்த்தைகள்?

ஏதோ, இப்போது ஒருவழியாக வன்னிக்கும் இதரப் பகுதிகளுக்கும் நிவாரண உதவிகள் போகத் தொடங்கயுள்ளன. அந்த நிம்மதியுடனேயே இதை எழுதுகிறேன். அது எவ்வளவு போகிறது என்பதை விட ஏதோ கிள்ளியாவது கொடுக்கிறார்களே என்று ஆறுதலடைய வேண்டியதுதான். ஆனால் கடந்த மூன்று நாட்களாக நடந்த கூத்துக்கள், தனித் தேசத்திற்கான அல்லது தனி நிர்வாகத்திற்கான தேவையை ஓங்கிப் பறைசாற்றுவதாகவே இருக்கின்றன.

இந்நிலையில் தனியார் வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். சக்தி வானொலி மற்றும் தொலைக்காட்சிச் சேவை ஏறத்தாள 40 பாரவூர்தி (லொறி) பொருட்களைச் சேகரித்து வன்னிக்கு அனுப்பியதாக அறிகிறேன். மிக்க நன்றி. விரைவில் இவ்வவலம் எல்லா இடத்திலும் முடிவுக்கு வர ஆசிக்கிறேன். மட்டு அம்பாறை திருமலை என பாதிப்படைந்த அனைத்துப் பிரதேசங்களுமே சராசரிக்கும் கீழே வாழ்க்கைத்தரமுடைய மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டவை. போரினால் மிகமோசமாகப் பாதிப்படைந்தவர்கள். முல்லையில் நானறிந்த சில குடும்பங்கள் ஆறு ஏழு முறை இடம்பெயர்ந்தவர்கள். சிலர் பத்துத் தடவைகூட.

இறுதியாக, இவ் அவலத்தில் அழிந்து போன இவ்வுலக மானுடர்கள் அனைவருக்கும் என் அஞ்சலிகள். குறிப்பாக முல்லைத்தீவில் மாண்டு போன என் உறவுகளான அன்ரன் அண்ணா, என் விஜிதாக் குட்டி மற்றும் ஜீவதாஸ் குட்டிக்கும், நண்பர்கள் தெரிந்தவர்கள், அயலவர்களுக்கும் என் இதய அஞ்சலிகள்.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________